Followers

Tuesday, September 26, 2017

பிறர்நலம் நாடுவதே இஸ்லாம்....

பிறர்நலம் நாடுவதே இஸ்லாம்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் அம்பத்தூர் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு மாற்றுமத சகோதரர் அண்ணாமலை என்பவரின் வீடு முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது.

இதை செய்தியின் வாயிலாக அறிந்து உடனே நேரடியாக களத்திற்க்கு சென்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதோடு பிறகு பொருளாதாரம் திரட்டும் பணியில் ஈடுப்பட்டனர்.

குடும்பத்திற்கு தேவையான வீட்டு உபயோக  பொருட்கள், உணவு பொருட்கள், ரொக்கமாக ரூ.50,500/- ஆகியவை பாதிக்கப்பட மாற்றுமத சகோதரர் குடும்பத்தார் வசம் கொடுக்கப்பட்டது.

மாநில செயலாளர்கள் சகோ. இப்ராஹிம் மற்றும் சகோ. சித்திக் ஆகியோர் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி பொருட்களையும் விநியோகம் செய்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

ஆர்எஸ்எஸூம், இந்து முன்னணியும் முஸ்லிம்களின் வீடுகளை அடையாளமிட்டு சொத்துக்களை தீயிட்டு கொளுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளன.

தவ்ஹீத் ஜமாத் மற்றும் பர இஸ்லாமிய அமைப்புகள் இந்துக்களுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால் உடன் களத்தில் இறங்கி இந்துக்களின் துயரைப் போக்குகின்றன.


இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் நோக்கங்களை தற்போது புரிந்திருப்பீர்கள்.


1 comment:

Dr.Anburaj said...

இஸ்லாமிய அமைப்புகளின் நோக்கங்களை தற்போது புரிந்திருப்பீர்கள்.

அனைவருக்கும் புரிந்து விட்டது. இந்துக்களை மயக்கும் ஜிகினாதனங்களில் முஸ்லீம்கள் ஈடுபட்டு வருகின்றாா்கள்.இந்துக்கள் யாரும் ஏமாறமாட்டாா்கள். இது இந்துஸ்தான்.இந்துத்துவா ஆட்சி நடைபெறுகின்றது.கொடுக்கின்றேன் என்ற ஆணவம் இன்றி சமய உள்நோக்கம் இன்றி கொடுப்பதுதான் உதவி. தூணடில் புழு வை போன்ற உதவி ஆபத்தானது.