Followers

Sunday, September 24, 2017

உயிரினம் வாழத் தகுந்த இடமாக பூமியை மாற்றியது எது?

உயிரினம் வாழத் தகுந்த இடமாக பூமியை மாற்றியது எது?

சாரங்கன்!

//பூமி நின்னுகிட்டு இருக்கு சூரியன் தான் பூமிய சுத்துதான்.. இது தான் குரான் கூறுகிறது. பிஜே வின் பித்தலாட்டங்கள் எல்லாம் அம்பலமாகிடிச்சு//


சவுதி மார்க்க அறிஞர் ஒருவர் சொன்னதாக அந்த செய்தி சொல்கிறது. அதற்கு குர்ஆனின் ஆதாரங்கள் எதனையும் அவர்கள் வைக்கவில்லை. சவுதி மன்னரே சொன்னாலும் அதற்கு குர்ஆனின் ஆதாரம் வேண்டும். இது பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்போம்.

'அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான வெளியில் நீந்துகின்றன.'
-குர்ஆன் (21:33)

பூமி மட்டுமல்ல சூரியனும் மற்ற கோள்களும் பூமியோடு சேர்ந்து சுற்றுவதாக குர்ஆன் கூறுகிறது. நீந்துகின்றன என்ற வார்த்தை பிரயோகம் மிக சரியாக தேர்ந்தெடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை எல்லாம் எப்படி சாத்தியப்படுகிறது என்பதை பார்போம்



நாம் வாழும் பூமியை சற்று ஆராயப் புகுந்தால் பல்வேறு ஆச்சரியங்கள் நம்மை சூழ்ந்து கொள்ளும். இந்த பேரண்டத்தில் கோள்கள் அனைத்தும் ஒன்றோடொன்று மோதி பிறகு ஒரு சம நிலைக்கு வந்து இன்று வரை தனது ஓட்டத்தை தொய்வின்றி செய்து வருவதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. பூகோளம் பல்வேறு முறைகளில் மாறியுள்ளது. ஆரம்பத்தில் பூமி உருவாகும் போது வெப்பத்தாலும், ஈர்ப்புச் சக்தியாலும் கொந்தளிப்புச் சேமிப்புடன் திரண்ட வடிவம் கரடுமுரடாக உருவானது. பரிதி மண்டலத்தின் மற்ற கோள்கள் உண்டான அதே சம காலத்தில்தான் பூகோளமும் சூரியனை மையமாக வைத்துச் சுற்றிக் கொண்டு உருவானது இந்த பேரண்டத்தில் உள்ள அனைத்து கோள்களும் எந்த மாற்றமும் இல்லாமல் சம அளவில் சுழன்று வருகின்றன.


ஆனால் நமது பூமி மட்டும் 23.45 டிகிரி யில் சற்று சாய்வாக சுழல்வதை நாம் அறிவோம். இந்த ஒரு ஏற்பாடு மட்டும் இல்லை என்றால் நீங்களோ நானோ கணிணி முன்னால் அமர்ந்து செய்திகளை பார்த்துக் கெண்டிருக்க முடியாது. ஆம். 23.45 டிகிரி சாய்வாக சுழல்வதால்தான் வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம், குளிர் காலம் என்று மாறி மாறி வருகிறது. இந்த சாய்வில் கொஞ்சம் கூடினாலும் குறைந்தாலும் நமது கதி அதோ கதிதான். பூமியின் சாய்வான சுழற்சியினால் காற்று வீசும்போது அதிக அழுத்தத்திலிருந்து குறைந்த அழுத்தத்திற்கு மாற்றப்படுகிறது. பூமியின் கால நிலையை சீராக வைப்பதற்கு காற்றின் பங்கும் இங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த சாய்வு இல்லை என்றால் இந்த பூமிப் பந்தானது குளிரில் உறைந்து விடும. அல்லது ஒரேயடியாக வெப்பம் தாக்கி புல் பூண்டுகள் இல்லாமல் கருகி விடும். உயிரினங்கள் வாழ தகுதியற்றதாக இந்த பூமிக் கோளம் மாறி விடும்.

26,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியின் சாய்வில் ஒரு டிகிரி மாறும். இதனை precision of celestial axis என்பார்கள். அப்படி மாறி உருவானது தான் 23.5 டிகிரி பூமியின் அச்சில் உருவானது. இன்னும் 26,000 ஆண்டுகளுக்கு பின் 24.5 டிகிரிக்கு பூமியின் சுழல் தளம் சாயலாம் எனவே பெரிய வானிலை மாற்றம் ஏற்பட்டு உலகில் பெரிய அழிவு கூட உருவாகலாம்.

