Followers

Saturday, February 03, 2018

ஃபத்வாக்கள் பலவிதம்! அதில் இது ஒரு விதம் :-)



ஃபத்வாக்கள் பலவிதம்! அதில் இது ஒரு விதம் :-)

வெல்லப்பட முடியாத பெரும் சக்கதியாக இருந்த தாத்தாரியர்களுடன் போரிடுவதற்காக, தமது விஞ்ஞானிகளின் உதவியுடன் உலகின் முதல் துப்பாக்கியை ஸுல்தான் கதஸ் தயாரித்து அய்ன் ஜாலூத் யுத்தத்திற்கு (1260.09.03) படை திரட்டியபோது, இந்த ஆயுதத்தால் போரிடுவது பித்அத் என்று ஃபத்வா வழங்கி யுத்தத்தைப் பகிஷ்கரிக்க அழைப்பு விடுத்த வரலாறு நமக்கு இருக்கின்றது.

மார்க்கத்தின் உண்மை சட்டங்களை சரியாக விளங்காத பல ஆலிம்கள் அந்த காலத்திலும் இருந்துள்ளனர். நமது இந்திய சுதந்திர போர் நடந்து கொண்டிருந்த போது 'ஆங்கிலம் படிப்பது ஹராம்' 'வெள்ளையன் தரும் வேலையை உதறி விட்டு வாருங்கள்' என்று ஒவ்வொரு ஜூம்ஆவிலும் ஆலிம்கள் அறிவிப்பு செய்தனர். ஆலிம்கள் சொல்கிறார்களே என்று ஆங்கிலம் படிப்பதையும் ஆங்கிலேயனின் வேலையையும் முஸ்லிம்கள் உதறி தள்ளினர். ஆனால் தாய் நாட்டுப் பற்று பற்றி வாய் கிழிய பேசும் பார்பனர்கள் அன்று வெள்ளையன் மொழியையும், வேலையையும் உதறவில்லை. பயன் படுத்திக் கொண்டார்கள். அதை வைத்து இன்று மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களை ஒடுக்க நினைக்கின்றனர்.

உலக மூல மொழிகள் அனைத்தையும் படைத்தது இறைவனே! இதனை அறியாத ஆலிம்கள் சகட்டு மேனிக்கு ஃபத்வாக்களை வாரி வழங்கி வந்துள்ளனர். அதனை நாமும் பின் பற்றி வந்துள்ளோம். வரலாற்றில் இது போன்ற .பத்வாக்கள் நிறைய உண்டு. முத்தலாக்கும் இதில் சேரும் :-)  



1 comment:

vara vijay said...

Why now not studying? Still British is ruling India.