Followers

Wednesday, February 14, 2018

'உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்'


'உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்'

தப்பு செய்தவன் தண்டணை பெற வேண்டும்'

ஜெயலலிதா பிறந்த நாளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை பெற்றவர்களை விடுவிக்க அதிமுக முயல்கிறது. அவ்வாறு செய்தால் சட்டம் ஒழுங்கு கெடும். திரும்பவும் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவார்கள். சிறையில் உள்ளவன் திருந்த வாய்ப்பில்லை. மீறி விடுதலை செய்தால் எந்த ஆட்சியும் நிலைக்காது'

-அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் கோவையில் பேச்சு

விசாரணை கைதிகளாகவே 20 வருடத்துக்கு மேல் சிறை வாசம் அனுபவித்து வரும் இஸ்லாமியர்கள் விடுதலையாகி விடக் கூடாது என்பதில் பாசிஸ வாதிகள் மிக கவனமாக உள்ளார்கள். இன்று தமிழகத்தில் குற்றச் செயல்களில் அதிகம் கைதாவது எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது ராதா கிருஷ்ணனுக்கு நன்றாகவே தெரியும். தமிழகத்தில் வன்முறையை உரம் போட்டு வளர்த்து இந்து மக்களின் ஓட்டை அறுவடை செய்ய பாஜக தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருகிறது.

'உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்' என்பதை மோடிக்கும், அமீத்ஷாவுக்கும், தெகோடியாவுக்கும், அசீமானந்தாவுக்கும்  முதலில் சொல்லிக் கொடுக்கட்டும். இன்றில்லா விட்டாலும் வருங்காலத்திலாவது இவர்கள் தண்டனை பெறுவது உறுதி.

தமிழகம் இன்றும் அமைதியாக இருக்கும்: என்றும் இறைவன் கிருபையால் அமைதியாகவே இருக்கும். ராதா கிருஷ்னண் தனது அறிவுரையை அவருடைய வன்முறை இயக்கமான ஆர்எஸ்எஸிடம் முதலில் கூறட்டும்.

1 comment:

Dr.Anburaj said...

இன்று தமிழகத்தில் குற்றச் செயல்களில் அதிகம் கைதாவது எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது ராதா கிருஷ்ணனுக்கு நன்றாகவே தெரியும். தமிழகத்தில் வன்முறையை உரம் போட்டு வளர்த்து இந்து மக்களின் ஓட்டை அறுவடை செய்ய பாஜக தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருகிறது.
-----------------------
இசுலாமியன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனால் பாதிக்கபட்டவன் காபிராக இருக்கும்பட்சத்தில் நேசிக்க வேண்டும் என்ற அரேபிய அடிமைத்தனத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது தங்களது கட்டுரை. ஒரு பக்கம் நடுத் தெருவில் வைத்து சுட்டுக்கொன்று குற்றவாளியின் உடலை உயா்ந்த மரத்தில் கட்டி தொங்க விட்டதை சிலாகித்து கட்டுரை வெளியிடுகின்றீர்கள்.மறுபக்கம் கொடும் பாதக செயல் புரிந்தவர்களை அவர்கள் முஸ்லீம்கள் என்பதற்காக விடுதலை செய்ய வேண்டும் என்கின்றீர்கள். என்ன முரண்பாடு.
ஏமன் நாட்டில் நிறைவேற்றப்பட்ட தண்டனை முறை சரியானதே.வயதிற்கு வராத சிறுமிகளோடு செக்ஸ் வைப்பது ???? இசுலாமிய நடைமுறையில் உள்ளதுதான்.தண்டனை கொலை செய்ததற்குதான்.