Followers

Monday, May 15, 2017

அரசுக்கு எதிராக மோடி அண்ணன் போர்க்கொடி

அரசுக்கு எதிராக மோடி அண்ணன் போர்க்கொடி
---------------------------------------------------------------

ஆமதாபாத்: குஜராத்தில் உள்ள நியாய விலை கடைகளில், சமையல் காஸ் விற்பனை செய்ய அனுமதிக்காவிட்டால், மே 28 ம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என பிரதமர் மோடியின் அண்ணன் பிரகலாத் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குஜராத் மாநில நியாய விலை கடைகள் மற்றும் கெரசின் லைசென்ஸ்தாரர் சங்க தலைவராக பிரகலாத் மோடி உள்ளார். அவர் கூறியதாவது:

கெரசின் இல்லாத மாநிலமாக குஜராத்தை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு ஏற்றவாறு கெரசின் ஒதுக்கீட்டை மத்திய அரசும் குறைத்து விட்டது. அத்துடன் உஜாலா திட்டத்தின் கீழ் சமையல் காஸ் சப்ளை செய்யும் பணியையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இது எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு மிகுந்த நிதி சிக்கலை ஏற்படுத்தி உள்ளளது. இப்பிரச்னையை தீர்க்க, சமையல் காஸ் வினியோகம் செய்ய எங்கள் சங்க உறுப்பினர்களை அனுமதிக்க வேண்டும். இல்லாவிடில், மே 28 ம் தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம்.

இவ்வாறு பிரகலாத் மோடி கூறினார்.


ஆமதாபாத்: குஜராத்தில் உள்ள நியாய விலை கடைகளில், சமையல் காஸ் விற்பனை செய்ய அனுமதிக்காவிட்டால், மே 28 ம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என பிரதமர் மோடியின் அண்ணன் பிரகலாத் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


குஜராத் மாநில நியாய விலை கடைகள் மற்றும் கெரசின் லைசென்ஸ்தாரர் சங்க தலைவராக பிரகலாத் மோடி உள்ளார். அவர் கூறியதாவது:


கெரசின் இல்லாத மாநிலமாக குஜராத்தை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு ஏற்றவாறு கெரசின் ஒதுக்கீட்டை மத்திய அரசும் குறைத்து விட்டது. அத்துடன் உஜாலா திட்டத்தின் கீழ் சமையல் காஸ் சப்ளை செய்யும் பணியையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இது எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு மிகுந்த நிதி சிக்கலை ஏற்படுத்தி உள்ளளது. இப்பிரச்னையை தீர்க்க, சமையல் காஸ் வினியோகம் செய்ய எங்கள் சங்க உறுப்பினர்களை அனுமதிக்க வேண்டும். இல்லாவிடில், மே 28 ம் தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம்.

இவ்வாறு பிரகலாத் மோடி கூறினார்.

தினமலர்

15-05-2017



No comments: