Followers

Monday, February 12, 2018

கவிஞர் கண்ணதாசனின் கடைசி பாடல்கள்.....

கவிஞர் கண்ணதாசனின் கடைசி பாடல்கள்.....

கண்ணதாசன் தனது கடைசி நாட்களில் இளையராஜாவோடு இணைந்து கடைசி மூன்று பாடல்களை கொடுத்துச் சென்றார்.

1.ராஜா ராணி ஜாக்கி...

2.கூந்தலிலே... மேகம் வந்து குடி புகுந்தாலோ...

3. கண்ணே.... கலைமானே....

இந்த மூன்று பாடல்களையும் ஒரு மணி நேரத்தில் எழுதிக் கொடுத்துள்ளார் கவிஞர் கண்ணதாசன்.

3 comments:

Dr.Anburaj said...

மிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதுகுறித்து விரைந்து முடிவெடுக்குமாறு தமிழக அரசுக்கு பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ள தகவல் வெளியாகி யுள்ளது.

கடந்த 2015-ல் தமிழகம், பஞ்சாப், ஜம்முகாஷ்மீர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இவற்றில் தமிழகம் தவிர மற்றமாநிலங்களில் மருத்துவனை அமைப்பதற்கான இடம் தேர்வு, கட்டுமானம் உள்ளிட்ட முதல்கட்ட பணிகள் எப்பொழுதோ துவங்கிவிட்டன.

அதேபோல் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை, புதுக் கோட்டை, ஈரோடு, தஞ்சை, மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ஐந்து இடங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைசெய்தது. அதன் தொடர்ச்சியாக 2015 ஏப்ரலில் மத்தியகுழு ஒன்று தமிழகம் வந்து ஆய்வு நடத்தியது. ஆனால் அதன் பின்பும் மருத்துவமனை அமையப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்தவழக்கில் மருத்துவமனை அமையும் இடத்தை விரைவில் அறிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தர விட்டது. அப்படியும் எந்தவிதமான பதிலும் இல்லாத காரணத்தால் நீதிமன்ற உத்தரவு முறையாகப் பின்பற்றப் படவில்லை என்று கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் நீதிமன்ற அவமதிப்புவழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்து வமனை அமைவது குறித்து விரைந்து முடிவெடுக்குமாறு தமிழக அரசின் சுகாதாரத் துறைக்கு பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தகடிதத்தின் நகல் ஒன்று உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்த ரமேசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

Dr.Anburaj said...

ஒரு மாணவியின் வேண்டுகோளை ஏற்று உதவிய நமது பிரதமர் திரு.மோடி அவர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனுாரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறைவசதி, சைக்கிள் நிறுத்துமிடம், ஆய்வுக்கூடம் போன்ற அடிப்படைவசதிகள் இல்லை. இதனால், பள்ளி அருகிலேயே செயல்படாமல் கிடக்கும் பொதுப் பணித்துறை கட்டடத்தை, பள்ளியின் பயன்பாட்டிற்கு தரக்கோரி, பிரதமர் நரேந்திரமோடிக்கு, இப்பள்ளி மாணவி சரஸ்வதி கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து, பிரதமர் அலுவலகத்தில் இருந்து, கோரிக்கையை நிறைவேற்றுமாறு, தமிழக தலைமை செயலகத்திற்கு உத்தரவிடப் பட்டிருந்தது. பலமாதங்களாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதையடுத்து, அந்தமாணவி மீண்டும் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், 'நாங்கள் அனைவரும் பாசாகிவிட்டோம். உங்கள் உத்தரவு இன்னும், பாசாக வில்லை' என, எழுதி இருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் நடைபெற்ற மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை திறப்புவிழாவிற்கு வந்த, அமைச்சர் செங்கோட்டையன், கீரனுார் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வகுப்பறைகள், கழிப்பறைவசதி, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வுசெய்தார்.

தொடர்ந்து, அருகில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தையும் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.அதன் பின், மாணவி சரஸ்வதியை அழைத்து பாராட்டிய அமைச்சர் செங்கோட்டையன், 'உங்கள் உத்தரவு பாசாகிவிட்டது' என, மீண்டும்,பிரதமருக்கு கடிதம்எழுதும்படி கூறினார்.

கடைக்கோடி குடிமகளின் கோரிக்கைக்கும் செவிமடுத்து கோரிக்கையை நிறைவேற்றிய பிரதமர் மோடியை வாழ்த்துவோம்.பிரதமரின் உத்தரவையேற்று உரியநடவடிக்கை பரிந்துரைத்த தமிழக கல்வி அமைச்சர் அவர்களுக்கு நன்றி.

Dr.Anburaj said...

அபிராமி அந்தாதி- கண்ணதாசன் விளக்கவுரை
-----------------------------------------------

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள். - எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.

அறிதற்கரிய பொருளே! அருளே உருவான உமையே! அக்காலத்தில் இமயமலையில் பிறந்தவளே! என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே! உணர்தற்கரிய பெருமை வாய்ந்த வேதப் பொருளில் ஒன்றிய பொருளே! நான் நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், எந்நிலையில் இருப்பினும் நின்னையே நினைத்து தியானிக்கின்றேன். நான் வணங்குவதும் நின் மலர் போன்ற பாதங்களையே யாகும்.

ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.

அபிராமித்தாய் என் ஆனந்தமாகவும், என் அறிவாகவும் விளங்குகின்றாள். என் வாழ்வில் அமுதமாக நிறைந்திருக்கின்றாள். அவள் ஆகாயத்தில் தொடங்கி மண், நீர், நெருப்பு, காற்று என்ற ஐம்பெரும் வடிவுடையவள். வேதம் நான்கினுக்கும் தானே தொடக்கமாகவும், முடிவாகவும் இருப்பவள். இப்படிப்பட்ட தாயின் திருவடித் தாமரைகள், திருவெண் காட்டில் திருநடனம் புரியும் எம்பிரான் ஈசன் முடிமேல் தலைமாலையாகத் திகழ்வன.

கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே.

என் அம்மையே! அபிராமித்தாயே! ஏழ் உலகையும் பெற்றவளே! நான் எப்பொழுதும் ஊனுருக நினைவது உன்புகழே! நான் கற்பதோ உன் நாமம். என் மனம் கசிந்து பக்தி செய்வதோ உன் திருவடித் தாமரை. நான் இரவென்றும், பகலென்றும் பாராமல் சென்று சேர்ந்திருப்பது உன் அடியார் கூட்டம். இவைகளுக்கெல்லாம் தாயே! நான் செய்த புண்ணியம்தான் என்ன!

பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம்
காத்தவளே. பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு
மூத்தவளே. என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே.
மாத்தவளே. உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே?

உலகம் பதினான்கையும் பெற்றவளே! எப்படிப் பெற்றாயோ, அப்படியே உலகத்தைக் காப்பவளே! பின்பு ஏதோ ஒரு காரணம் கருதி, உலகத்தை உன்னில் அடக்கிக் கொண்டவளே! கறைக் கண்டனுக்கு (ஆலகால விஷத்தை உண்டதால் கறை எனப்பட்டது) மூத்தவளே! (ஆதி சக்தியிலிருந்தே சிவன், பிரம்மா, விஷ்ணு முதலானோர் தோன்றினார்கள் என்பது வரலாறு) என்றும் சீர் இளமை பொருந்திய திருமாலுக்குத் தங்கையே! அருந்தவத்தின் தலைவியே! அபிராமி அன்னையே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன்.