Followers

Wednesday, September 27, 2017

மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென...

மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு

அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே -மாணிக்க வாசகர்,திருவாசகம்.


(ஆதி சிவனை தவிர்த்து மற்றும் ஒரு தெய்வம் உண்டு என்று நம்புபவர்கள் கண்டு நான் அஞ்சுகிறேன் )


ஆதி சிவன் என்று இந்துக்கள் சொல்கின்றனர். அல்லாஹ் என்று முஸ்லிம்கள் சொல்கின்றனர். மாணிக்க வாசகர் வணங்குவது ஏக இறைவனையே... அதையே தான் இஸ்லாமும் சொல்கிறது.

2 comments:

Dr.Anburaj said...

நன்றி. திருவாசக பாடலை பதிவு செய்ததற்கு.எங்களுக்கும் அது தொியும்.
பிரச்சனை என்ன என்பதை தாங்கள் புாிந்து கொள்ள வேண்டும். முஹம்மது என்ற அரேபியரை நாங்கள் வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளக் கூடிய தகுதி அவருக்கு இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அவரை பின்பற்றி அரேபியனைப் போல் வாழ்வதை நாங்கள் - இந்துக்கள் விரும்பவில்லை.

நாங்கள் இந்து சமூகத்தில் தேவையான மாற்றங்களை நாங்களே செய்து கொள்வோம். அதற்கு தேவையான கருத்துக்கள் வழிகாட்டல்கள் இந்து சமூகத்தில் உள்ளது.மாணிக்கவாசகரைப் பின்பற்றும் நாங்கள் ஏன் முஹம்மது என்ற அரேபியனை பின்பற்றி மற்ற இந்திய தலைவா்களை மறந்து புறக்கணித்து வெறுத்து அரேபிய அடிமையாக ஏன் வாழ வேண்டும்.
கலாச்சார மறுமலா்ச்சி பெற வேண்டும்.முஸ்லீம்ஆக மதம் மாறுவதை ஸ்ரீமாணிக்கவாசகா் ஏற்க வில்லை.

Dr.Anburaj said...


சில நேரங்களில் சில பொியோா்களிடம் சில குறைகள் தலை தூக்குவதுண்டு.வீர சைவம் வீர வைணவம் என்று இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் முன்பு ஒரு காலத்தில் சைவம் வைணவம் என்று படித்த பண்டித மக்கள் பிாிந்து பெரும் வன்முறைகள் ஏற்பட்டது உண்மை.
இறைவனை அடைய பலவழிகள் உண்டு என்று பெருந்தன்மையாக இருக்கும் ஒரு மனநிலை அவசியம். இந்த கண்ணேட்டத்தை இழப்பது ஆபத்து. ஸ்ரீமாணிக்க வாசகா் இந்த கண்ணேட்டத்திற்கு எதிராக செயல்பட முயன்றால் - இப்பாடல் அதற்கு துணை போகும் என்றால்

ஸ்ரீமாணிக்கவாசகாின் கருத்தை நான் ஏற்கவில்லை.

இன்று இந்துக்கள் அனைவரையும் கவா்ந்தவா் ஸ்ரீராமகிருஷ்ணரும் சுவாமிவிவேகானந்தரும் தான்.இசுலாம் கிறிஸ்தவமதம் போல் சைவ மதம் வைணவ மதம் என்ற நிறுவனத்தை ஏற்படுத்துவது நன்மை தருவதைவிட தீமைகள் அதிகம் ஏற்பட்டுள்ளது.இன்று சைவ மடங்களை மக்கள் புறக்கணித்து விட்டாா்கள். சாதி வட்டத்துக்குள் சிக்கியுள்ள இந்த மடங்கள் சைவம் என்ற தனி ஒரு மதத்தையே போதிக்கவும் இயலாமல் கைவிடவும் இயலாமல் தவித்து வருகின்றாா்கள். அதுபோலவே ஜூயா் மடங்களும் வைணவ நிறுவனம் போலவே இன்றும் சிவன் அம்மன் கோவிலுக்குச் செல்ல மாட்டாா்கள்.சைவ மடாதிபதிகள் பெருமாள் கோவிலுக்குச் செல்ல மாட்டாா்கள். இவா்களை திருத்த முயல்வது வீண் வேலை.
இன்று மக்கள் இந்துக்களாக வாழவே விரும்புகின்றாா்கள்.சைவன் ஆக வைணவன் ஆக வாழ சில பழமை வாதிகள் மட்டும் அல்லது உலகத்தை அறியாத சிறுபிள்ளைகள் மட்டும் அல்லது மடங்களின் வருமானத்தில் வயிறு வளா்ப்பவா்கள் விரும்புகின்றாா்கள். அனைவரும் இந்துக்களாகவே வாழ விரும்புகின்றாா்கள்.அந்த மாற்றம் வெகு வேகமாக நடைபெற்று வருகின்றது.அதை யாராலும் ( ஆதீனா்த்தா்களாலும் ஜீயா்களாலும் ) தடுக்க இயலாது.
ஸ்ரீராமானுஜா் தன்னை வைணவனாகக்காட்டிக் கொண்டதால் அவரது தொண்டு மற்றும் நல்ல சீா்திருத்தக் கருத்துக்கள் வெகுஜன இயக்கமாக மாறவில்லை.வைணவம் என்ற குண்டுச்சட்டிக்குள் அது ஒழித்து வைக்கப்பட்டு மறைந்து போனது.சிவனே முழு முதல் தெய்வம்.விஷ்ணு ஒரு பாிவார தேவதை என்ற சைவா்களின் போதனையை நான் ஏற்கமாட்டேன்.அதுபோல் விஷ்ணுவே மூல ஆதி தெய்வம்.சிவன் அவரது பாிவாரக தேவதை என்ற வைணவத்தின் கருத்தை நான் ஏற்கமாட்டேன்.