Followers

Tuesday, February 13, 2018

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்துவிட்டதா?


ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால்,அது ஒரு நாள் உண்மை என நம்பப்படும் என்பார்கள்,,,அப்படித்தான் தமிழ்நாட்டில் ஒரு பொய் பல வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது,,,

அது "50 வருட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்துவிட்டது" என்பது,,,

நாமும் எதைப்பற்றியும் சிந்திக்காமல், அதை ஆமோதித்துக் கொண்டு, நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டுள்ளோம் !!

கீழே உள்ள புள்ளி விவரங்களை கொஞ்சம் பாருங்கள் !!

#உயர்க்_கல்வி

பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம்.

தமிழ் நாடு - 38.2%. பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 17.6%; மபி - 17.4%; உபி - 16.8%; ராஜஸ்தான் - 18.0%; இந்திய சராசரி : 20.4ரூ.

#கல்வி நிலையங்களின் தரம்

2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (HRD) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் படி,

முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்,,,

பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ வெறும் மூன்றுதான். இதேபோல ஹிந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி, பிகார், ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்றுகூட இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.

முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், தமிழ் நாடு - 22 ; குஜராத் - 5 ; மபி - 3 ; உபி - 6 ; பீகார் - 1 ; ராஜஸ்தான் - 3.

முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில்

தமிழ் நாடு - 24 ; குஜராத் - 2 ; மபி - 0 ; உபி - 7 ;

பிகார் - 0 ; ராஜஸ்தான் - 4

#பொருளாதாரமொத்தஉற்பத்தி (GDP)

இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது #தமிழ்நாடு.

தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் மற்ற தென் மாநிலங்களை விட அதிகமாக உள்ளது.

தமிழகத்தின் மொத்த வருமானம், ஒட்டு மொத்த #பாகிஸ்தான் நாட்டின் வருமானத்திற்கு சமம்.

ஒரு மாநிலத்தின் வருமானம் இந்தியாவிற்கே சவால் விடும் அண்டை நாட்டின் வருமானத்திற்கு நிகராக உள்ளதென்றால், அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்.

தமிழ் நாடு - 18.80 lakh crore (2nd Place); பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 10.94 lakh crore (5th Place ; மபி - 7.35 lakh crore (10 th Place) ; உபி - 12.37 lakh crore (4 th Place) ; ராஜஸ்தான் - 7.67 lakh crore (7 th Place) ; சத்தீஸ்கர் - 2.77 lakh crore (17 th Place)

#சாப்ட்வேர்_ஏற்றுமதி (ஆயிரம் கோடியில்)

தமிழ் நாடு - 75,000 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 1917 ; மபி - 343 ; உபி - 13,740 ; ராஜஸ்தான் - 712; சத்தீஸ்கர் - 18

#சிசுமரணவிகிதம் 1000 பிறப்புக்கு

தமிழ் நாடு - 21 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 36 ; மபி - 54 ; உபி - 50 ; ராஜஸ்தான் -47 ; சத்தீஸ்கர் - 46 ; இந்திய சராசரி: 40

#ஒருலட்சம்பிரசவத்தில்தாய்இறக்கும்_விகிதம்

தமிழ் நாடு - 79 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 112 ; மபி - 221 ; உபி - 285; ராஜஸ்தான் - 244 ; சத்தீஸ்கர் - 221 ; இந்திய சராசரி : 167

#தடுப்பூசிஅளிக்கப்படும்குழந்தைகள்_சதவீதம்

தமிழ் நாடு - 86.7%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 55.2%; மபி - 48.9%; உபி - 29.9%; ராஜஸ்தான் - 31.9%; சத்தீஸ்கர் - 54%; இந்திய சராசரி : 51.2%

#கல்வி_விகிதாசாரம்

தமிழ் நாடு - 80.33%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 79%; மபி - 70%; உபி - 69%; ராஜஸ்தான் - 67%; சத்தீஸ்கர் - 71%; இந்திய சராசரி : 74%

ஆண் - பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):-

தமிழ் நாடு - 943 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 890 ; மபி - 918 ; உபி - 902 ; ராஜஸ்தான் - 888 ; இந்திய சராசரி : 919

#தனிநபர்வருமானம் (Per Capita Income) - ரூபாயில்

தமிழ் நாடு - 1,28,366 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 1,06,831; மபி - 59,770 ; உபி - 40,373 ; ராஜஸ்தான் - 65,974 ; சத்தீஸ்கர் - 64,442; இந்திய சராசரி : 93,293

தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில், இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் பெரும்பான்மையான இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது.

#வீடுகளுக்கு_மின்சாரம் (households having electricity)

தமிழ் நாடு - 98.3%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 96%; மபி - 89.9%; உபி - 70.9%; ராஜஸ்தான் - 91%; சத்தீஸ்கர் - 95.6%

#மனிதவளகுறியீடு (Human Development Index)

தமிழ் நாடு - 0.6663 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 0.6164 ; மபி - 0.5567 ; உபி - 0.5415 ; ராஜஸ்தான் - 0.5768 ; சத்தீஸ்கர் - 0.358 ; இந்திய சராசரி : 0.6087

#ஏழ்மை_சதவீதம் Poverty (% of people below poverty line)

தமிழ் நாடு - 11.28%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 16.63%; மபி - 31.65%; உபி - 29.43%; ராஜஸ்தான் - 14.71%; சத்தீஸ்கர் - 39.93%; இந்திய சராசரி : 21.92%

#ஊட்டசத்துகுறைபாடுகுழந்தைகள் (Malnutrition)

தமிழ் நாடு - 18%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 33.5%; மபி - 40%; உபி - 45%; ராஜஸ்தான் - 32%; சத்தீஸ்கர் - 35%; இந்திய சராசரி : 28%

#மருத்துவர்களின்_எண்ணிக்கை (ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு)

தமிழ் நாடு - 149; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 87; மபி - 41 ; உபி - 31; ராஜஸ்தான்-48 ; சத்தீஸ்கர்-23 ; இந்திய சராசரி:36

இன்னும் இது போல சொல்லிக் கொண்டே போகலாம்,,,,

உலக புகழ் பெற்ற பொருளாதார நிபுணரும்,நோபல் பரிசு வென்ற அமெர்த்தியா சென் அவர்கள் , தமிழ்நாட்டின் வளர்ச்சியை பற்றி இவ்வாறாக கூறுகிறார்,,,,

#தமிழ்நாட்டைவடமாநிலங்களோடுஒப்பிடுவதேதவறு #முன்னேறியநாடுகளோடுதான்ஒப்பிட_வேண்டும்
Forwarded as received



3 comments:

Dr.Anburaj said...

தமிழ்நாடு அடைந்துள்ள வளா்ச்சிக்கு காரணம் கழகங்களின் ஆட்சிஅல்ல.காங்கிரஸ்போட்ட அடித்தளம்தான் முக்கிய காரணம். கழகங்கள் கள்ளுக்கடையையும் சாராயக்கடையையும் திறந்து மக்களை குடிகாரர்களாக மாற்றியதுதான்.அடுத்து அரசு துறையில் இன்று நிலவும் பயங்கரமான ஊழல்.
ஊழலில் அளவு என்பது எவ்வளவு என்பதை நாம் அறிய முடியாது.நோவாமல் நொங்கி திங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் அனைவரும் விரும்புகின்றார்கள்.எப்படியும் பணம் கிடைத்தால்சரி என்று அரசு பணியில் நல்ல ஊதியம் பெறும் அனைவரும் விரும்புகின்றார்கள்.
பாரதியார் பல்கலைக் கழக துணை வேந்தர் பணிநிரந்தரம் செய்ய லஞ்சம் வாங்கி இன்று கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றார்.எவ்வளவு கேவவலம்.படித்தவர்கள் இப்படி நயவஞ்சகம் செய்தால் ?

கருணாநிதி கொள்ளையடித்து கொளுத்தவா்.சர்க்காரியா கமிஷன் பிரச்சனையின்போது நான் லஞ்சம் வாங்கவில்லை.அன்பளிப்பு பெற்றேன் என்று வாதிட்டார்.

பராசக்தி படத்திலும் பாருங்கள்.பசி அதிகமானதால் ஒரு ஏழை பெண் பழ வியாபாரியின் கூடையிலி ருந்து சில பழங்களை சிவாஜி சாப்பிட்டு விடுவார்.அவரிடம் காசுயில்லை. அந்த பெண் காசு கேட்டு நிறைய திட்டி சில அடிகள் கூட கொடுப்பார்.ஆனால் சில நிமிடங்களில் ஒரு பைத்தியம் கூச்சல் போட்டுக்கொண்டு கூடையில் இருந்து பழத்தை எடுத்து தின்னும்.ஆனால்பயந்து போன அந்த பெண் பைத்தியத்தைக் கண்டு ஒடுவாள்.
அதைப் பார்த்து சிவாஜியும் பைத்தியக்காரன் வேடம் போடுவார். மக்கள் எப்படி ஏமாறுவார்கள்.மக்கள் பலகீனம் என்ன.அதை பயன்படுத்தி ஃஎமாற்றலாம்.பணம் சம்பாதிக்கலாம் என்று மக்களுக்கு தன் எழுத்தாலும் பேச்சாலும் கற்றுக்கொடுத்தவா் கருணாநிதி.
திராவிட தலைவா் அண்ணாதுரை அவர்கள் நடிகை பானுமதி வீட்டிற்கு ஓசிக்கு விபச்சாரம் செய்ய போவதாக குற்றம் சாட்டப்பட்டது.அதற்கு அந்த யோக்கியன் இலக்கிய மாக ” நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல.பானுமதி ஒன்றும் படிதாண்டா பத்தினியும் அல்ல” என்று பேசி மக்களின் கைதட்டலையும் பெற்று விட்டார்.மக்களே மனைவிக்கு துரோகம் செய்யலாம் என்பதற்கு முன்உதாரணம் அண்ணாதுரை .இன்று தமிழநாடு அரசு பெற்றுள்ள கடனுக்கு வருடத்திற்கு 31000 கோடி வட்டி செலுத்துகின்றார்கள்.
இருந்த வருமானத்தை கொள்ளையடித்தவார்கள் கழகங்கள்.
உயா்ந்த மரங்களை் நிறைந்த காடுகளை அழித்து மலைகளைஅழித்து கற்களை வெட்டி எடுத்து கனிம வளங்களை விற்று அரசுக்கு உமி தங்களுக்க அரிசி என்ற கணக்கில் எடுத்துககொண்டு பணக்காரா்கள் ஆகி விட்டார்கள் கழகங்கள்.
கழங்களால் வீழ்நது போனது தமிழ்நாடு. 100க்கு 100 எடுக்க வேண்டியவன் 60 எடுத்தால் முன்னேற்றமா ? பின்னெற்றமா ? முடிவு தங்கள் கையில்.

Dr.Anburaj said...

The BJP’s minority wing state president, Mohammad Jasmuddin, who facilitated the “joining” of the Muslim voters, belongs to neighbouring Karmibazar, another village with a large Muslim population. He says that out of the 150 families there, 40 Muslim families have moved to the BJP. “I joined the BJP right after the 2013 elections. I was with the Congress but realised there was no point remaining. They couldn’t protect workers from CPM musclemen. It was a good idea to join the BJP at that point because it wasn’t considered a threat, so we weren’t prosecuted. I never thought the BJP would become the main opponent,” Jasmuddin says. “As far as minority affairs are concerned, there is no problem for a Muslim joining the BJP.”
The Left Front’s candidate for Shantibazar is Minister for Home and Tribal Welfare Manindra Reang, who belongs to the CPI. Workers at the Shantibazar office claim that at least 25 RSS workers from Assam are now camping in this semi-rural constituency. “We have been told that they are giving the voters money. Whenever they hear of a financial problem in somebody’s home, they visit the family and help them out financially,” CPI worker said.
Reang is confident of victory in a constituency where Muslims constitute 4% of the vote and tribal voters over 40%.
Full report at:
http://indianexpress.com/article/north-east-india/tripura/tripura-after-we-joined-bjp-mosque-turned-us-out-says-group-of-villagers-5061500/
--------

Dr.Anburaj said...

“ஈற்றில் நினையே சேர்வர் சிவமாம் தேவே”

சிவன் ஒருவனே தேவன். அவனை அடையும் மார்க்கங்கள் பல. ‘யாதொரு தெய்வங் கொண்டீர்! அத்தெய்வமாக மாதொரு பாகனே வருவன்”. ஆன்மாக்களின் மனப்பக்குவம், அறிவு பல திறத்தன. அவற்றிற்கேற்பவே சிவனும் குருவாய் வந்து அவ்வான்மாக்களை நெறிப்படுத்தினான். எனவே எல்லா நெறிகளும் அவனால் படைக்கப்பட்டனவே. ‘விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயஞ் செய்தே எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்றதே யாகும்”.

மலைமேல் பெய்த மழைநீர் ஆறாக சமதளத்தை நோக்கி வரும். அவ்வாறு வரும் நதிகளிற் சில நேரே கடலிற் புகும்; வளைந்து வளைந்து தடைபட்டுப் பட்டுப் பாயும் நதிகளும் இறுதியில் கடலில்தான் சங்கமம் ஆகும்.

அதுபோன்றே சமய உலகில் வேதாந்தம்., சாங்கியம்,யோகம், பாசுபதம் , வைணவம் எனப் பல சமயநெறிகள் உள்ளன. அவை தம்முள் வேறுபட்ட கொள்கைகளும் அனுட்டானங்களும் உடையன. ஒவ்வொன்றும் அபிமானத்தாலே தன்னுடைய கொள்கையே பெருமையுடையது, மேன்மையது என்று கூறிக் கொண்டாலும் , நேராகச் செல்லும் நதியும் வளைந்து செல்லும் நதியும் இறுதியில் கடலைச் சேர்ந்தே முடிவதுபோல எச்சமயத்தாரும் இறுதியில் சிவனைச் சேர்ந்தே முத்தி பெறுவர்.

அருமறையே சாங்கியமே யோகம்மே
பசுபத மரிமார்க் கம்மே
பெருமையுடைத் தெனவொன்றே பேணியொழு
குநருமிச்சா பேதத் தாலே
வருநதிகள் நேர்புகுவ வளைந்துசெலு
மவையும்வழி வழியே யீற்றில்
திருவின்மிகு கடல்புகுத லெனநினையே
சேர்வர்பர சிவமாந் தேவே.

(பாடல் 7 – சிவ மஹிம்ந ஸ்தோத்திரம்)

த்ரயீ ஸாங்க்²யம்ʼ யோக³​: பஶுபதிமதம்ʼ வைஷ்ணவமிதி
ப்ரபி⁴ன்னே ப்ரஸ்தா²னே பரமித³மத³​: பத்²யமிதி ச|
ருசீனாம்ʼ வைசித்ர்யாத்³ருʼஜுகுடில நானாபத²ஜுஷாம்ʼ
ந்ருʼணாமேகோ க³ம்யஸ்த்வமஸி பயஸாமர்ணவ இவ|| 7||

அருமறை- வேதாந்த நெறி. அரிமார்க்கம் – வைணவசமயம்.

இப்பரந்த கருத்தாலே சிவத்தைச் “சமயாதீதப் பழம்பொருள்” என்பர். சிவராத்திரியில் இச்சிவத்தின் மகிமைகளைத் தியானிப்போமாக.