Followers

Wednesday, July 27, 2016

காஞ்சி சங்கரராமனைக் கொன்றது மாமிசம் சாப்பிட்டவரா?

காஞ்சி சங்கரராமனைக் கொன்றது மாமிசம் சாப்பிட்டவரா?

ஹானஸ்ட் மேன்!

//Islamic State Fighters சிரியன் army யை சேர்ந்த 85 பேரை கொன்று அதில் 50 பேரின் தலைகளை கொய்து Raqa city யில் காட்சிக்கு வைத்தனாராம்! எப்படி இவர்கள் இவ்வளவு ஈவு இரக்கம் இல்லாமல் செயல்படுகிறார்கள் என்றே தெரியவில்லை. தினமும் ஆடு வெட்டி வெட்டி இரத்தத்தை பார்த்து பார்த்து இரக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டதோ?//
இந்த செய்தி எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. போர்க்களத்தில் என்ன நடக்கிறது என்பதை யாராலும் ஊகிக்க முடியாது. உண்மை பின்னரே தெரிய வரும்.

மற்றபடி ஆட்டை அறுத்து சாப்பிடுபவர்கள்தான் அதிகம் கொலைகளை செய்வார்கள் என்று இல்லை. மாமிசமே சாப்பிடாத பவுத்த மதத்தை சார்ந்தவர்கள்தான் இலங்கையில் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்றனர். மாமிசம் சாப்பிடாத இந்துக்கள்தான் குஜராத்தில் கர்பிணி பெண்ணின் வயிற்றைக் கிழித்து அந்த சிசுவை வெளியில் இழுத்து தீயில் இட்டனர். அதனை கேமராவுக்கு முன்னால் சந்தோஷமாக சொல்லியும் காட்டினர். காஞ்சியில் சங்கரராமனைக் கொன்றவர்கள் சைவப்பிரியர்களே!

//கேட்கிறவன் முட்டாளாக இருந்தால் கேப்பையில் நெய் வடிகிறது என்று சொல்வார்களாம். பேசாமல் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விஞ்ஞான பாடங்களை எடுத்துவிட்டு இந்த குரானை பாடமாக வைத்து விடலாம் போல இருக்கிறதே!//

குர்ஆன் பல விஷயங்களை பேசுகிறது. வரலாறு, அறிவியல் என்று பல துறைகளை தொடுகிறது. இதில் ஏதாவது ஒரு வசனம் இன்றைய அறிவியலுக்கு முரண்படுகிறது என்று உங்களால் காட்ட முடியுமா? குர்ஆனே சவால் விடுகிறது.

'நமது அடியாரான முகம்மதுக்கு நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு அதில் நீங்கள் உண்மையாளராகவும் இருந்தால் இது போன்ற ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இறைவனைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.'
2 : 23 - குர்ஆன்

'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் அனேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.'
4 : 82 - குர்ஆன்

இது போன்ற வசனங்களின் சவால்கள் இன்று வரை முறியடிக்கப் படாததால் நான் குர்ஆனை இறை வேதம் என்றே நம்புகிறேன்.இதற்கு முன் அருளிய வேதங்களையும் நம்புகிறேன். மதிக்கிறேன்.

மேலும் நம் முன்னோர்களான தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவர், சித்தர்கள், திரு மந்திரத்தை அருளியவர்கள், ரிக்,யஜீர், சாம,அதர்வண வேதத்தை அருளியவர்கள் அனைவரையும் நானும் மதிக்கிறேன். இவற்றில் ஏதாவது ஒன்று முன்பு இறைச் செய்தியாகக் கூட வந்திருக்கலாம். இது போன்ற வேதங்களில் புராணங்களில் மனிதக் கருத்துகளும் புகுந்து விட்டதால் இதற்கு முன் அருளிய வேதங்களையெல்லாம் உள்ளடக்கி உலக முடிவு நாள் வரைக்கும் வரக் கூடிய மக்களுக்கு குர்ஆனை இறைவன் வழங்கினான். எனவே தான் மற்ற வேதங்களை நான் மதிப்பதோடு பின் பற்றத் தக்கதாக குரஆனைப் பார்க்கிறேன்.

//அது சரி, மேற்கத்திய கல்வி கூடாது என்று கூறும் போகோ ஹராம் என்ற அமைப்பின் ஒரிஜினல் தலைவர் முஹம்மத் யூசுப் என்பவன் தனது followers க்கு “”"பூமி தட்டையானது”"” என்று போதித்தானாம். இது எப்படி இருக்கு?//

யாரும் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் குர்ஆன் பூமியை தட்டை என்று எங்கும் சொல்லவில்லை. இது பற்றி நான் முன்பு விளக்கியும் இருக்கிறேன்.

//Secularism என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர்கள் இந்துக்கள்தான். அதனால்தான் கோவா மாநிலத்தில் இன்றைக்கு டெபுடி முதல்வராக இருப்பவர் Francis D ‘souza என்ற கிறிஸ்தவர் ஆவார்.//

அதனால்தான் 'இந்தியாவை சேர்ந்த அனைவரும் இந்துக்களே' என்று கூறி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார். இப்படி சொல்பவர்களைத்தானே பதவியிலும் அமர்த்துவீர்கள்.

//அது மட்டுமா? முஸ்லிம் வர்த்தகர்களும் முஸ்லிம் வந்தேறிகளும் (=immigrants ) தொழுவதற்காக ஒரு இந்து அரசனால் கேரளாவில் கட்டப்பட்டதுதான் “சேரமான் மசூதி” இது மெக்காவிற்கு அடுத்த 2 வது மிகப் பழமையான மசூதி ஆகும்.//

இந்தியாவின் வந்தேறிகள் யார் என்பது 90 சதமான இந்தியர்களுக்குத் தெரியும். கி.வீரமணியிடம் கேட்டால் ஆதாரங்களோடு பட்டியலிடுவார். அடுத்து கேரளாவில் இருக்கும் சேரமான் பள்ளி என்பது முகமது நபி காலத்திலேயே அவரை சென்று சந்தித்து தனது பெயரை தாஜூதீன் என்று மாற்றிக் கொண்ட சேரமான் பெருமாளின் வாரிசுகள் கட்டிய பள்ளி அது. இது பற்றியும் முன்பு நான் விளக்கியுள்ளேன்.

24 comments:

Dr.Anburaj said...


சைவ உணவு சத்துவ குணத்தை வளா்க்கும் என்பதுதான் முடிவான உண்மை.உடல்

ஆரோக்கியத்திற்கும் பொிதும் உகந்தது. அனைவருக்கும் சைவ உணவு பாிந்துரைக்கப்படவில்லை. ராணுவத்தில் பணியாற்றுபவா்களுக்கு சைவ உணவு சாியபட்டு வருமா ? சிட்டுக்குருவி

சைவம்தான். அதற்காக அதற்கு போா்குணம் கிடையாது என்பது உண்மை அல்ல.மான் குத்தி

புலி இறந்துள்ளது.

கிறிஸ்தவா்களின் பழைய ஏற்பாடு வேதத்தில் ஒரு சம்பவம் உள்ளது. இடம் சாியாக நினைவில் இல்லை.
ஒரு ராஜா தனது நாட்டை சிறப்பாக ஆட்சி செய்ய வேண்டும் என்று அழகு வீரம் அறிவு நிறைந்த இளைஞா்கள் ஏராளமான அளவில் தோ்வு செய்து அவர்களுக்கு ஆட்சி செய்வதில் பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்தாா்.அவர்களுக்கு மன்னா் உண்ணும் உணவு அளிக்கப்பட்டு வந்தது. அசாியா என்ற இளைஞனை சோ்த்து 4 போ்கள் சமையல்காரரை அணுகி தங்களுக்கு சைவ உணவு தர வேண்டும் என்று கோாிக்கை வைத்தாா்கள். சைவ உணவு உண்டால் தாங்கள் உடல் மெலிந்து விடுவீா்கள் என்றும் அதனால் மன்னா் கண்டுபிடித்து தனக்கு கடுமையான தண்டனை தந்து விடுவாா் என்று கூறி சமையல் காரன் மறுத்து விட்டாா்.இருப்பினும் அவனை சமா்த்தியமாக பேசி சைவ உணவு அளிக்க சம்மதிக்க வைத்து விடுவாா்கள். சைவஉணவு உண்ட அசாியா மற்றும் 3 போ்கள் அசைவ உணவு உண்டவா்களை விட உடல் வனப்பு முகத்தில் தேஜஸ் புாிப்பு கொண்டு மிகவும் ஜொலிப்புடன் விளங்கினாா்கள். சிறிது நாட்களில் மன்னனின் உத்தரவிற்கு மாறாக 4 போ்களுக்கு மட்டும் சைவ உணவு வழங்குவது மன்னருக்கு தொிந்தது. மன்னாின் கோபத்தை அசாியா போக்கி சைவ உணவு சிறந்தது என்பதை உலகிற்கு எடுத்து காட்டீனாா்கள்.சைவ உணவு சிறந்தது என்பதை 2000 ஆண்டுகளுக்கு முன்னா் நடந்த சொந்த அனுபவ பாடமாக உ்ளள வரலாறு எடுத்து காட்டுகின்றது.
நான் இறைச்சி உண்பதில்லை.

ஆனால் மீன் புதன் கிழமை மட்டும் மதியம் ஒரு வேளை சாப்பிட்டு வருகின்றேன். எனது மனைவி சைவ சாப்பாடு சமைப்பதில் திறமை பெற்றவதாில்லை. மேலும் மனைவிக்கு முழு சைவமாக மாற விருப்பம் இல்லை.

Dr.Anburaj said...

குர்ஆன் பல விஷயங்களை பேசுகிறது. வரலாறு, அறிவியல் என்று பல துறைகளை தொடுகிறது. இதில் ஏதாவது ஒரு வசனம் இன்றைய அறிவியலுக்கு முரண்படுகிறது என்று உங்களால் காட்ட முடியுமா? குர்ஆனே சவால் விடுகிறது.
-------------------------------------------------------------------------------
ஹோமோசெப்பியன்ஸ் என்று அறிவியலால் அழைக்கப்படும் மனித இனம் தோன்றிய காலம் சுமார் 2,00,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் தோன்றியதாக கருதப்படுகிறது. படிப்படியாக பரிணாமத்தினால் வளர்ந்து வேட்டையாடி உண்டு, விவசாயம் செய்து, வியாபரம் கற்று, மொழிகளை உண்டாக்கி, இலக்கியம் படைத்து பெரும் தூரம் மனிதன் கடந்துவந்த பின்,. கி.பி 7 ஆம் நூற்றாண்டில்தான் குரான் எழுதப்பட்டது.

கி.பி 7 ஆம் நூற்றாண்டுக்கு முன் அறிவியல் எப்படி இருந்தது என்பதை நாம் அறிய வேண்டும். கி.முக்களிலேயே பாபிலோனியர்கள் கணிதத்தில் சிறந்து விளங்கியுள்ளார்கள். கி.மு. 3100 களில் எகிப்தின் தலைநகராக இருந்த மெம்பிசு பற்றி படித்து பாருங்கள். வகைவகையாய் பிரமீடுகளை கணக்கிட்டு மனிதன் உருவாக்கிய காலம் எதுவென பாருங்கள். மனித உடல்களை காலகாலத்திற்கும் பதப்படுத்தி வைக்கும் முறையான அறிவியலை மனிதன் கண்டுபிடித்த காலத்தினை பாருங்கள்.

கி.பி 7 ஆம் நூற்றாண்டில் ஏறத்தாள உலகில் உள்ள அனைத்து மதங்களுக்கும் பிறகு தோன்றய இசுலாம். எல்லா மதங்களின் நற்கூறுகளையும் எடுத்துக் கொண்டதுடன், ஆங்காங்கு கிடைத்த அறிவியல் சிந்தனைகளையும் எடுத்துக் கொண்டுள்ளதை காண முடியும். குரானில் உள்ள வசனங்களை மாற்ற முடியாது என்பதால், அதற்கான பொருளினை மாற்றும் செயலில் ஈடுபட்டு மூக்குடைந்த வரலாறுகளை ஒவ்வொன்றாக காண்போம்.

Dr.Anburaj said...

தீப்பிழம்பிலிருந்து ஜின்களை படைத்தோம் என்றது.

தோழர்களே,

குரஆனில் களிமண்ணால் பறவை செய்து அதற்கு உயிர் தந்ததாக கூறிய பொய்யினையும், களிமண்ணால் மனிதனை படைத்ததாக கூறிய பொய்யினையும் கண்டோம். சிந்தனை மிகுந்தவர்களால் ஏற்க முடியாத ஏகப்பட்டவைகள் குரானில் உள்ளன. களிமண்ணால் உயிர்களை படைத்தல் எத்தனை கேலிக்குறியதோ அதைவிட கேலிக்குறியதான ஒன்றினை நாம் பார்க்க இருக்கிறோம்.

நெருப்பின் தன்மை என்ன?. பொருள்களை எரித்து ஒளி கொடுப்பது. நீங்கள் மெழுகுவர்த்தினை எடுத்துக் கொண்டு பாருங்கள். அதில் ஒளிரும் சுடரில் உங்களால் பொருள்களை எரிக்க முடியும். காகிதத்தினை எடுத்து சுடரில் வைத்தால் காகிதம் எரி்ந்து போகும். பெரும் நெருப்பினை விறகுகளை கொண்டு உண்டாக்கி அதில் பெரும் பொருள்களை நம்மால் எரிவிக்க இயலும். இது குழந்தைகளுக்கு கூட தெரிந்த உண்மையாகும். ஆனால் எல்லாம் தெரிந்த அல்லாஹ்விற்கு இது தெரியாமல் போய்விட்டது.

இல்லையென்றால் ஜின் எனப்படும் உயிரினத்தினை நெருப்புக் கொழுந்திலிருந்து படைத்தாக அந்த அறிவுக் கொழுந்தானது கூறியிருக்குமா?. இதில் ஏதேனும் பகுத்தறிவு உள்ளதா. நெருப்பின் பிழம்பிலிருந்து ஒரு சிறு உயினத்தினை கூட உண்டாக்க முடியாது என்ற சிற்றறிவு கூட இன்றி. எத்தனை அறிவுகெட்டவர்கள் இசுலாத்தில் உள்ளார்கள் என்று நினைத்தால் சிரிப்பாக உள்ளது. குரஆனின் அந்த வசனத்தினை கீழே காணுங்கள்.

நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்.

-திருக்குரான் 55:15.

ஜின் என்பவர்கள் வானவர்களும், மனிதர்களும் அல்லாத ஒரு உயிரினமாக திருக்குரான் கூறுகிறது. வானவர்கள் என்பவர்கள் வானத்தில் உள்ளவர்களாம். அவர்களைப் பற்றியும் நாம் பிறகு பார்ப்போம். ஜின்கள் யாரென குரானின் அல்லாஹ் கதைவிடுவதை இப்போது காணலாம்.

ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் – நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு; மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.

– திருக்குரான் 7:27.

Dr.Anburaj said...

ஜின்களை திருக்குரான் ஷைத்தான் என்றும் சொல்கிறது. இறை நம்பிக்கை உள்ளவர்களை பயமுறுத்தி வைத்திருக்க, ஷைத்தான் எனும் கதாப்பாத்திரத்தினை கதைளந்து விட்டிருக்கிறது. மனிதர்களை ஆதாமின் மக்கள் என்கிற குரான், அவர்களை கண்ணுக்கு தெரியாத ஷைத்தான்கள் கண்காணித்து கொண்டிருப்பதாகவும், இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ஷைத்தான்கள் நட்பாக இருக்கவே அல்லாஹ்வே சொல்லிவிட்டதாகவும் கூறுவதை மேலே பார்த்தோம்.

இறைநம்பி்க்கை உடையவர்களை அவர்களின் கண்களுக்கு தெரியாமலேயே கவனிக்கும் சாத்தான். இறைநம்பிக்கை இல்லாதவர்கள் கண்களுக்கு தெரிந்து எப்படி நட்பு கொள்ளுமோ எனக்கு தெரியாது. விட்டலாச்சாரியா கதை போல முகமது நபி குரானில் இந்தகதையை கூறியிருக்கிறார். ஷைத்தான்கள் பூமியில் உளாவுவதை யாரேனும் நிறுபனம் செய்திருக்கின்றார்களா. அறிவியல் ஷைத்தானை ஒப்புக் கொள்கின்றாதா. நமது அறிவானது இதையெல்லாம் ஒப்புக் கொள்ளுமா. சைத்தான் என்ற எதிர்மறை உயிரினத்தினை எதற்காக நெருப்பிலிருந்து கஸ்டப்பட்டு அல்லாஹ்வே படைத்து, தனக்குதானே சூன்யம் வைத்துக் கொள்ளவேண்டும். இப்போது ஷைத்தானிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள அறிவுரை வழங்க வேண்டும். தானே எதிரியை உருவாக்கும் அளவிற்கு மடையனா அல்லாஹ்.

நெருப்பிலிருந்து உயிரினத்தினை உண்டாக்கினார் என்று நம்பும் மடைமையை உலகத்தினர் நம்பிக் கொண்டிருந்தால் இதுவென்ன இதற்கு மேலும் பொய்யுரைப்பார்கள். சிந்திக்க தெரிந்த மனிதர்களுக்கு நெருப்பிலிருந்து உயிரினத்தினை உண்டாக்க முடியாது என்று நன்கு தெரியும். பிறகு நெருப்பிலிருந்து ஜின்களை படைத்தான் என்று கூறிய குரான் எப்படி மெய்யுரைக்கும் நூலாக இருக்க இயலும்.

பொய்யுரைக்கும் நூலான குரான் புனிதநூலாகுமா?

Dr.Anburaj said...

மனிதனை குரங்காக மாற்றினோம் என்றது

எல்லா மதங்களும் எதில் ஒத்துப்போகிறதோ இல்லையோ, மனிதனுடைய பிறப்பில் மட்டும் ஒத்துப்போகின்றன. அந்த ஒத்துப்போகுதல் தன்மையானது, இறைவனே மனிதனை படைத்தான் என்பதாகும். இறைவன் மனிதனை படைத்தான் அதனால் அவனை நீ ஐந்து முறை தினமும் வணங்கு என்று சொல்லி மனிதனுடைய நேரத்தினை, செயல்திறனை ஆக்கப்பூர்வமாக அவன் வாழ வழிவகை செய்யாமல் வீணடிக்கும் போக்கு பரவலாக உள்ளது.

மனிதனை களிமண்ணை கொண்டு செய்ததாக குரானின் வசனத்தினை பார்த்தோம், பறவையை களிமண்ணால் செய்து உயிர் தந்தாக பொய்யுரைத்தமையையும் கண்டோம். அடுத்தாக ஜின் என்னும் சாத்தான்களை நெருப்பிலிருந்து படைத்ததாக கூறிய வசனத்தில் உள்ள உண்மை நிலையை கேள்விக்கு உட்படுத்தினோம். இப்படி மனித அறிவுக்கு தெரிந்த பல்வேறு அறிவியலுக்கு எதிராகவே குரான் உள்ளது. பகுத்தறிவுக்கு எதிராக பெரிய முட்டாள்தனத்தினை உலகில் பரப்பிக் கொண்டிருக்கும் குரானின் அடுத்த பெரும் குற்றத்தினை நாம் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு டார்வின் அவர்களின் பரிணாமக் கொள்கை தெரிந்திருக்கலாம். மனிதன் குரங்கிலிருந்து பரிணாமித்தான் என்பதே அந்த கோட்பாடு. தலைமுறை தலைமுறையாக மரபணுவழி எடுத்துச் செல்லும் பொழுது காலப்போக்கில் அவ்வுயிரினத்தின் தேவை, சூழல், தன்னேர்ச்சியான நிகழ்வுகள் ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி விளக்கும் ஒன்று. உயிரினத்தின் படிப்படியான மாற்றங்கள், எதனால் எவ்வாறு மாறுபடுகின்றன என்று ஆய்ந்து அறிந்து கூறுகிறது இக்கொள்கை. மிகச் சுருக்கமாக சொன்னால் காலமாற்றத்திற்கு தக்கவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் உயிரானது வேறு ஒரு உயிராக மாற்றம் அடைவது பரிணாமம்.

அறிவியல் ரீதியாக முன்வைக்கப்படும் இந்த கொள்கைக்கு நிகராக எந்த கொள்கையும் சர்ச்சைக்குள்ளாகவில்லை. ஏனென்றால் புனித நூல்கள் எல்லாம் இறைவன் படைத்தாக கூறிய மனிதனை, குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்தே மனிதன் தோன்றினான் என்று அறிவுடையவர்கள் கூறினார்கள் என்றால், அத்தனை எளிதாக ஏற்றுக் கொள்வார்களா முட்டாள்கள். ஏற்கவில்லை, இன்று கூட இதனை ஏற்காமல் இறைவன் களிமண்ணால் செய்தான் என்று நம்பிக்கொண்டிருக்கும் மடையர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் அடைந்தான் எனும் அறிவியலை ஏற்காதவர்களை, குரான் வேறுமாதிரி குரங்குடன் சம்மந்தம் செய்கிறது. அந்த வசனத்தினை கீழே காணுங்கள்.

Dr.Anburaj said...


மனிதனை குரங்காக்கிய அல்லா - மறுபிறவி சாத்தியமா ?

உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி “சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று கூறினோம்.

– குரான் 2:65

இறைவன் மனிதர்களை குரங்குகளாக மாறிவிடுங்கள் என்றால், உடனே மனிதர்கள் குரங்குகளாக ஆகிவிடுவார்களாம். ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினமாக மாறுவதற்கான காலம் பலகோடி ஆயிரம் ஆண்டுகள், படிப்படியாக மாற்றம் அடைந்து மனிதனாக மாறிய குரங்குகளை, மீண்டும் குரங்காகவே மாற்றுதற்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகள் படிக்கும். உள்ளோடுங்கிய மனித தாடையின் எழும்புகள், மீண்டும் வெளிநீட்ட வேண்டும், ரோமங்கள் குறைந்துபோன உடல் ரோமங்களை அதிகமாக்கி கொள்ளவேண்டும். சிந்திக்கும் திறன் மெல்ல குறைந்து குரங்கின் சிந்தனைக்கு தக்கவாறு மாற வேண்டும். உடையைப் பற்றி கவலைகளை மறக்கவேண்டும். உடல் அளவிலும், உறுப்புகள் அளவிலும் நிகழும் மாற்றங்களை நொடி பொழுதில் செய்து விட இயலுமா?.

குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதை அறிவியல் சொல்கிறது. படிநிலையில் அடுத்த அடுத்த படிநிலைகளை எட்டும் வளர்ச்சியை விவரிக்கிறது. அதற்கான ஆதாரங்களையும் தருகிறது. ஆனால் குரான் பரிணாம கொள்கையில் பின்னோக்கி செல்லும் மதநூலாக உள்ளது. மனிதனை குரங்காக மாற்றியதாக கதைவிடுகிறது. அதனால்தான் அறிவுடையவர்கள் குரானின் தவறுகளை கண்டு எள்ளி நகைக்கின்றார்கள். குரான் தவறானது என்று மக்களுக்கு எடுத்துரைக்கின்றார்கள். பொய்யான தகவல்களை மனிதனுக்கு பரப்பிவிடுவதை வெறுக்கின்றார்கள்.

மனிதனை குரங்காகவும், நாயாகவும், பறவையாகவும் மாற்றும் சிறுபிள்ளை கதைகளை வளர்ந்த மனிதர்களும் நம்பிக் கொண்டுள்ளார்கள். விஞ்ஞானத்திற்கு எதிரான அஞ்ஞான கொள்கைகள் நிறைந்த குரானை நாளைய தலைமுறை நிச்சயம் புறக்கணிக்கும் என்பதி்ல் ஐயமில்லை. என் சிற்றறிவுக்கு எட்டும் குரானின் முட்டாள் தனங்கள், பரிணாமத்தினால் நாளைய பெரும் அறிவு படைத்தாக வரப்போகும் தலைமுறையின் சிறந்த நகைச்சுவை நூலக வேண்டுமானால் இருக்கலாம். மனிதனை நாயாக மாற்றிவிடுவதாக வரும் விட்டலாச்சாரிய கதைகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இருக்கும் முகமது நபியின் கதைகளை படித்து நகைபுரிவோம்.

Dr.Anburaj said...

பின் எல்லாவிதமான கனிகளிலிருந்தும் உணவருந்தி…..” குரான் 16:69

“….. இன்னும் அவன் வானத்தில் மலைகளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கிவைக்கிறான்…….” குரான் 24:43

“அது சிறப்பான விருந்தா அல்லது ஜக்கூம் என்ற மரமா?…… நிச்சயமாக அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்…..பின்னர் நிச்சயமாக அவர்களுக்கு குடிக்க கொதிக்கும் நீர் கொடுக்கப்படும்” குரான் 37:62‍,67

“சீழ் நீரைத்தவிர அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை” குரான் 69:36

“அவர்களுக்கு விஷச் செடிகளைத்தவிர வேறு உணவில்லை” குரான் 88:6



மதவாதிகள் குரானின் அறிவியல் என்றோ, வேதத்தின் அற்புதங்கள் என்றோ பேசத்தலைப்பட்டால் மற்றெல்லாவற்றையும் விட முதலில் எடுத்துக்கொள்ளும் ஒன்று தேனீ. ஆனால் அதே வசனத்திலிருக்கும் இந்த வாக்கியத்தை மட்டும் கவனமாகத் தவிர்த்துவிடுவார்கள். குரான் 16:69ல் அல்லா தேனீக்கள் கனிகளிலிருந்து உணவருந்துவதாகக் கூறுகிறார். கனிகள் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், அந்த இடத்தில் ‘தமர்’ என்றே அரபியில் குறிக்கப்பட்டிருக்கிறது. தமர் என்பது பழங்களைக் குறிக்கும் பொதுச் சொல்லல்ல. அது பேரீத்தம் பழத்தைக் குறிக்கும் தனிப்பட்ட சொல். ஆக குரான் தேனீக்கள் பேரீத்தம் பழத்தை உண்கின்றன எனும் அறிவியல்(!) உண்மையைப் போட்டுடைத்திருக்கிறது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் தேனீக்கள் பேரீத்தம் பழத்தையோ அல்லது வேறு பழங்களையோ உண்பதில்லை, பூக்களிலிருந்து சேகரிக்கும் தேனையே அவை உண்கின்றன என்பது அல்லவா உண்மை. எல்லாவற்றையும்விட மிகைத்த ஞானமுடைய அல்லா ஏன் இப்படிக் கூறிவிட்டார், அதுவும் எக்காலத்திற்கும் பொருந்தும் குரானில்.

Dr.Anburaj said...

வசனம் 24:43 மழை பொழியும் விதம் குறித்து பேசுகிறது. அதன் முழு வசனம் இப்படி இருக்கிறது, “நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து அவற்றை ஒன்றாக இணையச் செய்து அதன் பின் அதை அடர்த்தியாக்குகிறான். அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர். இன்னும் அவன் வானத்தில் மலைகளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கிவைக்கிறான். அதைத் தான் நாடியவர் மீது விழும்படி செய்கிறான்……” என்று போகிறது. இது ஆலங்கட்டி மழை பற்றிய குரானின் புல்லரிக்கவைக்கும் விளக்கம். இந்த விளக்கம் தவறானது, பொருந்தாதது என்பது அவர்களுக்கும் தெரிந்துதான் இருக்கிறது. அதனால் தான் அடைப்புக்குறிக்குள் எழுதி சமன் செய்திருக்கிறார்கள். அடைப்புக்குறியுடன் சேர்த்து இப்படி “அவன் வானத்தில் மலைக(ளைப்போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கிவைக்கிறான்” என்று சமாளித்திருக்கிறார்கள். மழைவிழுவது மேகத்திலிருந்து என்பது தெரிகிறது, ஆனால் சில நேரங்களில் பனிக்கட்டி மழையும் பொழிகிறதே எப்படி? சரிதான் வானத்தில் பனிக்கட்டி மலை ஒன்று இருக்கிறது போலும் எனும் வறண்ட சிந்தனையின் விளைவுதான் இந்த வசனம். நம்புங்கள் குரான் எல்லாம் வல்ல அல்லா இறக்கியருளியது தான்.

Dr.Anburaj said...

குரான் அறிவியல் என்ற சொற்களை நாம் கேட்டவுடன் பூமி உருண்டையா? தட்டையா? எனும் வாதம் தான் நம்முள் எழும். அந்த அளவுக்கு இஸ்லாமிய அறிஞர்கள் இதற்கு விளக்கம் விளக்கமாக தந்துகொண்டிருக்கிறார்கள். பூமி உருண்டை என்பது அண்மைக்கண்டுபிடிப்பு அதற்கு முன்னர் பூமி தட்டையானது என எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே குரான் பூமி உருண்டை எனக்கூறியிருப்பது இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன்னுள்ள ஒரு மனிதனால் இப்படி கூறியிருக்க முடியுமா? எனவே முகம்மது கூறியது இறைவனின் வாக்கைத்தான் என்பது நிரூபணமாகிறது என்பது இஸ்லாமியர்களின் வாதம். மெய்யாகவே பூமி உருண்டை வடிவம் என்பதை மனிதன் கண்டுபிடிக்கும் முன்னரே கடவுள் சொல்லிவிட்டாரா?

பூமி உருண்டை என்பதை குறிக்கும் குரானின் வசனங்கள் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவதை பார்ப்போம். வசனம் 3:27 நீதான் இரவை பகலில் புகுத்துகின்றாய், நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்…………… (22:61;31:29;35:13;57:6) இந்த வசனத்தில் பூமியின் வடிவம் குறித்து ஏதாவது சொல்லப்பட்டிருக்கின்றதா? ஒன்றுமில்லை. ஆனாலும் இதை பூமியை உருண்டை எனக்கூறுவதற்கு பயன் படுத்துகிறார்கள் எப்படி? இரவையும் பகலையும் ஒன்றின் மீது மற்றொன்றை புகுத்தும் செயல் எப்படி நிகழமுடியும்? புகுத்துதல் என்றால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடைபெற முடியும் முதலில் தலை பின் உடல் பிறகு கால் இப்படி ஒவ்வொரு பகுதியாகத்தான் புகுத்தமுடியும். இந்த புகுத்துதல் எனும் சொல்லை மிகச்சரியாக கையாண்டு தான் இறைவன் இரவை பகலிலும் பகலை இரவிலும் புகுத்துவதாக கூறுகிறான். இரவிலிருந்து பகலோ, பகலிலிருந்து இரவோ திடும் என நிகழ்ந்துவிடுவதில்லை. படிப்படியாக மெதுவாக நிகழ்கிறது. ஏன் அப்படி நிகழ்கிறது என்றால் பூமி கோள வடிவத்தில் உருண்டையாக இருப்பதால். பூமி சதுர வடிவில் இருந்தால் பகலும் இரவும் மாறுவது திடுமென்று ஒரு நொடிப்பொழுதுடையதாக இருக்கும், இதிலிருந்து பூமி உருண்டை என்பதை தான் குரான் புகுத்துதல் எனும் பதத்தின் மூலம் தெளிவு படுத்துகிறது என்று கூறுகிறார்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்னுள்ள மனிதன் மட்டுமல்ல 2800 ஆண்டுகளுக்கு முன்னுள்ள மனிதனும் கூட இப்படி கூறியிருக்க முடியும். ஏனென்றால் மனிதன் தோன்றிய காலம் முதல் இன்று வரை இரவு பகல் மாற்றம் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நிகழ்கிறது. அறிவியலின் வாசம் கூட இல்லாத இந்த ஒன்றுமற்ற வசனத்தை தான் மாபெரும் அறிவியல் கொண்டதாக புழுகுகிறார்கள். இரவையும் பகலையும் புகுத்துவதாக மட்டும் தான் குரான் கூறியிருக்கிறதா? வசனம் 7:54 பகலை இரவால் மூடுகிறான் என்றும் இரவு பகலை பிந்தொடர்கிறது என்றும் வருகிறது. வசனம் 24:44 இரவும் பகலும் மாறி மாறி வருகின்றன. வசனம் 25:62 இரவும் பகலும் அடுத்தடுத்து வருகின்றன.வசனம் 39:5 இரவின் மீது பகல் சுற்றுகிறது பகலின் மீது இரவு சுற்றுகிறது, என்றெல்லாம் இரவு பகல் மாறி மாறி வந்துகொண்டே இருப்பதை பல்வேறு வார்த்தைகளில் குரான் குறிப்பிடுகிறது. இந்த வசனங்களிலெல்லாம் அறிவியல் இருக்கிறதா? உலகில் வாழ்ந்து இரவு பகல் மாறுவதை கண்ட எவராலும் சொல்லிவிட முடிகிற இவைகளை மாபெரும் அறிவியல் உண்மை என எப்படி இவர்களால் கதைவிட முடிகிறது?

Dr.Anburaj said...

வசனம் 79:30 இதன் பின்னர் அவனே பூமியை விரித்தான். என்றொரு வசனம், இதில் விரித்தான் என்னும் சொல் இருக்கும் இடத்தில் அரபியில் தஹாஹா என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தஹாஹா எனும் சொல்லுக்கு நெருப்புக்கோழியின் முட்டை என்ற பொருளும் உண்டு. பூமியை குறிப்பதற்கு இந்தச்சொல்லை பயன்படுத்தியிருப்பதன் மூலம் பூமி உருண்டை வடிவமானது என்று குரான் தெளிவுபடுத்திவிட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் எந்த ஒரு குரான் மொழிபெயர்ப்பிலும் குறிப்பிட்ட இந்த வசனத்தை யாரும் நெருப்புக்கோழியின் முட்டை என மொழிபெயர்க்கவில்லை. விரித்தான் என்று சிலரும், பிரித்தான் என்று சிலரும் தான் மொழிபெயர்த்துள்ளனர். அப்படியிருக்க நெருப்புக்கோழியின் முட்டை என்னும் பொருள் எங்கிருந்து வந்தது? உலகில் பரவலாக உள்ள எந்த‌ மொழியிலும் ஒரு உயிரினத்தின் முட்டையை குறிப்பிடுவதற்கு தனிச்சொல் இருப்பதாக தெரியவில்லை (குட்டியை குறிப்பதற்கு தனிச்சொற்கள் உள்ளன) பெயரோடு சேர்த்துத்தான் குறிப்பார்கள், கோழி முட்டை, குயில் முட்டை என்று. அரபிலும் அதே போல் தான் முட்டை என்பதற்கு பேத் எனும் பொதுச்சொல்லும் நெருப்புக்கோழியை குறிப்பதற்கு நஆம் எனும் தனிச்சொல்லும் இருக்கின்றன. இவர்களுக்கு எங்கிருந்து தஹாஹா எனும் வார்த்தைக்கு நெருப்புக்கோழியின் முட்டை என்று பொருள் கிடைத்தது?

பூமி உருண்டை என்பதற்கு குரானில் இன்னொரு ஆதாரம் இருப்பதாக கூறுகிறார்கள். குரானில் 18 ஆவது அத்தியாயம் வசனங்கள் 84 லிருந்து 98 வரை துல்கர்னைன் என்ற ஒரு மன்னனின் பயணத்தைப்பற்றி விவரிக்கிறது. அதாவது அந்த மன்னன் ஒரு வழியில் பயணிக்கிறான், வழியில் ஒரு சமுதாய மக்களை காண்கிறான் அங்கு சூரியன் சேறு நிறைந்த நீரில் மூழ்குகிறது, தொடர்ந்து செல்கிறார் மீண்டும் சூரியன் உதிப்பதை காண்கிறார். இது தான் அந்த பதினைந்து வசனங்களின் சாரம். பூமியில் நேர்கோட்டில் பயணம் செய்தால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காண்கிறாரென்றால் பூமி உருண்டையாய் இருந்தால் மட்டுமே சாத்தியம் எனவே இந்த வசனங்கள் பூமி உருண்டை என்பதை உணர்த்தி நிற்கிறது என்கிறார்கள். பூமி உருண்டையாக இருந்தாலும் நேர் கோட்டில் பயணம் செய்யும் ஒருவரால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காணமுடியாது என்பது ஒருபுறமிருந்தாலும், அந்த மன்னர் நேர் கோட்டில் தொடர்ந்து சென்றதால் பூமி உருண்டையாயிருக்கும் பட்சத்தில் அவ்வாறு காணமுடிந்தது என்று சாதிக்கிறார்கள். ஆனால் குரானில் அவர் ஒரே திசையில் சென்றார் என கூறவில்லை என்பதே உண்மை. 18:85 ம் வசனம் அவர் ஒரு வழியில் சென்றார் என்றும் 18:89 ம் வசனம் பின்னர் ஒரு வழியில் சென்றார் எனவும் இருக்கிறது.

Dr.Anburaj said...

பூமி உருண்டை என்று குரான் கூறியிருக்கிறது என்று நிரூபிப்பதற்காக தோதுப்பட்ட வசனங்களிலெல்லாம் வலிந்து அறிவியலை ஏற்றியிருக்கிறார்கள். பூமியின் வடிவத்தைப்பற்றி நேரடியாக எதுவுமே கூறாத வசனங்களை, சாதாரண காட்சிகளை விவரிக்கும் வசனங்களை பூமி உருண்டை என ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டபின்னான் காலத்தில் நின்றுகொண்டு பூமி உருண்டையாக இருந்தால் தான் இப்படி இருக்கமுடியும் எனவே இவ்வசனங்கள் பூமி உருண்டை என கூறுவதாக டம்பமடிக்கும் இவர்கள்; பூமியின் வடிவம் பற்றி கூறும் குரான் வசனங்களுக்கு வேறு விதமாக விளக்கமளிக்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல அனேக இடங்களில் பூமியின் வடிவத்தை ஒரே மாதிரியாக வர்ணிக்கிறது குரான். 2:22; 13:3; 15:19; 20:53; 43:10; 50:7; 51:48; 55:10; 71:19; 78:6; 79:30; 84:3; 88:20; 91:6 குரானில் வரும் இந்த வசனங்களெல்லாம் ஒரே மாதிரியாக பூமியை தட்டை என பொருள் கொள்ளும்படி பூமியை விரித்திருப்பதாக கூறுகிறது. இவைகளையும் பூமி உருண்டை எனக்கூறுவதாக திரிக்கிறார்கள். விரிப்பு என்பதன் பொருளை பூமிக்கு எப்படி பொருத்துகின்றனர்? விரிப்பு என்றால் அவை சமதளத்தில் மட்டுமல்ல கோளத்தின் மீதும் பரப்பலாம் எனவே விரிப்பு என்ற உவமையின் மூலம் பூமி தட்டை என்பதை அல்ல உருண்டை என்பதையே மறைமுகமாக உணர்த்துகிறது என்று ஜல்லியடிக்கின்றனர். பூமி அதன் புவியியல் அமைப்பில் மூன்று அடுக்குகளை கொண்டிருக்கிறது அ) இன்னர் கோர் எனப்படும் உட்கரு ஆ) அவுட்டர் கோர் எனப்படும் வெளிக்கரு இ) மேண்டில் எனப்படும் மேலோடு. இதில் உட்கரு திடப்பொருளாகவும், வெளிக்கரு எரிமலைக்குளம்பாக திரவப்பொருளாகவும் இருக்கிறது. மேலோடு நாம் காணும் கடல், மலை, நிலம் என்று மேற்பரப்பாகவும் இருக்கிறது. இந்த மேலோட்டைதான் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற விரிப்பாக ஆக்கியிருப்பதாக பொருள் சொல்கிறார்கள். பூமியின் மேலோட்டை குரான் விரிப்பாக குறிப்பிடுவதாகவே கொள்வோம். எந்த வடிவத்தில் அந்த விரிப்பு விரிக்கப்பட்டிருக்கிறது? சமதளத்திலா? அல்லது உருண்டை வடிவத்திலா? என்ற கேள்விக்கு குரானில் விடை இருக்கிறதா? பூமி உருண்டையாக இருப்பதனால் அதன் மேலும் விரிப்பை பரப்ப முடியும் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. பூமி உருண்டையா தட்டையா என்று தெரியாது எனக்கொண்டால் குரானிய வசனங்களின் படி உருண்டை தான் என எப்படி உறுதிப்படுத்துவது?

Dr.Anburaj said...

பூமி உருண்டை எனும் அறிவியல் தெரியாமல் இருந்ததாகவே எடுத்துக்கொண்டு விளக்கப்பட்டவை. ஆனால் பூமி உருண்டை எனும் அறிவு பன்னெடுங்காலத்திற்கு முன்பே மக்களிடம் இருந்தது என்பது தான் மெய். கிரேக்கர்கள் சீனர்கள் இந்தியர்கள், அராபியர்கள் கடலாடிய செய்திகள் பண்டைய இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன. கடலில் செல்லும் கப்பலும், கரைக்கு திரும்பும் கப்பலும் கரையிலிருந்து பார்க்கையில் கடலுக்குள் கீழ் வளைந்து செல்வதுபோலவும், கீழ் வளைவாக மேலேறி வருவதையும் கண்டு பூமியின் வடிவம் உருண்டை என்பதை பட்டறிவாகவே விளங்கி வைத்திருந்தனர். மட்டுமன்றி அறிவியல் ரீதியாக பூமி உருண்டை என‌ முத‌லில் கூறிய‌வ‌ர் பைலோலாஸ் எனும் கிரேக்கர் ஆண்டு கிமு 450. கிமு இர‌ண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த‌ எரோட்ட‌ஸ்த‌னிஸ் எனும் கிரேக்கர் பூமியின் சுற்ற‌ள‌வை தோராய‌மாக‌ க‌ண‌க்கிட்டு 25000 மைல் என்று கூறினார். இன்றைய‌ துல்லிய‌மான‌ க‌ண‌க்கீடு 24902.4 மைல். அதே கிமு இரண்டாம் நூற்றாண்டில் ஹிப்பார்க்கஸ் என்பவர் பூமியை அட்சரேகை கடகரேகை எனும் கற்பனைக்கோடுகளால் பூமியை பிரித்தார். கிபி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த தாலமி எனும் எகிப்திய மாலுமி பூமியை வரைபடமாக வரைந்தார். இதன் பிறகு கிபி ஆறாம் நூற்றாண்டில்தான் அரேபியாவில் முகம்மது பிறக்கிறார். ஆனால் இஸ்லாமிய அறிஞர்களோ முகம்மதுவின் காலத்தில் பூமி உருண்டை எனும் அறிவு மக்களுக்கு இல்லை என்று இன்றும் வெட்கமில்லாமல் கூறித்திரிகிறார்கள்.

அறிவியலை மதவாதிகள் பயன்படுத்துவது கேட்கும் பாமரர்களை வியப்படையச்செய்வதன் மூலம் மதம் மாற்றுவதற்காகவும் ஏற்கனவே இருப்பவர்களை இன்னும் இறுக்கப்படுத்துவதற்குத்தானேயன்றி தேடலுக்காகவல்ல.

Dr.Anburaj said...

/அறிவியல் ரீதியாக பூமி உருண்டை என‌ முத‌லில் கூறிய‌வ‌ர் பைலோலாஸ் எனும் கிரேக்கர் ஆண்டு கிமு 450. கிமு இர‌ண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த‌ எரோட்ட‌ஸ்த‌னிஸ் எனும் கிரேக்கர் பூமியின் சுற்ற‌ள‌வை தோராய‌மாக‌ க‌ண‌க்கிட்டு 25000 மைல் என்று கூறினார். இன்றைய‌ துல்லிய‌மான‌ க‌ண‌க்கீடு 24902.4 மைல். அதே கிமு இரண்டாம் நூற்றாண்டில் ஹிப்பார்க்கஸ் என்பவர் பூமியை அட்சரேகை கடகரேகை எனும் கற்பனைக்கோடுகளால் பூமியை பிரித்தார். கிபி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த தாலமி எனும் எகிப்திய மாலுமி பூமியை வரைபடமாக வரைந்தார். இதன் பிறகு கிபி ஆறாம் நூற்றாண்டில்தான் அரேபியாவில் முகம்மது பிறக்கிறார். ஆனால் இஸ்லாமிய அறிஞர்களோ முகம்மதுவின் காலத்தில் பூமி உருண்டை எனும் அறிவு மக்களுக்கு இல்லை என்று இன்றும் வெட்கமில்லாமல் கூறித்திரிகிறார்கள்.//

இதுக்கு எதுக்குங்க அவுங்க வெட்கப்பட போறாங்க!
நாங்களும் மாறி மாறி கேள்வி கெட்டுகிட்டு தான் இருக்கோம், ஒருத்தரும் ஒழுங்கான பதில் சொன்னாமாதிரி தெரியல!

Dr.Anburaj said...



கேனயன் டாக்டாில் பதிவுகளுக்கு பதில் அளிக்கும்
திறானி அசிக் தங்களுக்கு உண்டா ? அளிக்கலாமே!

ASHAK SJ said...

ஹோமோசெப்பியன்ஸ் என்று அறிவியலால் அழைக்கப்படும் மனித இனம் தோன்றிய காலம் சுமார் 2,00,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் தோன்றியதாக கருதப்படுகிறது=============== கருதப்படுகிறது, இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம், ன்னு கதை விடாதே, உறுதிப்படுத்தப்பட்ட தகவலை கொண்டு விவாதி

ASHAK SJ said...

கி.மு. 3100 களில் எகிப்தின் தலைநகராக இருந்த மெம்பிசு பற்றி படித்து பாருங்கள். வகைவகையாய் பிரமீடுகளை கணக்கிட்டு மனிதன் உருவாக்கிய காலம் எதுவென பாருங்கள். மனித உடல்களை காலகாலத்திற்கும் பதப்படுத்தி வைக்கும் முறையான அறிவியலை மனிதன் கண்டுபிடித்த காலத்தினை பாருங்கள்.============அய்யா அறிவாளி, மனிதன் செய்த எதுவும் தானே செய்து விடவில்லை, முயற்சி செய்யும் பொது இறைவன் அதற்கான வழியை திறந்து விடுகிறான், மனிதனின் சக்தியால் தான் நடந்தது என்றால் இஸ்லாம் மட்டுமல்ல, நீர் உன் மதத்தையும் கேள்விக்குள்ளாக்கிறீர் என்பதை நினைவில் வைக்கவும்,

ASHAK SJ said...

கி.பி 7 ஆம் நூற்றாண்டில் ஏறத்தாள உலகில் உள்ள அனைத்து மதங்களுக்கும் பிறகு தோன்றய இசுலாம். எல்லா மதங்களின் நற்கூறுகளையும் எடுத்துக் கொண்டதுடன், ஆங்காங்கு கிடைத்த அறிவியல் சிந்தனைகளையும் எடுத்துக் கொண்டுள்ளதை காண முடியும். குரானில் உள்ள வசனங்களை மாற்ற முடியாது என்பதால், அதற்கான பொருளினை மாற்றும் செயலில் ஈடுபட்டு மூக்குடைந்த வரலாறுகளை ஒவ்வொன்றாக காண்போம்==============முதல் மனிதன் ஆதம் தொட்டு இஸ்லாம் வந்துள்ளது, 7 ம் நூற்றாண்டில் இஸ்லாம் முழுமை அடைந்தது, சமஸ்கிருதம் போல் அரபி வார்த்தைக்கும் பல அர்த்தங்கள் உள்ளது, அதனால் பல விளக்கம் கிடைக்கும், இதைப்போல் ரிக் போன்ற வேதங்களையும் அறிவியலோடு மோதி பார்க்கவும், மூக்கு அல்ல மூஞ்சியே உடையும்

ASHAK SJ said...

களிமண்ணால் உயிர்களை படைத்தல் எத்தனை கேலிக்குறியதோ அதைவிட கேலிக்குறியதான ஒன்றினை நாம் பார்க்க இருக்கிறோம்.======= இது கேள்விக்குரியது என்றால் மனிதன் எப்படி படைக்கப்பட்டான் என்று விளக்க முடியுமா? மேலும் ரிக் வேதத்தில் கீழே கிச்சி கிச்சி மூட்டக்கூடிய விதமாக மனிதன் எப்படி படைக்கப்பட்டான் என்று உள்ளது, அதனால் முதலில் உன் முதுகில் உள்ள அழுக்கை கழுவி விட்டு பிறகு மற்றவர் முதுகை பார், உன் கேவலத்தை சரி செய்து கொள்

ரிக் வேதம். பத்தாவது மண்டலத்தின் தொண்ணூறாவது பாடல்:
1. புருடன் ஆயிரம் தலைகளும், ஆயிரம் கண்களும், ஆயிரம் கால்களும் உள்ளவன், அவன் புவியின் எல்லாப் பக்கங்களிலும் பரவி அதைவிடப் பத்து விரல்கள் அளவுக்கு மிஞ்சி நிற்கிறான்.
2. புருடனே இதுவரை இருந்து வந்துள்ள இனி இருக்கப் போகும் இந்த முழுப் பிரபஞ்சமும் ஆவான். அவன் அரீயமையைத் தரும் தலைவன், அவன் சீவர்களின் உணவாக எங்கும் பரவுகிறான்.
……
4. புருடனுடைய முக்கால் பாகம் மேலே ஏறிற்று, இந்த உலகத்தில் மிகுதியாக கால் பாகம் அடிக்கடி இயங்குகின்றது. அது பல வடிவங்களில் உயிருள்ளவறிற்கும் உயிரற்ற பொருள்களுக்கும் சென்றது.
5. அவனிடமிருந்து விராஜன் பிறந்தான். விராஜனிடமிருந்து புருடன் பிறந்தான்,. அவன் பிறந்தவுடன் முன்னும் பின்னும் இருத்ததைவிடப் பூமியைப் பெரிதாக்கினான்.
6. தேவர்கள் புருடனைப் பலிப் பொருளாக்கி யக்ஞத்தை நடத்தியபோது, வசந்தம் அதற்கு நெய்யாயிற்று. கோடை அதற்கு விறகாயிற்று. சரத் காலம் அதன் அவிப் பொருளாயிற்று.
……
8. ஸர்வாத்மாவான புருடனைப் பலியிட்டு நடத்திய யக்ஞத்திலிருந்து தயிரும் நெய்யும் தோன்றின. அவை வானத்தில் சஞ்சரிக்கும் பிராணிகளையும் சாதுவான விலங்குகளையும் கொடிய வனவிலங்குகளையும் உருவாக்கின.
9. எங்கும் வியாபித்த இந்த யக்ஞத்திலிருந்து ரிக் மற்றும் சாம வேதங்கள் தோன்றின. அந்த யக்ஞசத்திலிருந்து சந்தங்கள் பிறந்தன. பின்பு யசூர் வேதம் தோன்றியது.
…….
11. தேவர்கள் புருடனைக் கூறுபோட்டபோது எத்தனை விதமாக கூறுபோட்டார்கள்? எது அவனுடைய முகமானது? எவை கைகளாகவும், தொடைகளாகவும், கால்களாகவும் ஆயின..?
12. பிராமணன் அவனது வாயானான், ராஜஸ்யன் (சத்திரியன்) அவனது கைகளானான், அவனுடைய தொடை பாகம் வைசியனாயிற்று, அவனுடைய பாதங்களிலிருந்து சூத்திரர் பிறந்தனர்.

ASHAK SJ said...

நெருப்பின் பிழம்பிலிருந்து ஒரு சிறு உயினத்தினை கூட உண்டாக்க முடியாது என்ற சிற்றறிவு கூட இன்றி. எத்தனை அறிவுகெட்டவர்கள் இசுலாத்தில் உள்ளார்கள் என்று நினைத்தால் சிரிப்பாக உள்ளது.============

அதர்வ வேதம்:

அதர்வ வேதம் வழிபாட்டு முறைகள், மந்திர உச்சரிப்புகள், தந்திர உத்திகள், கடவுள், ஆன்மா பற்றிய விளக்கங்கள், கிரக வழிபாடுகள், அதற்கான பலிகள், சடங்குகள், மற்றும் பேய், பிசாசு, நோய், நொடி, விசமிகளிளிருந்து தப்புவதற்கான வழிபாட்டு முறைகள் என்பனவற்றை விளக்குகிறது.

முதலில் நம்மால் நிரூபிக்க முடியாத விஷயத்தை இல்லை என்று சொல்ல முடியாது, பல விஷயங்கள் ஹிந்து வேதம் சொல்லும் போது அதை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் மற்றவர் சொல்லும் போது மட்டும் விமர்சிப்பது ஏன்? உதாரணமாக பிராமிணன் தலையிலும், சத்திரியன் மார்பிலும் வைசியன் தொடையிலும் சூத்திரன் பாதத்திலும் பிறந்தான் என்பதை நம்பும் நீங்கள் ஜின்னை பற்றி விமர்சனம் செய்வதேன்? மனிதன் எப்படி தலையிலும் தொடையிலும் பிறக்க முடியும் என்று ஏன் உங்கள் புகுத்தறிவு கேட்க வில்லை ?

ASHAK SJ said...

சூரியன் ஒரு படைப்புதான், அது நெருப்பால் ஆனது தான், நட்சத்திரம் கூட ஒளியினால் ஆனது தான், பிறகு எப்படி நெருப்பால் எதையும் படைக்க முடியாது என்று கூறமுடியும், ஒருவேளை நீங்கள் கேட்கலாம் அதையெல்லாம் பார்க்கிறோமே ஜின்னை ஏன் பார்க்க முடியவில்லை என்று, ஹைட்ரஜன் அறியக்கூடிய ஒரு வாயு ஆனால் அது எரியும் போது பார்க்க முடியாது, வேறு ஏதேனும் தூசு இருந்தால் மட்டுமே பார்க்க முடியும், இது போல் பல உதாரணம் உண்டு

ASHAK SJ said...

ஜின்களை திருக்குரான் ஷைத்தான் என்றும் சொல்கிறது===========நீ மூடன் என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் தேவை இல்லை, மனிதன் ஜின் மலக்கு சைத்தான் வேறு வேறு என்பது கூட தெரியாத மூடன் நீ,

ASHAK SJ said...

இறைநம்பி்க்கை உடையவர்களை அவர்களின் கண்களுக்கு தெரியாமலேயே கவனிக்கும் சாத்தான். இறைநம்பிக்கை இல்லாதவர்கள் கண்களுக்கு தெரிந்து எப்படி நட்பு கொள்ளுமோ எனக்கு தெரியாது. விட்டலாச்சாரியா கதை போல முகமது நபி குரானில் இந்தகதையை கூறியிருக்கிறார். ஷைத்தான்கள் பூமியில் உளாவுவதை யாரேனும் நிறுபனம் செய்திருக்கின்றார்களா. அறிவியல் ஷைத்தானை ஒப்புக் கொள்கின்றாதா. நமது அறிவானது இதையெல்லாம் ஒப்புக் கொள்ளுமா. சைத்தான் என்ற எதிர்மறை உயிரினத்தினை எதற்காக நெருப்பிலிருந்து கஸ்டப்பட்டு அல்லாஹ்வே படைத்து, தனக்குதானே சூன்யம் வைத்துக் கொள்ளவேண்டும். இப்போது ஷைத்தானிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள அறிவுரை வழங்க வேண்டும். தானே எதிரியை உருவாக்கும் அளவிற்கு மடையனா அல்லாஹ்.================சைத்தான் உங்கள் நாடி நரம்பில் எல்லாம் ஓடுகிறான், கோவம் ஷைத்தானின் தூண்டுதல், அதனால் தண்ணீர் குடித்து கோவத்தை அனையுங்கள் என்று நபி (ஸல்) சொல்லியுள்ளார்கள், ஆக ஷைத்தானை நாம் உணர முடியும், தவறு செய்ய தூண்டும் மனதுக்கு உதவி செய்வதே சைத்தான், அவனை எதிரியாக படைத்து நம்மை சோதித்து, வேற்று பெருவருக்கு சொர்க்கம் நரகம் தருவது தான் இறைவனின் ஏற்பாடு, இது ஹிந்து வேதங்களிலும் உண்டு, இதுவரை அறிவியல் பல விஷயங்களில் தோற்று போயுள்ளது, பல விஷயங்களை நிரூபிக்க முடியாமல் உள்ளது, பல நோய்கள் எப்படி வருகிறது என்றும் அதற்கான மருந்தையும் கண்டுபிடிக்க முடியாத ஒன்றுதான் அறிவியல், ஆகவே உன்னை போன்ற மூடன் மட்டுமே அறிவியல் என்று கூவி கொண்டிருப்பான்

ASHAK SJ said...

நெருப்பிலிருந்து ஜின்களை படைத்தான் என்று கூறிய குரான் எப்படி மெய்யுரைக்கும் நூலாக இருக்க இயலும்.======அதர்வண வேதத்தில் பேய் களை எப்படி கட்டுப்படுத்துவது என்று சொல்லப்பட்டுள்ளது , பேயை இதுவரை பார்த்ததுண்டா? இதனால் அதர்வண வேதம் தவறு என்று சொல்ல முடியுமா? 4 வர்ணத்தையும் நானே படைத்தேன் என்று சொல்லும் கிறுக்கன் கிருஷ்ணனை கடவுள் என்று சொல்ல முடியுமா?

ASHAK SJ said...

சென்கொடி யில் இருந்து இதையெல்லாம் இந்த கேனை எடுத்து போட்டு இருக்கான், சென்கொடிக்கு நல்ல பதில்கள் கொடுத்துள்ளேன், அந்த பொட்டை அதை எல்லாம் இதுவரை போடவில்லை, இழிபிறவி