Followers

Sunday, August 24, 2014

செத்தும் கொடை கொடுத்தாரா சீதக்காதி!

தமிழகத்தில் இஸ்லாமியர்களின் வரலாறு!

//படையெடுப்புகளுக்கு முன்பாகவே தமிழகம் வந்த இஸ்லாம் தமிழ்ப் பண்பாட்டோடு பிரிக்க முடியாதபடி நெருக்கமாகக் கலந்துவிட்டது. தமிழ் இலக்கிய மரபை அடியொற்றித் தமிழ் முஸ்லிம் புலவர்கள் ஏராளமாக காப்பியங் களையும் சிற்றிலக்கியங்களையும் படைத்திருக்கின்றனர். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த பல்சந்தமாலை என்ற செய்யுள் தமிழக முஸ்லிம்களின் தொன்மையைக் காட்டக்கூடியதாக இருக்கிறது.//
--தமிழ் இந்து நாளிதழ்
24-08-2014

பல கற்பனைக் கதைகளை இவ்வாறு தமிழில் புனைந்த முஸ்லிம்கள் இஸ்லாமியர்களின் இறை வேதமான குர்ஆனை தமிழில் மொழி பெயர்ப்போம். நபிகள் நாயகத்தின் வாழ்வை மொழி பெயர்ப்போம் என்று ஏனோ தோணவில்லை. மார்க்க அறிஞர்களும் இதற்கான முயற்சியில் இறங்கவில்லை. கடந்த நூறு வருடங்களுக்கு முன்புதான் குர்ஆனின் மொழி பெயர்ப்பை அப்துல் ஹமீது (ஏகேஏ அப்துல் சமதின் தகப்பனார்) அவர்கள் முதன் முதலாக வெளியிட்டார். அதற்கும் மார்க்க அறிஞர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது.

இவ்வாறு இறைவன் என்ன மனிதர்களிடம் பேசுகிறான் என்று விளங்காமலேயே 1300 வருடங்களாக இஸ்லாமியர்கள் இந்த தமிழகத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். குர்ஆனை மொழி பெயர்க்காமல் தங்கள் கற்பனையை விரித்து பல கட்டுக் கதைகளை இஸ்லாமிய சரித்திமாக வடிக்க ஆரம்பித்தனர். 'விறகு வெட்டியார் கிஸா' 'பப்பரத்தியார் அம்மாணை' 'சீறாப் புராணம்' என்று கற்பனை கலந்த பல காவியங்களை படைக்க ஆரம்பித்தனர். எனது பாட்டி ராகமிட்டு பல பாடல்ளை தமிழில் பாடுவார். கேட்க மிக ரம்மியமாக இருக்கும். சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இது போல் உண்மையை தெளிவாக விளங்காமலேயே பல கோடி முஸ்லிம்கள் இந்த உலகை விட்டு சென்று விட்டனர்.

//காய்ந்து சிவந்தது சூரியகாந்தி கலவியிலே தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண்டொலைவில் பன்னூல் ஆய்ந்து சிவந்தது பாவாணார் நெஞ்சமனுதினமும் ஈந்து சிவந்தது மால் சீதக்காதியிரு கரமே. சீதக்ககாதி இறந்தது தாளாமல் அவரது சமாதிக்குப் போய் படிக்காசுப் புலவர், புலவர்கள் வாயில் மண் அள்ளிப் போட்டு, ‘இப்படிப் போய்விட்டீரே யார் இனி ஆதரிப்பார்கள்' என அழுது அரற்றிக்கொண்டிருக்கும் சமயத்தில் சமாதி வெடித்துக் கையில் போட்டிருந்த மோதிரத்தை எடுத்துக்கொள்ளும்படி சீதக்காதியின் கரம் வெளிப்பட்டதாம்.
அந்த அதிசயம்தான் புலவர்களின் கற்பனையினால் ‘செத்தும் கொடுத்த சீதக்காதியே' என்ற பேச்சு வழக்காகி, வள்ளல் தன்மையோடு தொடர்புடைய பெயராக சீதக்காதியின் நினைவை நம்மிடம் நீட்டி வைத்திருக்கிறது. //
-தமிழ் இந்து நாளிதழ்
24-08-2014


சீதக்காதி பல வறியவர்களுக்கு உதவியிருக்கலாம். ஆனால் அவரது சமாதி வெடித்து விரல் வெளிபட்டது என்பதை கற்பனையே! அன்றைய புலவர்கள் அளவுக்கு மீறி புகழ்வது வாடிக்கை. 'கவிதைக்கு பொய் அழகு' இல்லையா? இறந்தவர்கள் மறுபடி இந்த உலகத்துக்கு வருவது சாத்தியமில்லை என்கிறது குர்ஆன். அறிவியலும் இறந்தவர்கள் திரும்ப வெளி உலகுக்கு வருவதை ஒத்துக் கொள்வதில்லை.

மேலும் தமிழக முஸ்லிம்களின் வீடுகளில்தான் தற்போது தமிழ் வாழ்கிறது. படித்த முஸ்லிம்கள் கூட ஆங்கிலேய ஆட்சி எதிர்ப்பு உணர்வால் இன்று வரை ஆங்கிலம் கலக்காத தமிழையே பேசி வருகின்றனர்.

இஸ்லாமியர்களின் வரவால் தமிழகத்தில் தீண்டாமை ஒரு கட்டுக்குள் வந்தது என்பதை மறுக்க முடியாது. 'நாம் இவ்வாறு தீண்டாமையை தொடர்ந்தால் அனைத்து மக்களும் இஸ்லாத்தின் பக்கம் சென்று விடுவார்கள்' என்ற பயத்தினால் பல ஆதிக்க சாதியினர் தங்களின் தீண்டாமை உணர்வை ஓரளவு குறைத்துக் கொண்டனர் என்றால் அது மிகையாகாது. இஸ்லாம் தமிழகத்தை தொட்டதால் தமிழர்கள் அடைந்த மறுமலர்ச்சி இது.

//அஸ்லாமு அலைக்கும், இன்சா அல்லா, அல்லாவு அக்பர், கைரத் கியா? பஹுத் சுக்ரியா. சலாம் போலோ """"" ஆகியவைகள் எல்லாம் தமிழ் வார்த்தைகள் என்றால் நிச்சயம் முஸ்லிம்கள்தான் உண்மையான தமிழர்கள். சந்தேகமே இல்லை. (முஸ்லிமில் வரும் "ஸ்" என்பது வடமொழி எழுத்து இல்லை என்று சொன்னாலும் ஒத்துகொள்ள வேண்டியதுதான்.// -Ananamalai, tamilhindu

உருது மொழியை தாய் மொழியாக கொண்ட முஸ்லிம்கள் வட நாட்டிலிருந்து கலவரத்தால் இங்கு குடியேறியர்கள். அவர்கள் வீட்டுக்குள் உருது மொழியை பயன் படுத்துவார்கள். நான் சொல்ல வருவது தமிழ் முஸ்லிம்களைப் பற்றி. அடுத்து 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்பதற்கு 'உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக' என்று வாழ்த்த அதை ஏற்பவரும் 'அப்படியே உங்களுக்கும் ஆகட்டுமாக!' என்று சொல்வது உலகம் முழுவதும் உள்ள நடைமுறை. இதனை விரும்பியவர்கள் தமிழிலும் சொல்லிக் கொள்ளலாம். தமிழில் அப்படி ஒரு வழக்கம் முன்பு இல்லாததால் அரபியில் அதனை சொல்கிறோம். ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்வது தவறில்லையே!

//எனது இஸ்லாமிய நண்பர்கள் எனது பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்வார்கள். என்னுடன் சேர்ந்து சாப்பிடுவார்கள். யேன், வுறங்கி கூட இருக்கிறார்கள். ஆனால் எனது ஹிந்து நண்பர்கள் , என் சாதியை பார்த்து, பக்கத்தில் கூட அமர்ந்து பிரயாணம் செய்ய மாட்டார்கள்//.- gupendran, tamil maran tamil hindu comment

இதுதான் இஸ்லாம்.


1 comment:

Anonymous said...

//இஸ்லாமியர்களின் வரவால் தமிழகத்தில் தீண்டாமை ஒரு கட்டுக்குள் வந்தது என்பதை மறுக்க முடியாது. 'நாம் இவ்வாறு தீண்டாமையை தொடர்ந்தால் அனைத்து மக்களும் இஸ்லாத்தின் பக்கம் சென்று விடுவார்கள்' என்ற பயத்தினால் பல ஆதிக்க சாதியினர் தங்களின் தீண்டாமை உணர்வை ஓரளவு குறைத்துக் கொண்டனர் என்றால் அது மிகையாகாது. இஸ்லாம் தமிழகத்தை தொட்டதால் தமிழர்கள் அடைந்த மறுமலர்ச்சி இது.//

உங்களிடன் நான் ஒத்துப் போகிற ஒரே விசயம் இதுதான்.