Followers

Saturday, August 16, 2014

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை உருவாக்கியது யூதர்களா?



நெதர்லாந்தின் அரசுத் துறையில் பணி புரியும் யாஸ்மினா ஹைஃபீ ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை தனது ட்விட்டர் தளத்தில் பதிந்துள்ளார். 'இஸ்லாத்துக்கும் ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இஸ்லாத்தின் பெயரை உலக அளவில் களங்கப்படுத்துவதற்காக யூதர்களால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே இந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு' - இதுவே அந்த பெண்மணி பதிந்த செய்தியின் சாரம். செய்தியை ட்விட்டரில் பதிந்த இந்த பெண்மணி யூதர்களால் மிரட்டப்பட்டுள்ளார். உண்மை வெளி வந்து விட்டதே என்ற கோபமாகவும் இருக்கலாம்.


இதை என்னால் நம்பவும் முடியவில்லை: நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

ஏனெனில் ஆரம்பத்தில் நமது நாட்டு செவிலியர்கள் விடுதலை போன்ற சில நல்ல செயல்களை செய்த போது அனைவரும் பாராட்டினோம். ஆனால் இந்த அமைப்பு தற்போது தனது சொந்த நாட்டு மக்களை கொல்வதாகவும், அந்த மக்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதாகவும் செய்திகள் படிக்கிறோம். குர்ஆனையும் நபி மொழிகளையும் பின் பற்றும் ஒரு அமைப்பு இத்தகைய செயல்களை ஒரு போதும் செய்யாது. நபி அவர்களின் காலத்தில் யூதர்களும் கிறித்தவர்களும் சிலை வணங்கிகளும் சுதந்திரமாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆட்சியாளராக இருந்த முகமது நபிக்கே கடன் கொடுக்கும் நிலையில்தான் வசதியாக அன்று யூதர்கள் இருந்தனர். இஸ்லாமிய ஆட்சியை அமுல்படுத்துவதாக இருந்தால் முதலில் சிறுபான்மை மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். அதுதான் இஸ்லாமிய வழிமுறை. அனால் இவர்கள் செய்வதோ நேர்மாறான வேலை. இதனால் உலகம் முழுக்க இஸ்லாத்துக்கு கெட்ட பெயரே ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களை நாம் இரண்டு விதமாக பார்க்கலாம்.

தற்போது ஈராக்கில் யஜீதிகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் உண்மையிலேயே கொல்லப்பட்டும் கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டால் கண்டிப்பாக இந்த அமைப்பு இஸ்லாத்தை சேர்ந்ததாக இருக்காது என்ற முடிவுக்கு வந்து விடலாம். ஒன்றுமில்லாத காரியத்துக்கெல்லாம் ஒன்று கூடும் நேட்டோ அமைப்பினர் ஐஎஸ்ஐஎஸ் செய்யும் அடாவடிகளைக் கண்டும் காணாமல் இருப்பதும் இந்த சந்தேகத்தை வலுவாக்குகிறது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பானது இஸ்ரேலைப் பற்றியோ அது பாலஸ்தீனை ஆக்கிரமித்துள்ளது பற்றியோ இதுவரை வாயை திறக்காததும் நமது சந்தேகத்தை அதிகமாக்குகிறது.


ஆனால் தற்போது ஈராக்கின் செய்தி ஸ்தாபனம் முதற்கொண்டு அனைத்தும் அமெரிக்க இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் என்ற இந்த அமைப்பின் பெயரைக் களங்கப்படுத்த அமெரிக்கர்களே இந்த கொடுமைகளை செய்து விட்டு அதனை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் மீதும் போடலாம்.

இதன் மூலம் அமெரிக்காவும் இஸ்ரேலும் பல பயன்களை பெறும். சிறுபான்மையினரைக் காப்பாற்றுகிறேன் என்ற போர்வையில் மேலும் ராணுவத்தை இறக்கி அதற்கான சம்பள தொகையை ஈராக் அரசிடமிருந்தே கறந்து விடலாம். மற்றொரு பயன் ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பு யஜீதிகளையும் கிறித்தவர்களையும் கொன்ற பழியைச் சுமப்பதால் இந்த அமைப்பினரை உலக அளவில் தனிமைப் படுத்தி விடலாம். பாலஸ்தீனை குறி வைத்து தாக்கிக் கொண்டுள்ள சமயம் யஜீதிகளின் கொலை செய்தி வந்தால் உலகத்தின் கவனம் அந்த பக்கமும் திரும்பும். இதன் மூலம் இஸ்ரேலின் கொடூர தாக்குதலை மீடியாக்கள் பார்வையிலிருந்து சிறிது மறைக்கலாம். ஒரே கல்லில் மூன்று மாங்காய்.


இந்த செய்திகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும் வரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடமிருந்து தூரமாகவே இருப்போம். தாலிபான்களை ஒழிக்க இரட்டை கோபுர தாக்குதலை அவர்களே நடத்தி விட்டு பழியை முஸ்லிம்களின் மேல் போட்டதை நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. அதற்கும் இஸ்லாமிய ஜிஹாத் என்றுதான் பெயரிட்டனர். எனவே யூதர்கள் தங்களின் காரியங்களை சாதித்துக் கொள்ள எதையும் செய்யத் தயங்காதவர்கள். எனவே உணர்ச்சி வசப்பட்டு எந்த அமைப்பையும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடாமல் சற்று தூர இருந்தே நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனிப்போம்.

இறைவனே அனைத்து உண்மைகளையும் அறிந்தவன்.

http://www.jpost.com/Jewish-World/Jewish-News/Netherlands-suspends-official-who-said-Zionists-created-ISIS-371240

35 comments:

Anonymous said...

/அமெரிக்கர்களே இந்த கொடுமைகளை செய்து விட்டு அதனை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் மீதும் போடலாம்./

elephant in the room

அதைத்தான் நீங்கள் செய்துக் கொண்டிருக்கிறீர்கள். இஸ்லாத்துக்கு மாற்றமாக அவர்கள் எதையுமே செய்யவில்லை.

quran

When you meet the unbelievers, strike off their heads; then when you have made wide slaughter among them, carefully tie up the remaining captives 47:4.

The punishment of those who wage war against Allah and His Messenger, and strive with might and main for mischief through the land is: execution, or crucifixion, or the cutting off of hands and feet from opposite sides, or exile from the land: that is their disgrace in this world, and a heavy punishment is theirs in the Hereafter 5:33

O PROPHET! Behold, We have made lawful to thee thy wives unto whom thou hast paid their dowers, as well as those whom thy right hand has come to possess from among the captives of war whom God has bestowed upon thee. 33:50

Anonymous said...

http://www.barenakedislam.com/2014/08/16/australian-radio-host-tom-elliott-inteviews-man-who-claims-to-be-an-islamic-state-military-commander/

Anonymous said...

முஸ்லிம்களில் இரண்டே வகையினர்தான் உண்டு. ஒன்று காபிர்கள் மேல் ஜிகாத் போர் தொடுக்கும் நேரம் வந்துவிட்டது என்று நம்புபவர்கள். அல்கொய்தா, இஸிஸ் போன்றவர்கள் இந்த வகையினர். இன்னொன்று காபிர்கள் மேல் போர் தொடுக்கும் காலம் இன்னும் வரவில்லை என்று நம்புபவர்கள். "மோடரேட் முஸ்லிம்" என்று சொல்லி காபிர்களை ஏமாற்றிக் கொண்டு இருப்பவர்கள். இவர்கள்தான் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று அள்ளிவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். உண்மையை சொன்னால் யாருமே இஸ்லாம் பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டார்கள் என்பது இவர்களுக்கு தெரியும். அதனால்தான் எந்த பொய்யை சொல்லியாவது மதம் மாற்றி பிறகு நரக பயத்தைக் காட்டி தக்க வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். இன்று இஸிஸ் செய்வது 1400 வருடங்களாக முஸ்லிம்கள் செய்ததுதான் என்று எல்லா முஸ்லிம்களுக்கும் தெரியும். ஆனால் வெளியில் எப்படி சொல்வது ? உண்மையில் சொல்லப்போனால் இஸிஸ் சீக்கிரமாக இதை செய்து காரியத்தைக் கெடுத்துவிட்டதாக பல முஸ்லிம்கள் நினைக்கிறார்கள். அதனால் இஸிஸ் சரியான முஸ்லிம் அல்ல என்ற தோற்றத்தை உண்டு பண்ண முயற்சிக்கிறார்கள். ஆனால் எந்த முஸ்லிமும் போரில் பெண்களை பிடித்து, உறவு கொண்டு அடிமைகளாக விற்பது இஸ்லாமின்படி தவறு என்று சொல்லவில்லை. ஏனென்றால் இது குரானில் உள்ளது.

தருமி said...

//தாலிபான்களை ஒழிக்க இரட்டை கோபுர தாக்குதலை அவர்களே நடத்தி விட்டு பழியை முஸ்லிம்களின் மேல் போட்டதை நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது//

ஹிட்லர் கூட இப்படிப்பட்ட செய்தி தானே.... இல்லீங்களா...!

இறைவனே அனைத்து உண்மைகளையும் அறிந்தவன்.இல்லீங்களா...!

//செய்தியை ட்விட்டரில் பதிந்த இந்த பெண்மணி யூதர்களால் மிரட்டப்பட்டுள்ளார்.//
இதை பதிவில் நீங்கள் போட்டு விட்டீர்கள். நீங்களும் மிரட்டப் படலாம். இல்லீங்களா...!

தருமி said...

//தாலிபான்களை ஒழிக்க இரட்டை கோபுர தாக்குதலை அவர்களே நடத்தி விட்டு பழியை முஸ்லிம்களின் மேல் போட்டதை நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது//

ஹிட்லர் கூட இப்படிப்பட்ட செய்தி தானே.... இல்லீங்களா...!

இறைவனே அனைத்து உண்மைகளையும் அறிந்தவன்.இல்லீங்களா...!

//செய்தியை ட்விட்டரில் பதிந்த இந்த பெண்மணி யூதர்களால் மிரட்டப்பட்டுள்ளார்.//
இதை பதிவில் நீங்கள் போட்டு விட்டீர்கள். நீங்களும் மிரட்டப் படலாம். இல்லீங்களா...!

suvanappiriyan said...

//இதை பதிவில் நீங்கள் போட்டு விட்டீர்கள். நீங்களும் மிரட்டப் படலாம். இல்லீங்களா...!//


யூதர்களுக்கு தமிழ் தெரிய வாய்ப்பில்லை. எனவே என்னை அவர்கள் மிரட்ட முடியாது இல்லீங்களா.....?

தருமி said...

புல்லுருவி யாராவது போட்டுக் கொடுத்தால் என்ன சாமி பண்றது? அதுவும் இந்த யூதர்கள் இருக்கிறார்களே... அம்மாடி..!

சாக்கிரதையா இருங்க, ஐயா.

suvanappiriyan said...

தருமி ஐயா!

நலமா? நாட்கள் ஓடிக் கொண்டே இருக்கிறது. கர்த்தர் இவ்வளவு அழகிய வாழ்க்கையை கொடுத்தும் வாழ்வில் பெரும் பகுதியை நாத்திகத்தில் செலவழித்து விட்டாயே என்று கேட்டால் என்ன பதிலை வைத்துள்ளீர்கள்?

உங்களின் நாத்திக பிரசாரம் எந்த அளவில் உள்ளது. ஏ ஆர் ரஹ்மான், பெரியார் தாசன், மோனிகா, யுவன் சங்கர் ராஜா என்று மூஃமின்களின் கூட்டம் தமிழகத்தில் பெருக்கெடுக்கிறதே! உங்க தலைவர்களிடம் சொல்லி பிரசாரத்தை இன்னும் அதிகமாக்க முயற்சிக்கலாமே....

அதிலும் யுவன் தனது தந்தை 'ஒரு கிளாஸ் உடைந்தாலும் ஜோஸியரை கூப்பிடும் அளவுக்கு மூடத்தனத்தில் வீழ்ந்துள்ளதாக' பேட்டி கொடுக்கும் அளவுக்கு குர்ஆன் அவரை ஆட்கொண்டுள்ளது. நிங்க என்னத்த பதிவு எழுதி என்னை எல்லாம் எப்போ நாத்திகத்தில் சேர்க்கப் போகிறீர்களோ தெரியவில்லை. :-)

Anonymous said...

முகமதை ஏற்றுக் கொள்ளாத கிருஸ்தவர்களுக்கும் நரகம்தானே ? அப்புறம் அவர் நாஸ்திகராக இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ?
உங்களது கூட்டம் என்றால் இவ்வளவு பேர்தானா ?

தருமி said...

//பெரும் பகுதியை நாத்திகத்தில் செலவழித்து விட்டாயே என்று கேட்டால் என்ன பதிலை வைத்துள்ளீர்கள்?//

அட..போங்கய்யா... எனக்கு ஒண்ணும் 72 ஹூரிஸ்கள் வேண்டாம் ... ஆளை விடுங்க.. நமக்கு தாங்காது‘ என்று சொல்லிவிடுவேன், சுவனப் பிரியனே!

suvanappiriyan said...

//அட..போங்கய்யா... எனக்கு ஒண்ணும் 72 ஹூரிஸ்கள் வேண்டாம் ... ஆளை விடுங்க.. நமக்கு தாங்காது‘ என்று சொல்லிவிடுவேன், சுவனப் பிரியனே!//

5438. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்" என்று கூறினான். எனினும், (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துள்ளது சொற்பமே! - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 51

உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது சொற்பமே.... பல தியாகங்களை இந்த உலகில் செய்தவர்களுக்கு படைத்த இறைவன் தரம் பரிசுகளை வாங்கிக் கொள்வதில் என்ன தயக்கம்?

தருமி said...

// இறைவன் தரம் பரிசுகளை வாங்கிக் கொள்வதில் என்ன தயக்கம்?//

இறைவன் தரும் பரிசுள் தரமாக
இருந்தால் வாங்கிக் கொள்வதில் தயக்கம் இல்லை. உங்கள் சாமி இப்படி தரமில்லாத //, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி // வைத்திருக்கிறாரே
... என் செய்வது!

ஆமா, சு.பி., இந்த உலகத்திலேயே தவறு என்று சொல்லப்படும் விஷயங்கள் எப்படி அங்கே கடவுளே ‘தயார் படுத்தி’
வைத்திருப்பார் என்கிறீர்கள்; எனக்கு இது ரொம்ப ‘அசிங்கமாக’
அல்லவா தோன்றுகிறது.

suvanappiriyan said...

//ஆமா, சு.பி., இந்த உலகத்திலேயே தவறு என்று சொல்லப்படும் விஷயங்கள் எப்படி அங்கே கடவுளே ‘தயார் படுத்தி’
வைத்திருப்பார் என்கிறீர்கள்; எனக்கு இது ரொம்ப ‘அசிங்கமாக’
அல்லவா தோன்றுகிறது. //

இரண்டு உலகங்களுக்கும் உள்ள வித்தியாசங்களை புரிந்து கொண்டிருந்தால் இந்த கேள்வி உங்களுக்கு வந்திருக்காது. நமது பூமியில் குடி தடுக்கப்பட்டது எதனால்? இதனைக் கொண்டு அவனது உடல் பாழாகிறது. மனைவி மக்களை அடித்து துன்புறுத்துகிறான். அக்கம் பக்கத்திலுல்லோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் சொர்க்கத்திலோ அவனது உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. சண்டை சச்சரவுகள் அங்கு கிடையாது.

அதே போல் விபசாரத்தால் எய்ட்ஸ் உயிர்க் கொல்லி நோய்கள் தொற்றுகிறது. பெண்கள் போகப் பொருளாக பார்க்கப்பட்டு அவர்களின் வாழ்வு சீரழிக்கப்படுகிறது. குடும்ப வாழ்வில் நிம்மதி போகிறது. ஆனால் சொர்க்கத்தில் நோயும் வருவதில்லை. குடும்ப சண்டைகளும் இல்லை. நமது தேவைகளை பூர்த்தி செய்ய தேவர்கள் (மலக்குகள்) கதா சர்வ நேரமும் நம்மைச் சுற்றியே சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

அது ஒரு தனி உலகம். அந்த உலகத்தையும் பூமியையும் ஒன்றாக்காதீர்கள்.

தருமி said...

கடவுளின் ”தரம்” & உங்களுடைய அருமையான “விளக்கம்” -- இரண்டுமே மிக கேவலமாக எனக்குத் தெரிகிறது.

//குடும்ப சண்டைகளும் இல்லை// அப்படியா? மனைவிகள் + 72 ஹூரிகள் கிடைக்கும் இல்லையா? அங்க போனதும் பொண்டாட்டிகள் எல்லாத்தையும் ஏத்துக்குவாங்கள் போலும்.

அட ... போங்க, சார். எப்படியெல்லாம் மதராஸா லெவல்ல இப்படி சப்பைக் கட்டு போடுறீங்க.

Anonymous said...

இஸ்லாமிய ஆன்மீகம் என்ன என்று அவர்களுடைய சொர்கத்தை பார்த்தால் தெரிந்துவிடும்.

தருமி said...

// Anonymous said...
இஸ்லாமிய ஆன்மீகம் என்ன என்று அவர்களுடைய சொர்கத்தை பார்த்தால் தெரிந்துவிடு//

இவர்கள் சொல்லும்இஸ்லாமிய ஆன்மீகம் இப்படி ... அடுத்து. மற்ற மதங்களிலிருந்து இஸ்லாமிற்கு மக்கள் வரவேண்டுமாம். ஆனால் இதற்குள் கால் வைத்துவிட்டால். வைத்த காலை எடுக்கக் கூடாதாம். அப்படி அடிமைப் படுத்தும் மதம்....

இந்த இரண்டும் போதும் இந்த மதத்தை நான் மறுக்க ....

தருமி said...

//நோயும் வருவதில்லை. குடும்ப சண்டைகளும் இல்லை//

fantastic philosophy ... saaminna ithu thaan saami. oh god!

தருமி said...

கொஞ்ச்ம் போல் சுவனத்திற்கு வரும் பெண்களுக்கு உங்கள் சாமி கொடுக்கும் “பரிசுகள்” என்னவென்று கேட்டேன். பதிலே சொல்லவில்லை; ஆனால் இரு முறை ஆண் பெண் இருவருக்கும் ஒரே மாதிரிதான் என்றீர்கள்.

அப்போ ...பெண்களுக்கு அவர்களது கணவன் + 72 ஹூரர்களா?

இப்பவும் //நோயும் வருவதில்லை. குடும்ப சண்டைகளும் இல்லை//

இல்லீங்களா...?

தருமி said...

கொஞ்ச்ம் போல் சுவனத்திற்கு வரும் பெண்களுக்கு உங்கள் சாமி கொடுக்கும் “பரிசுகள்” என்னவென்று கேட்டேன். பதிலே சொல்லவில்லை; ஆனால் இரு முறை ஆண் பெண் இருவருக்கும் ஒரே மாதிரிதான் என்றீர்கள்.

அப்போ ...பெண்களுக்கு அவர்களது கணவன் + 72 ஹூரர்களா?

இப்பவும் //நோயும் வருவதில்லை. குடும்ப சண்டைகளும் இல்லை//

இல்லீங்களா...?

தருமி said...

திருத்திக் கொள்ளவும்: //ஆனால் இரு முறை ஆண் பெண் இருவருக்கும் ஒரே மாதிரிதான் என்றீர்கள்.//
ஆனால் ஒரு முறை ஆண் பெண் இருவருக்கும் ஒரே மாதிரிதான் என்றீர்கள்.

தருமி said...

பா.ராகவன் எழுதிய மாயவலை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

மத்திய கிழக்கு ஆசிய நாட்டில் மதத்தால் ஆட்டுவிக்கப்படும் அரசியல், அதன் பயங்கர விளைவுகள் .... நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.

ஆனந்த் சாகர் said...

//உங்களின் நாத்திக பிரசாரம் எந்த அளவில் உள்ளது. ஏ ஆர் ரஹ்மான், பெரியார் தாசன், மோனிகா, யுவன் சங்கர் ராஜா என்று மூஃமின்களின் கூட்டம் தமிழகத்தில் பெருக்கெடுக்கிறதே! உங்க தலைவர்களிடம் சொல்லி பிரசாரத்தை இன்னும் அதிகமாக்க முயற்சிக்கலாமே....//

ஒரு சிலர் முஸ்லிம்களாக மாறுகின்றனர். ஆனால் பலபேர் இஸ்லாத்தைவிட்டு அனுதினமும் வெளியேறி க்கொண்டு இருக்கின்றனர், வெளியில் காட்டிக்கொள்ளாமல்.


//அதிலும் யுவன் தனது தந்தை 'ஒரு கிளாஸ் உடைந்தாலும் ஜோஸியரை கூப்பிடும் அளவுக்கு மூடத்தனத்தில் வீழ்ந்துள்ளதாக' பேட்டி கொடுக்கும் அளவுக்கு குர்ஆன் அவரை ஆட்கொண்டுள்ளது.//

இஸ்லாம் ஒரு மிக பெரிய மூடநம்பிக்கை மதம். அதில் கூறப்பட்டுள்ள அனைத்துமே பொய்கள். இதில் மற்றவர்களை மூடநம்பிக்கையாளர்கள் என்று கேலி செய்யும் கேனத்தனம் வேறு! நல்ல தமாஷ்!

//நிங்க என்னத்த பதிவு எழுதி என்னை எல்லாம் எப்போ நாத்திகத்தில் சேர்க்கப் போகிறீர்களோ தெரியவில்லை. :-) //

நீங்க என்னத்த பதிவு எழுதி எங்களை எல்லாம் இஸ்லாத்தில் சேர்க்க போகிறீர்களோ தெரியவில்லை!

ஆனந்த் சாகர் said...

//முஸ்லிம்களில் இரண்டே வகையினர்தான் உண்டு. ஒன்று காபிர்கள் மேல் ஜிகாத் போர் தொடுக்கும் நேரம் வந்துவிட்டது என்று நம்புபவர்கள். அல்கொய்தா, இஸிஸ் போன்றவர்கள் இந்த வகையினர். இன்னொன்று காபிர்கள் மேல் போர் தொடுக்கும் காலம் இன்னும் வரவில்லை என்று நம்புபவர்கள். "மோடரேட் முஸ்லிம்" என்று சொல்லி காபிர்களை ஏமாற்றிக் கொண்டு இருப்பவர்கள். இவர்கள்தான் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று அள்ளிவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். உண்மையை சொன்னால் யாருமே இஸ்லாம் பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டார்கள் என்பது இவர்களுக்கு தெரியும். அதனால்தான் எந்த பொய்யை சொல்லியாவது மதம் மாற்றி பிறகு நரக பயத்தைக் காட்டி தக்க வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். இன்று இஸிஸ் செய்வது 1400 வருடங்களாக முஸ்லிம்கள் செய்ததுதான் என்று எல்லா முஸ்லிம்களுக்கும் தெரியும். ஆனால் வெளியில் எப்படி சொல்வது ? உண்மையில் சொல்லப்போனால் இஸிஸ் சீக்கிரமாக இதை செய்து காரியத்தைக் கெடுத்துவிட்டதாக பல முஸ்லிம்கள் நினைக்கிறார்கள். அதனால் இஸிஸ் சரியான முஸ்லிம் அல்ல என்ற தோற்றத்தை உண்டு பண்ண முயற்சிக்கிறார்கள். ஆனால் எந்த முஸ்லிமும் போரில் பெண்களை பிடித்து, உறவு கொண்டு அடிமைகளாக விற்பது இஸ்லாமின்படி தவறு என்று சொல்லவில்லை. ஏனென்றால் இது குரானில் உள்ளது.//

மிக சரியாக உண்மையை கூறியுள்ளீர்கள். உங்களுக்கு எனது பாராட்டுகள்.

தருமி said...

சு.பி.,
சத்தமே காணோம்.

டெப்யூட் பண்ணியிருந்த ibnu UTHSMAN அவர்களையும் காணோம். ஓ,,ஓ..அவர் 25வரை காத்திருக்கச் சொன்னாரல்லவா!

சுவனம் பற்றிச் சொன்னால் சு.பி.க்கு பிரச்சனை தான். இல்லீங்களா..?

suvanappiriyan said...

திரு தருமி!

//சுவனம் பற்றிச் சொன்னால் சு.பி.க்கு பிரச்சனை தான். இல்லீங்களா..?//

திருப்பி ....திருப்பி ..... எத்தனை முறை சார்? ஒரு பிரச்னையும் நமக்கு இல்லை. இது பற்றி நாம் சில ஆண்டுகள் முன்பு விவாதித்திருக்கிறோம். தக்க பதிலும் கொடுத்தாகி விட்டது. இருந்தாலும். புதிதாக படிக்கும் வாசகர்களைக் கருத்தில் கொண்டு காப்பி பேஸ்ட் செய்து :-) பதில் தருகிறேன்.

ஹூருல்ஈன்களைப் பற்றி தருமிக்கு சில விளக்கங்கள்!

http://suvanappiriyan.blogspot.com/2014/08/blog-post_23.html

தருமி said...

//'இங்கிருந்த துணையை விடச் சிறந்த துணையைக் கொடு' என்று இறந்தவருக்காகப் பிரார்த்திக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர் (நூற்கள்: முஸ்லிம் 1525, அஹ்மது 25417). ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசமின்றி இந்தப் பிரார்த்தனை செய்வது நபி வழியாகும்.//

இது நல்லா இருக்கே!

//இது அல்லாஹ் மிகவும் கண்ணியமானவன் என்பதையும் நாணமுறுபவன் என்பதையும் குறிக்கின்றது. //

ஆனால் ஆண்களுக்கு இதைப் பற்றி வெளிப்படையாக பேசும் அந்த அல்லா ”மிகவும் கண்ணியமானவன் என்பதையும் நாணமுறுபவன்” இல்லையா?

//எதைக் குறித்து பெண்களே மிகவும் நாணமுறுபவர்களாகவும் கண்ணியமானவர்களாகவும் இருக்கின்றார்களோ //
ஆண்கள் அப்படி இல்லையோ??!!

//அப்புறம் என்ன சார்? சந்தேகம் தீர்ந்ததா? //

எப்படி சார் தீரும். 1400 சொச்சம் வருஷமா ஒரே பாட்டு. கேட்டா பதில் சொல்லிட்டேன் என்பீர்கள். பதிலில்லா கேள்விகள் என்று லிஸ்ட் போட்டு காட்டினால் அந்தப் பக்கமே வருவதில்லை.
இப்பதிவிலும் உள்ள முக்கிய கேள்வி: இந்த உலகத்திலேயே தவறு என்று சொல்லப்படும் விஷயங்கள் எப்படி அங்கே கடவுளே ‘தயார் படுத்தி’
வைத்திருப்பார் என்கிறீர்கள்; எனக்கு இது ரொம்ப ‘அசிங்கமாக’
அல்லவா தோன்றுகிறது.

இது வேறு.. அது வேறு ... என்று சொல்லி விட்டு பதில் சொல்லி விட்டேன் என்று போய் விடுவீர்கள். கேள்வியின் அடிப்படையைப் புரிந்து கொள்ளுங்கள்.

எந்தக் கடவுளும் இப்படிப்பட்ட பரிசுகளை ஆண்களுக்கும் பெண்களுக்கும் தருவது கேட்பதற்கே மிகக் கேவலம் என்பது தான் இக்கேள்விகளின் அடிப்படை.

suvanappiriyan said...

//எந்தக் கடவுளும் இப்படிப்பட்ட பரிசுகளை ஆண்களுக்கும் பெண்களுக்கும் தருவது கேட்பதற்கே மிகக் கேவலம் என்பது தான் இக்கேள்விகளின் அடிப்படை. //

உலகில் உள்ள எல்லோரையும் எல்லா காலத்திலும் திருப்திபடுத்தி விட முடியாது. சுதந்திரத்துக்கு முன்பு கன்யாகுமரி பக்கம் நாடார் வீட்டுப் பெண்கள் மார்பை திறந்தே வைத்திருந்தனர். 'முலை வரி' என்று அரசர்கள் காலத்தில் வரியே போடப்பட்டது. 'திரை சீலை போராட்டம்' என்று நடத்தி அதற்கும் மசியாததால் அத்தனை மக்களும் கிறித்தவ மதத்துக்கு மாறினர். இவ்வாறு ஒவ்வொரு கால கட்டத்திற்கு ஒரு வழக்கம் மனிதனுக்கு இருந்துள்ளது. கடவுளின் தந்தைக்கு 60000 ஆயிரம் மனைவி இருந்ததாக சில புராணங்கள் கூறுகின்றனது, இறைத் தூதர் ஒருவர் தனது மகளோடு புணர்ந்த கதையும் பைபிளில் உண்டு. இவற்றை எல்லாம் ஒப்பிட்டுப் பாருங்கள்.

அதிலும் ஏழைகளுக்கு உதவி பல தியாகங்களை செய்தவருக்கு அதுவும் மறுமையில் பரிசளிப்பதாக சொல்வதில் எந்த தவறும் இல்லை என்பதே என் நிலைப்பாடு.

தருமி said...

//இறைத் தூதர் ஒருவர் தனது மகளோடு புணர்ந்த கதையும் பைபிளில் உண்டு. //

ஓ! உங்களுக்கும் அதில் பங்கு உண்டு அல்லவா?

தருமி said...

//கடவுளின் தந்தைக்கு 60000 ஆயிரம் மனைவி இருந்ததாக சில புராணங்கள் கூறுகின்றனது, இறைத் தூதர் ஒருவர் தனது மகளோடு புணர்ந்த கதையும் பைபிளில் உண்டு. இவற்றை எல்லாம் ஒப்பிட்டுப் பாருங்கள். //

இதெல்லாம் ‘அசிங்கம்’ என்பதனால் தானே இதை இங்கே சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் கடவுள் தரும் பரிசுகள் இதைவிடக் கேவ்லம் என்பது தானே உண்மை.

தருமி said...

//கடவுளின் தந்தைக்கு 60000 ஆயிரம் மனைவி இருந்ததாக சில புராணங்கள் கூறுகின்றனது, இறைத் தூதர் ஒருவர் தனது மகளோடு புணர்ந்த கதையும் பைபிளில் உண்டு//

இவைகள் கேவலமாக இருப்பதால் தானே இதைச் சொல்கிறீர்கள்/ அதையே தான் நானும் சொல்கிறேன் - உங்கள் கடவுள் தரும் பரிசு இதைவிடக் கேவலமாக அல்லவா இருக்கிறதே என்கிறேன். நரனுக்கே இவ்வளவு கேவலமாக இருப்பது கடவுளுக்கு எவ்வளவு கேவலமாக இருக்க வேண்டும் என்கிறேன்.

---------------
//சொர்க்கத்தில் நோயும் வருவதில்லை. குடும்ப சண்டைகளும் இல்லை. // -- இதனால் இங்கே தவறாக இருப்பது உங்கள் சுவனத்தில் தவறில்லை என்லிறீர்கள். ஒரு சிம்பிள் லாஜிக்: திருமணம் ஆகாதவன் - குடும்பச் சண்டை வராது. நோய் வராதபடி காத்துக் கொள்கிறான் -- நோய் வராது. உங்கள் லாஜிக் படி இப்படி ஒருவன் உலகத்தில் இருக்கலாம் என்கிறீர்கள். அடப் பாவமே...!
---------------------

முன்பு நல்லடியாரிடம் ஒன்று சொன்னேன். அதை உங்களிடமும் சொல்கிறேன்: கடவுளின் இந்தப் பரிசு விவகாரத்தை இஸ்லாமில் இல்லாத ஒருவரிடம்., அதாவது ஒரு காபிரிடம் சொல்லி அவரின் reactinn என்னவென்று ஒரு முறை சோதித்துப் பாருங்களேன் -- - தைரியமிருந்தால்.

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியன்,

//அதிலும் ஏழைகளுக்கு உதவி பல தியாகங்களை செய்தவருக்கு அதுவும் மறுமையில் பரிசளிப்பதாக சொல்வதில் எந்த தவறும் இல்லை என்பதே என் நிலைப்பாடு.//

இந்த உலகத்தில் அந்த பரிசை(பெண்களை ஏற்பாடு செய்து கொடுப்பது) கொடுப்பது மட்டும் அசிங்கம், ஆனால் அதே பரிசை இஸ்லாமிய சொர்க்க உலகத்தில் கொடுப்பது மட்டும் அசிங்கம் இல்லையா? முஹம்மது சொல்லிவிட்டால் எந்த அசிங்கமும் அசிங்கம் இல்லை, எந்த அயோக்கியத்தனமும் அயோக்கியத்தனம் இல்லை என்பதுதானே உங்கள் நிலைப்பாடு! முஹம்மதுவுக்கு சொம்பு தூக்கும் உமக்கு வெட்கம் என்பதே இல்லை.

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியன்,

"ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை உருவாக்கியது யூதர்களா?"

முஹம்மது யூதர்களின் கைக்கூலி. அரபியர்களை கேவலப்படுத்த, முன்னேறாமல் தடுக்க, அழிக்க முஹம்மதுவை வைத்து யூதர்கள் உருவாக்கிய மதம் தான் இஸ்லாம் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள். சரி, எப்பொழுது இஸ்லாத்தை விட்டு வெளியேறப்போகிறீர்கள்?

Anonymous said...

ஆனந்த், மனைவியுடன் வீட்டில் புணர்வது, அசிங்கமல்ல.

அதே மனைவியுடன் தெருவில் புணர்வது, உங்களுக்கே அசிங்கமாக இருக்கும். இல்லையா? அது அயோக்கியத்தனமும் கூட.

அதேபோல்தான், உலகத்தில் அசிங்கமானவை என உம்மால் கருதப் படக்கூடியவை, சொர்க்கத்தில் அசிங்கமானவையாகக் கருதப்படக் கூடியதல்ல.

உலகம் ஏற்றுக் கொண்ட ஒருவருக்கெதிராக சொம்பு தூக்குவது, உமக்கு வெட்கமாக இல்லையா?

ஆனந்த் சாகர் said...

//அதேபோல்தான், உலகத்தில் அசிங்கமானவை என உம்மால் கருதப் படக்கூடியவை, சொர்க்கத்தில் அசிங்கமானவையாகக் கருதப்படக் கூடியதல்ல.//

முஸ்லிம்களின் சிறுபிள்ளைத்தனமாக சிந்திக்கும் திறனை பார்த்து நான் நிச்சயமாக ஆச்சரியபடுகிறேன்! அதற்கு காரணம் இஸ்லாம் எனபதில் சந்தேகமே இல்லை.

சுவனப்பிரியனின் பதிவுகளும் அவரது மற்றும் மற்ற முஸ்லிம்களின் மறுமொழிகளும் படு தமாஷாக இருக்கின்றன!

தருமி said...

எப்படி தானோ...1
மீசையில் மண் ஒட்டுவதே இல்லை!!