Followers

Friday, February 02, 2018

நண்பர்களோடு நடந்த விவாதத்தை இப்பதிவில் பார்போமா?




நண்பர்களோடு நடந்த விவாதத்தை இப்பதிவில் பார்போமா?

சென்ற வியாழக்கிழமை எங்கள் ஊர் வாட்ஸ் அப் குழுமத்தில் இயக்கங்கள் சம்பந்தமாக நடந்த ஒரு விவாதத்தை சில மாற்றங்களோடு இங்கு பதிகிறேன். பதிவு நீண்டதாக இருந்தாலும்  படித்துப் பாருங்கள்.... சுவாரஸ்யமாக இருக்கும். :-)

------------------------------------------------------------------------------------

-நண்பரின் கேள்வி :

என் அன்பு இஸ்லாமிய இளைஞர்களே ...

தயவு செய்து இயக்கம் அமைப்பு என்று எதிலும் இனைந்து உங்களின் வாழ்க்கையை
தொலைத்துக்கொள்ளாதீர்கள் இயங்கங்களால் உங்களுக்கு எந்த விதத்தியிலும் நம்மைகள் கிடைக்காது
உங்களால் வேண்டும் என்றால் இயக்கங்களுக்கு நன்மை இருக்கிறது
இயக்கங்களின் சொல் கேட்டுத்தான்
 நம் சகோதரர் இன்றும் சிறையில் இருக்கிறார்கள் சிறையில் இருக்கும் சகோதரர்கள் யாரும் தன் சுய லாப்பத்துக்காக சிறையில் இல்லை
என்பதே உண்மை இயக்கங்களின் சொல் கேட்டு நம்மை எப்படியும் வெளியில் எடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தவர்கள் தான் கடைசியில் என்ன நடந்தது மற்றவர்களை காட்டி கொடுத்து விட்டு போலிஸ் பாதுகாப்பில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் இயக்கத்த தலைவர்கள்
சிறையில் இருக்கும் நம் சகோதர்கள் போதும் இனியும் இந்த நாதாரிகளுக்கு பின்னால் சொல்லாதீர்கள்
நல்ல முறையில் படித்து நல்ல.வேலைகளை
தேடிக்கு கொள்ளுங்கள் அதுவே உங்களின் வாழ்க்கையையும் உங்களின் குடும்ப வாழ்வையும்  உயர்த்தும்

விழித்துக் கொள்ளுங்க




இஸ்லாமிய இளைஞர்களே!

சினிமா, பாட்டு, தாளம் என்று எனது வாழ்வு சென்று கொண்டிருந்தது. அறுபது அடி பாவாக்கள், ஆலிம்கள் செய்த குளறுபடிகள், மவுலூது கிதாபு, நூர் மசாலா, தர்ஹா வழிபாடுகள் போன்றவற்றால் இஸ்லாத்தை வெறுத்து ஒதுங்க ஆரம்பித்தேன்.

அந்த நேரத்தில்தான் பிஜே அவர்களின் 10 ஆடியோ கேசட்டுகள் கமால் பாய் மூலமாக 1986 ஆம ஆண்டு எனக்கு கிடைக்கப் பெற்றது. எனது நண்பர்கள் மூவரும் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டதாகவும் இந்த கேசட்டுகளை கேளுங்கள் என்றும் கொடுத்து விட்டு சென்றார். வேலை முடிந்து இரவு படுக்கைக்கு போகும் முன் தினம் ஒரு கேசட் கேட்க ஆரம்பித்தேன். இறைவன் எனது வாழ்வை அந்த ஆடியோ கேசட்டுகள் மூலம் புரட்டிப் போட்டான். அதன் பின் குர்ஆன் தமிழாக்கம் தினம் ஒரு பக்கம் படிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு குர்ஆன் என்னோடு பேச ஆரம்பித்தது. என்னுள் இருந்த பல கெட்ட எண்ணங்கள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பித்தது. இன்று இறைவனின் கிருபையால் தெளிந்த மனதோடு நிம்மதியான வாழ்க்கையோடு ஏகத்துவ பாதையில் காலத்தை கழித்துக் கொண்டுள்ளேன். இயக்கங்களினால் வழி கெட்டவர்களும் உண்டு: வாழ்வை சீராக்கியவர்களும் உண்டு.

எனவே சிறந்த தன்னலமற்ற இயக்கங்களை தேர்ந்தெடுப்பது உங்களின் கைகளில் இருக்கிறது. இம்மைக்கும் மறுமைக்கும் சிறப்பான முறையில் எந்த இயக்கம் செயல்படுகிறதோ குர்ஆனுக்கும் நபி மொழிகளுக்கும் மாற்றமில்லாமல் எந்த அமைப்பு செயல்படுகிறதோ அதனை தேர்வு செய்து உங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்ளுங்கள்.  இறைவன் நம் அனைவரையும் நேர் வழியில் செலுத்துவானாக!

-நண்பரின் கேள்வி :
கேள்வி ...கேட்பவர் ஒரு சிறுமி .....பதில் பிஜே ....
"சுன்னத் என்றால் என்ன?????
"""செய்தால் நல்லது செய்யாவிட்டாலும் பாவமில்லை உதாரணமாக தொப்பி அணிவது ஆண்கள் குறிகளை வெட்டிக் கொள்வது ..........,இப்படியாக சென்றபதில் .....இஸ்லாமியர்கள் சுன்னத் செய்வதால் முன் தோல் நீக்கப்பட்ட  ஆண் குறி கைலியில் உரசி உரசி சிறிது உணர்ச்சியற்று இருக்கும் அதனால் அவர்கள் உறவு நீண்டநேரம் கொள்வார்கள் என்று முடிகிறது???????
கேள்வி கேட்டவர் நிலை என்னவாகும் அறிவுக்கு பொருத்தமான பதிலா!!!!!
இம்மை மறுமை???!!? இம்மை வாழ்வுக்கு ததஜ செய்ததென்ன????? முதலில் ஒற்றுமை அதை சீர்குலைத்தது எப்போதும் பட்டி மன்றத்தின் பக்கம் கவனத்தை திருப்பி பொன்னான நேரத்தை கால விரயம் செய்தது குழப்பங்களால் சூழ்ந்த ஜமாத்துகள் போலிஸ் கோர்ட் என அலைய வைத்தது குடும்பங்கள் உறவுகள் தகர்ந்தன எந்நேரமும் இதே சிந்தனையில் நான் தான் Isoஅக் மார்க் முஸ்லீம் என எல்லோருக்கும் காபிர் பட்டம் கொடுத்தது ....ஆக அரசியல் ஆரோக்கியம் அரசு வேலை வாய்ப்பு என்ற எந்த கொள்கையும்மற்று வானத்துக்கும் மேலே பூமிக்கும் கிழே என பேசிப்பேசி நம்முடைய நிலை??????!!??



//இம்மை மறுமை???!!? இம்மை வாழ்வுக்கு ததஜ செய்ததென்ன?????//

இஸ்லாம் ஒரு அரேபிய மார்க்கம். அரேபியர்களுக்கு சொந்தமான ஒரு மார்க்கம். தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களெல்லாம் அரபு நாட்டு இறக்குமதி என்ற எண்ணமே பல இந்து நண்பர்களுக்கு இருந்தது.

கடந்த 25 ஆணடுகளாக பட்டி தொட்டிகளெல்லாம் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியை நடத்தி அங்கு இந்து நண்பர்களையும், கிறித்தவ நண்பர்களையும் அழைத்து வந்து கேள்வி கேட்க வைத்தோம். ஆர்வமாக பங்கு பெற்று பல கேள்விகளை வைத்தார்கள். அவர்கள் வைத்த அத்தனை கேள்விகளுக்கும் சளிக்காமல் தவ்ஹீத் ஜமாத் சார்பாக பதில்கள் வைக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சியை தொலைக் காட்சியிலும் பார்த்தனர். இஸ்லாத்தைப் பற்றி அவர்களுக்கிருந்த பயம், சந்தேகம் அனைத்தும் தீர்க்கப்பட்டது. இன்று சாரை சாரையாக அவர்களாகவே விரும்பி இஸ்லாத்தை ஏற்ற வண்ணம் உள்ளனர்.

ஒரு முறை நான் எங்கள் ஊர் பள்ளியில் மாலை நேர தொழுகையை முடித்து விட்டு வெளியேறும் போது ஒரு 30 வயது மதிக்கத்தக்க எங்கள் ஊர் இந்து இளைஞரும், அவரது மனைவி மற்றும் கைக்குழந்தையோடு ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர். 'என்ன விஷயம்' என்று வினவப்பட்டது. 'நாங்கள் குடும்பத்தோடு இஸ்லாத்தை ஏற்க விரும்புகிறோம்' என்றார் அந்த இளைஞர். ஊர் பெரியவர் முன் வந்து 'தம்பி.... ஏற்கெனவே ராமகோபாலனால் எங்கள் ஊரில் சிறிய பிரச்னை. எனவே நீ வெளியூரில் சென்று மாறிக் கொள்ளப்பா' என்றார். அந்த நபரோ 'நான் இஸ்லாத்தை விளங்கி வந்துள்ளேன். ஏன் இப்படி பயப்படுகிறீர்கள். எனது சுய விருப்பத்தில் வருகிறேன் என்று எழுதி கொடுக்கிறேன்' என்றார்.

இருந்தும் ஊர் பெரிய மனிதர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. எனக்கும் அந்த நேரத்தில் 25 வயதுதான். என்னாலும் அந்த இந்து நபருக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லை. பிறகு அவர் தஞ்சை தவ்ஹீத் ஜமாத்தை தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் சென்னை சென்று முறையாக இஸ்லாத்தை கற்று இன்று சிறந்த முஸ்லிமாக வாழ்ந்து வருகிறார். சொந்த ஊரான எங்கள் ஊருக்கு தனது தாய் தந்தையரை பார்க்க விடுமுறையில் வரும் போது அவரை பார்த்து ஆச்சரியப்படுவேன். என்ன ஒரு மாற்றம். எல்லா புகழும் இறைவனுக்கே!

https://www.youtube.com/watch?v=3cSlcHqIruo


-நண்பரின் கேள்வி :
சிரிப்த்தான் வருகிறது!!!! இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்????? பின் ஏன் அது காபிர்களின் பள்ளிவாசல் அங்கே தொழாதீர்கள் என்று பயான் செய்யப்படுகிறது??? ஏதோ 25 வருடங்களுக்கு முன்பு வரை இஸ்லாம் என்றால் பயங்கர சந்தேகம் இருந்ததா??? பயமிருந்ததா??? யாருமே இஸ்லாத்தைப் பற்றி சொல்லவேயில்லையா???? இஸ்லாம் ஒரு இனிய மார்கமென்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?????
[6:28 PM, 1/31/2018] +60 14-314 8564: முறையாக இஸ்லாத்தை கற்று!!!!!! ததஜ வை தவிர யாரும் முறையான முஸ்லீம் இல்லை அப்படித்தானே????

-நண்பரின் கேள்வி :


//இம்மை மறுமை???!!? இம்மை வாழ்வுக்கு ததஜ செய்ததென்ன?????//

1.முஸ்லிம் என்றாலே தீவிரவாதி என்ற எண்ணத்தை களைந்தெடுத்தது இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்.

2.கலைஞரோடும் ஜெயலலிதாவுடனும் மாறி மாறி பேசி 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது. இதில் பலன் அடைவது அனைத்து முஸ்லிம்களுக்கும்தான்.

3. கல்வி வழி காட்டி நிகழ்ச்சி கிராமங்கள் தோறும் நடத்தி படிப்புக்கு ஊக்கம் அளித்தது. கல்வி உதவிப் பணங்களும் கொடுத்தது.

4.கடந்த 12 வருடங்களாக தமிழகத்தில் ரத்த தானத்தில் முதலிடத்தில் உள்ளது தவ்ஹீத் ஜமாத். பல விருதுகளும் பெற்றுள்ளது. சகோதர சமயத்தவர் நம்மை வாஞ்சையோடு தற்போது சகோதரத்துவம் பாராட்ட இந்நிகழ்வும் ஒரு காரணம்.

5. கோடைக் காலத்தில் சிறுவர் சிறுமிகளை மர்கஸூக்கு அழைத்து நல்லொழுக்க பயிற்சி அளிப்பது. இதன் மூலம் அவர்கள் தவறான வழிகளுக்கு செல்வதை தடுத்தது.

6.தமிழக முஸ்லிம்களுக்கு போராட்ட குணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தற்போது சங்பரிவாரங்கள் பயப்படுவது தவ்ஹீத் ஜமாத்தைப் பார்த்துதான். வட நாடுகளில் வாலாட்டும் இந்துத்வா தமிழகத்தில் வாலை சுருட்டிக் கொண்டிருப்பது இங்குள்ள கட்டமைப்பைப் பார்த்துதான்.

வரதட்சணைக்கு எதிராக பல கூட்டங்கள் நடத்திய வாங்கிய வரதட்சணையை திருப்பி கொடுக்கும் நிகழ்வை ஏற்படுத்தியதும் தவ்ஹீத் ஜமாத்தான்.

அதே நேரம் இந்த வரதட்சணையை பள்ளியிலேயே வாங்கிக் கொண்டு பள்ளிவாசலுக்கும் பங்கு கேட்டவர்கள் ஊர் முத்தவல்லிகள் மற்றும் ஆலிம்சாக்கள்.

நேரம் கிடைக்கும் போது இன்னும் வரும்.


 //வானத்துக்கும் மேலே பூமிக்கும் கிழே என பேசிப்பேசி நம்முடைய நிலை??????!!??//

இறை மறுப்பாளர்களுக்கு வானத்துக்கு மேலே பூமிக்கு கீழே உள்ளதைப் பற்றி கவலையில்லை.

ஆனால் ஒரு முஸ்லிமுக்கு அந்த கவலை எந்நேரமும் இருக்க வேண்டும். நம்மை இறைவன் படைத்ததே அந்த இறைவனை வணங்கி அவன் அளித்த சட்டதிட்டங்களை பேணி நடக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
[6:54 PM, 1/31/2018] +966 55 914 5986: //முறையாக இஸ்லாத்தை கற்று!!!!!! ததஜ வை தவிர யாரும் முறையான முஸ்லீம் இல்லை அப்படித்தானே????//

யார் முஸ்லிம் என்பதை இறைவனே அறிவான்.

ஆனால் ஏகத்துவவாதிகள் வருவதற்கு முன்பு இஸ்லாம் என்றால் தமிழகத்தில் என்ன நிலை?

1.திருப்பந்துருத்தி கபீரின் நூர் மசாலா.

2. அய்யம்பேட்டை ஜியாவுதீன் ஹஜ்ரத்தின் விரசம் கலந்த நகைச்சுவை பயான்.

3.பெண்கள் மிக பக்தியாக படித்தது சுன்து சுப்யான், விறகு வெட்டி கிசா, பப்பரத்தியார் அம்மாணை, சீறாப்புராணம்....

4.முத்துப் பேட்டையில் 60 அடி பாவா. நானும் அப்துல் ரஷீதும், ஷெரீஃபும் நேரிடையாக பார்த்து வேதனையடைந்தோம். ஏதும் சொன்னால் இறை குற்றமாகி விடுமோ என்று பயந்தோம்.

5.  தர்ஹாவில் இரவில் தங்கிய ஒரு பெண் கர்பமானாள். யார் காரணம் என்றதற்கு 'பாவா கொடுத்தது என்றாள். தமிழக தர்ஹாக்களில் பெரும்பாலும் இதுதான் நிலை. இதனை எவராவது தட்டிக் கேட்டார்களா,? தர்ஹாக்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட் வேண்டியவை என்பதை மார்க்க அறிஞர்கள் என்றாவது சொல்லியிருக்கிறார்களா?

-----------------------------------------------------------------------------------
ரோஹிங்கியாமுஸ்லீம்களுக்குஆஸ்திரேலியாதவ்ஹீத்ஜமாஅத்தின்நிவாரணஉதவி!

மியான்மரில் அகதிகளாக்கப்பட்ட  ரோகிங்ஞியா முஸ்லிம்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நான்காவது கட்டமாக உதவி..

பங்களாதேஷ் எல்லை டெக்னாஃப் பகுதி அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ரோஹிங்ஞியா முஸ்லிம்களுக்கு ஆஸ்திரேலியா தவ்ஹீத் ஜமாஅத் மண்டல துனை தலைவர் முனவர் இஸ்மாயில் தலைமையில் நேற்று 26.1.2018. அன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான்காம் கட்டமாக நேரில் சென்று குளிர்காலம் என்பதால் ரூ12 லட்சம் மதிப்பிலான பெட்சீட், போர்வை, பாய், உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

இதுவரை 65 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்.


