Followers

Monday, June 01, 2015

மேலப் பாளையத்தில் வரலாற்று சிறப்புடைய ஒரு மாநாடு!







நேற்று மேலப் பாளையத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவின் வரலாற்று சிறப்பு மிக்க மாநாட்டையே நாம் பார்கிறோம்.

இதே மேலப் பாளைத்தில் 20 வருடங்களுக்கு முன்பு ஏகத்துவத்தை சொன்ன காரணத்திற்காக சமாதி வழிபாட்டாளர்களாலும், புரோகிதர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப் படை பிஜே அவர்களை அரிவாளைக் கொண்டு வெட்டியது. ஏகத்துவத்தை இந்த கொலையின் மூலம் ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்பது எதிரிகளின் திட்டம். அப்போது அந்த கூட்டத்தில் 50 பேர் கூட இருந்திருக்கவில்லை. இறைவன் கிருபையால் அன்று பிஜே அந்த கொலை முயற்சியிலிருந்து தப்பி விட்டார்.

ஆனால் அதே இடத்தில் நேற்று ஏகத்துவத்துக்கு மக்கள் கொடுத்த ஆதரவை பார்க்கிறீர்கள். இந்த கூட்டம் பிரியாணி பொட்டலத்துக்கு ஆசைப் பட்டு வந்த கூட்டமல்ல. ஏகத்துவத்தை தமிழகம் தாண்டி அகில உலகுக்கும் எடுத்துச் செல்வோம் என்று சூளுரைக்க வந்த கூட்டம். தங்களின் சொந்த கை காசை போட்டு வெளியூர்களில் இருந்து வந்து குழுமிய கூட்டம். இந்த கூட்டத்தை எங்களின் கிராமத்திலும் காணொளியாக காட்டப்பட்டது. காணொளியைக் காணுவதற்கும் நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் வந்திருந்தனர்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

No comments: