Followers

Wednesday, August 13, 2014

தினமலரில் யுவன் சங்கர் ராஜாவின் சமீபத்திய பேட்டி!



இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா. 100 படங்களுக்கு மேல் இசை அமைத்தவர். இசைஞானி இந்து மதத்தில் பக்தி பழம். தேவாரம், திருவாசகத்தை கரைத்து குடித்தவர். சரஸ்வதி தனக்குள் இருப்பதாக நினைப்பவர். அவரது மகன் முஸ்லிமாக மாறியது அதிர்ச்சி அலைகளை உண்டாக்கிறது. நான் ஏன் முஸ்லிமாக மாறினேன் என்பதற்கு யுவன் இப்போது விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: எனக்கு என்னோட அம்மான்னா உயிர். என்னோட கஷ்டங்களில் கூட இருந்தவங்க. தன்னந்தனி தூணாக இருந்து எங்க குடும்பத்தை காப்பாத்தினவங்க. அவங்களோட இழப்பு என்னை மாத்திடுச்சு. ஒரு வேலையாக மும்பை போய்விட்டு திரும்பியபோது அம்மா மரணப்படுக்கையில இருந்தாங்க. நானும், தங்கையும் அவர்களை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனோம். போற வழியில அம்மா என் கையை இருக்கமா பிடிச்சிருந்தாங்க. திடீர்னு கை நழுவி விழுந்தது. அம்மா எங்களை விட்டு போயிட்டாங்க. ஒரு வினாடிக்கு முன்பு அவருக்குள்ள இருந்த ஜீவன் இப்போ எங்க போச்சுன்னு எனக்குள்ள கேக்க ஆரம்பிச்சேன். அதுக்கான விடை கிடைக்கல.

அம்மாவோட பிரிவு என்னை தனிமைப்படுத்திடுச்சு. ரொம்ப கவலையில இருந்த நேரம் ஒரு முஸ்லிம் நண்பர் மெக்கா போய்விட்டு திரும்பியிருந்தார். அவர் என்னிடம் "யுவன் நீ ரொம்ப கவலையில இருக்கே, தாங்க முடியாத கவலை வரும்போது இந்த முசல்லாவில் (தொழுகைக்கு பயன்படும் தரைவிரிப்பு) கொஞ்ச நேரம் உட்காரு போதும்" என்று கொடுத்துவிட்டுச் சென்றார். எனக்கு நம்பிக்கை இல்லாம அதை மூலையில போட்டேன்.

ஒரு கட்டத்துல அம்மா கவலை ஆட்டிப்படைக்க ஆரம்பிச்சது. மன அழுத்தம் அதிகமாச்சு. அந்த முசல்லா நினைவு வந்து அதன் மீது உட்கார்ந்து "யா அல்லா... என்னோட பாவங்களை மன்னிச்சு, என்னை இந்த கவலையிலிருந்து வெளியில கொண்டு வந்து விடு"ன்னு கத்தி கதறினேன். "வா... இஸ்லாத்துக்கு வந்துவிடு"ன்னு எனக்குள்ள ஒரு உள்ளுணர்வு வந்துச்சு. அது ஒரு அற்புதமான உணர்வு. அதை வார்த்தையில் வெளிப்படுத்த முடியாது.

அன்றிலிருந்து அதாவது 2012ம் ஆண்டிலிருந்து திருக்குரான் மொழிபெயர்ப்புகளை படிக்க ஆரம்பிச்சேன். தொழுகை உள்ளிட்ட வழிபாட்டு முறைகளை கத்துக்க ஆரம்பிச்சேன். 2014 ஜனவரியில் முஸ்லிமாக மாறுவது என்று முடிவு செய்தேன். மரணத்தின் தருவாயில் எங்கம்மா "எனக்கு பிறகு நீ தனிமரமாயிடுவே இஸ்லாம்ங்ற மரத்தின் கீழ் ஒதுங்கிக்கோ"ன்னு எங்கம்மா சொன்னதாவே நான் எடுத்துக்கிட்டேன்.

நான் முஸ்லிமாக மாறியது என் அப்பாவுக்கு பிடிக்கல. என் அண்ணனும் அண்ணியும் என் பக்கம் நின்னாங்க. படங்களில் என் பெயர் யுவன் ஷங்கர் ராஜான்னு வர்றதால இன்னும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ரிக்கார்டுகளில் பெயரை மாற்றவில்லை. விரைவில் மாற்றுவேன். என்றார் யுவன்.

தினமலர்
12-08-2014

What made you convert to Islam?

My father is a staunch Hindu and is so superstitious that even if a glass breaks, he will call a pandit. Both my parents were ritualistic, but right from childhood, I used to always have a thought that beyond all this there is a supernatural power who is running the whole world. How can God be in any form? That search was always there in me. What triggered my conversion was my mom's sudden passing away. I had come to Mumbai for some work. When I returned to Chennai, my mom was coughing badly and me and my sister rushed her to the hospital. I was driving the car. We reached the hospital and I was sitting next to her holding her hand and the next second her hand fell and she had died. I was crying but wondered where her soul went within seconds as she was alive just a few seconds back. I was in search of the answers and I should say that I got a direct calling from Allah. It was a spiritual experience. My friend had just been to Mecca and he said to me, 'You seem to be really low. You have to move on.' He gave me the musalla (the prayer mat) and said, 'This one mat I used in Mecca and it has touched Mecca so if you are feeling really heavy, just sit on it.' I kept the mat in one corner of my room and forgot all about it. A few months later I was speaking to one of my cousins about my mother and I started feeling really heavy. I entered my room and coincidentally saw the mat which all this while I had missed even though it was kept in the same corner. I sat on it for the first time just started crying saying, 'Ya Allah please forgive my sins.' That was 2012. I started reading the Quran and the translations and it connected with me really fast. I started practising Islam and learnt how to pray and by January 2014, felt sure about converting. Since I am known as Yuvan Shankar Raja in films, I have still not changed my name officially in my passport and other records, but maybe later, I might do that too. My father was the last one I told in my house to. I told him, 'I have started reading the Quran and it gives me a lot of peace.' He said to me, 'Yuvan, I am not comfortable with you becoming Islamic.' My brother and his wife were very supportive. It's odd but in some way I used to get that spiritual feeling that it was my mom, who held my hand, and said, 'Yuvan, you are alone. I want you to stand here under the tree called Islam.'

http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Yuvan-Shankar-Raja-I-converted-to-Islam-in-a-way-because-of-my-mother/articleshow/40119919.cms


தினமலரில் இந்துத்வவாதிகள் பலர் தங்களின் கோபத்தை கொட்டியிருக்கிறார்கள். இப்படி ஒரு எதிர்ப்பலையை உண்டாக்கவே தினமலர் இந்த பேட்டியை பிரசுரித்துள்ளது. ஆனால் பெரும்பாலான இந்து மக்கள் 'இது அவரது சொந்த விருப்பம். இதில் நாம் தலையிட அவசியம் இல்லை' என்றே நினைக்கின்றனர்.

இத்தனை காலம் மொகலாயர்கள் வன்முறையை காட்டி இந்தியாவில் இஸ்லாத்தை வளர்த்தனர் என்று கூசாது பொய் சொல்லி வந்தனர். இது போன்ற பிரபலங்களின் மாற்றம் இந்த அவதூறுகளுக்கு ஆப்பு வைக்கிறது. தங்களின் பொய் அம்பலமாகிறதே என்ற ஆற்றாமையில் வரும் வெளிப்பாடுகளே இந்துத்துவ வாதிகள் கோபப்படுவது.

யுவன் மிக அழகாக சொல்கிறார். குர்ஆனின் வசனங்களே என்னை இந்த அளவு மாற்றியது என்று. இதுதான் உண்மையும் கூட. முகமது நபியை கொல்ல வாளோடு வந்தவர்தான் உமர். அவரது சகோதரி ஓதிய குர்ஆன் வசனம்தான் அவர் கையில் இருந்த வாளை நழுவ விட்டது. அன்றைய அரபுகள் காதுகளில் பஞ்சை வைத்துக் கொண்டு செல்வார்களாம். குர்ஆனின் வசனம் காதில் விழுந்தால் இஸ்லாத்துக்கு மாறி விடுவோமோ என்ற பயம்தான் அவர்களை பஞ்சை வைத்து அடைத்துக் கொள்ள சொன்னது.

தூதரான முஹம்மதுக்கு அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். ''எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக!'' என அவர்கள் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் 5 : 83


அவர்கள் ஆதமுடைய வழித் தோன்றல்களிலும், நூஹுடன் நாம் கப்ப­ல் ஏற்றியவர்களிலும், இப்ராஹீம், இஸ்ராயீல் ஆகியோரின் வழித் தோன்றல்களிலும் நாம் நேர்வழி காட்டித் தேர்ந்தெடுத்த நபிமார்களாவர். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தான். அவர்களிடம் அளவற்ற அருளாளனின் வசனங்கள் கூறப்பட்டால் அழுது, சிரம் தாழ்த்தி விழுவார்கள்.
அல்குர்ஆன் 19 : 58


குர்ஆனில் வரும் இந்த வசனங்கள் எந்த அளவு சத்தியமானது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு யுவனின் இந்த பேட்டி. 'குர்ஆனை ஓதியவுடன் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. கதறி அழுது இறைவனிடம் மன்னிப்பு கேட்டு சிரம் தாழ்த்தி வீழ்ந்தேன்' என்று அவரது உள்ளத்திலிருந்த வந்த அந்த வார்த்தைகளை குர்ஆனும் அப்படியே கூறுவதைக் கண்டு நாம் ஆச்சரியப்படுகிறோம்.

