Followers

Saturday, February 24, 2018

என்று தணியும் இந்த சாதிய வெறி!


என்று தணியும் இந்த சாதிய வெறி!

தலித் சிறுவனும் தாயும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் . சிறுமி வல்லுறவு செய்யப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் இன்று நடந்த சாதிவெறி கொடூரம்.

விழுப்புரம் மாவட்டம், வேலாம்புதூர் கிராமத்தில், தலித் குடும்பத்தின் மீது, ஒரு பதினான்கு சென்ட் இடப்பிரச்சனையின் காரணமாக, தமது சாதிய வெறித்தனைத்தைக் காட்டியிருக்கிறது வன்னியக் கும்பல். அந்த தலித் குடும்பத்தின் விதவைத் தாய், மற்றும் அவருடைய எட்டு வயது மகனையும் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்த சாதிவெறிக் கும்பல், அவருடைய 14 வயது மகளை கூட்டு வல்லுறவு செய்துள்ளது.

தண்டனைகளை கடுமையாக்கி உடன் தூக்கு தண்டனை கொடுத்தால் ஒழிய இது போன்ற குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை. ராமதாஸ் தொடங்கி வைத்த சாதீய வெறி இன்று வரை தொடர்கிறது.







2 comments:

Dr.Anburaj said...


வேதனையான சம்பவம். இறைவன் அனைவருக்கும் நல்ல புத்தியை கொடுப்பானாக!
காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகின்றேன்.

முறையான சமயகல்வி அளிக்கப்பட வேண்டும்.சாதி உணா்வைதாண்டி ” இந்து” என்ற

பெருமித உணா்வு அனைத்து சாதியையும் ஒருங்கிணைக்கும் சக்தி பெற்றது. அந்த இந்து

உண்ர்வு மேலோங்கினால்தான் சமூக ஒருங்கிணைப்பு சாத்தியம். நமது பெரியோர்கள்

இதை உணராது வாழ்வது வேதனை அளிக்கின்றது.விவேகானந்தம் என்ற மாத்திரை

அனைவருக்கும் அவசரமாக தேவைப்படுகின்றது.

Dr.Anburaj said...

சிாியாவிலும் பாக்கிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் பரிபுரண யோக்கியா்கள் வாழ்கின்றார்கள். தமிழ்நாட்டில்தான் இப்படிப்பட்ட சம்பவம் நடந்து விட்டது.

சுவனப்பிாியன் கண் இருந்தும் குருடன்.காது இருந்தும் செவிடன்.மூளை இருந்தும் முட்டாள். தங்களின் முட்டாள்தனம் கண்டு வருந்துகின்றேன்.