Followers

Sunday, May 28, 2017

குன்று குரைத்தெழு நாயை ஒத்தார்களே!"

குன்று குரைத்தெழு நாயை ஒத்தார்களே!"

//"ஒன்றது பேரூர் வழி அதற்குள்
என்றதுபோல இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயை ஒத்தார்களே!"

அரேபிய மாா்க்கம் தான் உண்மை என வாதிடுபவனை குரைக்கும் நாய் என்கிறாா் திருமூலா்...... சுவனப்பிாியன் நாயா ?// Dr Anbu Raj

நான் நாயா? அல்லது திரு மூலர் திருமந்திரத்தின்படி யாரை நாய் என்கிறார் என்பதை சற்று விரிவாக பார்போம்.

திருமந்திரம் கூறும் ஆறு சமயங்கள் சாங்கியம், யோகம், நியாயம், வைசேசிகம், பூர்வ மீமாம்சம், வேதாந்தம் என்று சிலரும்

பாசுபதம், மாவிரதம், வைரவம்,சாத்தம். காணாபதீயம், கௌமாரம் என்று சிலரும்

சைவம், வைணவம், சாத்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம்` என்று சிலரும்

வைணவம், சாத்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம்,சௌமியம் என்று சிலரும் கூறுகின்றனர்.

இந்த சமயங்களுக்குள் அடிதடி நிறையவே நடந்துள்ளது. அதிலும் சைவமும் வைணவமும் மிக அதிகமாக பூசலை ஏற்படுத்தி பல கொலைகளையும் நடத்தியுள்ளது. கமலஹாசனும் தனது 'தசாவதாரத்தில்' சிறிதாக இந்த நிகழ்வுகளை தொட்டிருப்பார். திருமூலர் வாழ்ந்த காலத்தில் இந்து ஆறு சமயங்களே மக்களின் பயன் பாட்டில் இருந்துள்ளன. எனவே தான் அதனை தனது பாட்டில் எடுத்தாள்கிறார் திருமூலர்.

பாடலின் முதல் இரண்டு வரிகளில் வீடுபேறு எனும் முக்தி நிலையை ஒரு பெருநகரமாகவும், ஆறு சமயங்களையும் அந்த நகரத்தைச் சென்றடையும் ஆறு வீதிகளாகவும் உருவகப் படுத்துகிறார் திருமூலர். பெரும்பாலான கிராமங்களுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கும். கிராமத்தின் உள்ளே செல்லும் அந்த வீதியில்தான் வெளியே வரவும் முடியும். ஆனால் பெரு நகரங்களைப் பொறுத்தவரையில் பல வீதிகள் பல இடங்களிலிருந்து அங்கே வந்து சேரும் நகரத்தின் அளவும் முக்கியத்துவமும் அதிகமாக அதிகமாக, அதில் வந்து சேரும் வீதிகளின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

ஊருக்குச் செல்ல பல வழிகள் இருப்பது போல் கடவுளை அடைய பல சமயங்கள் நம்மிடையே உள்ளன. அதில் இரு பெரும் சமயங்களான சைவமும் வைணமும் நீ பெரிதா நான் பெரிதா என்று போட்டியிட்டு உயிர் பலி வரை சென்றதை தனது வாழ்நாளில் பார்க்கிறார் திரு மூலர். இந்த கொடுமையை கடவுளின் பெயரால் நிகழ்த்திய மாபாதகர்கள் அசையாத மலையைப் பார்த்து குரைக்கும் நாயைப் போன்றவர்கள் என்கிறார் திரு மூலர். குரைத்து குரைத்தே ஒரு பெரிய மலையை வீழ்த்திவிட முடியும் என்று நினைக்கும் நாய்களுக்கு ஒப்பானவர்கள் இவர்கள் என்பதே இந்த நான்காவது வரியின் பொருளாகும்.

பல வழிகள் இருந்தாலும் சென்றடையும் இலக்கு ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் சைவ வைணவ கடவுள் கொள்கையாகட்டும், மனு ஸ்ருமிதியாகட்டும், நான்கு வேதங்களான ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களாகட்டும் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களாகட்டும் ஒவ்வொன்றும் தனித் தனி ஊருக்கு வழி காட்டுகின்றன. இதை நீங்களும் மறுக்க முடியாது.

இரு சமயங்களோடுதான் விட்டு தொலைத்தீர்களா? அந்த சமயத்திலும் சாதிகளை உண்டாக்கி அந்த சாதிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கடவுளையும் உண்டாக்கி 'நீ சூத்திரன்: நீ ஷத்திரியன், நீ பஞ்சமன், நான் பிராமணன்' என்று மக்களை பிளவு படுத்தி கடவுளை வணங்கக் கூட தலித்களை அனுமதிக்காத மாபாவிகளைப் பார்த்துதான் 'மலையைப் பார்த்து குரைக்கும் நாய்கள்' என்கிறார் திரு மூலர். கடவுளின் பெயரால் சமணத்தையும் பவுத்தத்தையும் இருந்த சுவடே தெரியாமல் தமிழகத்தில் அழித்து எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றிக் கொன்றார்களே அந்த மாபாவிகளைப் பார்த்துதான் 'மலையைப் பார்த்துக் குரைக்கும் நாய்கள்' என்கிறார் திருமூலர்.

திரு மூலர் வாழ்ந்த காலத்தில் அராபியாவும் பல தெய்வ வழிபாட்டில்தான் இருந்தது. 1400 ஆண்டுகளுக்கு முன்புதான் நபிகள் நாயகம் இஸ்லாத்தை அந்த மக்களுக்கு போதிக்கிறார். நபிகள் நாயகம் காலத்துக்கு முன்பே திரு மூலர் திரு மந்திரத்தை சொல்லி விட்டு சென்றுள்ளார். எனவே எந்த வகையில் பார்த்தாலும் திருமூலர் இஸ்லாமியர்களை சொல்லவில்லை. மனிதனை வர்ணாசிரமத்தால் நான்கு வர்ணங்களாக பிரித்து அதனை இன்று வரை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் மனிதர்களை நோக்கித்தான் 'நாய்கள்' என்கிறார் திருமூலர். அன்பு ராஜ் என்று புனை பெயரை வைத்திருக்கும் நீங்கள் இந்துத்வாவை தூக்கிப் பிடிப்பதால் கண்டிப்பாக வர்ணாசிரமத்துக்கு வக்காலத்து வாங்குவீர்கள். இவ்வாறு கடவுளை பல கூறுகளாக பிரித்து மனிதர்களின் தொழிலை வைத்து ஏற்ற தாழ்வுகளை உருவாக்கி அதற்கு ஆதரவும் நல்கிக் கொண்டிருக்கும் அன்பு ராஜ் போன்றவர்களைப் பார்த்தே 'குரைக்கும் நாய்கள்' என்கிறார் திரு மூலர்.

இனி இஸ்லாமிய கருத்தை எவ்வாறு திரு மூலர் தனது பாடலில் கொண்டு வருகிறார் என்பதையும் பார்போம்.

"
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து

நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே" (திருமந்திரம் - 2104)




1 comment:

Dr.Anburaj said...


சுவனப்பிாியன் இவ்வளவு முட்டாளாக இருப்பது கண்டு நான் பொிதும் ஆச்சாியப்பட்டேன்.

திருமூலா் துலுக்கனாக மாறினால்தான் இறைவனுக்கு பிடிக்கும் என்று கிறுக்குத்தனமாக உளரவில்லை.
முஹம்மதுவை ஏற்காத மக்களை காபீா்கள் என்று பட்டம் கட்டி - இழிவு படுத்தி - கொன்று ஒழிக்கச் சொல்வது போல் திருமந்திரம் சொல்ல வில்லை.
பிறமத பெண்களை செக்ஸ் அடிமையாக வைத்துக் கொள்ளதிருமந்திரம் போதிக்கவில்லை.

பிடறியில் வெட்டுங்கள் என்று குரான் உபதேசிப்பதுபோல் அாிவாளை பயன்படுத்தச் சொல்ல வில்லை.
9 வயது சிறுமிகளை 54 வயது பொியோா்களுக்?கு-கிழவா்களுக்கு திருமணம் செய்யச் சொல்லவில்லை.

திருமந்திரம் ஒரு அறபுதமான வேதம். இந்தியாவில் சமய கலாச்சார பாிணாமத்தில்தோன்றிய ஒரு அற்புதமான புத்தகம். நவீன கருத்துக்கள் அதில் நிறைய காணலாம். படித்தவா்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் அற்புத அமிா்தம் அது.

மனிதனை நடமாடும் கோவில்

என்று உலகமே வியக்கும்வண்ணம் ஒரு அற்புதமான விளக்கத்தை திருமூலா் அளிக்கின்றாா். நடமாடும் கோவில் நம்மவருக்கு ஈதால் படமாடும் கோவில் பகவா்க்குதாமே என்று திருமந்திரம் அறிவிக்கின்றது.மனிதனுக்குச் செய்யும் தொண்டு இறைவனுக்கு செய்யும் தொண்டு என்று கூறும் திருமந்திரம் ஒரு அற்புதமானது.
எந்த மனிதனையும் காபீா் என்று இழிவுபடுததவில்லை.சண்டாளன் சுத்திரன் போன்ற சொற்கள் திருமந்திரத்தில் கிடையாது .

ஒா் நாமம் ஒா் உருவம் இல்லாா்க்கு ஆயிரம் திருநாமம் சொல்வது இந்து தா்மம். இந்து சமயத்தில் பலதெய்வ வழிபாடு இல்லை.இறைவன் ஒன்றே என்பது 25000 ஆண்டுகளுக்கு முன்பே இந்துக்கள் அறிந்ததுதான். ஒரு அரேபிய கைநாட்டு போ்வழியிடம் பாடம் கற்ற இந்துக்களுக்கு அவசியம் தேவையில்லை.காட்டுமிராண்டியாக வாழ்ந்த மனிதன் அனதை்து துறைகளிலும் பாிணாமம் அடையப் பெற்று வளா்ந்து வருகின்றான். பாிணாமம் இன்றும் முடியவில்லை.பாிபுரணத்தை நோக்கி அது நகா்ந்து கொண்டிருக்கின்றது.சமய பாிணாமத்தில் தனக்னென்று ஒரு கடவுள் மற்றும் வழிபாட்டு முறைகளை ஒவ்வொரு கோத்திரமும் பிாிவு மக்களும் வகுத்து வைத்திருந்தாா்கள். இந்துமதம் அவரவா்களின் தெய்வ முறைகளை சமரசம் செய்து மதச்சண்டையை தவிா்த்து வந்தது.

ஒரு கோவிலில் 10 தெய்வங்கள் இருந்தால் 10 குழுக்கள் ஒரு குழுவாக வாழ பழகிக்கொண்டிருக்கின்றாா்கள் என்று அா்த்தம்.காலப்போக்கில் அவா்களின் சமய பழக்க வழக்கங்கள் பாிணாமம் அடையும் என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.


காணபதியம்-கணபதி முதல் தெய்வம் சௌரம்- சுாியனை முதல் தெய்வமாகக் கொண்டது சைவம்-சிவன் வைணவம்- திருமால் கௌமாரம்-முருகன் சாக்தம் -அம்மன்
இப்படி ஆயிரக்கணக்கான மதங்களின் சங்கமமே இந்து சமயம். ஒரே கோவிலில் பல மதங்கள் சங்கமமாகியிருக்கும் அடையாளங்களைக் காணலாம்.வறட்டு மதகருத்துக்களை விட மனிதன் முக்கியம் என்று இந்துக்கள் கருதியதால் சுடலைமாடனும் சிவனும் திருமாலும் அம்மனனும் ஒரே கோவிலில் அருள் பாலிக்கும் காட்சி அறிவின் பண்பாட்டின் பொறுமையின் விவேகத்தின் கலாச்சாலத்தின் அன்பின் உன்னதம் ஆகும்.சிலை வணக்கத்தையும் தியான வாழ்க்கையையும் உயா்ந்தது தாழ்ந்தது என்று போதித்து மனிதனின் ஆவண குணத்தை தூணடிவிடவில்லை. மனிதனை நடமாடும் கோவில் என்று சொல்லி மனிதனை நேசிக்க கற்றுக் ககொடுத்தது திருமந்திரம்.மனிதனை செம்மைப்படுத்த அவனை மேம்படுத்தி கலாச்சாரத்தின் அடுத்த படிக்கு உயா்த்த அனைத்து காாியங்களையும் இந்து பொியோா்கள் மௌனமாக செய்து வந்து கொண்டிருக்கின்றாா்கள்.அரேபிய துருக்கி ஆங்கில படையெடுப்புகளால் அந்த பணி பொிதும் பாதிக்கப்பட்டு விட்டது. ஆகவே சமய கலாச்சாரததுறையில் ஒரு தேக்கநிலை ஏறபட்டு வி்ட்டது.கௌத புத்தா் இன்று 2500 வருடங்களுக்கு முந்திய அரும் பணியாற்றியவா்.ஒரு குண்டுசியைக் கூட எடுக்காமல் அன்பினால் அன்புபினால் மட்டும் இந்த உலகில் பாதியை வென்றவா். முஹம்மது எப்படிப் பட்.டவா் என்பது உங்களுக்கு தொியும்.கௌதமரை புத்தமதத்தவா் என்று இந்து சமயத்திலரிருந்து பிாிப்பது இயலாத காாியம். இந்து சமூகத்தில் ஒரு பிரமாண்டமான பாிணாம வளா்ச்சியை ஏற்படுத்தியவா் அவரே. திருமந்திரத்தை முழுமையாகப் படியுங்கள் முஸ்லீம்களே. இந்தியாவை நேசியுங்கள். அரேபிய கைநாட்டு போ்வழியிடம்அஒன்றும் இல்லை என்பதை உணா்ந்து கொள்ளுங்கள்.