Followers

Tuesday, December 31, 2013

நெகிழ வைக்கும் ஒரு சம்பவம்......

ஹம்ஜா, உமர் (ரழி) ஆகிய இரு வீரர்களும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டதற்குப் பிறகு இணைவைப்பவர்கள் முஸ்லிம்களை வேதனை செய்வதிலிருந்து சற்று பின்வாங்கினர். நபி (ஸல்) அவர்களுடனும் முஸ்லிம்களுடனும் உண்டான தங்களது நடவடிக்கைகளை மாற்றத் தொடங்கினர். அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதை விரும்பி முஸ்லிம்களுக்கு ஆசாபாசங்களையும் ஆசைகளையும் காட்டினர். அல்லாஹ்வின் மார்க்கத்திற்கும், அழைப்புப் பணிக்கும் முன்னால் உலகமனைத்தையும் கொட்டிக் கொடுத்தாலும் அது முஃமின்களுக்கு கொசுவின் இறக்கை அளவிற்குக் கூட சமமாகாது என்பது இந்த அறிவீனர்களுக்கு எங்கே தெரியப்போகிறது. ஆகவே, இவர்கள் தங்களது முயற்சியில் படுதோல்வி கண்டனர்.

ஹம்ஜாவும் (ரழி) இஸ்லாமைத் தழுவி, நாளுக்குநாள் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாகிய சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இப்போது நாம் பார்ப்போம்: ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் தனியாக அமர்ந்திருந்தார்கள். உத்பா இப்னு ரபீஆ குறைஷிகளிடம் “குறைஷிகளே! நான் முஹம்மதிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சிலவற்றை அவருக்குக் கூறுகிறேன். அவற்றை அவர் ஏற்றுக்கொண்டால் நாம் அவருக்கு அவற்றைக் கொடுத்து விடுவோம். அவர் நம்மைவிட்டு விலகிக் கொள்ளலாம்” என்று கூறினான். அப்போது குறைஷிகள் “அப்படியே ஆகட்டும் அபுல் வலீதே! நீ சென்று அவரிடம் பேசிவா” என்றனர்.

உத்பா, நபி (ஸல்) அவர்களிடம் சென்று “எனது சகோதரனின் மகனே! நீ எங்களில் குடும்பத்தாலும் வமிசத்தாலும் கண்ணியமிக்கவர். ஆனால், நீ உன் சமுதாயத்தவரிடம் ஆபத்தான ஒரு மார்க்கத்தை கொண்டு வந்திருக்கிறாய்! அதன் மூலம் உமது சமுதாயத்தவன் ஒற்றுமையை குலைத்து விட்டாய்! அறிஞர்களை முட்டாளாக்கி விட்டாய்! அவர்களின் சிலைகளையும், மார்க்கத்தையும் குறை கூறிவிட்டாய்! முன் சென்ற உன் முன்னோரை காஃபிர் (நிராகரித்தவர்) என்று கூறிவிட்டாய்! நான் உனக்கு முன்பு சில விஷயங்களை எடுத்து வைக்கிறேன். அதை நன்கு யோசித்து ஒரு முடிவைச் சொல். அதில் ஏதாவதொன்று உனக்கு விருப்பமானதாக இருக்கலாம்” என நயமாக பேசினான்.

இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “அபுல் வலீதே! சொல்! நான் கேட்கிறேன்” என்றார்கள். அவன் “எனது சகோதரனின் மகனே! நீ கொண்டு வந்த மார்க்கத்தின் மூலம் பொருள் சேகரிப்பதை விரும்பி, நீ எங்களில் மிகப் பெரியசெல்வந்தனாக வேண்டும் என்ற ஆசை இருப்பின், நாங்கள் எங்கள் செல்வங்களைச் சேர்த்து உன்னிடம் கொடுத்து விடுகிறோம். இல்லை உனக்கு ஆட்சி வேண்டுமென்றால் உன்னை எங்கள் அரசராக ஏற்றுக் கொள்கிறோம். அல்லது உனக்கு ஏதேனும் ஜின்களின்” தொல்லை இருந்து அதை உன்னால் தடுக்க முடியவில்லையென்றால், உன்னை நாங்கள் குணப்படுத்துவதற்காக எங்களின் செல்வங்கள் அனைத்தையும் செலவு செய்து உனக்கு நாங்கள் வைத்தியம் பார்க்கின்றோம். ஏனெனில், சில நேரங்களில் ஜின்களின் சேட்டை மிகைத்து வைத்தியம் பார்க்கும் அவசியம் ஏற்படலாம்” என்று கூறினான்.

உத்பா அவனது பேச்சை முடித்த பிறகு “அபுல் வலீதே! நீ உனது பேச்சை முடித்துக் கொண்டாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க அவன் “ஆம்!” என்றான். “இப்போது நான் சொல்வதைக் கேள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூற “அவ்வாறே செய்கிறேன்” என்று அவன் பதிலளித்தான். பிறகு நபி (ஸல்) அவர்கள் “பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம்’ என்று ஆரம்பித்து அத்தியாயம் ஃபுஸ்ஸிலத்தை ஓதிக் காட்டினார்கள். முதுகுக்குப்பின் தன்னுடைய கைகளை ஊன்றி சாய்ந்து உட்கார்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்கள் ஓதுவதை மிகக் கவனமாகக் கேட்டான். பிறகு ஸஜ்தாவுடைய ஆயத்தை ஓதி ஸஜ்தா செய்து முடித்தார்கள். பின்னர் “அபுல் வலீதே! நீ செவியேற்க வேண்டியதையெல்லாம் செவியேற்று விட்டாய். நீயே இப்பொழுது முடிவு செய்துகொள்!” என்று மொழிந்தார்கள்.

அதற்குப் பிறகு உத்பா அவனது நண்பர்களிடம் திரும்பி வந்தபோது அவர்கள் தங்களுக்குள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அபுல் வலீத் முகம் மாறியவனாக வந்திருக்கின்றான்” என்று பேசிக் கொண்டனர். உத்பா வந்தவுடன் “நீ என்ன செய்தியை கொண்டு வந்திருக்கின்றாய்” என வினவினர். “இதுவரை கேட்டிராத பேச்சையல்லவா நான் கேட்டேன்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது கவிதையும் அல்ல! சூனியமும் அல்ல! ஜோசியமும் அல்ல! குறைஷிகளே! நான் சொல்வதைக் கேளுங்கள். இவரை விட்டு ஒதுங்கி விடுங்கள். இவருக்கும் இவரது பணிக்குமிடையில் குறுக்கிடாதீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவடமிருந்து நான் கேட்டு வந்த பேச்சுக்கு மகத்தான ஆற்றல் இருக்கிறது. மற்ற அரபியர்கள் அவரை அழித்துவிட்டால் அதுவே நமக்குப் போதும். நமது நோக்கமும் அதுவே! மாறாக, மற்ற அரபுகளை இவர் வெற்றி கொண்டால் அவருக்குக் கிடைக்கும் ஆட்சி உங்களுடைய ஆட்சியே! அவருக்குக் கிடைக்கும் கண்ணியம் உங்களுடைய கண்ணியமே! அவர் மூலமாக கிடைக்கும் அனைத்து பாக்கியங்களுக்கும் நீங்களும் முழு உரிமை பெற்றவர்கள்” என்று கூறினான். இதனைக் கேட்ட அவர்கள் “அபுல் வலீதே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் தன்னுடைய நாவன்மையால் உன்னை வசியப்படுத்தி விட்டார்” என்றனர். “அவரைப் பற்றி எனது கருத்து இதுதான். இனி உங்களுக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி நீங்கள் நடந்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டான்.

- (இப்னு ஹிஷாம்)

மற்றும் சில அறிவிப்புகளில் வருவதாவது: நபி (ஸல்) அவர்கள் 13ம் வசனத்தை ஓதியபோது “முஹம்மதே போதும்! போதும்!! என்று கூறி தனது கையை நபி (ஸல்) அவர்களின் வாயின் மீது வைத்து, இரத்த உறவின் பொருட்டால் நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினான். அதற்குக் காரணம், அல்லாஹ்வின் எச்சரிக்கை உண்மையில் நிகழ்ந்துவிடும் என்று அவன் பயந்ததுதான். பிறகு எழுந்து சென்று தனது கூட்டத்தாரிடம் இதற்கு முன் கூறப்பட்டது போன்று செய்திகளை கூறினான்.

- (இப்னு கஸீர்)

வழியில் சில குட்டி நாய்கள் .....



'நான் காரை சரியாகத்தான் ஓட்டுகிறேன். வழியில் சில குட்டி நாய்கள் அடிபட்டால் என்னைக் கேட்கலாமோ?'

-------------------------------------------------

"மோடி தன் இதயம் உலுக்கப்பட்டதாகக் கூறியிருப்பது மிகவும் காலம் கடந்த கருத்து. அப்போதே தனது மனநிலையைச் சொல்லாமல், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகச் சொல்லியிருக்கிறார். மக்களிடம் அனுதாபத்தைப் பெறுவதற்கே இவ்வாறு சொல்கிறார்.

நம் மனதின் வலி என்பது உனடியாக வெளிப்படக் கூடியது. 11 ஆண்டு கால மெளனத்துக்குப் பிறகு, அது வெளிப்படாது. ஒருவேளை 11 ஆண்டுகளாக வலியால் மெளனமாக இருந்தவர், இனியும் அப்படியே இருந்திருக்க வேண்டும்.

நியூட்டனின் விதியை நம்புவோர், எதிர்வினைபுரிவதற்கு 11 ஆண்டு காலம் காத்திருக்க மாட்டார்கள். தற்போது குற்றவாளிகளாக நிற்பவர்களுக்காக குஜராத் மாநில அரசு துணைநின்றபோது எங்கே போனது 'வலி'?"

- கபில் சிபல்.

-------------------------------------------------



Rupa Mody, whose son went missing after the Gujarat riots, breaks down after a court rejected a petition seeking the prosecution of BJP leader Narendra Modi on Thursday. Photo: AP

இந்த நயவஞ்சகனின் கொடுஞ் செயலுக்கு இந்து மக்களும் தப்பவில்லை. மோடியை ஒரு மோசடிப் பேர்வழி என்று ஒரு இந்து தாயே விமரிசிக்கிறார். கண்டிப்பாக பாதிக்கப்பட்ட இது போன்ற லட்சக்கணக்கான குஜராத் மக்களின் பிரார்த்தனை வீண் போகாது. மோடி தனது தவறுக்கு தண்டனை பெறும் நாளே இந்தியாவின் பொன்நாள்.

இந்து நாளிதழில் வந்த அந்த தாயின் பேட்டியின் சுருக்கத்தைப் பார்ப்போம்.

Mr. Modi, she said, “has expressed his own pain in great detail but at no point has he asked for forgiveness. And what sort of pain is this that he claims to feel ? What sort of pain is it that for 12 years he has not expressed it and now on hearing of a court judgement he decides to express this great pain. The man has a heart of stone – he is not capable of pain. I am a mother who has no idea if her son is alive or not. I feel pain. Not him.”

Mr. Modi’s blog post came a day after a court in Ahmedabad rejected the petition of Zakia Jafri, the wife of Congress parliamentarian Ehasan Jafri who was killed in the Gulbarg Society attack.

Mr. Modi’s blog came a day after an Ahmedabad court rejected Ms. Jafri’s petition asking for an indictment of Mr. Modi in the Gulbarg Society attack, and for rejecting the clean chit given to the Gujarat chief minister by the Special Investigation Team.

Ms. Mody and her son had taken shelter in the Jafris’ house at the time of the attack. Her son has not been traced since that day.

Her anguish and anger were voiced by Khatun Apa, who lived in Naroda Patiya in 2002 and was a witness to the worst of the riots., barely escaping with her life at the time. The 40-year-old now lives in Citizen Nagar in Ahmedabad, a ghettoised neighbourhood of Muslims living in run down tenements with no municipal facilities.

“We called the most senior police officers, we pleaded before the SRP. All we heard was ‘It is your day to die. The order from above is to kill you all’, she recalled.

Khatun Apa, who said she would never return to Naroda Patiya, said she could still hear the crowds saying “Maro maro, jalao jalao [kill, burn]”.

“If Modi had said ‘Stop’ [the riots] would have stopped but he did not. And now he says he felt pain. He is a liar. He has written this letter to fool people but people are not idiots. More and more Hindus also see he is a liar now.”

Mrs. Mody said the letter was a “political game, a publicity stunt... he thinks saying he feels pain will get him the job of Prime Minister but it won’t.”

http://www.thehindu.com/.../modis-blog.../article5512951.ece

Monday, December 30, 2013

சிறை செல்லும் போராட்டம் - தென் சென்னை கூட்டம்!



முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீடை வலியுறுத்தி மத்திய மாநில அரசின் கவனங்களை ஈர்க்கும் முஸ்லிம்களின் ஜனவரி 28 மாபெரும் சிறை செல்லும் போராட்டத்திற்கு எழுச்சியூட்டும் நேற்றைய (29-12-2013) தென்சென்னை மாவட்ட உரிமை முழக்க பொதுக் கூட்டம் மக்கள் திரளால் மாபெரும் மாநாடாக மாறியது.

அல்ஹம்துலில்லாஹ்! வாழ்வுரிமைப் போரின் தொடக்கமும் தொடர்ச்சியும் எனும் தலைப்பில் தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ச்சியாக நடத்தி வரும் உரிமைப் போரட்டங்களை சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் விவரித்து உரை நிகழ்த்த தொடர்ந்து உரையாற்றிய தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பி ஜே அவர்களின் உரை மக்களிடத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

அல்ஹம்துலில்லாஹ்! சிறை செல்லுவோம்...உரிமைகளை வெல்வோம்! எனும் தலைப்பில் உரையாற்றிய அவர், முகலாய மன்னர்கள் இந்த நாட்டை எவ்வாறு ஆட்சி செய்தார்கள் பெரும்பான்மை சமுதாய மக்களின் உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் எவ்வாறெல்லாம் மதிப்பளிதார்கள் என்ற வரலாறையும், தொடர்ந்து ஆட்சி செய்த பிரிட்டிஷார் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் தீவிரத்தை பொறுக்கமுடியாமல் முகலாயர் வரலாறுகளை எவ்வாறெல்லாம் திரித்து முஸ்லிம்களையும் இந்துக்களையும் பிரித்து (DIVIDE AND RULE) பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் நாட்டை ஆண்டார்கள் என்பதையும், பிரிட்டிஷாரின் சூழ்ச்சிக்கு பலியாகிய இந்திய அரசியல்வாதிகளை கொண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு யார் காரணம் என்றும், விடுதலை போரில் முஸ்லிம்கள் ஆற்றிய தியாக வரலாற்றையும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப் பட வேண்டியதன் காரணங்களையும் நியாயங்களையும் தனக்கே உரிய பாணியில் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துரைத்தார்.

அல்ஹம்துலில்லாஹ்! தொடர்ந்து உரையாற்றிய அவர் 1980 இந்திரா காந்தி காலத்தில் தொடங்கி முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு கமிஷன் மட்டுமே அமைத்துக் கொண்டு முஸ்லிம்களின் பின் தங்கிய நிலையை கண்டறிந்து முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தும் கமிஷன் அறிக்கைகளை கிடப்பில் போட்டு இன்று வரை முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காத காங்கிரஸ் கட்சியின் துரோகத்தை தோலுரித்தார். ஜூலை 4 2010 சென்னை தீவுத் திடலில் உரிமை மீட்பு மாநாட்டில் பெரும் எழுச்சியோடு பல லட்சம் முஸ்லிம்கள் குழுமியதன் எதிரொலியாக உடனடியாக பிரதமரையும் சோனியா காந்தியையும் சந்திக்க நேரம் ஒதுக்கியதையும் அவர்களிடம் இட ஒதுக்கீட்டின் அவசியத்தையும் நியாயத்தையும் வலியுறுத்திய போது பிரதமர் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு நடவடிக்கையில் (PROCESS) இருக்கிறது என்றும் விரைந்து வழங்கிவிடுவோம் என்றும் வாக்குறுதி வழங்கியதையும் சுட்டிக் காட்டிய அவர் 2013 இறுதி ஆகியும் இது வரை இடஒதுக்கீடு வழங்காமல் காங்கிரஸ் இழுத்தடித்து தொடர்ந்து துரோகமிளைப்பதையும் சுட்டிக் காட்டினார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சியில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு அளவை உயர்த்தித் தருவேன் என ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி வழங்கியதையும் கிரைண்டர் மிக்ஸி என்று இன்னும் சொல்லப் படாத வாக்குறுதிகள் நிறைவேற்றப் படுவதையும் சுட்டி காட்டி முஸ்லிம்களுக்கான வாக்குறுதி கண்டுகொள்ளப் படாமல் இருப்பதையும் கடந்த கருணாநிதி ஆட்சியில் வழங்கப்பட்ட 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் நடைபெறும் துரோகங்களையும் பட்டியலிட்ட அவர் தொடர்ந்து முஸ்லிம்கள் ஏமாற்றப் பட்டால் மக்களை திரட்டி கடுமையான போராட்டங்களை தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் எனும் எச்சரிக்கையையும் விடுத்தார்.

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர் இன்ஷாஅல்லாஹ்! ஜனவரி 28 சென்னை கோவை திருச்சி நெல்லையை திணறடித்து உரிமை முழக்கமிடுவோம் எனும் வாக்குறுதியை அல்லாஹு அக்பர் எனும் தக்பீர் முழக்கத்தோடு பெற்றுக் கொள்ள பெரும் எழுச்சியுடன் கூட்டம் நிறைவு பெற்றது. மக்கள் மீண்டும் ஒரு விடுதலை வேட்கை எனும் உணர்வோடும் உரிமையை மீட்டே தீருவோம் எனும் உறுதியோடும் உற்சாகமாய் கலைந்து சென்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்! ஒவ்வொரு முஸ்லிமும் கேட்க வேண்டிய உரை ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் பங்கெடுக்க வேண்டிய மிக முக்கியமான போராட்டம். தூய்மையான எண்ணத்தோடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னெடுக்கும் இப்போராட்டத்தை பெரும் எழுச்சியடைய செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். இனியும் காரணங்களை சொல்லி நாம் போராடாமல் முடங்கிப் போவோமானால் போராட்டத்தை கொச்சைப் படுத்துவோமானால் வரலாறும் நம்மை மன்னிக்காது வருங்கால சந்ததியும் நம்மை மன்னிக்காது.

இன்ஷா அல்லாஹ்!இட ஒதுக்கீடு எனும் உயர்ந்த லட்சியத்தோடு ஜனவரி 28 சிறைகளை நிரப்புவோம்..! உரிமைகளை உறுதியாய் வெல்வோம்!! எந்த தேவைகளுமற்ற இறைவனிடம் நமது பிரார்த்தனைகளை முன் வைப்போம். முயற்சி நம்முடையது முடிவு இறைவனின் உரிமையில் உள்ளது. துணிவோடும் இறைவனின் துணையோடும் போராடுவோம்! உரிமைகளை அடையும் வரை போராடுவோம்!!

நன்றி: அதிரை ஃபாருக்

Sunday, December 29, 2013

வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி ......!



உண்மைதான் வார்ததைகளால் விவரிக்க முடியாத வலி ஏற்படத்தான் செய்தது !

கோத்ரா ரயில் நிலையத்து பிளாட் பாரத்தில் கருகிய பிணங்கள் கிடந்தன ! உடனடியாக பிரேத பரி சோதனையினை அந்த பிளாட்பாரத்திலேயே நடத்த வேண்டும் என்று முதலமைசர் உத்திரவிடுகிறார் !

மக்கள் முன்னாள்,அவர்கள் பார்வையில் நடக்கிறது ! இப்படி செய்ய வேண்டாம் என்று கூறிய சில அதிகாரிகள் உதாசினப்படுத்தப்படுகிறார்கள்! மக்கள் இதனைப் பார்த்தால் உணர்ச்சி வசப்படக் கூடும் என்பதால் அவ்ர்கள் கூறுகிறார்கள்! உள்துறை அமைச்சர் நரேன் பாண்டியா எதிர்க்கிறார் ! முதல்வர் அலுவலகம் பகிரங்கமாக பரிசோதனை மக்கள் பார்வைபட நடக்க வேண்டுமென்று உத்தரவு இடுகிறது!

பஜ்ரங் தள தலைவர்கள் வருகிறார்கள்! அகமதாபாத்தில் ஊர்வலம் நடத்தவேண்டும் என்கிறார்கள்! உடலை அறுத்து பரிசோதன முடிந்த சடலங்களை போட்டலமாகக் கட்டி தாருங்கள்! அதனை ஊர்வலத்தின் முன்னால் கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்!" ஊர்வலத்தில் சடலங்களைக் கொண்டு போகக்கூடாது ! மக்கள் உணர்ச்சி வசப்பட்டு மாநிலம் முழுவதும் கலவரம் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு கெட்டு விடும்" என்கிறார் உள் துறை அமைச்சர் நரேன் பாண்டியா! முதல்வர் அலுவலகம் தலையிடுகிறது! சடலங்களை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதியளிக்கிறது!

ஏழை எளிய முஸ்லீம்கள் ஆணும்பெண்ணும் குழந்தைகளுமாக உயிருக்குப் பயந்து ஜாப்ரி வீட்டில் தஞ்சமடைகிறார்கள்! கலவரக்காரர்கள் அவர் வீட்டை சூழ்ந்து கொள்கிறார்கள்! உள்ளே புகுந்து படுகொலை நடத்தும் நோக்கத்தோடு!

ஜாப்ரி முதலமைசரோடு தொலை பேசியில் பாதுகாப்பு கோரி மன்றாடுகிறார்! "முஸ்லீம்கள் இந்துக்களை படுகொலை செய்யும் போது நீங்கள் எங்கு இருந்திர்கள்" என்று பதில் வருகிறது ! மனம் நொந்து ஜாப்ரி வீட்டின் முன்னே இருக்கும் கலவரக்காரர்களிடம் " என்னை எடுத்துக் கொள்ளுங்கள் ! அப்பாவி ஜனங்களை விட்டு விடுங்கள் " என்று கதறுகிறார்!

கலவரக்காரர்கள் அவரை எடுத்துக்கொண்டார்கள்! கண்ட துண்டமாக வெட்டினார்கள்! தஞ்சம் புகுந்த மக்களையும் வெட்டி வீட்டிற்கு தீவைத்து அநத நெருப்பில் போட்டார்கள் !மாண்டவர்கள் குழந்தைகளும் பெண்களுமாக 68 பேர்!

இதனைத் தடுக்க விரும்பிய நரேன் பாட்டியா குஜராத்தின் தலைநகர் காந்திநகரில் அரசு தலைமைச் செயலகத்தின் முன்பு பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்!

வார்தைகளால் விவரிக்க முடியாத வலி எனக்கு ஏற்படுகிறது!

இதனைப்படிக்கும் உங்களுக்கும் ஏற்படும்!!

சில நாய்களுக்கும் ஏற்பட்டுள்ளதாம்!!!

http://kashyapan.blogspot.com/2013/12/blog-post_29.html

நன்றி: காஸ்யபன்.

காஸ்யபன் போன்ற நல்லுள்ளம் கொண்ட நடுநிலையாளர்கள் எனது நாட்டில் உள்ள வரை மக்களுக்கிடையே பிரிவினையை உண்டு பண்ணி ஆட்சி அதிகாரத்தை பிடித்து விட எண்ணும் குறுமதியாளர்களின் எண்ணம் நிறைவேறப் போவதில்லை என்பதை மட்டும் சொல்லி வைக்கிறோம்.

Saturday, December 28, 2013

2028ல் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்றாவது இடம்!



LONDON: India will beat Japan to grab the position of the world's third-largest economy in 2028, according to an influential British thinktank, that also forecast China to overtake the US for the top position.

London-based economic consultancy Centre for Economics and Business Research (CEBR) in its annual " World Economic League Table" released here on Friday, indicated that by 2028, the league table will be reordered.

"India overtakes Japan in 2028 to become the world's third largest economy. Abenomics means that Japan is likely to follow a weak currency policy for the foreseeable future which means that its GDP in dollar terms gets overtaken by India earlier than we had previously expected," the CEBR said in reference to India's march up the economic ladder as a result of Japanese Prime Minister Shinzo Abe's aggressive policies.

http://timesofindia.indiatimes.com/business/india-business/India-to-be-worlds-3rd-largest-economy-by-2028-UK-thinktank-says/articleshow/28059381.cms

http://www.thehindu.com/business/Economy/study-projects-india-to-be-worlds-3rd-largest-economy-by-2028-after-china-us/article5508247.ece

லண்டன்: வரும் 2028-ம் ஆண்டில் இந்தியா பொருளாதார ரீதியாக உலகிலேயே மூன்றாவது பெரிய நாடாக மாறும் என கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து செயல்படும் சிபர்ஸ் என்னும் பொருளாதார ஆய்வு மையமம் இந்த தகவலை வெளியிட்டு்ள்ளது.


தற்போதை நிலவரப்படி 1.7 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியோடு 11-வது இடத்தில் உள்ள இந்தியா 2018-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 481 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன்ஒன்பதாவது இடத்தை பிடிக்க உள்ளதாகவும், இதே காலகட்டத்தில் ரஷ்யா 6, மெக்சிகோ 12 , கொரியா 13-வது இடங்களையும் பிடிக்கும் என அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் 2023-ம் ஆண்டில் இந்தியா 4 ஆயிரத்து 124 பில்லியன் டாலருடன் ஜிடிபி வளர்ச்சியோடு 4-வது இடத்தையும் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.


2028-ம் ஆண்டில் 6 ஆயிரத்து பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன் மூன்றாவது இடத்தை இந்தியா பிடிக்கும். இந்த கால கட்டத்தில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்த படியாக பொருளாதார ரீதியாக மூன்றாவது இடத்தை பிடிக்கும் இந்தியா ஜப்பானை பின்னுக்கு தள்ளிவிடும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இக்கால கட்டத்தில் கனடா நாடு 10-வது இடத்தை பிடிக்கும் எனவும் ஆய்வில் கூறியுள்ளது.

மன்மோகன் சிங், சிதம்பரம் போன்ற சிறந்த வல்லுனர்களின் நீண்ட கால முயற்சியாலும், வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் மாதா மாதம் அனுப்பும் கோடிகளாலும் இது கண்டிப்பாக சாத்தியப்படும்.

நரேந்திர மோடி போன்ற நாலாந்தர அரசியல்வாதிகளின் வாழ்வு சூன்யமாகி அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற 'ஆம் ஆத்மிகள்' பிரதமர்களாகவும் முதல்வர்களாகவும் மக்களால் அமர்த்தப்பட்டால் 2018 லேயே அந்த இலக்கை இந்தியா அடைந்து விடும்.

வாழ்க நமது நாடு: வளர்க அதன் வளர்ச்சி:

------------------------------------------------------



இந்தியா பிரெடேர்னிட்டி பாரம், ரியாத் செய்திகள்: 25-12-2013 தமிழ்நாடு கள்ளக்குருச்சி அருகில் பெருமங்கலம் கிராமத்தை சார்ந்த திரு.பூமாலை த/பெ முதலி என்பவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சவூதி அரேபியா ரியாத்தில் ஒரு வாகன விபத்தில் பாதிக்கப்பட்டு சுய நினைவின்றி கோமா நிலையில் மன்னர் பஹத் (National Guard Hospital) மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு உதவ நமது தூதரகம் நம்மை கேட்டுக்கொண்டதற்கிணங்க நமது உறுப்பினர்கள் மருத்துவமனையையும் திரு பூமாலை இன் சவூதி முதலாளியையும் பலமுறை தொடர்ச்சியாக சந்தித்து வந்தோம் இந்நிலையில் அவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களாக மருத்துவம் செய்யப்பட்டு தற்போது உடல்நிலையில் சற்று முனேற்றம் ஏற்பட்டுள்ளது அவரை தாயகம் அனுப்புவதற்கு மருத்துவமணை நிர்வாகம் அனுமதியளித்துள்ளது, கடந்த வாரம் சவூதி முதலாளியை சந்தித்தபோது பூமாலை அவர்களுக்கு பாஸ்போர்ட் இல் எக்ஸிட் அடித்துக்கொடுக்கவும் சவூதி முன்வந்தார். தற்போது இன்று எக்ஸிட் அடிக்கப்பட்டுவிட்டது. அவரை தாயகம் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அவருடன் துணைக்கு ஒருவர் உடன் செல்லவேண்டும் உடன் செல்பவருக்கும் விமான டிக்கெட் இலவசமாக வழங்கப்படும். தியாக மனப்பான்மை உள்ளவர்கள் யாரேனும் சமீபத்தில் சென்னை செல்ல இருந்தால் எங்களை உடனே தொடர்புகொள்ளவும் உங்களது பாஸ்போர்ட் மற்றும் ரீ என்ட்ரி விசா அடித்த நகல்களை எங்களுக்கு அனுப்பி வைத்தால் மற்ற அணைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் முடித்துத்தருகிறோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு.
இந்தியா பிரெடேர்நிட்டி பாரம், ரியாத் 0502314754 / 0505948951

-முகமது ரமீஜூதீன் அப்துல் வஹாப்!

Friday, December 27, 2013

ஏ.ஆர்.ரஹ்மான் சூப்பர் சிங்கரில் - ஓர் அலசல்



ஓய்வு நேரங்களில் எப்போதாவது தொலைக்காட்சி பக்கம் சென்றால் விஜய் டிவியின் சூப்பர் சிங்கரை தவற விடுவதில்லை. படிக்கும் காலங்களில் இருந்து இசையில் கொஞ்சம் ஆர்வம் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு வருந்தினராக வந்தார். அதில் நேற்றைய நிகழ்ச்சியில் 'சன் சைன் ஆர்கெஸ்ட்ரா' வைப் பற்றிய ஒரு தொகுப்பை ஒளிபரப்பினார்கள். அந்த நிகழ்ச்சி மிகவும் நெகிழ்ச்சியை எனக்குத் தந்தது.

சலவைத் தொழிலாளியின் மகன், ரோட்டோரமாக டீக்கடை வைத்து பிழைக்கும் ஒருவரின் மகன் என்று வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள 25 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் குழந்தைகளை கடந்த ஐந்து வருடமாக மேற்கத்திய இசையில் வார்த்தெடுத்து வருகிறது கேஎம் மியூசிக் குழுமம். இந்த குழந்தைகளில் எவருமே இசைக் குடும்பத்திலிருந்து வரவில்லை. இது எப்படி ரஹ்மானுக்கு சாத்தியமானது? இவ்வளவு பிஸியான வேலைகளுக்கிடையே எவ்வாறு இவ்வாறு இந்த குடும்பங்களை தேர்ந்தெடுக்க முடிந்தது? எல்லாவற்றிற்கும் மேலாக இப்படி ஒரு எண்ணம் ஏன் இவருள் வந்தது? என்று நாம் சிந்திக்க வேண்டும்.

அவர் சிறு வயதில் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்தார். பள்ளிக்கு சென்று விட்டு வந்து ஓய்வு நேரத்தில் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். சில நேரங்களில் பள்ளிக்கே செல்லாமல் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம். முடிவில் கல்லூரிக்கு செல்லும் தீராத ஆசையை தியாகம் செய்கிறார் தனது குடும்பத்துக்காக! அந்த வலி இன்னும் அவருள் இருப்பதால் அதைப் போன்ற ஏழை குடும்பத்து மாணவர்களை பொறுக்கி எடுத்து இன்று உலக அளவில் பேசப்படக் கூடியவர்களாக மாற்ற முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்.



செலோ என்ற வாத்திய கருவியை சரியாகக் கூட உச்சரிக்கத் தெரியாத ஒரு மாணவன் அந்த கருவியை மிக அனாயசமாக வாசிக்கிறான். ஆக ஒரு மாணவனுக்கு வாய்ப்பையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தால் அவனால் எந்த துறையிலும் சாதித்து காட்ட முடியும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த உதாரணம். முன்பெல்லாம் இசை என்றால் மேல் சாதிக்காரர்களின் ஆக்கிரமிப்பே அதிகம் இருக்கும். இந்த மாணவர்கள் இன்னும் சில ஆண்டுகளில் இசைப் பயிற்சியை முடித்து வெளியேறும் போது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மாணவ மாணவிகள் அதிகம் தங்களின் திறமைகளை காட்ட ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுத்த ரஹ்மானை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்.

இசையை பொறுத்த வரை இஸ்லாம் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. குர்ஆனும் மிகச்சிறந்த ராகத்தில்தான் ஐந்து வேளையும் பள்ளிகளில் வாசிக்கப்படுகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் இறை வேதமான குர்ஆன் ராகங்களோடு வாசிக்கப்படுவதை பார்க்கிறோம். குர்ஆன் இசையை தடை செய்து நேரிடையாக வசனங்கள் எதனையும் அருளவில்லை. கொலை, விபசாரம், வட்டி, பொய், போன்ற பாவங்களை பட்டியலிடும் குர்ஆன் அவற்றை தவிர்த்துக் கொள்ளச் சொல்லும் குர்ஆன் இசையைப் பற்றி எங்குமே ஒரு வார்த்தை கூட கூறவில்லை. சில ஹதீதுகளில் இசையைப் பற்றிய தடையை பார்க்கிறோம். மேலும் சில ஹதீதுகளில் இசையை அங்கீகரித்துள்ளதையும் பார்க்கிறோம. எனவே இரண்டு ஹதீதுகளையும் சீர் தூக்கி பார்க்கும் போது நம்மை இசை அடிமையாக்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஒரு அளவுக்கு மீறி இசையை ரசிக்க ஆரம்பித்தால் பைத்தியத்தின் நிலைக்கு கொண்டு சென்று விட்டு விடும்.

அதற்கு உதாரணமாக இந்த நிகழ்ச்சிகளிலேயே சில உதாரணங்களைப் பார்க்கலாம். திவாகர் என்ற போட்டியாளர் 'நீங்க கடவுள் சார்' என்றும் 'இனி எனது உயிரே போனாலும் கவலையில்லை' என்றும் சொல்கிறார். இசையில் அதிக ஈடுபாடு வந்தால் இது போன்ற வார்த்தைகள் எல்லாம் சர்வ சாதாரணமாக வரும்.

இன்னொரு போட்டியாளரான அரவிந்த் சீனிவாஸ் 'சார் உங்க வீட்டு வாட்ச மேனாகவோ அல்லது கார் டிரைவராகவோ இருந்து விடலாம் என்று சில நேரங்களில் தோன்றும். தினமும் உங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் அல்லவா?' என்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு சிறந்த மனிதர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரது நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும், சகல மதத்தவர்களையும் மதித்து அவர்களோடு அன்போடு தனது தொழிலை கொண்டு செல்லும் லாவகமும் ஒவ்வொரு இந்தியனும் கடைபிடிக்க வேண்டியது. இதில் சந்தேகம் இல்லை.

ஆனால் அவரை புகழ்கிறோம் என்ற பேரில் கடவுள் என்பதும், உயிரையே விட்டு விடுகிறேன் என்பதும், வாட்ச் மேனாகவாவது வேலை செய்கிறேன் என்று சொல்வதும் தவிர்க்கப்பட வேண்டியது. இதை மேடைகளிலேயே ரஹ்மான் சொல்லியும் யாரும் கேட்பதாக இல்லை. தமிழர்களாகிய நாம் ஓவராக சம்பந்தப்பட்டவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். இதனால்தான் சினிமா துறையிலிருந்து பல முதல்வர்களை நாம் பார்த்து வருகிறோம். எனவே ரஹ்மானை ஒரு இசை அமைப்பளாராக பாருங்கள்: சிறந்த இந்தியனாக: சிறந்த தமிழனாக: சிறந்த மனிதனாக: சிறந்த முஸ்லிமாக: பாருங்கள். கடவுள் அளவுக்கு உயர்த்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நம் நாட்டில் உள்ள செல்வந்தர்கள் ரஹ்மானை பின் பற்றி வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள இது போன்ற குழந்தைகளை தத்தெடுத்து கல்லூரி படிப்பு வரை கொண்டு செல்ல முயற்சிப்பார்களாக! ஏழை மக்களுக்கு உழைக்க வேண்டிய நம் நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் பொறுப்பை மறந்து தங்கள் வாரிசுகளுக்கு சொத்து சேர்த்து ஆசிய பணக்காரர்களிலும், உலக பணக்காரர்களிலும் இடம் பெற ஆலாய் பறக்கிறார்கள். அதற்காக சாமானய மக்களின் வரிப் பணத்தையும் திருடவும் தயங்குவதில்லை. இந்த அரசியல்வாதிகள் மறந்ததனால்தானோ என்னவோ அந்த பொறுப்பை ரஹ்மான் போன்றவர்கள் தங்கள் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ரஹ்மான்! உங்களின் மனிதாபிமான நடவடிக்கைகளில் இறைவன் உங்களுக்கு பூரண உதவிகளை தந்தருள்வானாக என்று பிரார்த்திக்கிறேன்.

மற்றபடி இந்த போட்டியில் முதல் இடத்தைப் பெறப் போவது திவாகரா அல்லது சையது சுபுகானா அல்லது பார்வதியா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும். வெற்றியாளருக்கு வாழ்த்துக்கள்.

முஸ்லிம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்!

முஸ்லிம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் : உடனடி வேலை - மேலாண்மை பயிற்சி !





இந்தியா இஸ்லாமிக் கல்சுரல் செண்டர் - நோபிள் எஜுகேஷன் பவுண்டேஷன் கூட்டு முயற்சி !!

ரிலைன்ஸ், இன்போசிஸ் உள்ளிட்ட 23 நிறுவனங்கள் பங்கேற்று பணி நியமன ஆணைகள் வழங்கின !!!