அப்படி முன்னர் பூமியின் சாய்வில் உண்டான மாற்றமே பெரு வெள்ளம் உருவாக காரணம் என கூறப்பட்டுள்ளது. இறைத் தூதர் நோவா காலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை இங்கு நினைவு கூறலாம். விஞ்ஞானிகள் கூறும் பெரும் பிரளயம் அதுவாகக் கூட இருக்கலாம்.






இவ்வாறு இந்த பூமி 23.5 டிகிரி சாய்வில் சுற்றினால்தான் இங்கு மனிதர்கள் வாழ முடியும் என்று தீர்மானித்த சக்தி எது? இதற்கு முதலில் பூமியின் அடர்த்தி என்ன? சூரியனின் ஈர்ப்பு சக்தியின் அளவு என்ன? அதேபோல் புதன், சுக்கிரன், வியாழன், வெள்ளி, சனி, நிலவு போன்ற அனைத்து கோள்களின் அடர்ததி மற்றும் அவற்றின் ஈர்ப்பு தன்மை தெரிந்த ஒரு சக்தியால்தான் இத்தனை மாற்றங்களையும் நிகழ்த்த சாத்தியம் உண்டு..

//Science and technology have indeed given us much information about the physical world, provided us with abundant comforts and conveniences, increased efficiency and discovered remedies for many diseases that used to be fatal. But science does not and cannot tell us about the meaning of life and death. Science tells us "how" but it never answers the question "why"?. Can science ever tell us what is right and what is wrong? What is good and what is evil? What is beautiful and what is ugly? And to whom are we accountable for what we do? Religion does.// -மர்யம் ஜமிலா.

இந்த ஆச்சரியமான விபரங்களை எல்லாம் பல காலம் உழைத்து அறிவியல் அறிஞர்கள் உண்மைகளை கண்டு பிடித்துள்ளனர். ஆம்....இந்த கோள்களின் சஞ்சாரம் இரவு பகல் மாறி வருவது எவ்வாறு என்று அனைத்திற்கும் காரணத்தைக் கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால் இவைகளை இவ்வாறு சுழல விட்ட சக்தி எது? இதற்கு என்ன அவசியம் வந்தது? என்பதை அறிவியலால் சொல்ல முடியாது. அதனை ஆன்மீகத்தால்தான் சொல்ல முடியும். இனி ஆன்மீகத்துக்குள் நுழைவோம்.

--------------------------------------------------------------------------

'இறைவன் உங்களை பூமியிலிருந்தே வளர்த்துப் பெரிதாக்கினான். பின்னர் அதிலேயே உங்களை மீட்டுவான். அதிலிருந்தே உங்களை வெளியேற்றுவான்'
-குர்ஆன் 71:17,18

"பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். ஆனால் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்."
- குர்ஆன் 7;10

'உங்களுக்கு பூமியில் குறிப்பிட்ட காலம் வாழ்விடமும் வசதியும் உள்ளன.'
-குர்ஆன் 2:36

'அவனது கட்டளைப்படி வானமும் பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை.'
-குர்ஆன் 30:25


பூமியில் மட்டுமே மனிதன் வாழ முடியும் என்று மேற் கண்ட வசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. வேற்று கிரகத்திலிருந்து மனிதர்கள் வந்தார்கள், பறக்கும் தட்டு வந்தது என்பதெல்லாம் நிரூபிக்கப் படாத செவி வழி செய்திகள். உயிர் வாழ தேவையான ஆக்சிஜன் பூமியில் தான் உள்ளது. சந்திரனுக்கு மனிதன் சென்றாலும் நிரந்தர தங்குதல் என்பது பூமி மட்டுமே! மனிதனின் உடலுக்கு ஏற்றவாறு வெப்பமும் குளிரும் அளவோடு இருப்பது பூமியில் மட்டுமே!

சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். இன்னும் சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனை சாம்பலாக்கி விடும்.மேலும் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாக சுழல்கிறது. இப்படி சாய்வாக சுழல்வதால் தான் கோடை, குளிர்,வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் என்று கால மாற்றங்கள் ஏற்படுகின்றன. வருடம் எல்லாம் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 'இதில் தான் வாழ்வீர்கள்' என்று எவ்வாறு அடித்துக் கூற முடியும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இந்த வசனமும் இது இறைவனின் சொல்தான் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.

'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை.' - குர்ஆன் 42:29

மேற்கண்ட குர்ஆன் வசனங்களிலிருந்து நமக்கு தெரிய வருவது மனித இனமும் மற்ற பூமியில் உள்ள உயிரினங்களும் பூமியில் மாத்திரமே உள்ளன. வேற்று கிரகங்களிலும் உயிரினங்கள் உள்ளன. ஆனால் அவை பூமியை ஒத்த உயிரினங்களாக இருக்க வாய்ப்பில்லை. அந்த கோள்களின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப அங்குள்ள உயிர்களின் உடல்வாகு அமைக்கப்பட்டிருக்கும். இனி வருங்காலத்தில் செவ்வாயிலோ, புதனிலோ, வியாழனிலோ உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை பூமியில் உள்ள உயிரினங்களை ஒத்து இருக்காது என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது. நம் காலத்திலேயே அந்த உயிரினங்கள் கண்டு பிடிக்கப்படலாம். இறைவன் நாடினால் நாமும் அந்த உயிரினங்களை பார்க்கலாம்.

இவ்வாறு வளி மண்டலத்தில் நடக்கும் விந்தைக்கு காரணம் இயற்கை என்று நாத்திகர்கள் சொல்கின்றனர். அவர்களிடம் சில கேள்விகளுக்கு பதிலைக் கேட்போம்.

அனைத்து கோள்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டு ஈர்ப்பு சக்தியினை பகிர்ந்து கொண்டதா!அதன் அடர்த்திகளையும் பகிர்ந்து கொண்டதா! ஒன்றோடொன்று மோதாமல் இன்று வரை சுற்றி வருவதற்கு அதற்கு பாதை அமைத்துக் கொடுத்தது யார்? அதுவும் தங்களுக்குள்ளேயே பேசி ஒரு முடிவுக்கு வந்ததா? இத்தனை கோள்களிலும் பூமி மட்டும் ஒரு முடிவுக்கு வந்து நான் மட்டும் 23.5 டிகிரி சாய்வாக அமர்ந்து கொள்கிறேன் என்று சூரியனிடம் அனுமதி கேட்டுக் கொண்டதா? இதற்கெல்லாம் எந்த பதிலையும் நாத்திகர்களிடமிருந்து நாம் எதிர்பார்க முடியாது.

நியூட்டனின் விளக்கத்தையும் சற்று பார்போம்.........

உலகின் கண்களுக்கு நான் எப்படி தோன்றுகிறேன் என்பது எனக்குத் தெரியாது. கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இன்றோ நாளையோ ஏதோ ஓர் அபூர்வக் கூழாங்கல் அல்லது எழிற் சிப்பியைக் கண்டெடுப்பது போல எனக்குத் தெரிகிறது. ஆனால் கண்டு பிடிக்க முடியாதபடி மாபெரும் உண்மைக் கடல் என் கண்முன்னே பரந்து கிடக்கிறது.

ஸர் ஐஸக் நியூட்டன் (1642-1727)

https://sites.google.com/site/earthrotation

http://www.itacanet.org/the-sun-as-a-source-of-energy/part-1-solar-astronomy/

http://www.pveducation.org/properties-of-sunlight/declination-angle




1 comment:

Dr.Anburaj said...


கோள்கள் விண்ணில் நீந்துகின்றன என்ற குரான் வாக்கியம் விஞ்ஞானம் அல்ல. யாா் கண்ணைத் திற்து பாா்த்தாலும் தொிகின்றது.தாங்கள் சொன்ன 23.5 டிகிாி கோணம் சாய்வாக புமி சுற்றுகிறது என்ற உண்மை கணக்கீடு குரான் சொல்லவில்லை.தாங்கள் பதிவு செய்துள்ள வரைபடங்கள் மற்றும் பல செய்திகள் அனைத்தும் விஞ்ஞான புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டவை.குரானில் இருந்து எடுக்கப்பட்டவை அல்ல. அங்கே எந்த வரைபடமும் இல்லை.
இந்தியாவில் வானவியல் குறித்த மிகச்சாியான கருத்துக்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியுள்ளது. இந்தியாவில் உள்ள வானவியல் கருத்துக்களையும் தற்போதுள்ள வானவியல் கருத்துக்களையும் ஒப்பிட்டு தாங்கள் ஒரு கட்டுரையை பதிவு செய்ய வேண்டுகின்றேன்.அரேபிய அடிமையான தாங்கள் இந்தியாவிற்கு சிறப்பு செய்யும் ஒரு கட்டுரையை பதிவு செய்ய விரும்புவீா்களா ? விரும்புங்கள். இது நீங்கள் பிறந்த மண். இந்துஸ்தானம்.