Followers

Tuesday, November 27, 2018

வெற்று கண்டைனரை வைத்து மோடி படம் போட்டு....

தஞ்சை தெற்கு கிழக்கு கடற்கரை சாலையில் மோடியின் பெரிய பேனரோடு ஒரு கண்டைனர் ட்ரக் இங்கு மங்கும் அலைந்து கொண்டிருந்தது. 'கஜா புயல் நிவாரணப் பொருட்கள்' என்றும் அச்சிடப்பட்டிருந்தது. மக்கள் அந்த ட்ரக்கை நிறுத்தி 'பொருட்கள் யாருக்கு?' என்று கேட்டுள்ளனர். அதற்கு ஓட்டுநர் 'இப்போதுதான் பொருட்களை இறக்கி விட்டு வருகிறோம்' என்றார். 'எந்த ஊரில்?' என்று கேட்டால் ஓட்டுநருக்கு பதில் சொல்ல தெரியவில்லை. எங்கிருந்து எடுத்து வந்துள்ளீர்கள்? இதை அனுப்பியது யார்?' என்ற கேள்விக்கும் ஓட்டுநரிடம் பதில் இல்லை....
ஆக.... வெற்று கண்டைனரை வைத்து மோடி படம் போட்டு மக்களுக்கு உதவுவதாக படம் காட்டியுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மக்களிடம் மத்தியில் ஆட்சியில் அமர்ந்து கொள்ளையடித்த பணத்தில் ஒரு சிறு துரும்பை போட்டிருந்தாலும் கண்டைனர் நிரம்பியிருக்கும். ஆனால் செய்ய மாட்டார்கள். எத்தனை கோடி பணமிருந்தாலும் உதவக் கூடிய மனம் வர வேண்டுமல்லவா? அதனை இந்துத்வாவாதிகளிடம் எதிர்பார்க்க முடியாது.


No comments: