Followers

Tuesday, September 05, 2017

ஜெத்தா பயண அனுபவம் - ஹஜ் பெருநாள்

ஜெத்தா பயண அனுபவம் - ஹஜ் பெருநாள்

முதலில் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஐந்து நாட்கள் ஹஜ் விடுமுறையை கழிக்க ஜெத்தா சென்றதால் இந்த தாமதமான வாழ்த்து... :-)

பல ஆண்டுகள் சந்திக்காமல் இருந்த நண்பர்களை இந்த முறை ஜெத்தாவில் சந்தித்தேன். சந்தோஷமான சந்திப்புகள். பழைய கதைகளை பேசிக் கொண்டே சிரித்து வயிறு வலி வந்து விட்டது. இவ்வாறு கதை பேசிக் கொண்டு பிரியாணி, நெய் சோறு என்று ருசித்துக் கொண்டிருந்ததால் வெளியில் அதிகம் சுற்றவில்லை.

மேலும் ரியாத்திலிருந்து ஜெத்தா செல்லும் போது தாயிஃப் நகரத்தை தொட்டுதான் செல்ல வேண்டும். (நாகூர் அனீஃபா பாடிய 'தாயிப் நகரத்து வீதியிலே' என்ற பாடல் ஞாபகம் வந்திருக்கும்) நபிகள் நாயகம் இந்த நகரத்தில் மிகவும் சிரமப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. அவ்வாறு செல்லும் போது மலைகளை குடைந்து சாலைகளை அமைத்துள்ளார்கள். மிகவும் நேர்த்தியான சாலைகள். குறுகலான ரோடுகளாக இருந்தாலும் நன்கு பாதுகாப்பாக கட்டியுள்ளார்கள். அரஃபா நோன்பும் வைத்திருந்தோம். ஆனால் எந்த களைப்பும் தெரியவில்லை. வழியில் தொழுகைக்காக இரண்டு இடங்களில் நிறுத்தி தொழுகைகளை சேர்த்து தொழுது கொண்டோம்.

மலைப் பாதையை தேர்ந்தெடுப்பவர்களின் வாகனம் நல்ல கண்டிஷனோடு இருக்க வேண்டும். இன்ஜின், டயர், பெட்ரோல் அனைத்தும் சரியாக்கிக் கொண்டு மலைப் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். வழியில் பல வண்டிகள் பிரேக் டவுனாகி ஓரமாக நின்றதை பார்த்துக் கொண்டே வந்தோம். அங்கு வண்டியை சரி செய்வதும் மிகவும் சிரமம். நன்கு பழக்கமுள்ள ஓட்டுனர்கள் இருந்தாலே இந்த மலைப் பாதையை தேர்ந்தெடுங்கள்.

மலைப் பாதையின் ஊடே கேபிள் காரும் வலம் வருகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆசைக்காக சிறிது தூரம் பயணிக்கலாம். எங்களுக்கு நேரமில்லாததால் அதில் பயணிக்கவில்லை.  மேலிருந்து கீழ் நோக்கி பார்த்தால் தலை சுற்றுகிறது. அந்த அளவு உயரம். பயணத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் பாதுகாப்பாக எங்களை கொண்டு சேர்த்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.













போட்டோக்கள் இணையத்தில் எடுத்தது.....

6 comments:

Dr.Anburaj said...

ஆயுர்வேத மஹிமை



நீடித்து ஆரோக்கியத்துடன் வாழ சரகர் கூறும் ஏழு மூன்றுகள் பற்றிய அறிவுரை! – 1

உலக மக்களுக்காக கருணையுடன் படைக்கப்பட்ட நூல் சரக சம்ஹிதை.

உலகில் தோன்றியவர்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் நீடித்து வாழ அற்புதமான வழிமுறைகளை அவர் இந்த நூலில் எளிய முறையில் விளக்கியுள்ளார்.

அதில் அவர் ஏழு மூன்றுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்.

உயிர் வாழ வாழ்க்கைக்கு ஆதாரமான மூன்று விஷயங்கள்

மூன்று விதமான வலிமைகள்மூன்று விதமான காரணங்கள்

மூன்று விதமான வியாதிகள்வியாதி உருவாக மூன்று விதமான அமைப்புகள்

மூன்று விதமான வைத்தியர்கள்மூன்று விதமான சிகிச்சை முறைகள்

இவற்றை அறிந்து கொள்ளுங்கள் என்கிறார் சரகர்.

இதை அறிந்தவர் பூவுலகில் மனிதப் பிறவி எடுத்த பயனைப் பெறுவார்; அதாவது நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்வார்.

உயிர் வாழ வாழ்க்கைக்கு ஆதாரமான மூன்று விஷயங்கள் யாவை?

உணவை உட்கொள்ளுதல்தூக்கம்

பிரம்மசர்யம் அனுஷ்டித்தல்

இந்த மூன்றினால் கட்டுப்பாடான வாழ்க்கை அமைகிறது. உடல் வலிமை பெறுகிறது. வனப்பும் பொலிவும் கூடுகிறது.வளர்ச்சி ஏற்படுகிறது. முழு ஆயுள் வரை இவை நீடிக்கின்றன. ஒன்றே ஒன்று, இதையொட்டி இங்கு விவரிக்கப்படும் வியாதிக்கான காரணங்களை வரவழைக்காமல் இருக்க வேண்டும், அவ்வளவு தான்!

இந்த மூன்று ஆதாரங்கள் உப ஸ்தம்பங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

ஸ்தம்பம் என்றால் தூண்.

ஒரு வீட்டிற்கு ஆதாரமாக அமைபவை தூண்களே. அல்லது இந்தக் காலத்தில் சுவர்களே! அவற்றின் வலிமையைப் பொறுத்தே வீட்டின் ஆயுள் காலம் நிர்ணயிக்கப்படும்.

இந்த ஆதாரமான சுவர்களுக்கு அல்லது தூண்களுக்கு வலிமை ஊட்டும் வகையில் துணைத் தூண்கள் அதாவது உப ஸ்தம்பங்கள் தேவைப்படுகின்றன.

அதே போல இந்த உலகில் மனிதப் பிறவி எடுத்ததற்கான காரணத்தின் ஆதாரமாக சென்ற பிறவியில் நாம் செய்த வினைப்பயன்கள் அமைகின்றன.

பிறவி எடுத்தாகி விட்டது. இனி அதற்கு வலிமை ஊட்ட உப ஸ்தம்பங்களாக உணவு, தூக்கம், பிரம்மசர்யம் ஆகிய மூன்றும் அமைகின்றன.

உணவு என்று இங்கு குறிப்பிடப்படுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு மட்டுமே!

தூக்கமும் பிரம்மசர்யமும் கூட அளவுடன் அனுசரிக்கப்பட வேண்டும். அவை நீடித்த ஆரோக்கிய வாழ்வுக்கு உதவும்படியாக இருக்க வேண்டும்.

அடுத்தது மூன்று விதமான வலிமைகள்.

ஒன்று இயல்பாக உடலில் அமைந்த்திருக்கும் பலம்

இன்னொன்று ஒவ்வொரு மனிதனின் வயது மற்றும் பருவ காலத்தை ஒட்டி ஏற்படும் பலம்

அடுத்தது சரியான உணவுத் திட்டமுறை போன்றவற்றால் நாம் பெறும் பலம்.
இயல்பான உடல் பலம் பிறப்பால் வருவது.இது இயற்கையான தாதுக்களால் அமைவது. இயல்பாக அமைவதால் இதற்கு வேறு ஒரு அன்னியத் துணை எதுவும் தேவை இல்லை.

சிலர் பிறப்பிலேயே பலவானாக இருக்கிறார்கள். சிலர் பிறப்பிலேயே நோஞ்சானாக இருக்கிறார்கள். இது மரபணுவால் வரும் அமைப்பு.

மழைகாலம், வெயில் காலம் போன்ற பருவகால மாறுதல்கள் மற்றும் வயதால் வருவது இன்னொரு விதமான பலம்.

Dr.Anburaj said...

அடுத்து நெய் மற்றும் இதர உணவு வகைகளைச் சரியான முறையில் எடுத்துக் கொள்வது, சரியான முறையில் ஓய்வெடுப்பது, உடல்பயிற்சி போன்றவை இளமையைத் தக்க வைத்துப் பெறும் பலமாகும்.

அடுத்து வியாதிகள் உருவாவதற்கான காரணங்கள் மூன்று.

புலன்களை அதிகமாகப் பயன்படுத்துவது,புலன்களைப் பயன்படுத்தாமலேயே இருப்பது,

புலன்களைத் தவறாகப் பயன்படுத்துவது, இதையொட்டிய செய்கைகள், காலம் இவற்றால் வியாதிகள் உருவாகின்றன.

எடுத்துக்காட்டாக கண்களை எடுத்துக் கொள்வோம். பிரகாசமான ஒரு பொருளை உற்று நெடு நேரம் பார்த்தால் கண்கள் என்ன ஆகும்?

எதையும் பார்க்காமலேயே இருந்தால் கண்களின் பயன் தான் என்ன?

அதே போல தவறாகப் பயன்படுத்துவது என்பது - கண்களை ஒரு பொருளின் அருகே கொண்டு சென்று பார்ப்பது அல்லது வெகு தூரத்திலிருந்து பார்க்க முயல்வது, பயமுறுத்தும் அல்லது ஆச்சரியமூட்டும் காட்சிகளைப் பார்ப்பது போன்றவையாகும்.

இதே போல அதிக ஓசை காதுக்கு ஆகாது. கெட்ட நாற்றம், இரசாயன பொருள்களின் நாற்றம் போன்றவற்றை மூக்கினால் ஏற்படும் வியாதிகளுக்குக் காரணமாகச் சொல்லலாம்.

எதையும் அதிகப்படியாக உண்பதை நாக்கின் மூலம் ஏற்படும் வியாதிக்கான காரணமாகச் சொல்ல்லாம்.

தவறான மசாஜ், குளிர்ந்த நீரில் திடீரெனக் குளிப்பது போன்றவை வியாதிகளுக்குக் காரணமாக அமையும்.

பேச்சு, மனம், உடல் ஆகிய இவை சரியான முறைப்படி உபயோகப்படுத்தபப்ட வேண்டும்.

அதிகமான பேச்சு ஆபத்து. தீய எண்ணம் கொண்ட மனம் தீமைக்கு வித்து. நல்ல ஆரோக்கியத்திற்கு வழி வகுக்காத பழக்க வழக்கங்களைக் கொண்ட உடல், வியாதிக்கான மூல காரணமாகும்.
ஆகவே பேச்சு, மனம், உடல் ஆகிய மூன்றையும் பத்திரமாகக் கட்டுப்பாடுடன் கண்காணிக்க வேண்டும்.

மழை காலமோ அல்லது கோடை காலமோ வழக்கத்திற்கு மாறாக நீண்டிருந்தால் அதுவும் கூட அதிகப்படியாக பயன்படுத்தப்பட்டதாகும். அதே போல குறைந்திருந்தால் குறைவாகப் பயன்படுத்தப்பட்டதாகும். மழை காலமோ இதர பருவமோ வழக்கத்திற்கு மாறாக இன்னொன்றைத் தந்தால் அது தவறான பயன்படுத்தலுக்கு அடையாளமாகும்.

வியாதிகள் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன.

ஒன்று உடல் தோஷத்தால் வருவது.

Dr.Anburaj said...

அடுத்தது வலிப்பு, விஷம் முதலியவற்றை உட்கொள்வது, காற்று, தீ, விபத்து போன்றவற்றால் வருவது.

அடுத்தது மனதிற்கு ஒத்தது அல்லது மனதிற்கு ஒவ்வாதது ஆகியவற்றால் ஏற்படும் மனோவியாதி

மனோவியாதியால் அவஸ்தைப்படும் புத்திசாலியான ஒருவன் தனக்கு தீங்கு பயக்கும் விஷயம் என்ன என்பதை மீண்டும் மீண்டும் ஆலோசித்து தீங்கு பயப்பனவற்றை அகற்ற வேண்டும்.

மனோ வியாதிகளைக் குணமாக்கும் நல்லோர்களை ஒருவன் ஆதரிக்க வேண்டும்.





ஆன்மா, தேசம், காலம், வர்த்தமானம், குடும்பம், பலம், திறன் ஆகியவை பற்றிய அறிவை ஒவ்வொருவனும் பெற வேண்டும்.



இப்படி சரகர் அறிவுரை வழங்குகிறார்.


சரகர் சாமான்யனான ஒருவனை கருத்தில் கொண்டு அவனுக்கு அன்புடன் கூறிய அறிவுரையைக் கனிவான சொற்களால் வழங்குவது உள்ளத்தை நெகிழ வைக்கிறது.

சரக சம்ஹிதையின் பதினொன்றாம் சூத்திரத்தில் இடம் பெறுபவற்றையையே இங்கு இப்போது நாம் பார்க்கிறோம்.

---------------------------------------------------------------------------
4000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியன் இந்து எவ்வளவு மருத்துவ அறிவை பெற்றிருக்கின்றான் பாருங்கள்.அரேபிய காடையா்கள் நமக்கு எடுத்துக்காட்டாக இருக்க தகுதிஜ படைத்தவா்களா ?

Dr.Anburaj said...


இராவணன் நாட்டில் தாலி அணியும் பழக்கம் இருந்தது
தாலி பற்றி அடிக்கடி சர்ச்சையை உண்டாக்கும் ஒரு முட்டாள் கூட்டம் தமிழ்நாட்டில் அவ்வப்பொழுது தலைதூக்கும் என்பது கம்பனுக்கும் கூட ஞான திருஷ்டியில் தெரிந்துள்ளது. ஒரு அழகான பாடல் சுந்தர காண்டத்தில் வருகிறது:

மண்ணில் கண்ட வானவரை வலியின் கவர்ந்த வரம் பெற்ற

எண்ணற்கு அரிய ஏனையரை இகலின் பறித்த தமக்கு இயைந்த

பெண்ணிற்கு இசையும் மங்கலத்தில் பிணித்த கயிறே இடை பிழைத்த

கண்ணில் கண்டவன் பாசம் எல்லாம் இட்டுக் கட்டினார்

-பிணி வீட்டு படலம், சுந்தர காண்டம்
பொருள்:

“இராவணன் நிலவுலகில் திக்விஜயம் மேற்கொண்டபோது அங்கிருந்து கொண்டுவரப்பட்ட கயிறுகள், தேவர்களிடமிருந்து வலியப் பறித்த கயிறுகள், வரத்தின் மூலம் பெற்ற கயிறுகள், எண்ணமுடியாத அசுரர் முத்லியவர்களோடு போரிட்டுப் பெற்று வந்த கயிறுகள், இன்னும் இவ்வாறான கண்ணில் பட்ட வலிய கயிறுகளை எல்லாம் கொண்டுவந்து அனுமானைக் கட்டினார்கள். தத்தமக்கு ஏற்ற பெண்களின் கயிற்றில் அவர்கள் கட்டியிருந்த தாலிக் கயிறுகள் மட்டுமே அச்சமயத்தில் கவரப்படாமல் தப்பித் தங்கின”

இதிலிருந்து தெரிவதென்ன?

இராக்கத பெண்களுக்கும் தாலிக் கயிறுகள் உண்டு:

அது புனிதமானதால், அசுரர்களும் அதை மதித்துப் போற்றினர்.

அனுமானைக் கட்ட உலகிலுள்ள எல்லாக் கயிறுகளும் பயன்படுத்தப்பட்டன;
ஆனால் தாலிக் கயிறு பயன்படுத்தப் படவில்லை.

தமிழ்நாட்டில் சில போலி சக்திகள் அவ்வப்போது தலைவிரித்தாடி ஆடி ஓய்ந்து விடும் என்பது கம்பனுக்கும் தெரியும்.
தமிழகத்தில் சில போலித் தமிழர்கள் பிறப்பர்; அவர்களுக்குச் செமை அடி கொடுக்க வேண்டும் என்று சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் கம்பன் எழுதிய பாடல் இது.

இராக்கதர்களுக்குக் கூடத் தெரிந்த தாலியின் புனிதம், சில அந்தகர்களுக்குத் தெரியாதது வருந்தத்தக்கது.

Dr.Anburaj said...

இந்து ஆலயத்திற்கு 1905 சதுர அடி நிலம் தானம் அளித்த முஸ்லீம் அன்பா்
Muslim family donates land for expansion of Hanuman temple

September 1, 2017

At a time when cases of communal animosity are being reported from different parts of the country, a Muslim family has donated their land here for the expansion of a Hanuman temple. Javed Ansari (34) recently donated 1,905 square feet of his land towards the expansion of Imli Wale Hanuman Mandirat village Bagwaz in the district, Sub Divisional Magistrate RB Sindoskar told PTI.ஜாவித் அன்சாாி என்ற முஸ்லீம் 1905 சதுர அடி நிலத்தை இந்து ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கினாா்.

“Ansari had submitted an application to donate 1,905 square feet from his land to the committee running the management of Imli Wale Hanuman Mandir. After recording the statements of Ansari and his family members, who jointly share the ownership, the land was handed over to the committee,” he added.

This temple is located about one kilometer from the district headquarters on Gupteshwar road in village Bagwaz. This land would be used for the seating arrangements of devotees and the boundary wall. SDM said that the orders related to the land donation were issued on August 16.

The temple committee chairman Raju Vaish said that the land was donated by Javed Ansari in consultation with his brothers Parvez, Shahnaj, Shoib and Shadab. “Now, the land is under the possession of temple committee,” he added.

Meanwhile, Ansari, who donated the land, said, “I have donated this land to Hanuman Mandir to send out a message of communal harmony. I believe that such gestures will increase brotherhood between the Hindu and Muslim communities.” Isn’t it unbelievable? What are your views on the noble step taken by the Muslim family. Share your thoughts in the comments below.

indianexpress.com/article/trending/trending-in-india/muslim-family-donates-land-for-expansion-of-hanuman-temple-for-communal-harmony-4823976/
இந்துக்களை காபீா் என்று பழிக்காதவா்கள் முஸ்லீம்களை முஸ்லீம்களாக மட்டும் பாா்க்கும் இந்துக்கள் என்றும் அற்புதமான சமூக உறவு பேணப்படுகின்றது.

Dr.Anburaj said...

இசுலாம் பாகப்பிாிவனை நியாயமானதல்ல.பெண்களுக்கு சமமாக தந்தையில் சொத்துக்கள் பகிரப்பட டுனிசியாவில் சட்டம் இயற்றப்படும் என அரசு அறிவிப்பு
Women Inherit Less Under Islam. Tunisia is trying to change that

September 7, 2017

Tunis: Halima Bin Diafi says her brothers spent their summer enjoying Tunisia’s Mediterranean coast while she was stuck in the capital, trying to scrape together enough cash to feed her children.

That’s because the men got all the family money. Their father was fairly prosperous by local standards, and left land and a house worth about $200,000 when he died. But under the country’s inheritance laws, a daughter is only entitled to half of what a son receives. And many women, pressured by their families and communities, end up ceding their share entirely.

“After receiving all our father’s inheritance, my brothers only care about their own families. They travel. And they’ve forgotten they have sisters.”( இந்து குடும்பங்களில் சகோதரா்கள் பாகப்பிாிவனை செய்து கொள்வாா்கள். ஆனால் பெண்களுக்கு பாகப்பிாிவினை கிடையாது. தராளமாக வழங்கிக் கொண்டேயிருப்பாா்கள். கணவன் இறந்தாலோ கணவன் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டால் பெண்கள் தாய் அல்லது சகோதரா்கள் வீட்டில் அடைக்கலம் பெற அதுவே வசதி. பெண்களுக்கும் பாகப்பிாிவினை அளித்தால் பின்பு உறவு கெட்டுவிடும்)

at Tunisia’s 90-year-old President Beji Qaid Al Sebsi is proposing to do - and his call has found echoes across the Muslim world, stoking a wider debate about modernising Islam.Last month, Al Sebsi ordered a review of civil codes that govern inheritance, saying equality “is the foundation of justice and the basis of life in a community.” If that requires the reinterpretation of religious teachings, the president said, then so much the better: “This new direction should be welcomed and encouraged.”

Tunisia has a history of advancing women’s rights. Under Habib Bourguiba, who presided over independence from France in 1956, and his successor Zine Al Abideen Bin Ali, polygamy was banned and women were given a say in divorce proceedings.But those leaders were widely seen, by admirers as well as critics, as secular dictators—suppressing religion as they sought to create a modern society in imitation of the West.