Followers

Saturday, June 27, 2015

"பூச்சாண்டி" யாருக்காவது காட்டியிருக்கிறீர்களா?



அக்காலத்தில் சமணர்கள், உடலில் திருநீறையும், நாமமும் இட்டுக்கொள்ளும் வைதீகர்களை "பூசிய ஆண்டிகள்" என கூறி அவர்களை கண்ணால் பார்த்தாலும் பாவம், அவர்களின் குரலை கேட்டாலும் பாவம் என்ற பொருள்படும் "கண்டு முட்டு, கேட்டு முட்டு" என்ற ஒருவகை பயம் கலந்த சொல்லாடலை உபயோகித்து வந்தனர். அந்த அளவு வைதீகத்தை போதித்தவர்களின் செயல்கள் கர்ண கொடூரமாக இருந்தது. உடலில் திருநீறு பூசிய சிவனடியார்களையும், நாமம் பூசிய வைணவ தாசர்களையும் வீதியில் கண்டால் சமணர்கள் உடனே தங்கள் வீட்டின் வாசல்கதவை பூட்டி உள்ளே ஒளிந்து கொள்வார்களாம். அவர்கள் போன பின்னே கதவை திறந்து வெளிவருவார்களாம். அந்த அளவு தெய்வங்களின் பெயரால் சமணர்கள் கொடுமையை அனுபவித்திருக்கிறார்கள்.

சமணர்கள் தங்கள் வீட்டு பெண்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்த "பூசிய ஆண்டிகளை" காட்ட வைத்து விடுவேன் என்று கூறுவார்களாம்.

பூச்சாண்டி காட்டுதல் என்ற பிரயோகம் "பூசிய ஆண்டி"களை காட்டுவதான சமணர் காலத்திய அச்சுறுத்தலின் பிற்கால திரிபாகும். அடுத்தமுறை பூச்சாண்டி காட்டாதே என்று கூறுமுன் எதிராளி ஒரு சமணரா என்று உறுதி செய்து கொள்ளவும் ! :-) எங்கள் ஊரிலும் சிறு குழந்தைகளை பயமுறுத்த 'பூச்சாண்டியிடம்' பிடித்துக் கொடுத்து விடுவேன் என்று அன்னையர்கள் தங்கள் குழந்தைகளை மிரட்டுவதை இன்றும் காணலாம்.

No comments: