Followers

Thursday, August 13, 2015

கூகுளின் சுந்தர் பிச்சை பிராமிண் ஐயங்காராம்!



கூகுளின் CEO வாக ஒரு தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று நாமெல்லாம் பெருமைபட்டுக் கொள்கிறோம். ஆனால் நாராயணன் நல்லப்பா என்ற பார்பனர் வேறு விதமாக சிந்திக்கிறார். அவரது பக்கத்தில் இது பற்றி எவ்வாறு பெருமைபட்டுக் கொள்கிறார் என்று பாருங்கள்.

'வாழ்த்துக்கள் மிஸ்டர் சுந்தர் பிச்சை! மற்றுமொரு தமிழ் பிராமிண் ஐயங்கார் மிக உயரிய இடத்தை எட்டியுள்ளார்...... வீரமணிக்கும், கருணாநிதிக்கும் வயிறு எரியுதா? வயிறு எரிந்தால் கூகுள் அலுவலகம் சென்று போராடவும்' என்று கிண்டலடித்துள்ளார்.

பார்பனர்களாகிய உங்களைப் போன்றவர்கள் இந்து மதத்தின் மற்ற சாதியினரையும் சரி சமமாக நடத்தி வந்திருந்தால் உங்களுக்கு எதிராக பெரியாரும், வீரமணியும், கருணாநிதியும் எந்த காலத்திலும் எதிராக பேசியிருக்க மாட்டார்கள். இவர்களின் அயராத உழைப்பினால் இன்று நீங்கள் உங்களின் வர்ணாசிரம சித்தாந்தை வேறு வழியின்றி குறைத்துக் கொண்டுள்ளீர்கள். சிறிது இடம் கிடைத்தாலும் பழைய படி பார்பனன் சூத்திரன் என்ற பேச்சை ஆரம்பித்து விடுவீர்கள்.

பார்பனர்கள் என்றுமே தமிழர்களோடு ஒட்ட மாட்டார்கள் என்பதற்கு நாராயணன் நல்லப்பாவின் பதிவு ஒரு சான்று. என்னதான் மொழி, நாடு என்று பேசினாலும் ஆரிய குழுமத்தில் இருந்து கொள்வதற்கே அவர்கள் பெருமைபடுவார்கள். இது இன்று நேற்றல்ல..... பல ஆயிரம் வருடங்களாக இந்த ஆரிய பித்து அவர்கள் ரத்தத்தில் ஊறியுள்ளது. இது மாற்ற முடியாத ஒன்று என்பதை இது போன்ற பதிவுகள் நமக்கு நிரூபிக்கின்றன.

கூகுளின் உயரத்தை எட்டி பிடித்த நீங்கள் எந்த இனமாக இருந்தாலும் தமிழன் என்ற முறையில் உங்களை நானும் வாழ்த்துகிறேன் மிஸ்டர் சுந்தர் பிச்சை!

வாழ்த்துக்கள்!

2 comments:

UNMAIKAL said...

முஸ்லிம் பகுதிகளில் போலி கணக்கெடுப்பு அதிகாரிகள்: பாஜகவினர் கைது!
.




http://www.inneram.com/media/k2/items/cache/69525150ee69f19c29b21d7f5dabfc82_XL.jpg

பெங்களூரு: முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் கணக்கெடுப்பு அதிகாரிகள் போன்று நடித்து அவர்களது வாக்காளர் அட்டைகளை பறித்துச் செல்ல முயன்ற பா.ஜ.க.வின் மகளிர் பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
.
கணக்கெடுப்பு அதிகாரிகளாக தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட பா.ஜ.க.வின் மகளிர் பிரிவைச் சேர்ந்த ஐந்து பெண்கள், நேற்று புதன் கிழமை (12.08.2015) மாலை வேளையில் முஸ்லிம் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளாக குறிவைத்துச் சென்று அவர்களுடைய வாக்காளர் அட்டைகளைச் சோதனை செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம், உங்களுடைய வாக்காளர் அட்டைகள் இனிமேல் செல்லாது எனக் கூறி அவற்றைப் பறித்துச் செல்ல முயன்றுள்ளனர்.
.

தற்போது எந்த ஒரு கணக்கெடுப்பும் நடக்கவில்லை என்பதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், அப்பெண்களுடைய நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பின் தொடர்ந்துள்ளனர். பின்னர் அவர்களை கையும் களவுமாக பிடித்து, கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கான அடையாள அட்டையை காண்பிக்கச் சொல்லிக் கேட்ட போது, அவர்கள் போலிகள் என்பது தெரிய வந்துள்ளது. அப்போது, அப்பெண்கள், தாங்கள் பா.ஜ.க.வின் மகளிர் பிரிவைச் சார்ந்தவர்கள் என்றும் போலியான நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டதாகவும் ஒப்புக் கொண்டனர்.
.

இதற்கிடையை, அப்பகுதியில் நூற்றுக் கணக்கானோர் கூடியதால் பரபரப்பு நிலவியது. காவல்துறைக்கு செய்தி தெரிவிக்கப்பட்டு அப்பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
.

சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதியினர் வசிக்கும் பகுதிகளில் இது போன்ற திருட்டுத் தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பாஜகவினர் மீதும் சங்கப் பரிவார அமைப்புகள் மீதும் நீண்ட நாளாக குற்றச்சாட்டு இருந்து வரும் வேளையில், கணக்கெடுப்பு அதிகாரிகளைப் போன்று போலி வேடமிட்ட பா.ஜ.க.வின் மகளிர் பிரிவினர் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் அந்தக் குற்றச்சாட்டுகளை உண்மைப்படுத்தியுள்ளது.
.
http://www.inneram.com/news/india/3445-fake-census-officials-in-muslim-areas.html
.

Dr.Anburaj said...

திற்மையானவன் நோ்மையானவன“தனது சாதியைச் சோ்ந்தவன் என்பதில் பெருமை கொண்டாடும் சுவனப்பிாியனுக்கு இந்த விமா்சனம் தகுதியில்லாதது. சுந்தா் பிச்சை ஒரு பிறாமணா் என்ற வகையில் பெருமைப் பட அவா்களுக்கு உாிமை உள்ளது. நமக்கு அது வயித்தொிச்சலை உருவாக்க கூடாது.