Followers

Sunday, June 28, 2015

தஞ்சை மாவட்டம் ஆவூரிலும் ஏகத்துவத்தின் எழுச்சி........




தஞ்சை மாவட்டம் ஆவூருக்கு சில வேலைகள் காரணமாக இரண்டு வாரங்கள் முன்பு சென்றிருந்தேன். வேலைகளுக்கு நடுவே தொழுகைக்கான நேரம் வரவே பள்ளியை தேட ஆரம்பித்தேன். நான் சென்ற இடத்துக்கு அருகிலேயே 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' கண்காணிப்பில் இயங்கும் தவ்ஹீத் பள்ளியை பார்த்தேன். மாலை நேரத் தொழுகையை அங்கு நிறைவேற்றி விட்டு அங்கு வந்த இளைஞர்களிடம் பேச்சு கொடுத்தேன்.

தொழ வந்த அனைவருமே இளைஞர்கள். கல்லூரிகளில் படித்து வருபவர்கள். வயதானவர்கள் மிக சொற்பமே. இந்த சிறு வயதிலே ஆங்காங்கே தாடி அந்த இளைஞர்களின் முகத்தில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. சினிமா கூத்தாடிகளுக்கு ஒரு காலத்தில் ரசிகர் மன்றங்கள் அமைத்து வாழ்வை சீரழித்துக் கொண்டிருந்த இளைஞர் கூட்டம் நபிகள் நாயகத்தை தலைவராக ஏற்றுக் கொண்டு பய பக்தியோடு ஏக இறைவனை வணங்கிக் கொண்டிருந்தது பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

இந்த பள்ளியின் அருகில் சமாதிகள் ஏதும் கிடையாது. நபிகள் நாயகம் 1400 வருடங்களுக்கு முன்பு எவ்வாறு தொழுதார்களோ அந்த முறையில் தொழுகை நடத்தப்படும். தட்டு. தூயத்து, மாந்த்ரீகங்கள் இந்த பள்ளியில் பார்க்கப் படாது. பேய் ஓட்டுகிறேன் என்று இங்குள்ள ஆலிம் எந்த வீட்டுக்கும் வர மாட்டார். இறந்து போனவர்கள் வீட்டில் இனி விருந்துகள் எல்லாம் நடக்காது. அவ்வாறு நடத்தப்படும் விருந்துகளுக்கும் இங்குள்ள மதகுரு செல்ல மாட்டார்.

ஆவூர், கொவிந்த குடி, வலங்கைமான் போன்ற குக்கிராமங்களில் முன்பு இஸ்லாமியர்கள் இந்துக்களோடு ஒன்றர கலந்து வாழ்ந்ததால் அவர்களின் கலாசாரமும் முஸ்லிம்களிடமும் ஆங்காங்கே தென்படும். சமாதி வழிபாடு, தட்டு, தாயத்து, மூடப் பழக்கங்கள் என்று இந்துக்களுக்கு நாங்கள் சற்றும் குறைவில்லை என்று முன்பு வாழ்ந்து வந்தனர்.

கடந்த 25 ஆண்டுகால தொடர் பிரசாரத்தின் காரணமாக இன்று தவ்ஹீதின் எண்ணம் அந்த மக்களிடத்தில் துளிர் விடத் தொடங்கியுள்ளது. அதன் அச்சாரமாக ஊருக்கு மத்தியில் மிகப் பிரமாண்டமாக தவ்ஹீத் பள்ளியை சகோதரர்கள் கட்டி முடித்துள்ளார்கள். வெள்ளிக் கிழமைகளில் மூன்று தளங்களும் நிரம்பி வழிகின்றதாம். பெண்களுக்கென்றே ஒரு தளத்தை ஒதுக்கியிருக்கிறார்கள். நான் தொழ சென்ற நேரம் மூன்று வரிசைகளில் மக்கள் நின்று தங்களின் இறை கடமையை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். பள்ளியின் உள்ளே சலவைக் கற்களால் மிக கச்சிதமாக அழகுற கட்டப்பட்டுள்ளது. பள்ளியின் வெளி வேலைகள் இன்னும் சற்று பாக்கியிருக்கிறது. இந்த ஆண்டுக்குள் அந்த பணிகளும் நிறைவேறி விடும்.

ஊரின் எதிர்ப்பு: ஊரை விட்டு விலக்கி வைப்போம் என்ற மிரட்டல்: குழப்பவாதிகள் என்ற அவச் சொல்: தாய் தந்தை மாமன் மச்சான்களிடம் கூட இதனால் குடும்பத்தில் குழப்பம். இத்தனை இன்னல்களுக்கு மத்தியில் இன்று இவ்வளவு அழகிய பள்ளியைக் கட்டி பெருந் திரளாக மக்களும் தொழ வருவதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னல்களை அனுபவித்த அந்த இளைஞர்களுக்கு இறைவன் மறுமையில் மகத்தான இடங்களை தேர்வு செய்வான். அந்த கூட்டத்தில் நம்மையும் இறைவன் இணைத்துக் கொள்வானாக!

சுன்னத் ஜமாத் பள்ளியிலிருந்து தொழுது கொண்டு வெளி வந்த ஒருவரிடம் இந்த பள்ளியைப் பற்றி பேச்சு கொடுத்தேன். அவர் கேட்டவுடன் பட படவென பொரிய ஆரம்பித்தார்......

'இந்த நஜாத் காரன்களால பெரிய தொல்லையா இருக்குது பாய். முதல்ல மூணு பேர்தான் இருந்தானுங்க. அப்புறம் 30 ஆனானுங்க.. இப்ப 300 க்கு மேல போய்ட்டானுங்க.... ஏதாவுது கேட்டா குர்ஆனை தூக்கிட்டு வரானுங்க... எங்களால ஒன்னும் பண்ண முடியல பாய்....' என்றார் வருத்தமாக. நான் என்னை வெளிக் காட்டிக் கொள்ளாமல் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். :-)

இவ்வாறு இறைவனின் மூலம் வெற்றிகள் நம்மை அடையும் போது நமது நிலை கீழ் கண்டவாறு இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,
அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது,
உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.

அல் குர்ஆன் : 110:1

No comments: