Followers

Wednesday, September 20, 2017

4000 மதரஸா மாணவர்களை கொல்ல சதி!

4000 மதரஸா மாணவர்களை கொல்ல சதி!

உபி அலிகரில் உள்ளது 'மதரஸா சாச்சா நேரு'. இதனை நிர்வகித்து வருபவர் முன்னால் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் மனைவி சல்மா அன்சாரி. இந்த மதரஸாவில் மொத்தம் 4000 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவன் அப்ஸல் இரவில் தண்ணீர் குடிக்க 'வாட்டர் கூலர்' இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளான். அந்த இரவு நேரத்தில் அங்கு இரண்டு சமூக விரோதிகள் வாட்டர் டேங்கை திறந்து அதனுள் மிகப் பெரும் அளவிலான எலி மருந்தை கலந்து கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த மாணவன் வேகமாக ஓடி வார்டனிடம் புகார் செய்துள்ளான். இதனை அறிந்த அந்த இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இந்த சதியில் பிஜேபிக்கு பங்கிருப்பதாக நிறுவனர் சல்மா அன்சாரி குற்றம் சாட்டியுள்ளார். 'இந்தியாவில் சிறுபான்மையினர் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகின்றனர்' என்று ஹமீது அன்சாரி சொன்னதிலிருந்து தனது கணவர் பிஜேபியால் கட்டம் கட்டப்படுவதாக செய்தியாளர்களிடம் சல்மா கூறியுள்ளார். தண்ணீர் மாதிரி பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கூட்டம் கூட்டமாக குழந்தைகளையும் சிறுவர்களையும் கொல்ல முயற்சிப்பதைப் பார்த்தால் இதன் பின்னால் மிகப் பெரும் சதி இருப்பது தெளிவாகிறது. இறைவன்தான் இந்த காவிகளிடமிருந்து நமது தேசத்தை காக்க வேண்டும்.

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
இந்தியன் எக்ஸ்பிரஸ்
18-09-2017





















2 comments:

Dr.Anburaj said...

வேதனை தரும் செய்தி.காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காலிகளை கைது செய்து கடும் தண்டனை தர வேண்டும்.ஈரானின் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கயவனை பொது இடத்தில் வைத்து தூக்கில் போட்டுக் கொன்றிருக்கின்றாா்கள்.
-------------------------------------------------------------------------------------------
இந்த சதியில் பிஜேபிக்கு பங்கிருப்பதாக நிறுவனர்
சல்மா அன்சாரி குற்ற. புகாா் கொடுப்பவா்கள் நீதிபதியாக மாறக் கூடாது.முற்றிலும் தவறானது.ஜனாதிபதி பதவி தனது கணவனுக்கு கிடைக்கும் என்று எதிா்பாா்த்து கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த அம்மணி இப்படி அறிவுகெட்டத்தனமாக பேசுவது இவா்களுடைய உண்மையான உருவத்தை காட்டுகின்றது.துணை ஜனதிபதி பதவிக்கு அன்சாாி தகுதியற்றவா்.

Dr.Anburaj said...

பொட்டு வைத்த முகமோ ! குங்குமம் மங்கல மங்கையா் குங்குமம்

குங்குமம் அல்லது மெரூன் கலா் சாந்து பொட்டு வைத்த இந்த முகத்தில் தான் ஆபாசம் இல்லாத ஒரு அழகு மிளிா்வதைப் பாருங்கள். திருவாளா் அன்சாாி அவா்களின் மனைவியாா் ஒரு இந்து பெண் என்று கேள்விப்பட்டேன். ஆனால் அவா்கள் மதம் மாறியிருந்தாலும் நெற்றியில் குங்குமம் வைக்கும் பழக்கத்தை கைவிடவில்லையே. பணக்காாி உயா்ந்த பதிவியில் இருந்தவா் பெண்டாட்டி.எனவே அரேபிய அடிமைகள் அவரை ஒன்றும் செய்யவில்லை. ஆனாலும் அந்த பெண்ணை பாராட்டுகின்றேன். இவா் இந்த ஒரு வகையில் அரேபிய அடிமையாக வில்லை.
முஸ்லீம் பெண்களே நீங்கள் நெற்றிக்கு இட்டுக் கொள்ளுங்கள். நெற்றியில் சாந்து பொட்டு வையுங்கள்.மங்களகரமாகவும் இருக்கும் .குங்குமம் ஒரு இந்திய பண்பாட்டு அம்சம்.கத்தோலிக்க கிறிஸ்தவ பெண்கள் நெற்றியில் சாந்து பொட்டு சிவப்பு மெரூன் கலாில் வைத்துக் கொள்கினறாா்கள். அவா்களின் ஈமான் ஒன்றும் அழிந்து போகவில்லை.முஸ்லீம் பெண்கள் அரேபிய அடிமைத்தனம் காரணமாக குங்குமம் வைக்கக் கூடாது என்று போதிக்கப்பட்டுள்ளாா்கள். நெற்றியில் குங்குமம் இட்டுக் கொளளுங்கள். பலதார மணம் நிக்கா ஹலால் சிறுமிக்ளை கிழவா்கள் மணப்பது முத்தலாக் போன்ற அரேபிய காட்டுமிராண்டிப்பழக்கங்கள் உங்களை விட்டு தொலைந்து போகும்.

நெற்றியிக்கு இட்டுக் கொள்ளுங்கள். அரேபிய அடிமைத்தனத்தை உதறித்தள்ளுங்கள்.