மேலும் இஸ்லாத்தை ஏற்றதால் இஸ்லாத்துக்கோ முஸ்லிம்களுக்கோ எந்த பெருமையும் இல்லை. மாறாக யுவன் அடிமை சங்கிலியை உடைத்தெறிந்து இறைவனைத் தவிர யாருக்கும் தலை வணங்காத ஒரு உன்னத மார்க்கத்தை பெற்றதனால் அவர் சிறப்படைகிறார். சிறந்த வாழ்க்கைத் துணையையும் பெற்று தனது தந்தையையும் குடும்பத்தினரையும் அரவணைத்து சென்று மேலும் புகழடைய நாமும் வாழ்த்துவோம்.

1 comment:

Unknown said...

Just crossed this below from my friends post. may be you anti hindus should read this.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மண்ணில் இருக்கும் சமஸ்க்ரிதம் ஆரிய மொழி.
ஆனால், 200 ஆண்டுகள் கூட ஆகாத உருது திராவிட மொழி.
சக்தியூட்டப்பட்ட அதிர்வுகளை தாங்கி நிற்கும் விக்ரகங்களை வணங்கினால் மூட நம்பிக்கை.
ஆனால், பெரியாரின் உருவத்தில் உள்ள ஒரு கல்லுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது பகுத்தறிவு.
தமிழ் கடவுள் முருகனை மறுப்பது பகுத்தறிவு.
ஆனால், அரபிக்கடவுள் அல்லாஹாவை ஏற்பது மதச்சார்பின்மை
ஏகாதசி விரதம் இருப்பது மூட நம்பிக்கை
ஆனால், ரம்ஜான் நோன்பிருப்பது மதச்சார்பின்மை
பெண்ணடிமைத்தனம் கொண்டது ஹிந்து சமயம்;
ஆனால், முக்காடு போட்டாலும் ; மூனு கல்யானம் பண்ணாலும் புனித கோட்பாடு.
இரு நூறாண்டுகளுக்கு முன்பு நுழைந்த கிறித்தவரும், அறுநூறாண்டுகளுக்கு முன்பு நுழைந்த இஸ்லாமியரும் தமிழர்கள்;
ஆனால் ஐயாயிரம் ஆண்டுகாலத்திற்கு முன்பே தொல்காப்பியமும், அகத்தியமும் எழுதியவரெல்லாம் ஆரியர்கள்.
வீட்டிலும் வெளியிலும் தமிழ் பேசும் ஹிந்துக்கள் மத வெறி மனிதர்கள்.
ஆனால், வீட்டில் உருது பேசிக்கொண்டு வெளியில் தமிழ் பேசி நடிப்பவர்கள் மத சார்பற்றவர்கள்.
ஒரு ஹிந்துத்தமிழன் சபரி மலை, காசி, திருப்திக்கு சென்றால் அது தமிழனுக்கு செய்யும் துரோகம்.
ஆனால், அதே ஹிந்துக்களின் வரிபனத்தில் முஸ்லிம்கள் விமானம் ஏறி மெக்கா சென்று வந்தால் அது புனித பயணம்.
எங்காவது ஒரு முஸ்லிம் தாக்கப்பட்டால் அது மத பயங்கரவாதம்.
ஆனால், இஸ்லாமிய தீவிரவாதிகள் ஆயிரகணக்கான அப்பாவிகளை கொன்றால் அது புனித போர்.
வீட்டில் வேட்டி கட்டி பொங்கலை கொண்டாடுபவன் மத வெறியன்.
அனால், வீட்டில் லுங்கி கட்டி ரம்ஜான் கொண்டாடுபவன் தமிழன்.
ஒரு கடவுள் கொள்கை உத்தமானது.
ஆனால், அந்தக் கொள்கையை உள்ளடக்கிய (த்வைதம்) இந்து மதம் கேவலமானது.
மெட்டி அணிவது பெண்ணடிமை.
ஆனால், பர்தா போடுவது பெண்ணுக்கு பெருமை.
ஜல்லி கட்டு விளையாட்டினால் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன.
ஆனால், பண்டிகையில் கொல்லப் படும்போது ஒட்டகங்கள் போற்றப் படுகின்றன.
ஒரு இந்து தாய்மண்ணை வணங்கினால் அவன் மத வெறியன்.
ஆனால், தமிழ் தாய் வாழ்த்துப்பாடாத ஒரு முஸ்லிம் தமிழன்.
மாரியம்மன் கோவிலில் கூழ் குடித்தால் அது மூட நம்பிக்கை.
ஆனால், ரம்ஜானுக்கு கஞ்சி குடித்தால் அது புனித மானது.
இதையெல்லாம் நான் கேட்டால் என்னை பார்பனீயத்தின் அடிமை என்பார்கள்