Followers

Friday, June 26, 2015

பிஜேயின் புத்தகங்கள் சவுதி அரேபியாவில் இலவசமாக!





நான் ரியாத்தில் வேலை பார்க்கும் அலுவலகத்துக்கு பக்கத்தில்தான் 'சவுதி அழைப்பு வழிகாட்டுதல் மையம்' கிளை ஒன்று அமைந்துள்ளது. உலகத்தின் பல மொழிகளில் இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. அதில் பிரதானமாக நமது தமிழகத்தின் மார்க்க அறிஞர் பி.ஜெய்னுல்லாபுதீனின் பல புத்தகங்கள் ஆங்கிலம், அரபி, பிலிப்பைன், இந்தோனேஷியா, உருது, பெங்காள் போன்ற பல மொழிகளில் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டேன். தாவா சென்டர் நடத்தும் பல போட்டிகளுக்கு பிஜே அவர்களின் புத்தகத்தையே அங்குள்ள ஆலிம்கள் தேரிவு செய்துள்ளது பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. 'திருமறையின் தோற்றுவாய்' 'பித்அத் ஓர் ஆய்வு' போன்ற புத்தகங்களை நானே பல இஸ்லாம் அல்லாத நண்பர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளேன்.

அமெரிக்காவுக்கு ஆதரவாக சவுதி அரசு எடுக்கும் பல முடிவுகளை பகிரங்கமாக எதிர்த்தவர் பிஜே. அப்படியிருந்தும் அவரது ஆய்வுத் திறனை மதிப்பில் எடுத்து அவரது புத்தகங்களை இலட்சக் கணக்கில் அச்சடித்து விநியோகிக்கிறது சவுதி அரசு. இவ்வாறு பதிப்பிட்டு வெளியிடுவதற்கு ராயல்டியாக லட்சக் கணக்கில் பிஜேக்கு பணம் வர வேண்டும். ஆனால் அந்த பணத்தையும் வேண்டாம் என்று மறுத்து விட்டார் பிஜே. இது சவுதி ஆலிம்களை பிஜேயை பற்றிய மதிப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. மதினா பல்கலைக் கழகத்தில் பிஜேயின் புத்தகங்களை மாணவர்கள் ஆய்வு படிப்புகளுக்கு பயன்படுத்துகிறார்கள்.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு பிஜே அவர்களை கௌரவ விருந்தினராக ஹஜ் கிரியைகளுக்காக முன்பு ஒரு முறை அழைப்பு விடுத்திருந்தது சவுதி அரசு. ஆனால் அந்த நேரத்தில் தமிழகத்தில் பிஜேயின் நிகழ்ச்சிகள் பல இருந்ததால் அந்த அழைப்பை பிஜே அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால் இவரின் அருமை தெரியாமல் தமிழக இஸ்லாமியர்களில் பலர் பிஜே யை வைத்து இல்லாததும் பொல்லாததும் சொல்லி தங்களை முன்னிலைப்படுத்தப் பார்க்கிறார்கள். ஷைபுதீன் ரஷாதி, ஜமாலி, போன்றவர்கள் பிஜேயை எதிர்த்தே பிரபலமானவர்கள் :-) இங்கு பிஜேயை வைத்து பிரபலமடையலாம். நாளை மறுமையில் எல்லா உண்மைகளையும் தெரிந்து கொண்டே மக்களை வழி கெடுத்தாயே என்று ஷைபுதீன் ரஷாதியையும், ஜமாலியையும் இறைவன் உலுக்கி கேட்கும் பொது என்ன பதிலை வைத்துள்ளார்கள்?

இறைவன் நம் அனைவரையும் நேர் வழியில் செலுத்துவானாக!

No comments: