Followers

Saturday, May 20, 2017

அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்ம மரணம்!

அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்ம மரணம்!



நியூயார்க்: அமெரிக்காவில் மாயமான இந்தியாவை சேர்ந்த மாணவர், இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கார்னெல் பல்கலையில் படித்த இந்தியாவை சேர்ந்த அலாப் நரசிபுரா என்பவர் பொறியியல் படித்து வந்தார். திடீரென கடந்த புதன்(மே17) முதல் மாயமானார். அவரை, பல்கலைகழக வளாக போலீசார், நியூயார்க் போலீசாருடன் இணைந்து தேடிவந்தனர். இந்நிலையில், அவரது உடல் அப்பகுதியில் உள்ள இதகா நீர்வீழ்ச்சி அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இறந்தது நர்சிபுரா தான் என்பதைபோலீசார் உறுதிபடுத்தியுள்ளனர். அவரது இறப்பிற்கான காரணம் குறித்து தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர்

20-05-2017

No comments: