Followers

Monday, September 25, 2017

தம்மாம் நகரில் நடந்த ரத்ததான முகாம்!



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் சவூதி அரேபியாவின் தேசிய தினத்தை முன்னிட்டுதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் சார்பாக “58வது மாபெரும் இரத்த தான முகாம்தம்மாம் மண்டலத்தின் அனைத்து கிளைகள் சார்பாக “22 செப்டம்பர் 2017 வெள்ளிஅன்று காலை 8:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை தம்மாம் சென்ட்ரல் மருத்துவமனையில் சிறப்பாக நடைபெற்றது.

நான்கு நட்கள் இடைவெளியில் அறிவிப்பு செய்து ஏற்பாடுகள் செய்யப்பட்ட உயிர்  காக்கும் இந்த உன்னத பணிக்கு TNTJ சவூதி அரேபியா கிழக்கு மாகாணத்தின் அனைத்துக் பகுதிகளிலிருந்தும் அதிகமான சகோதரர்கள் ஆர்வமுடன் வந்து கலந்துகொண்டனர்.

இம்முகாமில் இரத்த தானம் செய்ய தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களை சேர்ந்த சகோதரர்களும் மேலும் பாகிஸ்தான், இலங்கை, ஏமன், பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த ஏராளமான சகோதரர்களும் நமது அழைப்பை ஏற்று வந்து மொத்தம் 110 சகோதரர்கள் இரத்த தானம் செய்வதற்காக தங்கள் பெயர்களை முன்பதிவு செய்துகொண்டனர்.

குறைந்த நேரம், இரத்தப் பரிசோதனை மற்றும் உடல் தேர்வின் அடிப்படையில் 98 யூனிட்கள் மட்டுமே இரத்தம் தானமாக பெறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

மருத்துவ ஊழியர்களின் சிரமங்களை குறைக்க TNTJ தம்மாம் மண்டல தொண்டரணியினர் இரத்த தான படிவங்களை பூர்த்தி செய்து உதவினர். கலந்து கொண்ட சகோதரர்களுக்கான உணவு & வாகன ஏற்பாடுகளை மண்டல நிர்வாகிகளுடன் இணைந்து கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

இந்த நிகழ்வில் சவூதி அரேபியா கிழக்கு மாகாணத்தின் அனைத்து இரத்த வங்கிகளின் நிர்வாக இயக்குனர் அப்துல்லாஹ் அல்-உத்தைபிமற்றும் தம்மாம் சென்டரல் மருத்துவமனையின் இரத்த வங்கி மேலாளர் முஹம்மது அல்-ஜஹ்ரானிஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு நமது பணிகளை வெகுவாக பாராட்டினர்.

தொடர்ந்து பல வருடங்களாக வளைகுடாவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரத்த தானம் செய்வதில் முன்னிலையில் இருப்பது அனைவரும் அறிந்ததே. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த சேவையை பாராட்டி மருத்துவமனை நிர்வாகங்களும் சவூதி அரசின் சுகாதார அமைச்சகமும் பல்வேறு பாராட்டு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் நமக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அல்ஹம்துலில்லாஹ்...

இதில் கலந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கம், இதற்காக உழைத்த கிளை நிர்வாகிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எல்லாம் வல்ல ஏக இறைவன் ஈருலகிலும் அருள் செய்வானாக!

இப்படிக்கு,

TNTJ தம்மாம் மண்டலம்

1 comment:

Dr.Anburaj said...

கோடிக்கணக்கான அப்பாவி மக்களை காபீா்கள் என்று பட்டம் கட்.டிக் கொன்று ஒழித்த பாவம் போக இரத்ததானம் செய்யுங்கள். இன்றும் முஸ்லீம்கள் வாழும் பகுதிகள் மனித வௌளத்தில் குளித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதையாரும் நிறுத்த முடியாது.என்று மக்கள் குரானை பரணில் தூக்கி போட்டுவிட்டு முஹம்மதை மனதில் இருந்து துரத்திவிட்டு மனிதனாக வாழ துவங்குகின்றாா்களோ -முஸ்லீம்களாக வாழ தேவையில்லை - அன்று உலகம் உருப்படும்.இரத்ததான நிகழ்ச்சிகள் அதிக அா்த்தம் உள்ளவையாக இருக்கும்.