இந்தியா இஸ்லாமிக் கல்சுரல் செண்டர் மற்றும் நோபிள் எஜுகேஷன் பவுண்டேஷன் ஆகிய அமைப்புக்களின் சார்பில், முஸ்லிம் இளைஞர்களுக்கான 'சிறப்பு' வேலை வாய்ப்பு முகாம் ஒன்று டெல்லியில் நேற்று (23/12) நடத்தப்பட்டது.

உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் டெல்லி உள்ளிட்ட, நாட்டின் பல பகுதிகளிலிருந்து, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் கலந்துக் கொண்டனர்.

ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், பியூச்சர் க்ரூப், ஏர்வெய்ஸ், வோடாபோன் உள்ளிட்ட 23 நிறுவனங்களின் சார்பில் உயரதிகாரிகள் வந்திருந்து நேர்முகத்தேர்வு நடத்தி, வேலைக்கான பணி நியமன உத்தரவுகளை உடனுக்குடன் வழங்கினர்.

இதுபோன்ற முகாம்களை ஆண்டுக்கு 3 முறை நடத்துவதாக கூறிய ஒருங்கிணைப்பாளர் சிராஜுத்தீன் குறைஷி,

இம்முறை பெண்கள் பலரும் கலந்து கொண்டு, அவர்களுக்கேற்ற பணிகள் பெற்று பயனடைந்ததாக கூறுகினார்.

கடந்த சில ஆண்டுகளில் செய்யப்பட்ட முயற்சிகளின் பயனாக, இதுவரை 10,000 இளைஞர்கள் வேலைவாய்ப்புக்களை பெற்றுள்ளனர்.

அவர்களில் 60% பேர் பன்னாட்டு நிறுவனங்களில் கை நிறைய சம்பளம் பெறுவதாக கூறினார்.

நேற்றைய முகாமில் 200 பேருக்கு (உடனடி) பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டதுடன், 1800 பேருக்கு மேலாண்மை திறன் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

இது தவிர, 300 நபர்களுக்கு மத்திய அரசின் பல்வேறு தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டதால், கடந்த ஆண்டு மட்டும், 18 இளைஞர்கள் மத்திய அரசின் உயர்பதவிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார், சிராஜுத்தீன்.

நேற்றைய இந்த நிகழ்வுக்காக பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது, பார்ப்போரை வியக்க வைத்தது.

போக்குவரத்து சிலவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன்,(சலுகை விலையில்) உணவுக்கான கேன்டீன்களும் ஆங்காங்கு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

நன்றி: மறுப்பு

இது போன்ற முகாம்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடக்க சம்பந்தப்பட்டவர்கள் முயற்சிப்பார்களாக!

Thursday, December 26, 2013

என்னை வியக்க வைத்த சவுதிகளின் திருமணம்!

என்னை வியக்க வைத்த சவுதிகளின் திருமணம்!

எனது பாஸின் மூத்த மகளுக்கு சென்ற வியாழக்கிழமை திருமணம் நடந்தது. சில நாட்களுக்கு முன் 'திருமணத்துக்கு அவசியம் நீ வர வேண்டும்' என்று அழைத்தார். நான் இதுவரை சவுதி நாட்டவர் திருமணங்களுக்கு சென்றதில்லையாதலால் கௌரவமாக...

'இல்லை... எல்லோரும் சவுதிகளாக இருப்பார்கள். எனக்கு கூச்சமாக இருக்கும். திருமணம் நல்ல முறையில் முடிய நான் பிரார்த்திக்கிறேன்' என்றேன்.

'உனக்கு கம்பெனி கொடுக்க நம் கம்பெனியிலிருந்து இரண்டு பேர் வருகின்றனர். மேலும் சில எகிப்து நாட்டவரும் வருகின்றனர். எனவே மறக்காமல் திருமணத்துக்கு வரவும்' என்று சொல்லவே போகலாம் என்று தீர்மானித்தேன்.

அலுவலகத்தில் நான் மட்டுமே வேலையில் இருப்பதால் வேறு துறைகளில் வேலை செய்யும் மற்ற இரண்டு ஹைதரபாத்திகளும் வர சம்மதித்தனர். மூவருமாக சேர்ந்து திருமண மண்டபம் நோக்கி வாகனத்தில் சென்றோம். அழைப்பிதழிலேயே திருமண மண்டபம் செல்வதற்கான வரை படம் இருந்ததால் அதன் உதவி கொண்டு சரியாக மண்டபத்தை சென்றடைந்து விட்டோம்.

இரவு நேரம் ஆகையால் சரியான குளிர். அதற்கு தக்கவாறு குளிர் சட்டைகளையும் கொண்டு வந்திருந்தோம். அதனை வாகனத்திலேயே வைத்து விட்டு மண்டபத்தை நோக்கி நடந்தோம். மண்டப வாயிலிலேயே எனது ஓனரும் அவரது அண்ணனும் நின்றிருந்தனர். எங்களை கண்டவுடன் அருகில் வந்து கை கொடுத்து தங்கள் கன்னத்தை எங்கள் கன்னத்தோடு இணைத்து முத்தம் கொடுத்தனர். இது சவுதிகள் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் முறை.

உள்ளே மிகப் பெரிய ஹால். அரச சபைகளிலே நாம் படங்களில் பார்ப்போமே அத்தகைய இருக்கைகள். எனது ஓனர் அமரும் இருக்கைக்கு இரண்டு இருக்கைகள் தள்ளி எங்களை உட்கார சொன்னார். நாங்களும் உட்கார்ந்தோம். சிறிது நேரத்தில் சீருடை அணிந்த பணியாள் தேயிலை, காப்பி போன்ற மூன்று வகையான தேநீர்களை எங்களிடம் கொண்டு வந்து 'எது வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்' என்றார். அவரவர்கு விரும்பியதை எடுத்துக் கொண்டோம். அந்த குளிருக்கு பால கலக்காத அந்த தேயிலையும் காப்பியும் சுகமாக இருந்தது.

சிறிது நேரத்திற்கெல்லாம் உறவினர்கள் கூட்டம் வர ஆரம்பித்தது. வந்தவர்கள் அனைவரும் எனது ஓனரிடம் கை கொடுத்து முத்தமும் கொடுத்து விட்டு எங்கள் மூவரிடமும் வர ஆரம்பித்தனர். எங்களுக்கும் கை கொடுத்து விட்டு அதே போன்று கன்னத்தோடு கன்னம் வைத்து முத்த மழை பொழிய ஆரம்பித்தனர். இது எங்கள் மூவருக்கும் புதிய அனுபவம் என்பதால் மெல்ல ஹைதரபாத்தியிடம் 'கொஞ்சம் தள்ளி உள்ளே சென்று உட்காருவோமே!' என்றேன். அவனும் சரி என்று சொல்லவே அங்கிருந்து அகன்று சற்று உள்ளே சென்று உட்கார்ந்து கொணடோம்.

அரை மணி நேரத்திற்கு பிறகு மாப்பிள்ளை வந்தார். பெண் அதே மண்டபத்தில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பெண்களோடு அமர்ந்திருந்தார். மாப்பிள்ளை என்று விஷேசமாக எந்த உடைகளோ மாலைகளோ இல்லாததால் சாதாரணமாகவே வந்தார். 'நிக்காஹ்' முன்பே முடிந்து விட்டது. எல்லோரும் சென்று மாப்பிள்ளையிடம் கை கொடுத்தனர். நாங்களும் கை கொடுத்தோம். அதன் பிறகு மாப்பிள்ளையிடம் அவரது நண்பர்கள் கிண்டலும் கேலியுமாக அரை மணி நேரம் சென்றது. சில சவுதிகள் இந்த இடங்களில் இசைக் கச்சேரிகளை ஏற்பாடு செய்வர். எனது ஓனர் அதிக இறை பக்தி உடையவர் என்பதால் ஆடம்பர கேளிக்கைகளை தவிர்த்து விட்டார். இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். இந்த மண்டபத்துக்கு வாடகை கொடுப்பதும், இங்கு வருபவர்களுக்கு சாப்பாடு கொடுக்கும் செலவுகள் அனைத்தும் மணமகனையே சாரும். அதே போல் மணமகளுக்கு லட்சக்கணக்கில் மஹர் தொகையும் மணமகனே கொடுக்க வேண்டும். நகை, பெட்ரூம் செட் என்று அந்த செலவுகளையும் மேலும் அன்று மணமகளுக்கான உடைகளையும் மணமகனே தயார் செய்ய வேண்டும். ஆனால் நம் நாட்டில் எல்லாமே தலை கீழ். அனைத்தையும் பெண்ணின் தகப்பனின் தலையில் கட்டி விடுவர். முஸ்லிம்களும் பெண்ணின் தகப்பன் தலையில் கட்டுவது நம் நாட்டில் வழக்கம். ஆனால் அது இஸ்லாத்துக்கு முரணானது என்பதை ஏனோ பலரும் உணருவதில்லை.

இடையில் ஒரு பெரிய கண்ணாடி கிளாஸில் அருமையான பழ ரசங்கள் மூன்று வகையானவைகளை கொண்டு வந்து எடுத்துக் கொள்ளச் சொல்லினர். நாங்களும் ஆளுக்கு ஒரு கிளாஸ் பழ ரசங்களை எடுத்துக் கொண்டோம். இன்னொரு அரை மணி நேரம் கழித்து அருகில் உள்ள சாப்பாட்டு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். இங்கும் மிகப் பெரிய ஹால்.

ஆறு பேர் அமரக் கூடிய மிகப் பெரிய டைனிங் டேபிள். அவ்வாறு கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட டேபிள்கள் போடப்பட்டிருந்தன. உணவு வகைகளும் முன்பே தயாராக டேபிள்களில் வைக்கப்பட்டிருந்தது. நாங்கள் மூவரும் சென்று ஒரு டேபிளில் உட்கார்ந்தோம். இரண்டு எகிப்து நாட்டவரும் ஒரு பாலஸ்தீனியும் எங்களோடு ஜோடி சேர்ந்து கொண்டனர். மிகப் பெரிய தாம்பூலத்தில் சவுதி பிரியாணி (மந்தி கப்ஸா) வைக்கப்பட்டு அதன் மேல் ஆட்டுக் கறியும் வைக்கப்பட்டருந்தது. பெப்ஸி, செவன் அப், சலாட், ஹூமூஸ்(சிரிய நாட்டு உணவு) என்று சிறிய பாக்கெட்டுகளில் வைக்கப்பட்டிருந்தது. எது விருப்பமோ அதை சாப்பிடும் வகையில் அமைத்திருந்தனர். மதறாஸ், ஹைதராபாத், எகிப்து, பாலஸ்தீன் போன்ற வேறு வேறு கலாசாரத்திற்கு சொந்தக்காரர்கள் ஒரே த்ட்டில் அமர்ந்து சாப்பிட்டோம். எனது கை பட்ட உணவை பாலஸ்தீனி எடுப்பதும், எகிப்து நாட்டவன் கை பட்ட உணவை ஹைதராபாத்தி எடுத்து சாப்பிடுவதும் சவுதியில்தான் பார்க்க முடியும்.

அந்த ஹாலிலேயே ஒரு ஓரத்தில் மிகப் பெரிய டேபிளில் 15 வகையான இனிப்புகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. உணவு சாப்பிட்டு முடிந்தவுடன் அங்கு சென்று சிறிய தட்டில் நமக்கு வேண்டிய இனிப்புகளை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. நானும் நண்பர்களும் வேண்டிய மட்டும் இனிப்புகளை தட்டில் எடுத்துக் கொண்டு, சில பழங்களையும் எடுத்துக் கொண்டு திரும்பவும் எங்களின் டேபிளுக்கு வந்தோம். அடுத்த ரவுண்டு ஆம்பம். இதற்கு மேல் வயிற்றிலும் இடமில்லை. செவனப்பை கடைசியாக குடித்து விட்டு எங்களின் உணவை முடித்துக் கொண்டு வெளி ஹாலுக்கு வந்தோம். உண்ட களைப்பு எங்கள் கண்களை சொருக ஆரம்பிக்கவே வெளியில் நின்ற ஓனரிடம் கை கொடுத்து விட்டு எங்கள் வாகனத்தை நோக்கி நடையை கட்டினோம்.

முதன் முதலாக கலந்து கொண்ட இந்த சவுதி வீட்டு திருமணம் எனக்கு புதிய அனுபவமாகவே இருந்தது.

Tuesday, December 24, 2013

மோடியின் தள்ளி வைக்கப்பட்ட மனைவி - அ.மார்க்ஸ்

வாரணாசி : ''வரும் லோக்சபா தேர்தலில், உ.பி., மக்கள், ராம ராஜ்ஜியத்தை ஏற்படுத்துவர், என்ற நம்பிக்கை எனக்குள்ளது,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.

இது நேற்று வாரணாசியில் மோடி பேசிய பொதுக் கூட்டப் பேச்சு. காந்தி கண்ட ராமராஜ்ஜியத்தில் முஸ்லிம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்கள், இறை நம்பிக்கை அற்றவர்கள் என்று சகலருக்கும் இடமிருந்தது. ஆனால் மோடி படைக்க நினைக்கும் ராம ராஜ்ஜியத்தில் வர்ணாசிரமம் அடிப்படையாக இருக்கும். எதிர் கேள்விக்கு அங்கு இடமிருக்காது. நாடு மற்றுமொரு பிரிவினையை நோக்கி செல்லும்.

பர்த்வான்: நரேந்திரமோடி பிரதமர் ஆனால், நாடு பிளவுபடும். அதனால் பெரும் ஆபத்து ஏற்படும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான புத்ததேவ் பட்டாச்சார்ஜி கூறி உள்ளார். மேலும்,’ மோடி ஏழைகளுக்கு வேண்டப்பட்டவர் அல்ல. பணக்காரர்களால் முன்னிறுத்தப்படுபவர்,’ என்று கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=880351

அந்த ராமனும் தனது சந்தேகத்தினால் சீதையை காட்டுக்கு அனுப்பினார். அதே போல் இந்த மோடியும் தனது அரசியல் வாழ்வுக்காக தனது மனைவியை தள்ளி வைத்துள்ளார். இன்று வரை அந்த மூதாட்டி ஒரு பள்ளியில் ஆசிரியையாக வறுமையில் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார். இது பற்றி அ. மார்க்ஸ் பக்கத்தில் வந்த கட்டுரையை அப்படியே தருகிறேன்.



சுமார் ஆறு மாதங்களுக்கு முன் குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள ராஜோசோனா கிராமத்திற்குச் சென்றார்

Open இதழின் செய்தியாளர் ஹைமா. அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்புப் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரியும் ஒரு 57 வயதுப் பெண்ணை நேர்காண்பது அவரது பயணத்தின் நோக்கம். பள்ளி நேரம் போக டாய்லெட், குளியலறை எந்த வசதியுமில்லாத ஒரு பத்தடிக்குப் பத்தடி ‘வீட்டில்’ வசிக்கும் அப் பெண்ணின் பெயர் யசோதாபென் சிமன்லால் மோடி. குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் தள்ளி வைக்கப்பட்ட மனைவி.

அன்று காலை அந்த அரசுப் பள்ளிக்குத் தன்னைக் காண வந்த ஹைமாவைப் பார்த்து எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளப் பொங்கும் ஆர்வத்துடனும், இதழ் விரிந்த புன்னகையுடனும் ஓடிவந்த யசோதாவின் தோற்றத்தை இப்படி விவரிக்கிறார் ஹைமா.

“சற்றுப் பொருந்தாத ஜாக்கெட், எளிய பிரின்டட் புடவை, சற்றே வளைந்த முதுகு, சுருக்கங்கள் விழுந்த முகம், வேலை செய்து கரடு தட்டிப்போன கரங்கள், அழுக்கேறியுள்ள வெடிப்புகள் நிறைந்த பாதங்களில் ரப்பர் செருப்புகள்...”

சுமார் 39 ஆண்டுகளுக்கு முன் வெறும் ஏழாம் வகுப்பு படித்திருந்த 18 வயது யசோதாவிற்கும், அப்போது அரசியல் ஏணியில் இவ்வளவு உயரம் ஏறியிராத நரேந்திர மோடிக்கும் அக்னி சாட்சியாகப் பெரியோர்களின் ஆசியுடன் திருமணம் நடந்துள்ளது.

எவ்வளவு நாட்கள் சேர்ந்திருந்தார்களோ தெரியவில்லை. அரசியலில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த மோடிக்கு இந்தப் படிக்காத கிராமத்துப் பெண்ணைப் பிடிக்கவில்லை. ஒரு சில நாட்களிலேயே தந்தை வீட்டுக்கு அனுப்பப்பட்ட யசோதா அதன்பின் விட்ட படிப்பைத் தொடர்ந்து, ஆரம்பப் பள்ளி ஆசிரியைப் பயிற்சியையும் முடித்து, ஒரு சில அரசுப் பள்ளிகளில் பணியாற்றி, 92ம் ஆண்டு முதல் ராஜோசோனா வில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். அநேகமாக சென்ற மாதத்தோடு அவர் ஓய்வும் பெற்றிருப்பார்.

அது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கிராமம். மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர். பள்ளியில் பயிலும் முஸ்லிம் சிறார்களின் முன்னேற்றத்தில் அவர் காட்டும் அக்கறையை அனைவரும் பாராட்டுகின்றனர். ஒரு வேளை கணவரின் பாவங்களுக்கான பிராயச்சித்தமாக இருக்குமோ?

யசோதாவின் ஒரே ஆசை, எதிர்பார்ப்பு எல்லாம் என்றாவது ஒரு நாள் அகமதாபாத்திலுள்ள முதலமைச்சர் அலுவலகம் அல்லது வீட்டிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வரும் என்பதுதான். பாவம் யசோதா, மோடியின் தொலை பேசி வேறொரு பெண்ணைப் பின் தொடரக் கட்டளை இட்டுக் கொண்டிருப்பதை அறியார்.

“என் கதையச் சொல்கிறேன்” என ஓடி வந்த யசோதாவை பள்ளித் தலைமை ஆசிரியர் பிரவீண்குமார் வியாசின் இரும்புக் குரல் தடுத்து நிறுத்தியது. “பள்ளி நேரத்தில் பேசக் கூடாது. வகுப்புக்குப் போ” என அவர் ஆணையிட்டார்.

“இடைவேளையின் போது கொஞ்ச நேரம் பேசுறேன்” என யசோதா கெஞ்சியதற்கு வியாஸ் மசியவில்லை.

பத்திரிக்கையாளர்கள் யாருடனும் யசோதா பேசக் கூடாது என்பது மேலிடத்து ஆணை.

பரிதாபமாகத் திரும்பிச் சென்ற யசோதா சற்று நேரத்தில் ஓடி வந்தார். “மன்னியுங்கள், என் கணவருக்கு எதிராக நான் எதுவும் சொல்லமாட்டேன். அவர் பெரிய அதிகாரத்தில் உள்ளவர். என் பிழைப்புக்கு ஒரே ஆதாரம் இந்த வேலைதான். இதுக்கும் எதுவும் ஆபத்து வந்துவிடக் கூடாது” எனச் சொல்லித் திரும்பிப் பாராது நடந்தார்.

இடையில் பிரவீண்குமார் யார் யாருடனோ தொலை பேசினார். பின் யசோதாவின் வகுப்பறைக்கு ஓடினார். ஹைமா மீண்டும் யசோதாவைச் சந்தித்துப் பேச முயற்சித்தபோது அவர் வீறிட்டார். நான் உங்களோடு பேச விரும்பவில்லை எனச் சொல்லி நகர்ந்தபோது ஒரு கணம் நின்று அப்புறம் பேசலாம் எனச் சைகை செய்தவாறே அகன்றார்.

சற்று நேரத்தில் ஏகப்பட்ட வாகனங்கள் பள்ளியை நோக்கி வந்தன. வண்டிகளைப் பள்ளி வளாகத்திற்குள் நிறுத்திவிட்டுடு இறங்கியவர்கள் தலைமை ஆசிரியரின் அறையை நோட்டம் விட்டவாறு சிறிது நேரம் நின்று விட்டுக் கலைந்தனர்.

மாலையில் பள்ளி விட்டதுதான் தாமதம். தலையைக் குனிந்தவாறே ஓடி வந்த யசோதா அங்கு நின்றிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறி 20 கி.மீ தூரத்தில் இருந்த தன் சகோதரனின் வீட்டிற்கு ஓடினார்.

சற்று நேரத்தில் ஒரு இளைஞன் அங்கு வந்தான். திகைத்து நின்ற ஹைமாவிடம் தன் பெயர் பிரகாஷ் என்றும் ‘ராம் சேது’ என்கிற அரசு இதழ் ஒன்றின் நிருபர் எனவும் அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை விரைவாக அந்த கிராமத்தை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துவிட்டுச் சென்றான்.

கிராமத்து மக்கள் சொன்னவற்றில் ஒன்று: யசோதாவின் ஒரே பொழுது போக்கு ஜோசியம் பார்ப்பது. எல்லா ஆரூடக்காரர்களிடமும் அவர் கேட்கும் கேள்வி அகமதாபாத்திலிருந்து அழைப்பு வருமா என்பதுதான். ஜோசியர்கள் “நிச்சயம் வரும்” என்று நம்பிக்கை ஊட்டிக் கொண்டே இருக்கின்றனராம்.

{நன்றி : .யசோதா அவர்களின் படமும் தகவல்களும் open இதழில் - 11, ஏப்ரல் 2009- இருந்து எடுத்தது.}

தொப்பி போட்டு ஏமாத்த முடியல - கார்ட்டூன்




'தொப்பி போட்டுகிட்டு, நோன்பு கஞ்சி குடிச்சுட்டா முன்னேயெல்லாம் முஸ்லிம்கள் சிந்தாம சிதறாம ஓட்டுக்களை நமக்கு போட்டுகிட்டு இருந்தாங்க. இந்த தவ்ஹீத் ஜமாத் திடீர்னு உண்டாகி முஸ்லிம்கள் எல்லாரையும் கெடுத்துப்புட்டாய்ங்க... மோடியை ஆதரிக்கலாம்னா நம்ம கட்சியிலேயே எதிர்ப்பு இருக்கு. பத்தாததுக்கு இஸ்லாமியர்கள், கம்யூனிஸ்ட், பகுத்தறிவாளர்கள், கிறித்தவர்கள், மத சார்பற்றவர்கள் என்று அத்தனை ஓட்டுக்களும் எதிரணிக்கு போயிடும். காங்கிரஸ் பக்கம் போகலாம்னா இலங்கை பிரச்னையினால அதுவும் சிக்கலாக உள்ளது. இப்போ நான் என்ன பண்றதுண்டு எனக்கே விளங்கல்ல'

'நல்லா யோசனை பண்ணி சீக்கிரமே ஒரு நல்ல முடிவை சொல்லு நைனா! நீ உயிரோட இருக்கும் போதே நான் முதலமைச்சராக ஆகிடணும். அழகிரியும், கனி மொழியும் மத்திய மந்திரி ஆனால்தான் என் கனவும் பலிக்கும்.'

Sunday, December 22, 2013

ஆர்எஸ்எஸின் ராவ் மனம் மாறினார்- இன்று உமர்!



ஒரு பார்ப்பன இனத்தை சார்ந்த வேதங்களை நன்கு கற்றுணர்ந்த ஆர்எஸ்எஸின் தீவிர உறுப்பினர்: இஸ்லாத்தை முழுவதுமாக வெறுப்பவர்: முஸ்லிம்களை பூண்டோடு ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி வாழ்ந்து வந்த இளைஞர்: மனமாற்றம் ஏற்பட்டு இஸ்லாத்தை எந்த அளவு தனது வாழ்வில் கடைபிடிக்கிறார். இஸ்லாம் வளர எந்த அளவு துணை புரிகிறார் என்பதை இந்த காணொளி நமக்கு அழகாக விளக்குகிறது.

By God’s grace that I’m blessed with religion of God, I’m Mohammed Umar Rao from India, I embraced Islam at the age of 18. I shared my story with two persons. All praise and thanks be to God, they were convinced that my decision and choice is best, they started reading Qur’an and also embraced Islam.

Muhammad Umar Rao, a former Hindu, hated Muslims and was always against them. He started reading the Qur’an to find discrepancies in the Book of God but ended up embracing Islam. Here is his story.

I come from a middle class orthodox Brahmin family; my parents worked in private firms (Mother: Teacher, Father: Textile engineer). My religious education was at my maternal uncle’s place, that’s how I became orthodox and my whole family education was always against Muslims, which was nailed in me deeply.

I was associated with RSS for few years; I always hated Muslims to the extent that in all public functions I wanted to give high volume for music sound boxes to ensure that the Adhaan (Call to Prayer) should not be heard at all. I used to go round the town visiting all temples to complete my worship everyday. I was liked, appreciated in family for being orthodox and encouraged to do more.
In the summer, my mother asked me to work for a Muslim business firm, which I disagreed, because from childhood I always hated Muslims. My mother stopped forcing me on this; I worked few summers with a non-Muslim so I was able to satisfy my parents. Later, I quit that part time job because I did not like the job and started concentrating more on studies aiming for a better job. Meantime, my mother, sisters worked 2 months in part time for this Muslim brother. They were highly impressed with him.
I always hated this person because I did not like the fact that my people were praising a Muslim whom I always hated. I was pushed and insulted for not being useful to the family, so I started working for the same Muslim brother though I hated him before going. After getting in his shop I started hating more because the non-Muslim employees of that shop embraced Islam, I took this challenge to teach him a lesson claiming my religion is true and from there, I started doing comparative study with whatever common sense which God had blessed me then.

By now, in a bid to know more about Islam, I started reading English translation of the Holy Qur’an (by Abdullah Yusuf Ali). This changed my entire student life; I was stuck with fear, doubts, I realized the fact that whatever I’m doing is wrong, my religion is all about imaginations/myths and false stories. I had many questions, doubts like where am I heading to, what should I do? What is my duty? Why has the message of truth not reached all of us? Many questions came to my mind and my entire student life went in this hunt of truth.

I started questioning my parents, people around that who has seen God Almighty to paint /make images of God, all answered me that none has seen God which is so true as it is mentioned in many places in The Qur’an. Finally, some mythological stories broke my faith down. The stories of Ganesha, Chamundeswari, Ram, Sita etc. did not make sense to me. I could no longer imagine them as gods.
When I questioned my parents that Vedas are against Idol Worship and why do we still practice it, my mother scolded me saying we are supposed to do it as our forefathers did it, the next day I read a verse in the Qur’an, Al-Baqarah (Chapter 2) which reads:

“When it is said to them: ‘Follow what God has sent down.’ They say: “Nay! We shall follow what we found our fathers following.” (Would they do that!) Even though their fathers did not understand anything nor were they guided?” (Qur’an 2:170)

…and: “That was a nation who has passed away. They shall receive the reward of what they earned and you of what you earn. And you will not be asked of what they used to do.” (Qur’an 2:134)
When I read this I was shocked to see something, which I just questioned my mother last night. This verse hit me right deep inside. I slowly stopped worshipping idols, and stopped doing Pooja (A Hindu ritual for prayer), since shirk (Polytheism) is the only sin which will never be forgiven. I started practicing the teachings of Islam in secret in the beginning. There were few (themes) from chapter Al-Baqarah (Chapter 2) which (mean that) there are few who accept Islam wherever it profits them and not wholeheartedly (and that they) are hypocrites.

Also: “This day, I have perfected your religion for you, completed My Favor upon you, and have chosen for you Islam as your religion.” (Qur’an 5:3)

I realized that for all the questions that I have in my mind, the answers are present in the Qur’an.
By grace of God, I started conveying message of God at my home with little knowledge I had, I wanted to complete my B.E. meantime, conveying the truth would make it easy in the long run for me and my family, but after my final year of diploma I was pushed to wall, then the time came where I had no choice but to quit my family, my sister also embraced Islam and she joined me. We had to live out of our house for more than a year without a job or regular source of income. All praise be to God, God made our ways easy to be firm on truth.

As God says in the Qur’an:

“Do people think that they will be left alone because they say: ‘We believe,’ and will not be tested.” (Qur’an 29:2)

Over a period, Alhamdulillah, God opened doors of opportunities for us, I had quit my previous job as I was unable to perform my five times prayer. All the opportunities that came my way were from the mechanical industry which demanded that I work in shift and compromise my prayer. After quitting that job/mechanical profession for 1+ year, I did not get any job where I can perform 5 times prayer, Grace of God, I started working as faculty for 2000 rupees for a year and now I’m blessed with a better Job. By the Grace of God, Almighty God has chosen us, there’s nothing more required.

Saturday, December 21, 2013

மிருகம் மனிதனானது: மனிதன் மிருகமாகிறான்!



'இளம் கன்று பயமறியாது' என்ற ஒரு பழமொழியை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். அந்த பழமொழியை உண்மைப்படுத்தும் முகமாக இந்த காணொளி அமைந்துள்ளது. காட்டில் கூட்டமாக வாழ்ந்து வரும் காட்டெருமை கூட்டத்தை அடித்து சாப்பிடும் எண்ணத்தோடு ஒரு சிங்கம் வேகமாக சீறிக் கொண்டு வருகிறது. அந்த காட்டெருமை கூட்டத்தில் அன்றுதான் தனது கன்றை ஈன்றெடுத்த மாடு ஒன்று தனது உயிரை காப்பாற்றுவதா அல்லது பிறந்த கன்றை காப்பாற்றுவதாக என்ற மனப் போராட்டத்துக்குப் பின் தனது கன்றை விட்டு விட்டு தாய் மாடு ஓடி விடுகிறது. கன்றால் தாயின் அளவுக்கு ஓட முடியவில்லை. முடிவில் சிங்கம் கன்றுக் குட்டியின் அருகில் வந்து விடுகிறது. தாய் தூரத்திலிருந்து சோகத்தோடு தனது கன்றையும் அந்த சிங்கத்தையும் மாறி மாறி பார்த்த வண்ணம் நிற்கிறது.

சிறிது நேரத்தில் கன்றை விரட்டிக் கொண்டே ஒரு ஓரமான இடத்துக்கு கொண்டு சென்றது சிங்கம். கன்றை சாப்பிடலாம் என்று எத்தனிக்கும் போது சிங்கத்தின் முகத்தை அந்த கன்றானது தனது நாக்கால் வருட ஆரம்பித்தது. இதை எதிர்பாராத சிங்கம் திடுக்குற்று அதனை சாப்பிடாமல் தானும் தனது நாவால் அந்த கன்றை வருட ஆரம்பிக்கிறது. சிங்கத்துக்கு தனது குட்டிகளின் ஞாபகம் வரவே இந்த கன்றையும் தனது குட்டிகளில் ஒன்றாக நினைக்க ஆரம்பித்தது.

நேரம் செல்ல செல்ல அந்த கன்றானது இதனை தனது தாயாக எண்ணி பால் அருந்த அந்த சிங்கத்தை தனது தலையால் முட்டுகிறது. இதனை எல்லாம் ரசித்துக் கொண்டே சிங்கம் அந்த கன்றை மேலும் வருட ஆரம்பிக்கிறது. இந்த பாசப் பிணைப்பு அரிய ஒன்றாகும். சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்த கன்றை அதன் தாயிடமே ஒப்படைத்து விடுகிறது இந்த சிங்கம். என்ன ஒரு நெகிழ்ச்சியான சம்பவம். மிருகத்துக்குள்ளும் மனிதம் இருப்பதை இந்த நிகழ்வு நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.





அதே நேரம் மனிதன் மிருகமாக மாறிய நிகழ்வுகளும் உலகில் ஆங்காங்கே நடந்து வருகிறது. 2002 குஜராத்தில் மோடியின் தலைமையில் நடந்த இனக் கலவரத்தை இதற்கு உதாரணமாக எடுக்கலாம். கோத்ரா ரயில் விபத்தை காரணமாக வைத்து அந்த சம்பவத்தில் சற்றும் சம்பந்தப்படாத அப்பாவி முஸ்லிம்கள் 2000 க்கு மேல் கொல்லப்பட்ட சம்பவம் நமது இந்திய வரலாற்றில் கருப்புப் பக்கம் என்றால் மிகையாகாது. கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து அதனுள் இருந்த சிசுவையும் வெளியே இழுத்து உயிரோடு நெருப்பில் இட்டார்களே அந்த கயவர்கள் இன்றும் சுதந்திரமாக நரேந்திர மோடி தயவால் வெளியே உலா வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த சிங்கத்தையும் இந்த நரேந்திர மோடியையும் அவரது இந்துத்வா கூட்டத்தையும் ஒப்பிட்டு பாருங்கள்.

காட்டில் மிருகம் மனிதனானது :

நாட்டில் மனிதன் மிருகமாகிறான்:

Friday, December 20, 2013

இப்படியும் நடக்கலாம் விவாகரத்து!- சிறுகதை

அமெரிக்க நகரம் ஒகலஹாமாவில் ரிச்சர்டு, மேரி தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தாமஸ் என்றும் ரீட்டா என்றும் இரண்டு பிள்ளைகள் உண்டு. மகன் நியூயார்க்கிலும், மகள் ஹாங்காங்கிலும் வேலை செய்து வருகின்றனர்.

ரிச்சர்டு சற்று கோபமாக நியுயார்க்கில் உள்ள தனது மகனிடம் அலை பேசியில் பேச ஆரம்பித்தார்.

'ஒரு வருத்தமான செய்தி மகனே! நானும் உனது தாயாரும் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். 30 வருட திருமண பந்தம் எங்களுக்கு சலிப்பை தந்து விட்டது. எனவே இந்த வாழ்க்கை போதும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்'

'அப்பா! என்ன சொல்றீங்க!'

'உண்மைதான் மகனே! இனியும் எங்களால் சேர்ந்து வாழ முடியாது'

'உங்கள் குழந்தைகளான எங்கள் இருவரையும் நினைத்துப் பார்த்தீர்களா? உங்கள் இருவரையும் பிரிந்து எங்களால் சந்தோஷமாக இருக்க முடியாது தந்தையே! அதிலும் எனது தங்கை இந்த செய்தியை கேட்டால் துடித்து விடுவாள்! உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்'

'எங்கள் இருவரின் முடிவிலும் எந்த மாற்றமும் இல்லை மகனே! உன் தங்கையிடம் இந்த விபரத்தை சொல்லி விடு'

தாமஸ் தனது பெற்றோரை நினைத்து மிகவும் கவலை கொண்டான். எவ்வளவு ஒற்றுமையாக இருந்தனர். அப்படி என்ன அவர்களுக்குள் பிரச்னை என்ற சிந்தனையோடு ஹாங்காங்கில் உள்ள தனது தங்கையை தொடர்பு கொண்டான்.

'ரீட்டா! உனக்கு விபரம் புரியுமா? நமது பெற்றோர் இருவருக்கும் திருமண வாழ்வு கசந்து விட்டதாம். எனவே விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்களாம். அப்பா இப்பொழுதுதான் விபரங்களைச் சொன்னார்.'

'என்ன சொலறே நீ! அவர்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என்ன? நான் அப்பாவிடம் பேசுகிறேன்' என்று கோபத்தோடு போனை வைத்தாள் ரீட்டா.

போனை வைத்த அதே வேகத்தோடு ஒகலஹாமாவில் உள்ள தனது தந்தையை தொடர்பு கொண்டாள் ரீட்டா.

'அப்பா! என்ன இது பைத்தியக்காரத்தனம். விவாகரத்து பண்ணப் போறீங்களாமே! திருமணம் முடிக்கும் வயதில் உள்ள உங்கள் இரு குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சமாவது யோசித்தீர்களா?'

'உன் கோபம் புரிகிறது. என்னால் இதைத் தவிர வேறு முடிவு எடுக்கத் தெரியவில்லை. என்னை மன்னித்து விடு ரீட்டா'

'அப்பா! அவசரப்படாதீங்க! நானும் அண்ணனும் இன்னும் இரண்டு நாட்களில் ஒகலஹாமா வருகிறோம். 15 நாள் விடுப்பில் வருகிறேன். அது வரை எந்த முடிவும் எடுக்கக் கூடாது. சரியா!'

'நீ வந்து ஏதும் நல்லது நடந்தால் சரி. அது வரை விவாகரத்தை தள்ளி வைக்கிறேன்.'

போனை வைத்த ரிச்சர்ட் தனது மனைவியை நோக்கி 'கவலைப்படாதே! இரண்டு பிள்ளைகளும் இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகையை நம்மோடு கொண்டாடுவர். உனக்கு சந்தோஷம் தானே' என்று தனது மனைவியின் கன்னத்தை கிள்ளினார்.

'அதற்காக விவாகரத்து என்று பொய் சொல்ல வேண்டுமா?' சிணுங்கினாள் மேரி.

'வேறு வழி. போன வருட கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் இருவரும் வரவில்லை. இந்த வருடமும் ஏதாவது காரணம் சொல்லி வராமல் இருந்து விட்டால்! எனவே தான் ஒரு பொய்யை சொன்னேன்' என்றார் ரிச்சர்டு குறும்பாக!

-இணையத்தில் ஆங்கிலத்தில் வந்த சம்பவத்தை தழுவி எழுதப்பட்டது

Thursday, December 19, 2013

துபாய் இந்திய தூதரக பெண்ணின் மன மாற்றம்!



இந்த காணொளியில் ஜாகிர் நாயக்கிடம் கேள்வி கேட்கும் ஹிந்து பெண் படிக்காத பாமரர் அல்ல. துபாய் இந்திய தூதரகத்தில் பணியாற்றக் கூடிய மெத்த படித்த பெண். அந்த பெண் வைக்கும் கேள்விகளும் மிக சாதுர்யமானவை. அவர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அழகிய முறையில் பதில் அளிக்கிறார் ஜாகிர் நாயக். தெளிவு கிடைத்தது. அந்த கூட்டததிலேயே இந்த பெண் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொள்கிறார். மேலும் தனக்கு இறைவனை இஸ்லாமிய முறையில் எவ்வாறு தொழுவது என்று தெரியாது என்றும் அதற்கு யாரையாவது ஏற்பாடு செய்து தர முடியுமா? என்றும் கேட்டார். அந்த கூட்டத்திலேயே அதற்கும் ஒரு பெண்மணியை அந்த அரங்கம் ஏற்பாடு செய்து கொடுத்தது.

பலரது விமரிசனம் 'இஸ்லாமியர்கள் பணம் கொடுத்து மத மாற்றம் செய்கின்றனர்' என்பது. ஆனால் இங்கு அந்த பெண்ணுக்கு பணம், பதவி ஒரு பொருட்டே அல்ல. இறைவனின் தேடுதலால் அலை பாயும் அவரது மனதுக்கு ஜாகிர் நாயக்கின் இந்த நிகழ்ச்சி ஒரு வடிகாலாக அமைந்துள்ளது. உடன் சத்திய இஸ்லாத்தை தேர்ந்தெடுக்கிறார். அதிகமான மன மாற்றங்கள் ஏற்படுவது இவ்வாறே.

மொகலாயர்கள் காலத்தில் வேண்டுமானால் பணத்துக்காகவும், பதவிக்காகவும் ஒரு சிலர் மன மாற்றம் அடைந்து இஸ்லாத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் இன்றைய காலத்தில் நிலைமை அவ்வாறு இல்லை. எந்த மாநிலத்தை எடுத்துக் கொண்டாலும் ஆள்வோர்களால் இஸ்லாமியர்கள் மிரட்டப்படுகின்றனர். பல இடங்களில் சொத்துக்கள் திட்டமிட்டு சூரையாடப்படுகின்றன. மோடி தலைமையில் நடந்த குஜராத் இனப் படுகொலைகளை இந்த உலகம் அவ்வளவு சுலபமாக மறந்து விடாது. காவல் துறை பெரும்பாலும் பெரும்பான்மை இனத்தவராக இருப்பதால் அங்கும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைப்பதில்லை. நீதி மன்றங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அப்பட்டமாக இஸ்லாமியருக்கு எதிராகவே செயல்படுகிறது.



திருச்சியில் பாலமுருகன் என்ற சகோதரர் 4 வருடங்களுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்று தன் பெயரை இஸ்மாயில் என்று கெஜட்டில் பெயர் மாற்றம் செய்தார். தன்னுடைய பள்ளி மார்க் ஷீட், TC, பேங்க் பாஸ்புக், முதற்கொண்டு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, IT CARD முதற்கொண்டு பதினைந்திற்கும் மேற்பட்ட ஆதாரங்களை வைத்து இருக்கிறார்..

அவர் சமீபத்தில் பாஸ்‌போர்ட்டிற்காக விண்ணப்பித்து இருந்தார். பாஸ்போர்ட் தயாராகி தற்பொழுது திருச்சி GH காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்துள்ளது.

அவர் பெயர் மாற்றம் செய்ததற்கான அனைத்து ஆவணங்கள் மற்றும் புதிய பெயர் உள்ள அனைத்து ஆவணங்களை சமர்ப்பித்த பின்னரும் திருச்சி GH காவல் நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் பாஸ்போர்ட் வழங்க மறுத்துள்ளார்.

மேலும் இவர் புதிதாக இஸ்லாத்தை தழுவியவர் என்பதால் IB ( Intelligence Bureau ) பிரிவிற்கு பாஸ்‌போர்ட் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது. இது மட்டுமின்றி விசாரணைக்கு வீட்டிற்கு வந்த போலீஸார் இவருக்காக சாட்சி கூறிய அண்டை வீட்டுக்காரரை நோக்கி, " இவர் இஸ்லாத்தை ஏற்று உள்ளார்.. இவரால் ஏதேனும் பிரச்சினையானால் நீதான் மாட்டுவாய்" என்றும் கூறி மிரட்டியுள்ளனர்.

ஒரு இந்திய குடிமகன் இஸ்லாத்தை ஏற்பது இவ்வளவு பெரிய குற்றமா? எந்த அளவு ஆளும் வர்க்கத்தால் புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்கள் இன்னல்களை அனுபவிக்கிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த உதாரணம். இவ்வளவு மிரட்டல்கள் வந்தும் அனைத்தையும் எதிர்கொண்டு 'நான் இஸ்லாமியனாகவே இருப்பேன்' என்று சவால் விட்டு இன்று வரை வாழ்ந்து வருகிறார். இவருக்கு பாஸ்போர்ட் கிடைத்து விட்டதா என்ற விபரம் தெரியவில்லை. இப்படித்தான் புதிதாக இஸ்லாத்தை ஏற்பவர்களை மிரட்டி அடி பணிய வைக்கப் பார்க்கின்றனர். ஆனால் இத்தனை தடைகளையும் மீறி இஸ்லாம் தனது கொள்கைகளை பட்டி தொட்டிகளெல்லாம் கொண்டு சென்று கொண்டே இருக்கிறது.

அவர்கள் இறைவனின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு ஊதி அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் இறை மறுப்பாளர்கள் வெறுத்த போதிலும், இறைவன் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.

குர்ஆன் 61:8

Wednesday, December 18, 2013

ஜோர்டான் மன்னர் பனியில் சிக்கிய காரை தள்ளுகிறார்!



சவுதியில் பனிக் காலம் ஆரம்பமாகி விட்டது. குளிர் சட்டைகளை போட்டுக் கொண்டு தினம் அலுவலகத்துக்கு வேலைக்கு வருவதே ஒரு குஷியான அனுபவம்தான். இதை விட அதிக குளிர் பக்கத்து நாடான ஜோர்டானில் வீசுகிறது. சாலைகள் பனியால் போர்த்தப்பட்டுள்ளன. வாகனங்கள் முன்னேற முடியாமல் பல இடங்களில் நின்று விடும்.

இது போல் ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஒரு கார் வழியில் மாட்டிக் கொண்டது. அந்த வழியே வந்த ஜோர்டான் மன்னர் அப்துல்லா தனது நாட்டு மக்களில் ஒருவரோடு ஒருவாக நின்று மாட்டிக் கொண்ட காரை வெளியே இழுப்பதற்கு முயற்சி செய்வதையே இந்த காணொளியில் பார்க்கிறோம்.




அதே போல் பனிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஹெலிகாப்டரில் ஏற்றுவதற்கு ராணுவத்தோடு சேர்ந்து மன்னரும் உதவி புரிகிறார்.

பாதுகாப்பு படை, கருப்பு பூனைப் படை என்று எந்த படாடோபமும் இல்லாமல் மக்களோடு மக்களாக இணைந்து செல்வதால்தான் இத்தனை ஆண்டு காலம் அந்த மக்களை நிம்மதியாக வைக்க இந்த மன்னர்களால் முடிகிறது.

இந்த மன்னர்களிடம் குறைகள் அறவே இல்லை என்று சொல்ல வரவில்லை. நம் நாட்டு அரசியல்வாதிகளோடு ஒப்பிடும் போது இந்த மன்னர்கள் எனக்கு உயர்வாகவே தெரிகின்றனர்.


==========================================================================

இஸ்லாமிய ஆட்சி எப்படி இருக்க வேண்டும்?

அரசியல் என்பது உழைத்துக் கொள்வதற்கான ஒரு தொழிலாக இன்று மாறிவிட்டது. மக்களை ஏமாற்றி அல்லது அராஜகம் செய்து தேர்தல்களில் வெற்றி பெற்று அதிகாரத்தைப் பெற்றுக் கொள்கின்றவர்கள், தமது ஆட்சிக் காலம் முடியும் வரையில் சுரண்டல், இலஞ்சம், களவு போன்ற தவறான வழிகளில் முடியுமான அளவுக்கு சொத்து சேர்ப்பதற்கே தமது முழு நேரத்தையும் செலவு செய்கின்றனர். மக்களின் நலன் பற்றி சிந்திப்பதற்கோ அவர்களுக்காக பணியாற்றவோ அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. இத்தகைய அநீதியாளர்கள் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றலாம். ஆனால், அவர்களால் இறைவனை ஏமாற்றிவிட முடியாது. சுவனத்தின் வாடையைக் கூட அவர்கள் நுகர்வதற்கு இறைவன் அனுமதிக்கப் போவதில்லை.

மேலும் நாம் மற்றுமொரு விஷயத்தையும் இவ்விடத்தில் ஞாபகப்படுத்தியாக வேண்டும். ஏனைய இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மக்களின் உலக நலனை மாத்திரம் கருத்திற் கொள்பவர்கள். ஆனால், ஒரு முஸ்லிம் அரசியல்வாதி அவ்வாறு இருக்க முடியாது. அவர் தமது சமூகத்தின் மறுமை நலனுக்காக உழைக்கின்றவராகவும் இருக்க வேண்டும். இப்பொறுப்பை உணர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளை நமது சமூகம் மிகக் குறைந்தளவிலேயே கொண்டிருக்கின்றது. இது துரதிஷ்டவசமான நிலையாகும். தேர்தல் மேடைகளில் பாதை அமைத்துத் தருவதாகவும் பாலம் கட்டித் தருவதாகவும் வாக்குறுதிகள் வழங்கும் நமது அரசியல்வாதிகள் அப்பிரதேசத்தின் மார்க்க மற்றும் ஒழுக்க ரீதியான வீழ்ச்சிநிலை குறித்து ஒரு வார்த்தையாவது பேசும் நிலையிருப்பதாகத் தெரியவில்லை.

இஸ்லாமிய அரசியல் வரலாற்றில் சமூகத் தலைமைத்துவத்தை ஏற்றவர்கள் உலக மற்றும் ஆன்மிக தலைமைத்துவத்தை சமூகத்திற்கு வழங்குகின்றவர்களாகவே இருந்துள்ளனர். அந்த வரலாற்றை மறந்த நிலையிலேயே நமது சமூகத்தின் கடந்த அறுபது வருட கால அரசியல் பயணமும் கழிந்திருக்கிறது. ஆன்மிகமில்லாத அரசியல்வாதிகளையும் அரசியல் தெரியாத ஆன்மிகவாதிகளையும் கொண்ட சமூகம் என்ற நிலை மாற வேண்டும்.

‘எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்பு பற்ற வைக்கப் படாமலே கழிந்திருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘என் சிறிய தாயாரே! அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘பேரீச்சம் பழமும், தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தது. சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள் அதை அருந்துவோம்’ என விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: உர்வா (ரலி), நூல்: புகாரி 2567,6459)

‘நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிராற உண்டதில்லை’ என நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (நூல்: புகாரி 5374)

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வயிறு ஒட்டிய நிலையில் படுத்திருந்ததை நான் பார்த்தேன். உடனே என் தாயார் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் வந்து இதைக் கூறினேன். ‘அதற்கவர்கள், என்னிடம் ஒரேயொரு ரொட்டித் துண்டும், சில பேசீச்சம் பழங்களும் தான் உள்ளன. அவர்கள் மட்டும் வருவார்களானால் அவர்களின் வயிறு நிரம்பும். யாரையேனும் உடன் அழைத்து வந்து விட்டால் அவர்களுக்குப் போதாமல் போய் விடும்’ என்றார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணியாளர் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம் 3802)

‘ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்டார்கள். அப்போது அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரைக் கண்டார்கள். இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக் காரணம் என்ன? என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்க, அவ்விருவரும் ‘பசி’ என்றனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘நீங்கள் எதற்காக வெளியே வந்துள்ளீர்களோ அதற்காகவே நானும் வெளியே வந்துள்ளேன்’ என்றார்கள்…(ஹதீஸ் சுருக்கம்) நூல்: முஸ்லிம் 3799)


மேலே எடுத்துக்காட்டிய வரலாற்று நிகழ்வுகள் ஒரு ஆட்சித் தலைவரின் வாழ்க்கையாக இருந்துள்ளது. முழு அரபுலகுக்கும் சக்கரவர்த்தியாக ஆட்சி செய்த ஒரு தன்னலமற்ற தலைவர் வாழ்வு எப்படி இருந்தது என்பதை பார்த்தோம். ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் ஒரு எம்எல்ஏ ஆனவுடன் ஒரே வருடத்தில் பல கோடிகளுக்கு அதிபதியாகி விடுவதை சர்வ சாதாரணமாக பார்க்கிறோம். இந்த அரசியல் வாதிகள் நபிகள் நாயகத்தின் வாழ்வு முறைகளையும் அவரது எளிமையையும் சற்றே சீர் தூக்கி பார்க்க வேண்டும்.

Tuesday, December 17, 2013

ஐயப்ப பக்தர்களும், வாவர் மசூதியும்!



சபரி மலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டுக் கொண்டு போகும் போதெல்லாம் எனக்கு அங்குள்ள வாவர் மசூதியும் அங்கு இந்த பக்தர்கள் தங்கி வழிபாடு செய்வதையும் கவனிக்க தவறுவதில்லை. இரு துருவங்களான இந்துவும் இஸ்லாமும் இந்த இடத்தில் எப்படி ஒன்றாயின என்ற கேள்வி பல நாட்களாக எனக்குள் உண்டு. இது பற்றி விபரங்கள் ஆதாரத்தோடு கிடைக்குமா என்று இணையத்தில் தேடிப் பார்த்தேன். எல்லாம் அனுமானங்கள் தான் கிடைத்தது. அப்படி இருக்கலாம் இப்படி இருக்கலாம் என்று அவரவருக்கு தோன்றிய கற்பனை கதைகள் தான் இணையம் எங்கும் பரவியுள்ளது. ஆரியர்கள் மிக சாமர்த்தியமாக ஆதாரங்கள் அனைத்தையும் அழித்து விட்டதாகவே எண்ணுகிறேன்.

இனி இணையத்தில் கிடைத்த சில செய்திகளைப் பார்ப்போம்.

மசூதியின் அமைப்பு கொண்ட வாவர் பள்ளியில் உள்ளே விக்கிரகங்கள் எதுவும் கிடையாது. வாவர் சுவாமியின் வாள் வைக்கப் பட்டிருக்கும். காணிக்கை உண்டியல் உண்டு. பக்தர்கள் அங்குள்ள பெரிய உருளியில் வாவர் சாமிக்கு உகந்த நிவேதனமான குறுமிளகை இடுவார்கள். சபரி யாத்திரை பருவத்தின் போது வாவர் பள்ளியைச் சுற்றியும் அந்த வட்டாரம் முழுவதுமே நாள் முழுவதும் விடாது சரண கோஷம் கேட்டுக் கொண்டிருக்கும். பக்தர்கள் ஐயப்ப திந்தகத் தோம் ஆட்டங்கள் ஆடிக் கொண்டிருப்பார்கள்.

மணிகண்டனின் அவதார காலகட்டத்தில் கேரள கடற்கரைப் பகுதிகளிலும் உள்நாட்டிலும் இஸ்லாமியர்கள் பல இடங்களில் வசிக்கத் தொடங்கி விட்டனர். இவர்களில் ஒரு பிரிவினரின் தலைவனான வாவர் மணிகண்டனால் ஆட்கொள்ளப் பட்டு அவனது அடியாராகவும், சேனைத் தலைவராகவும் ஆகியிருக்க வேண்டும்.

சாஸ்தாவின் யோக ரூபமும், சரண கோஷங்கள், புலனடக்கத்தை வலியுறுயத்தும் விரதங்கள் போன்ற ஐயப்ப வழிபாட்டு நெறிகளும் பௌத்த சமயக் கூறுகளை இந்து சமயம் தன்னுள் ஈர்த்துக் கொண்டதன் விளைவே என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கால்களை மடித்து யோக பட்டத்துடன் யோக உபவிஷ்ட நிலையில் அமர்ந்திருக்கும் ஐயப்பனின் திருவடிவமும், கையில் செண்டு ஏந்தியுள்ள ஐயனார் திருவடிவமும் அவலோகிதேஸ்வரர், பத்மபாணி போன்ற பௌத்த கடவுளரின் திருவுருவங்களில் இருந்தே உருவானவை என்று அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

திருநெல்வேலி வேளாளர்களுக்கு ஸாஸ்தா எனும் ஆண்தெய்வம் குலதெய்வமாக இருத்தல் ஆராயத் த்க்கது. வேளாளர்களும் பிராமணர்களும் மட்டுமல்ல, நெல்லை, குமரி மாவட்டங்களில் அனேகமாக எல்லா சமூகங்களுக்கும் சாஸ்தா அல்லது சாஸ்தாவின் பரிவார தெய்வங்களில் ஒருவர் தான் (மாடன், யட்சி, பூதத்தான், பிரமரட்சசி, பட்டராயன்…) குலதெய்வமாக இருக்கிறார். இதில் தென்கலை ஐயங்கார்கள் போன்ற வைணவத்தைப் பின்பற்றும் சமூகங்களும் அடக்கம்.



எனக்குத் தோன்றுவது என்னவென்றால் சபரி மலை முன்பு சமணர்களின் இருப்பிடமாக இருந்திருக்க வேண்டும். அல்லது புத்த மதத்துக்கு சொந்தமான வணக்கத்தலமாக இருந்திருக்க வேண்டும். ஆரியர்கள் இந்நாட்டை ஆட்கொண்ட போது சமணமும் பவுத்தமும் பெரும் நெருக்கடிக்கு உள்ளானது. கிட்டத்தட்ட சமணமும் பவுத்தமும் இல்லாத ஒரு நிலையை நமது பாரதம் பெற்றது. சமணர்கள் தேனி மாவட்டத்தில் இஸ்லாத்தை தழுவிய ஆதாரங்களை முன்பு நான் பதிவிட்டிருந்தேன். அதைப் போலவே ஆரியர்களின் மூர்க்கத்தனத்திற்கு பயந்து சமணர்களும் பவுத்தர்களும் சபரி மலையில் ஒன்று கூடியிருப்பர். இஸ்லாத்தையும் தழுவியிருப்பர். அதன் பிரகாரமே இவ்வளவு பெரிய பள்ளிவாசலை அவர்களால் இங்கு கட்ட முடிந்தது. அதன் பிறகு சில இந்துக்கள் இந்து மத மற்றும் இஸ்லாமிய மதத்தின் கொள்கைகளை ஒன்றாக்கி அதனை ஐயப்ப சாமியாக மாற்றியிருக்கலாம் என்பது எனது எண்ணம். அல்லது சமணர்களையும் பவுத்தர்களையும் காப்பாற்றியது வாவார் என்ற முஸ்லிமாக இருக்கலாம். அவரை மரியாதை செலுத்தும் வகையில் இஸ்லாமிய சட்டங்களையும் இந்து மத சட்டங்களையும் ஒன்றாக்கி புதிதாக சபரி மலை ஐயப்பன் உருவாக்கப்பட்டிருக்கலாம். உண்மையை இறைவனே அறிந்தவன்.

இஸ்லாத்தில் ஹஜ்ஜூக்கு செல்பவர்கள் நபி ஆப்ரஹாம் நினைவாக மூன்று இடங்களில் சாத்தானுக்கு கல் எறிவார்கள். தங்களின் தவறான கொள்கைகளை இன்று முதல் தூரமாக்கி விடுவதாக ஹாஜிகளும் மனதுக்குள் உறுதி கொள்ள இந்நிகழ்வு ஒரு காரணமாக அமைகிறது. அதே போல் இரண்டு தூய வெள்ளை உடைகளை அணிந்து கொண்டு பல இடங்களுக்கும் கால்நடையாக செல்வதும் சிறந்த காரியங்களாக ஹஜ்ஜூ கிரியைகளில் வகுக்கப்பட்டிருக்கும்.

அது போலவே ஐயப்ப பக்தர்களும் வெள்ளை உடைக்கு பதில் இரண்டு கருப்பு உடைகளை உடுத்துவதும், சபரி மலை வழித் தடத்தில் கல்லிடும் குன்று என்ற இடத்தில் கற்களை வீசுவதும் ஒரு வணக்கமாக செய்யப்படுகிறது. சில ஐயப்ப குருசாமிகள் கருப்பு உடைக்கு பதில் தூய வெள்ளை உடையையும் உடுத்துகின்றனர். வெள்ளை உடையில் செல்லும் ஐயப்ப பக்தர்களை நிறைய இடங்களில் காணலாம். அதே போல் பல வணக்கத தலங்களுக்கும் கால்நடையாகவே செல்கின்றனர். வாவார் மசூதியில் தொழுகின்றனர. இங்கு எந்த சிலைகளும் இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.

ஒரு ஐயப்ப பக்தர் கூறும் போது "கீழ பம்பாவில் குளியல் வரை காவி வேஷ்டியும் அதன்பின் வெள்ளை வேஷ்டியுடன் மலை மீது ஏறி தரிஷ்ணம் பண்ணியவருடன் நானும் சென்று, பார்த்து இருக்கின்றேன்" என்கிறார். எனவே ஐயப்ப பக்தர்களுக்கும் முஸ்லிம்களைப் போல் வெள்ளை உடையும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு, திருச்சூர் அருகே உள்ள சூண்டல் பகுதியில் வாழும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மசூதியில் தங்க இடம் கொடுத்து, பணிவிடைகள் செய்து வருவது மத நல்லிணக்கத்திற்கு மேலும் ஒரு மணிமகுடம்.

திருச்சூர் அருகே குண்ணங்குளம் ரோட்டில் அமைந்து உள்ளது இந்த சூண்டல் பகுதி. இங்கு முஸ்லிம்களுக்கு சொந்தமான ஜூம்மா மசூதி, தொலைதூர பகுதிகளில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கு வசதியாக எந்நேரமும் திறந்திருக்கிறது.

பல்வேறு பகுதிகளில் இருந்து கால்நடையாக, வாகனங்களில் வரும் ஐயப்ப பக்தர்களும் இந்த மசூதியில் இளைப்பாறி விட்டுச் செல்கின்றனர். இவர்களுக்கு குடிநீர் வசதி, குழுவாக வருவோர்களுக்கு சமையல் செய்வதற்கு இடவசதி போன்றவற்றை இந்த மசூதியின் நிர்வாகம் செய்து கொடுக்கிறது.

இரண்டு ஆண் கடவுள்கள் ஒன்றாகி அதிலிருந்து உண்டானவர்தான் இந்த ஐயப்ப சாமி என்ற கதையும் உண்டு. இதற்கும் வேதங்களின் ஆதாரங்கள் எதுவும் இல்லை. எல்லாம் செவி வழிச் செய்திகள்தான்.

இவ்வாறு ஐயப்ப சாமிக்கும் இஸ்லாத்துக்கும் ஏதோ ஒரு வகையில் ஒட்டும் உறவும் உள்ளது. உண்மையை சாமர்த்தியமாக ஆரியர்கள் அழித்து விட்டதனால் ஐயப்ப சாமியைப் பற்றிய கட்டுக் கதைகளே தற்போது விஞ்சியிருக்கிறது. உண்மை வரலாற்றை தொல்லியல் துறைதான் ஆய்வு செய்து இந்திய மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

ஐயப்ப பக்தர்களுக்காக தங்களின் வழிபாட்டு தலத்தையும் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்துள்ளனர் முஸ்லிம்கள். மேலும் அங்கு செல்பவர்களுக்கு சமையல், தங்குதல் போன்ற வசதிகளை வேறொரு மசூதியிலும் முஸ்லிம்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். இவ்வளவு அன்யோன்யமாக அன்புடன் பழகி வரும் இந்து முஸ்லிம்களுக்கிடையே பகையை உண்டு பண்ணி அதன் மூலம் ஓட்டு அறுவடை செய்ய சில இந்துத்வ சக்திகள் சமீபகாலமாக முயற்சி செய்கின்றன. இந்த சூழ்ச்சிகளுக்கு பலியாகாமல் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையுடனிருந்து நமது நாட்டை மேலும் முன்னேற்றப் பாடுபடுவார்களாக!

Monday, December 16, 2013

ஆராய்ச்சி படிப்பிலும் அசத்தும் சவுதி மாணவர்கள்!



கடந்த சனிக்கிழமையன்று ஜெத்தா துவால் நகரில் இயங்கும் மன்னர் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் 18 மாணவர்களுக்கு ஆராய்ச்சியில் பிஎச்டி பட்டம் வழங்கப்பட்டது. முதுகலை பட்டப்படிப்பிலும் அதிக எண்ணிக்கையிலான மாணவ மாணவிகள் தங்களின் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர். பரிசு பெற்றவர்கள் 13 நாடுகளிலிருந்து இங்கு கல்வி பயில வந்தவர்கள். பரிசு பெற்றவர்களில் 43 சதமான மாணவ மாணவிகள் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள். பிஎச்டி பட்டம் வாங்கியவர்களில் மாஜித் குரைஷி என்ற சவுதி நாட்டு மாணவரும் அடங்குவார். தற்போது சவுதிகள் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அரசும் பலவித ஊக்கத் தொகைகளை அள்ளிக் கொடுத்து தனது மக்களை படித்தவர்களாக ஆக்க மிகுந்த முயற்சி எடுக்கிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

-----------------------------------------------------

அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே (அல்குர்ஆன் 39:9)

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் (58 : 11)


மேலும் அடிமைகள் நிறைந்த அந்தக் காலத்தில், அடிமைப் பெண்களுக்கும் கூட நபி அவர்கள் கல்வி கற்றுக் கொடுக்க ஆர்வமூட்டியுள்ளார்கள்.

"மூன்று மனிதர்களுக்கு அல்லாஹ்விடத்தில் இரண்டு விதக் கூலிகள் உண்டு.

ஒருவர் வேதத்தையுடையவர்களில் உள்ளவர். இவர் தமது சமூகத்திற்கு அனுப்பப்பட்ட தூதரையும் முஹம்மதையும் நம்பியவர்.

மற்றொருவர் தமது இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் தமது எஜமானனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை.

மூன்றாமவர் தம்மிடத்தில் உள்ள ஒரு அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்குக் கல்வியைக் கற்பித்து, அதை அழகுறக் கற்றுத் தந்து பின்னர் அவளை அடிமையிலிருந்து விடுவித்து கொண்டவர்.

இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: புகாரீ (97)

கல்வி கற்பது என்பது ஒவ்வொரு ஆண், பெண் இருவர் மீதுள்ள கட்டாயக் கடமையாகும். கல்வியானது ஒரு மனிதனை அறிவுடையவனாகவும், பண்பாடுள்ளவனாகவும், ஒழுக்கமுடையனாகவும் மாற்றுகிறது. மனிதனின் அறிவுக்கண்ணைத் திறப்பதோடு சொத்துக்களிலெல்லாம் மிகச் சிறந்த சொத்தாகவும் கருதப்படுகிறது. நாம் கற்கக்கூடிய கல்வி இவ்வுலகிற்கு மட்டுமின்றி மறுமைக்கும் பயன்தரக்கூடியதாக இருக்க வேண்டும்.

இஸ்லாத்திற்கு முன்பு பண்டைய அரேபியர்களிடத்தில் பெண்கள் இழிப்பொருளாகவும், சொத்துரிமைப் பெற தகுதியற்றவர்களாகவும், பெண்களும் அவர்களின் சொத்துக்களாகவும் இருந்த நிலையில், இஸ்லாம் இக்கொடிய நிலையை தரைமட்டமாக்கி பெண்களுக்கு உரிமைகளையும், சலுகைகளையும் வாரி வழங்கியது. இன்று கல்வி கற்பதில் மிகவும் பின்தங்கியிருப்பவர்கள் யாரென்றுப் பார்த்தால் பெரும்பாலும் முஸ்லிம்களாகத்தான் இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதில் மிக மிக பின் தங்கியிருக்கிறார்கள், இல்லை பின் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை. காரணம் கல்வியைப் பற்றிய சரியான அடிப்படையறிவு இல்லாததினால்தான்.

இஸ்லாம் ஒரு போதும் பெண்களைக் கல்வி கற்க வேண்டாமென்று தடை போடவில்லை. அந்நிய ஆண்களும், அந்நிய பெண்களும் இரண்டறக் கலந்து விடக்கூடாது என்பதுதான் இஸ்லாமிய சட்டமே தவிர கல்வி கற்கக் கூடாது என்றோ, தொழில் செய்யக்கூடாது என்றோ இஸ்லாம் ஒருபோதும் கூறவில்லை. மாறாக கல்வி கற்க வேண்டும் என்று ஆர்வமூட்டுகிறது

ஒருமுறை ஒரு பெண் நபி அவர்களிடம் வந்து எப்போதும் உங்களை சுற்றி ஆண்களே இருக்கிறார்கள் அதனால் எங்களால் உங்களை நெருங்கி வந்து மார்க்கத்தில் எங்களுக்கு தோன்ற கூடிய சந்தேகத்தை கேட்க முடிய வில்லை என சொன்னதும் நபி அவர்கள் அவர்களுக்கு என்று வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கினார்கள் என்று வரலாறுகளில் பார்க்கிறோம்.

ஜனாதிபதி அலீ அவர்களது சந்ததியில் வந்த நஃபீஸா எனும் பெண் ஹதீஸ் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தார்..அவரின் போதனை வகுப்புகளில் இமாம் ஷாபிஈ அவர்களும் கலந்து கொண்டு அறிவை பெற்றுள்ளார்.

பாக்தாத்தில் வாழ்ந்த ஷெய்கா சுஹதா அவர்கள் இலக்கியம் அணியிலக்கணம் ,கவிதை,போன்றவற்றில் தேர்ச்சி பெற்று திகழ்ந்தார்.

பதினெட்டாம் நூற்றாண்டில் நைஜீரியாவில் ஒரு மிகபெரும் கல்வி புரட்சி ஏற்பட காரணமான முஸ்லிம் பெண்களுக்கு தன் வாழ்க்கையை அசத்தலான முன்னுதாரணமாக்கிய நானா அஸ்மா என்ற முஸ்லிமும் ஒரு பெண்மணிதான்.

இவை எல்லாம் சிறந்த உதாரணங்களாக நாம் சொல்ல முடியும்.

பெண் என்பவள் ஒரு குடும்பத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறாள். குறிப்பாக, தன்னுடைய குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் அடித்தளம் இடுபவளே பெண்ணாகிய தாய்தான். ஒரு குழந்தை முதலில் அறிமுகம் ஆவது தன் தாயாரிடம்தான் அந்தக் குழந்தைக்கு இரண்டு வருடங்கள் பாலூட்டுவதுடன் இறைபக்தியையும், நல்லொழுக்கத்தையும் சேர்த்தே ஊட்டுகிறாள்.

எனவே ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் முதல் பள்ளிக்கூடமாகவும் பாலகப்பருவ ஆசிரியையாகவும் திகழ்பவள் தாயாகிய பெண்தான். அந்தத் தாய்க்கு நல்ல அறிவும், கேள்வி ஞானமும் இருந்தால்தான் அவளிடம் பாடம் கற்கும் குழந்தைகளுக்கும் கிடைக்கும் என்பதைத்தான் "தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை" என்கிறார்கள். ஆகவே, அவளுக்கு கல்வியறிவும் கேள்வி ஞானமும் வேண்டுமென்றால் கல்வி மிக அவசியமாக இருக்கிறது.

ஆனால் இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் சில ஊர்களில் ஊர்க் கட்டுப்பாடு என்று வயதுக்கு வந்த பெண்களை பள்ளிக்கு அனுப்பினால் அபராதம் விதிக்கிறார்களாம். அவர்களின் நோக்கம் பெண் குழந்தைகள் கெட்டு விடக் கூடாது என்று இருந்தாலும் அதற்கு இது தீர்வு அல்ல. ஆணும் பெண்ணும் தனித்தனியே பயிலும் எத்தனையோ கல்விக் கூடங்கள் உள்ளது. அருகில் அவ்வாறு இல்லா விட்டால் செல்வந்தர்கள் சேர்ந்து ஒரு கல்லூரியை ஆரம்பிக்க வேண்டியதுதானே. ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனையோ செல்வந்தர்கள் இருக்கிறார்களே! அரசும் உதவி செய்ய தயாராக இருக்கும் போது என்ன சிக்கல் உங்களுக்கு? ஆர்வத்தில் படிக்கச் செல்லும் பெண்ணை தடுத்து அவருக்கு அபராதமும் விதிப்பது இஸ்லாமிய நடைமுறை அல்ல. டிஎன்டிஜே, தமுமுக போன்ற அமைப்புகள் இது போன்ற கிராமங்களுக்குச் சென்று அந்த பெண்களின் படிப்பு இஸ்லாமிய அடிப்படையில் தொடர ஆவண செய்ய வேண்டும்.

Sunday, December 15, 2013

25 சிறந்த இந்தியர்களில் ஏ.ஆர்.ரஹ்மானும், ரஜினி காந்தும்!



என்டிடிவி யின் 25 வருடம் பூர்த்தியானதை யொட்டி இந்தியாவில் தற்போது வாழ்ந்து வரும் 25 சிறந்த நபர்களை தேர்வு செய்தது. அதில் தமிழகத்திலிருந்து ரஜினி காந்தும், ஏ.ஆர்.ரஹ்மானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தனது ஏற்புரையில்....

ஏ.ஆர் ரஹ்மான்: 'எல்லா புகழும் இறைவனுக்கே'(இதை தமிழிலேயே சொன்னார்) இந்த நிலையை அடைய காரணமாயிருந்த எனது தாய், ஆசிரியர்கள், தமிழ் மக்கள் மற்றும் அனைத்து நபர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு காரணமான இறைவனையும் புகழ்கிறேன்.

ரஜினி காந்த் :'ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து இந்தியாவின் 25 சாதனையாளர்களுள் ஒருவனாகி உள்ளேன். அதிசயங்கள் நிகழும் என்பதற்கு என் வாழ்க்கையே உதாரணம். இந்த விருதை தமிழ் மக்களுக்கும், எனது குரு இயக்குனர் பாலச்சந்தருக்கும் அர்பணிக்கிறேன்.

லியாண்டர் பயஸ் : தன்னம்பிக்கையுடன் கடுமையான உழைப்பு வேண்டும்.

அமிதாப் பச்சன் : அடக்கமும், உண்மையும் முன்னேற்றத்திற்கு அவசியம்.

கபில் தேவ் : கனவு காணாமல் எதையும் அடைய முடியாது.

ஷாருக்கான் : செயல்களின் மூலம் வாழ்க்கைக்கு மதிப்பு சேர்க்க வேண்டும்.

சச்சின் டெண்டுல்கர் : தோல்வியால் சோர்ந்து விடாமல் மீண்டும் எழுந்து, அடுத்த சவாலை எதிர்கொள்ள வேண்டும்.

எம்.எஸ்.சுவாமிநாதன் : நாட்டின் எதிர்காலம் வேளாண் வளர்ச்சியில் உள்ளது; ஆயுதங்களின் வளர்ச்சியில் அல்ல.

ரத்தன் டாடா : இந்தியாவின் வளர்ச்சியில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒய்.கே.ஹமீது, முகேஷ் அம்பானி, வஹீதா ரஹ்மான் போன்றோரும் விருது வாங்கியவர்களில் அடங்குவர்.

விருது வாங்கிய 25 பேரும் மிகச் சிறந்த தேர்வாக என்னால் கணிக்கப்படுகின்றனர். இந்த நாட்டின் இந்து, முஸ்லிம், கிறித்தவர், சீக்கியர் என்ற அனைத்து மக்களின் மனத்திலும் இந்த 25 பேரும் சாதி மத வித்தியாசமின்றி மதிப்புடன் குடி புகுந்துள்ளனர்.

கூட்டத்தில் பார்வையாளராக எல்.கே.அத்வானி மிக பரிதாபமாக உட்கார்ந்திருந்ததை பார்க்க முடிந்தது. பிரதம வேட்பாளர் பதவிதான் பறி போய் விட்டது, "பாபரி மசூதியை இடித்த மிகச் சிறந்த மனிதர்" என்று இவருக்கும் ஒரு விருது கொடுத்திருக்கலாம். அப்படியே நரேந்திர மோடிக்கும் 'முதல்வராக இருந்து 2500 முஸ்லிம்களை வேட்டையாடிய வீரர்' என்ற பட்டத்தையும் கொடுத்து கௌரவிததிருக்கலாம். :-)

பண்டிட் ஹரி பிரசாத் விருது வாங்கி பேசும் பொது ' மாதா, பிதா, குரு இவர்களை மதித்து நடந்தால் இறைவன் நம்மோடு நமது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பான். இறக்கும் போது நாம் எதைக் கொண்டு செல்லப் போகிறோம். நாம் செய்த நல்ல காரியங்களே நம்மோடு கூட வரும. ஜெய் ஹிந்த்' என்று முடித்தார்.

இவர் சொன்ன வார்த்தைகளை மோடியும், அத்வானியும் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். நாட்டை நேசிக்கும் உண்மையான தேச பக்தன் அந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவனாக இருக்க வேண்டும். தனது இனமும் தனது சாதியும் முன்னேறுவதற்காக நாட்டில் ரத்த களறியை உண்டு பண்ணும் எவனும் உண்மையான தேச பக்தனாக முடியாது. இன்றில்லா விட்டாலும் என்றாவது காரணகர்த்தர்கள் அதன் பலனை அனுபவிப்பார்கள். அன்று உண்மையை மோடியும், அத்வானியும் இந்துத்வாவாதிகளும் உணர்ந்து கொள்வார்கள்.



டிஸ்கி: 25 பேரில் ஊழல் செய்ய மறுத்து அதனால் பல இன்னல்களை இன்று வரை சந்தித்து வரும் மாவட்ட ஆட்சியர் சகாயத்தை தமிழகம் சார்பில் தேர்ந்தெடுத்திருக்கலாம். நான்கு முதல்வர்களை வரிசையாக சினிமா துறையிலிருந்து தேர்ந்தெடுத்தவர்கள் தமிழர்கள் என்பதால் இந்த முறையும் தமிழகம் என்றால் சினிமாவே என்டிடிவியினருக்கு முதலில் ஞாபகத்தில் வந்திருக்கலாம். ஆனால் இந்த(ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி காந்த்) இருவரும் சினிமா துறையில் இருந்தாலும் தங்கள் மார்க்கங்களில் மிகுந்த ஈடுபாட்டோடு இருந்தாலும் நாட்டுப் பற்றிலும், மற்ற மதத்தவர்களை மதிக்கும் பண்பிலும் சிறந்து விளங்குகின்றனர். இதற்காக இவர்களுக்கு தாராளமாக இந்த விருதுகளைக் கொடுக்கலாம்.

Saturday, December 14, 2013

பாரதியின் ஆரியப் பற்றும் சாதி வெறியும்!



தமிழ் மொழியின் கவிதைகள் என்று வந்தால் அங்கு பாரதிக்கு தனி இடமே உண்டு. எளியவரும் எளிதாக விளங்கிக் கொள்ளும் வண்ணம் பாரதியின் ஆக்கங்கள் இருக்கும். வார்த்தைகள் இவரிடம் துள்ளி விளையாடும். ஆனால் இவ்வளவு அழகிய கவிதை ஆற்றல் உள்ளவரிடம் ஆங்காங்கே ஆரியர் மேலானவர் மற்றவர் கீழானவர் என்ற பார்பன பொது புத்தியும் ஆங்காங்கே தலை காட்டத் தயங்குவதில்லை. இனி ஒரு சில கவிதைகளை பார்ப்போம்.

மன்னும் இமய மலையெங்கள் மலையே
மாநில மீதது போற்பிறி திலையே!
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?
பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே
பார்மிசை யேதொரு நூல்இது போலே?
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே
போற்றுவம் இஃதை எமக்கிலை ஈடே 1


மாரத வீரர் மலிந்தநன் னாடு
மாமுனி வோர்பலர் வாழ்ந்தபொன் னாடு
நாரத கான நலந்திகழ் நாடு
நல்லன யாவையும் நாடுறு நாடு
பூரண ஞானம் பொலிந்தநன் னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரு நாடே
பாடுவம் இஃதை எமக்கிலை நாடே 2

இவ்வளவு அழகாக தாய் நாட்டின் பெருமைகளை சொல்லி வரும்போது கூடவே ஆரிய மேலாண்மையும் தலைகாட்டுகிறது. அதையும் பார்ப்போம்.


இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்
ஏழைய ராகி இனிமண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்
கன்னலும் தேனும் கனியும்இன் பாலும்
கதலியும் செந்நெலும் நல்கும்எக் காலும்
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஒதுவம் இஃதை எமக்கிலை ஈடே

முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடை வில்?-எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவிநல்
ஆரிய ராணியின் வில்

சித்த மயமிவ் வுலகம் உறுதிநம்
சித்தத்தில் ஓங்கிவிட் டால்-துன்பம்
அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்
ஆரிய ராணியின் சொல்

ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப்
பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே”

“வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர்”.

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் முதலிய நால்வருணங்கள் இருக்க வேண்டும்.நால்வருணம் அழிந்தால் மனித இனமே அழிந்து விடும் என்ற வர்ணாஸ்ரம தர்மத்தை தூக்கிப் பிடித்த பாரதி பாடுகிறார்

நாலு குலங்கள் அமைத்தான் – அதை
நாசம் உறப்புரிந்தனர் மூடமனிதன்
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே – செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி

இவ்வவளவு நச்சுக் கருத்துக்களையும் சொல்லி விட்டு சாதிகள் இல்லை என்று உடனே பிளேட்டை மாற்றிப் போடுகிறார் பாரதி!

சாத்திரங்கள் ஒன்றும் காணார்-பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன் றாயிருந்தா லும்-ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம்-தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடு வார்;
ஆத்திரங்கொண்டே இவன் சைவன்-இவன்
அரிபக்தன் என்று பெருஞ் சண்டையிடுவார்.

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்தியா மக்கள்,

எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-வாழ்க

'சூத்திரனுக்கோர் நீதி தெண்டச் சோறுண்ணும்

பார்ப்புக்கு ஒரு நீதி என்று

சாத்திரம் சொல்லுமாயின் அது சாத்திரமல்ல'

என்று தனது இனத்தை தட்டிக் கேட்கவும் தயங்கவில்லை.

இவருக்கு போதைப் பழக்கம் இருந்ததாகவும் கஞ்சாவை உள்ளே அடிக்கடி தள்ளிக் கொள்வார் என்றும் படித்திருக்கிறேன். போதை தலைக்கேறாத போது ஒரு பாரதியாகவும், போதை தலைக்கேறியவுடன் ஆரியப் பித்து பிடித்து அலைந்த ஒரு கவியாகவும்தான் நான் பாரதியை பார்க்கிறேன்.

இதிலிருந்து கவிஞர்களின் கருத்துக்களையும், கவி புனையும் திறன்களையும் நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது தெளிவாகிறது. எனவே தான் வைரமுத்து கூட 'கவிதைக்கு பொய்யழகு' என்று பாடினாரோ!

Friday, December 13, 2013

துபாய் மன்னர் முகம்மது பின் ரஷீத் அல் மக்தும்.

நமது நாட்டில் அரசியல் தலைவர்களுக்கு எத்தனை அடுக்கு பாதுகாப்பு: 'அம்மா வாழ்க' 'ஐயா வாழ்க' என்ற கோஷம் என்ன: தலைவர்களின் கார்களுக்கு பின்னே 50 கார்கள் வலம் வந்து பொது மக்களுக்கு இடைஞ்சல் கொடுப்பது என்ன: முதலமைச்சர், கவர்னர் போன்றோர் வருவதற்கு வழிகளை ஒரு மணி நேரத்துக்கு முன்பே அடைத்து பொது மக்களை சீரழிப்பது என்ன: என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

துபாய் செல்வ செழிப்புள்ள நாடு: அந்நாட்டின் ஆட்சியாளர் எவ்வளவு எளிமையாக மக்களோடு மக்களாக பயணிப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறோம். ஆடம்பரம் இல்லை: போலீஸ் பாதுகாப்பு இல்லை: பொது மக்களுக்கு இடையூறு இல்லை: இந்த அடக்கமும் எளிமைம் எங்கிருந்து இவருக்கு கிடைத்தது?

இந்த மன்னரின் தலைவரான நபிகள் நாயகம் எவ்வாறு முழு அரபுலகின் சக்கரவர்த்தியாக இருந்த போது எளிமையாக இருந்தாரோ அதைப் பார்த்து தானும் அந்த எளிமையை கடைபிடிக்க வேண்டும் என்று உறுதி கொண்டு இந்த எளிமையை தேர்ந்தெடுக்கிறார். மக்களாட்சியோ, மன்னராட்சியோ, கலீபா ஆட்சியோ, ராணுவ ஆட்சியோ எதுவாக இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்யக் கூடியதாக இருக்க வேண்டும். மக்களாட்சி என்ற போர்வையில் ஓட்டுக்கள் ஒரு குவார்ட்டருக்கும், ஒரு பிரியாணி பொட்டலத்துக்கும் விற்கப்படும் அவலத்தை நமது நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் பார்த்து வருகிறோம். நமது நாட்டையும் துபாய், சவுதி அரசுகளை ஒப்பிடும் போது மக்களாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது என்ற முடிவுக்கு நாம் தள்ளப்படுவோம். எனவே இனி வரும் காலங்களிலாவது நமது நாட்டு அரசியல்வாதிகள் துபாய் சவுதி மன்னர்களை ரோல்மாடலாகக் கொண்டு ஆட்சி செய்ய முன்வருவார்களாக!









இதற்குச் சான்றாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த சில நிகழ்வுகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். 'இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள் என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர் என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் '(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ? எனக் கேட்டார்கள். 'மாட்டேன் என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்யிருப்பேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி)
நூல்: அபூதாவூத் 1828

----------------------------------------------------

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின் பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் 'பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுகை நடத்துங்கள் என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 624

-------------------------------------------------

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உற்ற தோழர் அனஸ் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்.

நாங்கள் ஒரு அவையில் அமர்ந்திருப்போம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கு வருவார்கள். அவர்களின் வருகைக்காக நாங்கள் யாருமே எழுந்து நிற்க மாட்டோம். இப்படி எழுந்து நிற்பதை அவர்கள் தடை செய்து இருக்கிறார்கள். மேலும் எழுந்து நிற்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதே இதன் காரணம்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: அஹ்மத்

எழுந்து நின்று கூட தமக்கு மரியாதை செய்யக் கூடாது என்ற அளவுக்கு சுயமரியாதை மிக்க ஒரு சமுதாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் இதற்குக் காரணம் லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை - என்ற அடிப்படைக் கொள்கை தான்.

Thursday, December 12, 2013

தமிழர்கள் அறிவியல் அறிவு அற்றவர்கள் - தி ஹிந்து

அறிவியல் பார்வை அறவே இல்லாமல், தமிழின் மீதும், தமிழினத்தின் மீதும் வன்மம் மட்டுமே மேலிட எழுதும் கட்டுரையாளர்களின் களமாக தி இந்து தமிழ் நாளிதழ் திட்டமிட்டே செயல்படுகிறது. ஏற்கெனவே எழுத்தாளர் ஜெயமோகன் தமிழ் வரி வடிவத்திற்கு எதிரான கருத்து இவ்விதழில் வெளிப்பட்டது. இப்போது பி.ஏ. கிருஷ்ணன் என்பவர் எழுதிய ‘அறிவியலும் தொழில் நுட்பமும் ஒன்றா” என்ற தலைப்பிலான கட்டுரை 28.11.2013 ஏட்டில் வந்துள்ளது.

தமிழக அரசின் பத்தாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் வந்துள்ள ‘தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்” என்ற பாடமே பி.ஏ.கிருஷ்ணனின் வன்மப் பாய்ச்சலுக்குக் காரணமாகும்.

‘தமிழர்களுக்கு விண்ணியல், பொறியியல், மண்ணியல், கணிமவியல், அணுவியல், நீரியல் போன்ற பல இயல்களில் ஆழ்ந்த அறிவு இருந்தது என்று கூறப்படுகிறது…. அறிவியலும், தொழில்நுட்பமும் ஒன்றல்ல…………

தமிழர்கள் அணைகள் கட்டியிருக்கிறார்கள்.
கோயில்கள் கட்டியிருக்கிறார்கள்.
சிற்பங்கள் செதுக்கியிருக்கிறார்கள்.
உலகம் வியக்கும் செப்பு சிலைகள் செய்திருக்கிறார்கள். ஆனால் இவற்றை எல்லாம் செய்வதற்கு அறிவியல் ஞானம் தேவையில்லை. தொழில் நுட்பம் போதுமானது” என்று தனது மோதாவித்தனத்தை காட்டுவதாகக் கருதிக்கொண்டு அறியாமையையும், இனப்பகைக் கருத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அறிவியலுக்கும், தொழில் நுட்பத்திற்கும் வேறுபாடு இருப்பதை இப்பாடம் மறைத்துக் குழப்பி விட்டதாக கிருஷ்ணன் மிகவும் கவலைப்படுகிறார். இப்பாடத்தின் தலைப்பே ‘தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்” என்பது தான். அடிப்படை அறிவியலாக (Basic Science) இருந்தாலும், தொழில் நுட்பமாக (Technology) இருந்தாலும் இவ்விரண்டு துறை அறிவிற்கும் அறிவியல் பார்வை – அறிவியல் சிந்தனை அடிப்படையானது.

ஏதோ அடிப்படை அறிவியலுக்கும், தொழில் நுட்பத்திற்கும் இடையில் மிக உயர்ந்த சீனச் சுவர் இருப்பதுப் போல் கிருஷ்ணன் பேசுகிறார். செயல்படும் அறிவியலே (Applied Science) தொழில் நுட்பம் எனப்படும். இந்த அரிச்சுவடிக் கூட அறியாதவர் போல் கிருஷ்ணன் எழுதுகிறார்.

தொழில் நுட்ப அறிவு என்பது முயன்று, தவறி, கற்றல் என்ற வழியில் (ட்டிரையல் அண்டு எர்ரர்) வளர்வதாகவும் அடிப்படை அறிவியல் அறிவானது கோட்பாடு (தியரி) சோதனை (எக்ஸ்பெரிமண்ட்) கண்டறியதல் (ஃபைண்டிங்ஸ்) என்ற வழியில் நிலைப்பெறுவதாகவும், கிருஷ்ணன் கூறுகிறார்.

அறிவியல் அறிவிற்கும் முயன்று – தவறி- கற்றல் என்ற வழிமுறையே செயல்படுகிறது. தான் காணுகிற அல்லது உணருகிற செய்திகளை தொகுத்தும், வகுத்தும் ஆய்ந்து ஓர் அறிவியலாளர் (விஞ்ஞானி) முதலில் ஒர் கருதுகோளைத்தான் (Hypothesis) வைக்கிறார். இது ஆய்வில் மெய்ப்பிக்கப்படலாம்; அல்லது தோற்றுப் போகலாம்.

இது அடிப்படையில் சரியானதாக இருந்து செழுமைப்படவும்ச் செய்யலாம். அதன் பிறகே அது கோட்பாடு (Thesis அல்லது Therory) ஆகிறது. இது ஒருவகை முயன்று – தவறி – கற்றல் வழிமுறைதான். இந்த அறிவு வளர்முறை குறித்த அரிச்சுவடி தெரியாதவராக கிருஷ்ணன் இருக்க முடியாது. ஆனால் தனது வாதத்தை நிலைநாட்டுவதற்காக ஒரு குழப்பமான வரையறையை முன்வைத்து அதன் அடிப்படையில் தமிழர்களுக்கு ‘அறிவியல் ஞானம் இல்லை” என்று நிலைநாட்ட முயல்கிறார்.

ஆனால் இவரே இக்கட்டுரையில் ‘அறிவியலுக்கும், தொழில்நுட்பத்திற்கும் இன்று இருக்கும் பிணைப்பு பிரிக்கமுடியாதது. அறிவியல் இல்லையென்றால் தொழில் நுட்பம் முன்னேற முடியாது. தொழில்நுட்பம் இல்லையென்றால் அறிவியலின் பல கண்டுப்பிடிப்புகள் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை” என்று கூறுகிறார். அதாவது அறிவியலுக்கும், தொழில்நுட்பத்திற்கும் இன்றைய காலத்தில் தான் பிரிக்க முடியாத பிணைப்பு வந்துவிட்டதாக வலியுறுத்துகிறார். எப்போதுமே அறிவியலுக்கும், தொழில்நுட்பத்திற்கும் பிரிக்க முடியாத பின்னிப்பிணைந்த உறவு இருந்து வருவதை தன் வசதிக்காக வேண்டுமென்றே மறைக்கிறார்.

ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் வானுயர்ந்த தஞ்சை பெரியக்கோயில் கோபுரம் கூட இதுபோல் பல கோபுரங்கள் கட்ட முனைந்து அவை இடிந்து போன பிறகே அறிவுப்பெற்று ஒரு தற்செயல் நிகழ்ச்சியாக நிலைக்கவைக்க முடிந்தது என்று கூறவருகிறார். இதற்கு வரலாற்றில் ஆதாரம் ஒன்றையாவது காட்ட வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சிக் கூட அவரிடம் இல்லை. வன்மம் கண்ணை மறைக்க நெஞ்சாரப் பொய் வாதம் செய்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, அவர் எடுத்துக்காட்டிய பத்தாம் வகுப்புப் பாடத்திலேயே கூட தமிழர்களின் அடிப்படை அறிவியல் அறிவு (Basic Science Knowlege) நிறையவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் வசதியாக மறைத்து விட்டு வானூர்தி குறித்த தொழில்நுட்பச் செய்தியை அறிவியல் வகைப்பட்டதுப் போல கூறிவிட்டார்கள் என ஏளனம் செய்கிறார்.

உலகம் உருண்டை என்பதை மேற்குலகம் கண்டறிந்து கூறியதே 16-ஆம் நூற்றாண்டில் தான். அதற்கும் மத நிறுவனங்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் இதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழர்கள் தங்கள் முன்னோர்கள் வழியாக ‘உலகம் உருண்டை” என்ற உண்மையை பரவலாகத் தெரிந்து வைத்திருந்தனர் என்பதற்கு திருவாசகம் சான்று கூறுகிறது.

‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெடுப் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன”
என்ற திருவாசக வரிகள் வானியல் (அஸ்ட்ரானமி) என்ற அடிப்படை அறிவியல் குறித்த மூன்று முக்கிய செய்திகளைக் கூறுகிறது.

கடவுளை வாழ்த்திப் பாடுகிற ஒரு பாடலில் போகிறப் போக்கில் மிக அரிய அறிவியல் செய்திகள் சொல்லிச் செல்லப்படுகின்றன. ஒன்று, உலகம் அல்லது இந்த பூமி உருண்டை வடிவமானது, தட்டையானது அல்ல என்ற அறிவியல் செய்தி. இரண்டாவது, ‘நூற்றொருக் கோடி’ வான் பொருள்கள் இதுபோல் உருண்டை வடிவமாக இப்பேரண்டத்தில் உள்ளன என்ற அறிவியல் செய்தி. மூன்றாவது, இவை இருக்கும் வெளி விரிந்துக்கொண்டே இருக்கிறது என்ற அறிவியல் செய்தி.

இதற்கென்று தனித்த ஓர் அறிவியல் நூல் எழுதி அதன் வழியாகச் இச்செய்தியை சொல்வதற்கு பதிலாக கடவுள் வாழ்த்து பாடுகிறப் போது போகிறப் போக்கில் மாணிக்கவாசகர் இப்பேருண்மையை சொல்லிச் செல்கிறார் என்றால் இந்த அறிவியல் செய்தி மிகப்பரவலாக அக்காலத் தமிழர்களிடையே புழங்கி வந்த பரவலான அறிவு இருந்திருக்கிறது என்று பொருள்.

மணிவாசகருக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே 3000 ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் இந்த அறிவியல் செய்திகளை ஏராளமாக கூறுகிறது என்ற உண்மையை ஆய்வாளர்கள் எடுத்துக் கூறியிருக்கின்றனர். (எ.கா: ‘தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்’ முனைவர் க. நெடுஞ்செழியன் – மனிதம் பதிப்பகம் வெளியீடு -திருச்சி, 1990)

இயற்கையின் அடிப்படையாக இருப்பவை எவை என்பதை மேற்குலகம் அறிவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அது பற்றிய அறிவியல் அறிவு தமிழர்களிடம் இருந்தது. நிலம், நீர், காற்று, தீ, விசும்பு என்ற ஐம்பூதங்களால் ஆனது இயற்கை என்ற அறிவியல் அறிவு தமிழர்களுக்கு இருந்தது. வடமொழி வாணர்களான ஆரியர்கள் கூட ‘சதுர்பூதம்’ என்று நான்கு கூறுகளை மட்டுமே அறிந்திருந்தனர். காற்று வேறு அது இயங்கும் வெளி வேறு, அதன் பெயர் விசும்பு (ஸ்பேஸ்) என்ற தெளிவு தமிழர்களிடம் இருந்தது.

‘ மண் திணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதை வரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை”
என்று சங்கப் பாடல் ஒன்று கூறுகிறது.

புற இயற்கைக்கு மட்டுமின்றி மனித உடலுக்கும் இந்த ஐம்பூதங்களே அடிப்படை என்பதை ‘ அண்டமே பிண்டம்” என்ற சொற்களால் தமிழர்கள் வரையறுத்தனர்.
இது கிருஷ்ணன் கூறுவதுப் போல் தொழில் நுட்ப அறிவு அல்ல, அடிப்படை அறிவியல் அறிவு.

டாப்ளர் விளைவை வைத்து 20-ஆம் நூற்றாண்டில் தான் இந்த விசும்பு – அண்டவெளி விரிவடைந்து வருகிறது என்ற உண்மையை கிருஷ்ணன் தலையில் தூக்கிக்கொண்டாடும் மேற்குலக அறிவியல் உணர்ந்தது. ஆனால் இதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ‘அகலிரு விசும்பு” என்று தொல்காப்பியம் கூறுகிறது. ‘வளிதிரி தரு மண்டலம்” என்று காற்றே இல்லாத வெட்டவெளி விசும்பு இருக்கிறது என்ற உண்மையையும் பண்டைத் தமிழர்கள் கூறிச்செல்கிறார்கள். இதெல்லாம் மேற்குலக அறிவாளிகளுக்கு தெரிய 2000 ஆண்டுகள் ஆனது.

தமிழர்களின் கணிதவியல் அறிவை கிருஷ்ணன்கள் புரிந்துக்கொள்ளாததாலேயே அவை பொய் என்று ஆகி விடாது. ‘அறிவியல் ஞானம்” அற்றவர்களாக கிருஷ்ணன்கள் ஒதுக்குவதாலேயே தமிழினம் அறிவியல் அறிவற்ற கூட்டமாக ஆகிவிடாது.

இன்று மில்லியன் என்று மேற்குலகம் அழைக்கிற எண்ணை (106) பண்டைத் தமிழர்கள் மெய்யிரம் என்று குறித்தனர். இன்று மேற்குலகம் பில்லியன் (109) என்று கூறும் எண்ணை தமிழர்கள் தொள்ளுண் என்று குறித்தனர். இன்று டிரில்லியன் (1012) என்று குறிக்கும் எண்ணை தமிழர்கள் ஈகியம் என்றனர். இதனையும் தாண்டி நெளை (1015), இளஞ்சி (1018), வெள்ளம் (1020), ஆம்பல் (1021) என்ற எண் அளவுகளையும் தமிழர்கள் பரவலாகப் பயன்படுத்தி வந்தனர்.

இதுமட்டுமின்றி 1-க்கு கீழ் உள்ள பின்ன கீழ் அளவுகளையும் இன்று மேற்குலகம் கற்பனைச் செய்ய முடியாத அளவுகளில் அன்றாடம் பயன்படுத்தி வந்தனர். இந்த அளவுகளைக் கொண்டு பலப் புதிய நுட்பங்களை வளர்த்தெடுத்தனர். எடுத்துக்காட்டாக 1/16 வீசம் அல்லது மாகாணி எனப்பட்டது. 1/32 அரை வீசம் ஆகும். இது போல் கீழ் அளவுகள் நுணுகி நுணுகி பகுக்கப்பட்டுள்ளன. ஒரு இலட்சத்திது இரண்டாயிரத்து நானூறில் ஒரு பாகம் (1/102400) என்பதை கீழ் முந்திரி என்றனர். 21, இலட்சத்து 50 ஆயிரத்து 400-ல் ஒரு பங்கு என்பதை (1/2150400) இம்மி என்றனர்.

இன்று பில்லியனில் ஒரு பங்கு அதாவது 100 கோடியில் ஒரு பங்கு என்பதை நானோ (Nano) என்று மேற்குலக நவீன அறிவியல் குறிக்கிறது. இதுதான் ஆகச்சிறிய பகுப்பு என்பதாக குதிக்கிறது. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதைவிடக் கூடுதலாக 149 கோடியே 2 இலட்சத்து 27 ஆயிரத்து 200-ல் ஒரு பங்கு (1/1490227200) என்பதை ‘குணம்’ என்று குறித்தனர்.

இதையும் தாண்டி 3 இலட்சம் கோடி கோடியில் ஒரு பங்கு என்பதையும் தாண்டிய (1/35751146618880000000) என்ற நுண் அளவை நுண் மணல் எனக்குறித்தனர். இவ்வாறு பகுப்பதும் அதற்கு தனிப்பெயர் குறிப்பதும் விளையாட்டுக் கற்பனை அல்ல கணித அறிவின் உச்சம். கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாக பூனைக் கருதுவதாலேயே உலகம் இருண்டு விடுவது இல்லை. இதனை கிருஷ்ணன் அறியாவிட்டால் அது அவரது அறியாமையே தவிர தமிழர்கள் அறிவியல் அறிவு அற்றவர்களாக மாறிவிடமாட்டார்கள்.

இந்த அளவீடுகளை நடைமுறை வாழ்க்கையில் தமிழர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் உள்ளன. சித்த மருத்துவத்தில் உலோக பற்பம் (பஸ்பம்), செந்தூரம் போன்ற மருந்துகள் தயாரிக்க மேற்சொன்ன கீழ் முந்திரி இம்மி, அடிசாரம், போன்ற நுண் அளவுகளைத் தமிழர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதனை சித்த மருத்துவம் ‘இம்மிப் பகுப்பு’ என்று வரையறுக்கிறது.

இந்த அளவீடுகளை நில அளவையிலும் தமிழர்கள் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உண்டு. சோழர்கள் காலத்தில் நிலங்கள் அளவெடுக்கப்பட்டு துல்லியமாக பகுக்கப்பட்டன. இது குறித்து தஞ்சை பெரியக்கோயிலில் இராச ராச சோழனின் கல்வெட்டு ஒன்று கீழ் வருமாறு கூறுகிறது. இது திருவாரூர் மாவட்டம் பாலையூர் என்ற கிராமத்தின் பரப்பளவை அளந்து கூறுகிறது.

‘தெக்கடு வாயான அருமொழித் தேவ வளநாட்டு
இங்ஙணாட்டு பாலையூர் பள்ளியுங் கணி
முற்றூட்டும் உட்பட அளந்தப்படி நிலம் நூற்று
முப்பத்து நான்கேய் எட்டு மாவின் கீழ் முக்காலே
மும்மா வரையறைக் காணி முந்திரிகைக் கீழ் நான்குமா”
என்பது அக்கல்வெட்டுக் கூறும் செய்தி.

இது ஏறத்தாழ 130 வேலி நிலம் ஆகும். (1வேலி = சுமார் 6.75 ஏக்கர்) தமிழர் அளவீடுகளின் படி கீழ்க் காணி (1/25600), கீழ் முந்திரி (1/102400) ஆகிய மிகச் சிறிய அளவுகளில் கூட நிலம் அளக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த கணித அறிவு மக்களின் அன்றாட வாழ்வில் இயல்பாக புழங்கி வந்திருக்கிறது. (விரிவிற்கு காண்க: நிலம் அளந்த இராசராசன் – முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்- தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், 2010, செப்டம்பர் இதழ்)

தமிழர்களின் இந்த அறிவியல் அறிவு அது சார்ந்த தொழில் நுட்ப அறிவு ஆகியவை மிகப் பரவலாக மக்களிடம் புழங்கியதால் அது தமிழ் மக்களின் பன்பாட்டு நடவடிக்கைகளோடும், சடங்குகளோடும் இரண்டறக் கலந்து அவர்கள் வாழ்வியலின் பிரிக்க முடியாத கூறாக மாறிவிட்டது. இதனைக் கவனிக்காமல் அவற்றை வெறும் சடங்கு அல்லது மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விடுவது கிருஷ்ணன் போன்றவர்களின் அறியாமையாக இருக்கலாமே தவிர அதற்காக தமிழர்களை அறிவியல் அறிவு அற்ற சமூகமாக கீழ்ப்படுத்திவிட முடியாது.

‘ஆடிப்பட்டம் தேடிவிதை” என்ற மக்கள் வழக்கில் இருந்த பழமொழி தலைமுறை தலைமுறையான முயற்சியில் தமிழர்கள் வளர்த்தெடுத்த அறிவியல் அறிவின் ஓர் பிழிவு.

இன்று நவீன அறிவியல் உலகம் மக்களிடம் புழக்கத்தில் உள்ள அறிவியல் அறிவை அடையாளம் காணப் பெரிதும் முயன்று வருகிறது. மக்கள் குடி உயிரியல் (Ethno Biology), மக்கள் குடி மருந்தியல் (Ethno medicine), மக்கள் குடி மரபியல் (Ethno Genetics) போன்று பல அறிவியல் துறைகள் வளர்ந்து வருகின்றன. இந்த புதிய அறிவியல் போக்கை பி.ஏ. கிருஷ்ணன் அறியாமல் இருக்கலாம் அல்லது அறிந்தும் மறைக்கலாம். ஆனால் உண்மை மறைந்து விடாது.

பசுமைப் புரட்சியை திணித்து, இரசாயன வேளாண்மையைப் புகுத்திய வேளாண் அறிவியலாளர் எம்.எஸ் சுவாமிநாதனின் நிறுவனமான ‘எம்.எஸ் சுவாமிநாதன்’ ஆராய்ச்சி அறக்கட்டளை அண்மையில் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி கிராமத்தில் அங்குள்ள தமிழ் மக்களிடம் நிலவிய வேளாண் அறிவியல் சிந்தனைகளை ஆய்வு செய்து அதன் அடித்தளத்தில் நின்றுக்கொண்டு நவீன் வேளாண் அறிவியலை வளர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.

ஆய்வாளர் ரெங்கலட்சமி ராஜ் Hormonizing Traditional and Sceintific knowlege systems in Rainfall Predictions and Utilization என்ற தலைப்பில் வெளியிட்ட இந்த ஆய்வறிக்கை அம்மக்களிடம் இருந்த விண்ணியல், மண்ணியல், பருவவியல், நீரியல் அறிவை வியந்துப் பாராட்டுகிறது. அதை ஒரு முறை பி.ஏ. கிருஷ்ணன் படிக்கட்டும். (www.unep.org)

கன்னிவாடி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் காற்று வீசும் திசை, காற்றின் ஈரப்பதம், நிலவைச் சுற்றிய வட்டத்தின் தன்மை, பறவை, பூச்சி ஆகியவற்றின் இயக்கம் மின்னலின் தன்மை போன்ற 12 காரணிகளை ஆய்வுச் செய்து மழை வருவது குறித்து முன்னறிந்து கூறுகின்றனர்.

கிழக்கில் புறப்பட்டு மேற்கு நோக்கி மின்னல் பாய்ந்தால் ஒரு மணி நேரத்தில் மழைப் பெய்யும். தென்மேற்கு மற்றும் வடமேற்கில் மின்னல் மின்னினால் இரவு நேரத்தில் மழைப் பெய்யும். நிலவைச் சுற்றி வளையமிருந்தால் சிறு தூரல் மட்டுமே விழும் சிட்டுக்குருவி கூட்டமாக தாழப்பறந்தால் அன்றைக்கே மழை வரும், கிணற்றுத் தவளை வழக்கத்தை விட அதிகமாக ஒலி எழுப்பினால் அல்லது நண்டு வளையை பெரிதாக குடைந்தால் இரண்டு நாளில் மழைவரும் என்பன போன்ற இவர்களது பருவ நிலை அறிவு இன்றைய நவீன கருவிகள் கண்டுப்பிடித்து அறிவிக்கும் அறிவிப்புகளுக்கு மிக நெருக்கமாக இருப்பதை ரெங்கலட்சுமி ராஜ் குறிப்பிடுகிறார்.

‘ஆடிமாதம் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்” என்பது மக்கள் மொழி. ஜுலை, ஆகஸ்ட்-ல் காற்று வலுவாக வீசினால் அட்டோபர், நவம்பரில் பருவ மழை சரியான அளவு பொழியும் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கருவிகள் கொண்டு கண்டறிந்து கூறியதைத் தான் மக்கள் கூறுகிறார்கள். இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்காணிக்கும் மேக மண்டல மாற்றங்களைத் தான் மக்களும் அடிப்படையாக கொண்டுள்ளனர் என்று ரெங்கலட்சுமி வியப்புடன் கூறுகிறார்.

பொன்னேறு பூட்டும் விழா என்ற பெயரில் முதல் உழவு நடத்துகிற காலத்தில் அச்சமூகத்தின் மூப்பர்கள் இளையோர்களிடம் கதையாகவும், பாட்டாகவும், பழமொழியாகவும் இதை கற்றுத்தருகிறார்கள் என்று ரெங்கலட்சமி கண்டு கூறுகிறார்.

தமிழர்களின் வேளாண் அறிவியல் மட்டும் அல்ல அவர்களின் பலவகை மரபுசார் மருத்துவமும் இன்று அறிவியல்; உலகத்தால் திரும்பிப் பார்க்கப்படுகின்றன.

டெங்கு காய்ச்சலுக்கும், சிக்கன் குனியா காய்ச்சலுக்கும் பி.ஏ. கிருஷ்ணன் கொண்டாடும் மேற்கத்திய அலோபதி மருத்துவத்தில் மருந்து இல்லை என்று மருத்துவ மனைகள் கைவிரித்ததையும், இந்நோய்க்கு நிலவேம்பு கசாயம் கொடுத்து இந்நோய்களை குணப்படுத்த முடிந்ததையும்; தமிழகம் பார்த்தது.

இன்று மாடுகளை தாக்கியுள்ள கொள்ளை நோயான கோமாரிக்கு மேற்கத்திய மருத்துவம் எதுவும் செய்யமுடியவில்லை என்று கால்நடைத்துறையே கைவிரித்து விட்டது. ஆனால் அதே கால்நடைத்துறை குப்பைமேனி, பூண்டு, மஞ்சள் ஆகியவற்றைக் குறிப்பிட்ட அளவில் அரைத்து தயாரிக்கும் மூலிகை மருத்துவத்தையே பரிந்துரைக்கிறது.

இவற்றை எல்லாம் பி.ஏ. கிருஷ்ணன் கண்டும் காணாதது போல் எழுதுகிறார்.

தமிழக அரசின் பாடத்திட்டத்தில் தமிழர்களின் மரபு அறிவியலைப் பற்றி மிக அரிதாக ஒரு மூலையில் இடம்பெற்றுள்ள பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தை எடுத்து வைத்துக்கொண்டு அறிவியல் பார்வை மறந்து தமிழ் மீதும், தமிழர் மீதும் நஞ்சு கக்கும் பி.ஏ. கிருஷ்ணன் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள வேதகணிதம் (வேதிக் மேதமேடிக்ஸ்), வேத விஞ்ஞானம் (வேதிக் சயின்ஸ்) ஆகியவை குறித்து வாய்திறக்கக் காணோம்.

கிருஷ்ணன்களுக்கு ‘பசித்துப் புசி” என்ற தமிழ் முன்னோர் வாக்கு அறிவியல் அற்றது. அதையே சமஸ்கிருதத்தில் ‘லங்கணம் பரம ஒளஷதம்” என்று சொன்னால் அதுவே ‘அறிவியல் ஞானம்”.

கிருஷ்ணன் சொல்வதுப் போல் தமிழர்கள் தங்களைப் பற்றி ‘எங்களிடம் எல்லாம் இருந்தது என்று” தம்மைத் தாமே பாராட்டிக் கொள்பவர்கள் அல்லர். ‘கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு” என்ற ஒளவையின் வரிகள் தான் தமிழர்களின் வழிகாட்டி.

இருந்த அறிவெல்லாம் மறைக்கப்பட்டு விட்டது அல்லது அழிக்கப்பட்டு விட்டது என்ற உண்மையை பி.ஏ. கிருஷ்ணன் ஏற்க மறுக்கிறார்.

ஒரு நாட்டில் பழைய வர்க்கத்தை ஒடுக்கி ஓர் புதிய வர்க்கம் ஆதிக்கத்திற்கு வரும் போது பெரும்பாலும் ஏற்கெனவே இருந்த மக்களின் அறிவை முற்றிலும் அழித்து விடுவது இல்லை. பெரிதும் அதனை தனதாக்கிக் கொண்டு தொடரவேச் செய்யும். ஆனால் ஓர் இனத்தின் மீது அயல் இனத்தின் ஆதிக்கம் நிகழ்கிற போது அதன் அறிவுச் சின்னங்களும், நூல்களும், வரலாற்றுச் சின்னங்களும் அழிக்கப்படுவதே வரலாறு நெடுகிலும் நடக்கிறது.

தமிழினம் ஆரியர், ஆதிக்கத்திற்கு ஆட்பட்டது. அவர்களது அறிவு ஏற்கப்படாமல் அறிவு என்ற வளையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டது. இந்த அறிவை தமது பண்பியல் வாழ்க்கை நெறியாக கொண்டிருந்த பெரும்பாலான தமிழர்கள் கீழ்நிலை சாதிகளாக அழுத்தப்பட்டு அவர்கள் அறிவாளர் வளையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டனர்.

பிறகு விஜயநகரப் பேரரசை தொடர்ந்து வந்த நாயக்கர் ஆட்சிக்கு கீழ்ப்பட்டதாக தமிழகம் மாறியபோதும், அதைத் தொடர்ந்து மொகலாயர் ஆட்சிக்கு உட்பட்ட போதும், வெள்ளையர் ஆட்சிக்கு அடிமைப்பட்டபோதும் தமிழ் மொழி ஆட்சி அதிகாரத்தை இழந்ததோடு அறிவியல் மொழி என்ற அந்தஸ்தையும் இழந்தது. பல நூல் நிலையங்களும், நூல்களும் அழிக்கப்பட்டன. கீழ்நிலை சாதிகளாக வைக்கப்பட்ட அறிவாளர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு தமிழர்களின் மரபான அறிவியல் அறிவு புதைக்கப்பட்டதை, புறந்தள்ளப்பட்டதை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்து உண்மையை அறிந்துக் கொள்ள வேண்டுமே அல்லாது ‘எல்லாம் அழிந்து விட்டது என்று கூறுவது நம்பும் படியாக இல்லை’ என போகிற போக்கில் தள்ளிச் செல்வது தமிழ் இனத்தின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே ஆகும்.

இந்த புறக்கணிப்பையும், மறைப்புகளையும் உடைத்துக் கொண்டு செம்மாந்த தமிழினம் தனது அறிவியில் அறிவை நவீன உலகத்தில் நிலை நிறுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை. அப்போது கிருஷ்ணன்களும், தி இந்து ராம்களும் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்.

- கி.வெங்கட்ராமன், இணை ஆசிரியர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

டிஸ்கி: தமிழர்களை ஏசுவதிலும் அவர்களை இளக்காரமாக பல இடங்களில் குறிப்பிடுவதற்கும் மேல்குடியினர் என்று நினைத்து செயல்படும் ஆரியர்கள் என்றுமே சளைத்ததில்லை. தங்களின் இலக்கில் அவர்கள் சரியாகவே சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த திராவிடர்களோ இந்த சூழ்ச்சிகளை எல்லாம் அறியாமல அவர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் உருண்டு பிரண்டால் மோட்சம் கிட்டி விடும் என்று இந்த நூற்றாண்டிலும் நம்பிக் கொண்டிருக்கும் வினோதத்தை என்னவென்பது?