-நண்பரின் கேள்வி :

இட ஒதுக்கீடு!!!!! எப்போது யாரால் தரப்பட்டது????? இதில் ததஜ வுக்கு என்ன பங்கு????? ஏதாவது ஆதாரம் தர முடியுமா????
ஜியாவுதீன் ஹஜ்ரத் பேசியது ஆபாசமென்றால்!!!!! மேலே நான் நான் குறிபிட்டுள்ள பிஜேயின் பேச்சு படு ஆபாசமல்லவா!!!
குண்டு வெடிப்பு வழக்குகளில் சிறையில் உள்ளவர்கள் சொல்வார்கள் பிஜேயை பற்றி .....
""ஏதோ ததஜ வருவதற்க்கு முன் எல்லா முஸ்லீம்களும் அறைகுறை ஆடைகளுடன் புத்தி சுவாதினமற்று வாழ்ந்தார்களா???!
ரத்த தானமென்பது சுத்த ஹம்பக்!!!!! ஒருவரிடம் ரத்தம் பெரும் முன் அவர் ரத்தத்தை ஸ்டெரிலைஸ் செய்ய வேண்டும் அதில் நோய் தொற்றுகள் இல்லையென்றால் தான் தானம் பெறுவார்கள் கூட்டம் கூட்மாக ரத்தம் கொடுப்பது பின்பு அதில் ஏதாவது நோய் தொற்றுகளிருந்தால் அழிப்பதே பெரும் சிரமம்!!!! அப்பப்போது தானம் கொடுப்பதே சிறப்பு!!!கோடைகாலங்களில் குழந்தைகளுக்கு வாழ்க்கையை எதிர் கொள்ளும் சிறப்பு பயிற்சிகள் தருவதே சிறப்பு!!!!! நீச்சல் ஸ்கேட்டிங் தற்காப்பு விளையாட்டு போன்றவைகள் """அது என்ன நல்லொழுக்கப் பயிற்சி .....
ததஜ க்கு முன் தமிழகத்தில் போராட்டமே செய்ததில்லையா????! ததஜ வின் பாபரி மஸ்ஜித் போராட்டம் என்னவானது????????? சங் பரிவாரங்களே பயப்படுகிறார்களாம்!!!!!! தற்போது ததமிழகமெங்கும் எல்லா நிலைகளிலும் மீடியாக்கள் அரசு வேலைகள் காவல்துறை ராணுவம் ஆசிரியர்கள் என சகலத்திலும் ஊடுருவியுள்ளனர் .....
"""ததஜ வின் துரோகங்ளை பட்டியலிடுவோம் "'

-நண்பரின் கேள்வி :

இறைவன் மனிதனை படைத்தது எதற்க்காக????? நான் கேட்டது எதற்க்காக????
வெறுமனே 24 மணி நேரமும் மார்க்க பிரசங்கம் செய்யவா அல்லது வணகத்திலேயே காலத்தை கழிப்பதா!!!! மனித குலத்துக்கு சக மனிதனுக்கு உதவியாய் வாழ வேண்டுமென்பதா அல்லது இதுதான் பக்தி இதுதான் வழிமுறையென்று அடித்துக் கொண்டு சாவதா??? வாழும் பூமியைப் பற்றி கடந்த கால படிப்பினைகளை பற்றி நிகழ்காலத்தில் சரி செய்யாமல் எதிர்காலத்தில் எதை சாதிக்கமுடியும்?????


//தயவு செய்து இயக்கம் அமைப்பு என்று எதிலும் இனைந்து உங்களின் வாழ்க்கையை
தொலைத்துக்கொள்ளாதீர்கள் இயங்கங்களால் உங்களுக்கு எந்த விதத்தியிலும் நம்மைகள் கிடைக்காது//
//இனியும் இந்த நாதாரிகளுக்கு பின்னால் சொல்லாதீர்கள்//

இவை எல்லாம் பதிந்த வார்த்தைகள். ஒரு பொய்யை சபையில் அரங்கேற்றும் போது அதற்கு விளக்கமளிப்பது எனது கடமையல்லவா? அதற்காகத்தான் இந்த பதிவுகள்.

//நல்ல முறையில் படித்து நல்ல.வேலைகளை
தேடிக்கு கொள்ளுங்கள்//
//இம்மை வாழ்வுக்கு ததஜ செய்ததென்ன?????//

என்னமோ ராஜகிரி பண்டாரவாடை முழுக்க படித்த பட்டதாரி இளைஞர்கள் வீட்டுக்கு வீடு இருந்த மாதிரியும் தவ்ஹீத் ஜமாத் வந்து குறைந்து விட்டதைப் போன்றும் பதிவது உங்களுக்கே ஓவராக தெரியவில்லையா? 

கடந்த 30 வருடங்களுக்கு முன்னால் ராஜகிரி பண்டாரவாடையின் நிலையை எண்ணிப் பாருங்கள். ஊருக்கு மூன்று பட்டதாரிகள் நான்கு பட்டதாரிகள்தான் இருந்திருப்பார்கள். எம்காம் ஜாபர் அலி, எம்காம் ரவூஃப் என்று குறிப்பிடுவதிலிருந்து வெகு சொற்பமான நபர்களே பட்டதாரிகளாக இருந்ததை விளங்குவோம். பெரும்பாலான இளைஞர்கள் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு முடிந்தவுடன் பாஸ்போர்ட் எடுத்துக் கொண்டு கிடைத்த வேலைக்கு கிடைத்த சம்பளத்துக்கு வளைகுடா நோக்கி வந்தவர்களாகத்தான் இருந்தனர்.

இந்த மனிதர் பிஜே மஞ்சள் பையை கக்கத்தில் வைத்துக் கொண்டு ஊர் ஊராக சென்று இளைஞர்களை தட்டி எழுப்பினார். 'ஒட்டகம் மேய்க்க, அரபு காரன் பிள்ளையை கவனிக்க, தெரு கூட்ட 10000, 15000 ரூபாய்க்கு ஏனப்பா அந்த பாலைவனத்துக்கு செல்கிறீர்கள்? பார்பனர்களைப் போல படித்து விட்டு ஒரு லட்சம், இரண்டு லட்சம் சம்பளத்துக்கு செல்லுங்கள்' என்று ஊர் ஊராக சென்று கத்தினார். அதற்கு தக்க பலனை இறைவன் கொடுத்தான். இளைஞர்கள் மத்தியில் படிப்பின் தாகம் அதிகரித்தது. இன்று வீட்டுக்கு இரண்டு பட்டதாரிகளைப் பெற்றுள்ளோம்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

எனவே ஏகத்துவ இயக்கத்தால் இந்த இஸ்லாமிய சமூகத்துக்கு பெரும் பலன் கிடைத்துள்ளது என்பதை மேலும் இங்கு பதிகிறேன்.


பட்டதாரிகள் படிப்பு என்பதெல்லாம் காலத்தின் கட்டாயம் அன்று 8ம் வகுப்போடு பள்ளி 9ம் வகுப்பு ராஜகிரியில்!!!! இன்று கிரசன்ட் மெட்ரிகுலேசன் பள்ளி!!!! அன்று பேஸ்புக் வாட்ஸ்அப் மொபைல் போன்கள் போன்ற சாதனங்கள் இல்லை ..... இன்று.... அறிவியல் முன்னேற்றம் அளப்பரியது ...அன்று டாக்டர்கள் அரசுப்பணியாளர்கள் பலர் இருந்தனர் இன்று!!!! மதம் சார்ந்த இயக்ங்களால் பிளவுபட்டது சமுதாயம் குடும்பம் நட்பு ....


//அரசுப்பணியாளர்கள் பலர் இருந்தனர் இன்று!!!! மதம் சார்ந்த இயக்ங்களால் பிளவுபட்டது சமுதாயம் குடும்பம் நட்பு ....//

ஒரு குழப்பத்திற்கு பிறகுதான் தெளிவு பிறக்கும். தவ்ஹீத் ஜமாத்தில் தங்களை இணைத்துக் கொண்ட இளைஞர்களையும் மற்ற இளைஞர்களையும் நமது ஊரில் கொஞ்சம் ஒப்பிட்டு பாருங்கள். கல்லூரி படிப்பை முடித்த அந்த ஏகத்துவ இளைஞனிடம் ஐந்து வேளை பள்ளி சென்று தொழும் வழக்கம் உள்ளது. இதனால் இள வயதில் ஏற்படும் பல கெட்ட பழக்கங்கள் அவனை விட்டு தூரமாகிறது. படிப்பும் ஒழுக்கமும் ஒரு சேர அமையப் பெற்ற ஒரு இளைஞர் சமுதாயத்தால்தான் சமூக புரட்சிகளை ஏற்படுத்த முடியும்.

மற்ற சமூகங்களில் படித்த இளைஞர்கள் குடித்து விட்டு காதல் கத்தரிக்காய் என்று ஊர் சுற்றுவதையும் ஏகத்துவ இளைஞன் ஐந்து வேளை தொழுது கொண்டு தனது குடும்பத்தையும் காத்துக் கொண்டு ஹராம் ஹலால் பார்த்து தனது வாழ்வை ஓட்டுவதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.



தமாஸ் சகோ!!!!  தன்னை தவிர மற்றவர்களை மட்டமாய் நினைத்து .....நான்கு நாள்கள் பெருநாள் கொண்டாடி ஜனாசாவை ரோட்டில்கிடத்தி 400 வருட பெரிய பள்ளியை "காபீர்களின் "பள்ளியென்று பயான் செய்து .....ததஜ வை தவிர மற்றவர்களெல்லாம் ஒழுக்கக் கேடாக வாழ்கிறார்கள் என்பதெல்லாம் தங்களின் இயக்க வெறியையும் அறியாமையையும் காட்டுகிறது ....மற்ற சமூகங்களைப் பற்றி பேச நமக்கு உரிமையில்லை ....எந்த புரட்சியும் விளையாது வேண்டுமானால் பெரும் கலவரம் விளையலாம்!!!!
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹிவபரகாத்துஹு...



பதிவுநாள்:28/1/2018
மணமகன் தேவை.
முதல்மணம்.
தஞ்சைமாவட்டம்.
கும்பகோணம் பகுதி
ஆடுதுறையை சேர்ந்த அழகுள்ள மார்கபற்றுள்ள நடுத்தரமான உயரம் பி எஸ் ஸி முடித்த தெவ்ஹீது குடும்பத்தை சேர்ந்த மணப்பெண்ணுக்கு ஒருவருடமாக தெவ்ஹீது மணமகனுக்காக காத்திருந்து, கிடைக்காத பட்ச்சத்தில் +2முடித்த சுன்னத் ஜமாஅத் மாப்பிள்ளையாக இருந்தாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்துத்துள்ளார்கள்.இத்தனை வருடங்களாக பல பிரச்சனைகளை கடந்து தெவ்ஹீதுவாதியாக இருந்து மாப்பிள்ளை கிடைக்காத காரணத்தினால் மீண்டும் சுன்னத்ஜமாஅத்தாரை நாடிவேண்டியுள்ளது என்று மணம்நொந்துள்ளார்கள். நம் தெவ்ஹீதுசகோதரர்கள் உடனே முயற்ச்சிசெய்து
தகப்பனில்லாத இம்மணப்பெண்ணுக்கு உறிய மணமகன் கிடைக்கவும் இந்த குடும்பத்தார்கள் தெவ்ஹீதில் நிலைத்திருக்கவும் அல்லாஹ்விடத்தில் இருகரம் ஏந்தி துஆ செய்யவும்.
துபையில் தொடர்பு கொள்ள:  மு.அப்துல்பாசித்.
0552470515.
உள்ளூரில் தொடர்புகொள்ள: சாதிக்பாட்சா.
9443564240.
தஞ்சைமாவட்டத்தில்உள்ளோர்களாக இருந்தால் நல்லது .


//எந்த புரட்சியும் விளையாது வேண்டுமானால் பெரும் கலவரம் விளையலாம்!!!!//

கலவரம் வரக் கூடாது என்பதற்காகத்தான் பெரிய பள்ளியில் சங்கு ஊதி மூன்று தவ்ஹீத் இளைஞர்களை ஊரே சேர்ந்து அடித்த போதும் அமைதி காத்தோம். ஜனாஸாவை அடக்க விட மாட்டோம் என்று முரண்டு பிடித்த போதும் சட்டத்தின் கதவுகளை தட்டி முறையாக அடக்கம் செய்தோம். உங்களைப் போன்றவர்களிடம் எங்களுக்கு கோபம் வரவில்லை. அனுதாபமே ஏற்படுகிறது. இன்றில்லா விட்டாலும் இன்னும் சில ஆண்டுகளில் உங்களிடம் மாற்றங்கள் ஏற்படும் அது வரை நாங்களும் பொறுமை காக்கிறோம்.


கொள்ளை புறத்தில் அடக்கம் செய்தது எந்த வகையில் .......சட்டம் ஜனசாவை தோண்டச் சொன்ன போதும் அமைதி காக்கிறோம்!!!! ஒரு தரப்புக்கு அனுமதி தந்த நீதிமன்றத்தை நாடி தடுக்கவும் முடியும்!!!!
"'எனக்கு ஜனசாவை அடக்க விடாமல் தடுப்பதில் எல்லாம் உடன் பாடில்லை.. அந்த சம்பவம் பள்ளியில் அடிதடி வகாப் பாய் வீடு உடைப்பு இதில்லெல்லாம் உடன்பாடில்லை .......அதை கண்டிக்கவும் செய்தேன் அப்போது நான் சென்னையில் இருந்தேன் """"
இப்போது அப்படியில்லை பல ஊர்களிலிருந்தும் ஆட்கள் திரட்டப்படுவது எதற்கென்றுதான் புரிய்வில்லை


//எவ்வளவு கீழ்தரமான பதிவு சுன்னத் ஜமாத்தை நாடியதால் மனம் நொந்தார்களாம்!!!! வக்கிரமான எண்ணம் கொண்டவர்களால் மட்டுமே இப்படி யோசிக்க முடியும் .....//

சுன்னத் ஜமாத் என்றால் வரதட்சணை கொடுக்க வேண்டும். நபிகள் காட்டித் தராத 'அல்லி குத்து பைனா' துவா ஓத வேண்டும். மஹராக மாப்பிள்ளை 2001 ரூபாய் எழுதுவார் . :-) மார்க்கம் காட்டாத பெண் வீட்டில் பெண்ணின் தகப்பனார் செலவில் ஊர் விருந்து. ஆடம்பர திருமணம். அடுத்து மாப்பிள்ளை சுன்னத் ஜமாத்தில் பிடிப்பாக இருந்தால் கல்யாணம் முடிந்த கையோடு நாகூர் தர்ஹாவுக்கு அழைத்துச் செல்வார். இதை எல்லாம் ஏகத்துவத்தில் வார்த்தெடுக்கப்பட்ட மணப் பெண்ணால் தாங்கிக் கொள்ள முடியுமா? எனவேதான் மனம் நொந்த அந்த பதிவு.
"'எனக்கு ஜனசாவை அடக்க விடாமல் தடுப்பதில் எல்லாம் உடன் பாடில்லை.. அந்த சம்பவம் பள்ளியில் அடிதடி வகாப் பாய் வீடு உடைப்பு இதில்லெல்லாம் உடன்பாடில்லை .......அதை கண்டிக்கவும் செய்தேன் அப்போது நான் சென்னையில் இருந்தேன் """"//

நன்றி....


கண்ணை மூடிக்கொண்டு கருத்தை சொல்வதெல்லாம் எந்தவகையென்று புரியவில்லை .....
மணப்பெண் தாங்குவவாரோ இல்லையோ ....தாங்கள் எழுதுவது கண்ணை மூடிக் கொண்ட பூனையை போல் உள்ளது ...
//Anaivarukkum kaadhu nandraaga keakkum endru ninaikkiren...sago..Asif avarkal evalavu alagaaka     pesi anuppi ullar athai keattum silar ippadi vivatham paanni kondu iruppathu arivukku porutham illatha ondru....
Iniyaavathu thavirkkavum...pls...//

------------------------------------------------------------------------------------
எனக்கும் இதை எல்லாம் இழுத்துப் போட்டுக்கிட்டு எனது நேரத்தையும் இதில் செலவிடுவதில் விருப்பமா என்ன?

நாளைக்கு இறைவனுக்கு முன்னால் 'இறைவா! என்னோடு சிறு வயதில் ஒன்றாக ஒரே தெருவில் விளையாடிய நஜீர் தனக்கு தெரிந்த ஏகத்துவத்தை எனக்கு சொல்லாமல் விட்டு விட்டான். வாய்ப்பு இருந்தும் எனக்கு எடுத்து சொல்லவில்லை. எனவே  என்னை மட்டும் பிடிக்காமல் நஜீரையும் சேர்த்து பிடிப்பாயாக!' என்று வழக்கு தொடுத்தால் நான் என்ன செய்வேன். :-( அதற்கான முன்னேற்பாடுகள்தான் இதெல்லாம்.






No comments: