Followers

Tuesday, November 13, 2018

முகலாயர்களும் பாரத நாட்டு ரத்தங்களே!

முகலாயர்களும் பாரத நாட்டு ரத்தங்களே!
இன்று இந்தியாவில் முஸ்லிம்களின் மேல் வைக்கப் படும் குற்றச் சாட்டுகளில் ஒன்று 'முஸ்லிம்கள் அனைவரும் அன்னிய நாட்டவர்'. இதில் ஐந்து சதம் கூட உண்மையில்லை என்று சொன்னாலும் குறிப்பிட்ட சிலரும், சில பத்திரிக்கைகளும் இந்த பொய்யை திரும்ப திரும்ப சொல்லி வருகின்றனர். இப்படி கூப்பாடு போடுபவர்களின் வரலாறை நாம் புரட்டினால் அந்த மக்களே வரலாற்று ரீதியாக இந்நாட்டுக்கு அன்னியராகிறார்கள். சரி தலைப்புக்கு வருவோம்.
அன்றைய முகலாயர்கள் இந்தியாவை சுமார் எண்ணூறு வருடங்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். வெளி நாடுகளிலிருந்து வந்தவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் இந்தியாவிலேயே தங்கி இந்நாட்டு மக்களை திருமணம் செய்து கொண்டு இந்நாட்டோடு இரண்டற கலந்து விட்டனர். இருந்தும் இஸ்லாமியர் அன்னிய தேசத்தவர் என்ற குரல் எப்போதாவது ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கும்.
முகலாயர்களையும், கேரளக் கரையோரம் வந்த ஒரு சில அரபுகளையும் தவிர்த்து மற்ற முஸ்லிம்கள் அனைவரும் முன்னால் இந்துக்களே! இஸ்லாத்தின் கொள்கைகளால் கவரப் பட்டும் தீண்டாமையிலிருந்து விடுபடவும் இஸ்லாத்தை தழுவிக் கொண்ட இந்துக்களே இன்றைய இந்திய முஸ்லிம்கள். இந்த முகலாயர்களில் கூட ஒரு சில அரசர்கள் இந்நாட்டு பெண்களை மணமுடித்து பாரத நாட்டு பிரஜைகளான வரலாறை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. நான் படித்த அந்த ஒரு சில விபரங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
**********************************
இந்து இளவரசியை மணந்த அக்பர்!
முகலாயப் பேரரசர் அக்பர் ஆஜ்மீருக்குச் சென்று திரும்புகையில் சாம்பர் (Sambhar) என்ற ஊரில் ஆம்பர் (Ambar)மன்னர் ராஜா பார்மலின் மகளை இந்து மரபுப்படி திருமணம் செய்தார். அக்பரின் முகலாய வழியும், இராஜபுத்திர வழியும் இத்திருமணத்தால் ஒன்று சேர்ந்தது.
க.வெங்கடேசன், அக்பர்,சென்னை.
1972 –Page 47,48
ஷா பாய் என்று ஜெய்ப்பூர் ஆவணங்களில் அழைக்கப்படும் இராஜபுத்திர இளவரசியை, அக்பரை திருமணம் செய்து கொண்டதற்கு பின் மரியம்-உஸ்-ஸமானி (Mariam-uz-zamani) என்று அழைக்கப்பட்டார்.
Ashirbadilal Srivastava, Akbar The Great, volume 2, Agra, 1973, Page 59.
******************************************
இந்து இளவரசிக்குப் பிறந்த ஜஹாங்கீர்!
முகலாயப் பேரரசர் அக்பரின் வாரிசான ஜஹாங்கீர் இராஜபுத்திர ராணி ஷாபாய் என்ற மரியம் உஸ் ஸமானிக்குப் பிறந்தவர். ஓர் இந்துப் பெண்ணுக்குப் பிறந்தவர் என்பதால் முகலாயப் பேரரசில் ஜஹாங்கீர் அரசுரிமையை இழக்கவில்லை. அக்பருக்குப் பின் ஜஹாங்கீரே அரசப் பொறுப்பிற்கும் வந்தார்.
“Already earlier in the year 1562, Akbar had married a Rajput Princess if Jaiour, who was to become the mother of his successor Jahangir”.
Laurence Binyon, Akbar, Edinburgh, 1932, page 59.
********************************************
இராஜபுத்திர இளவரசிக்குப் பிறந்த ஷாஜஹான்!
முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் மார்வாடா மன்னர் ராஜா உதயசிங்கின் மகளை திருமணம் செய்தார். அந்த இராஜபுத்திர இளவரசி ஜகத்கஸாயினி என்பவரின் வயிற்றில் பிறந்தவர்தான் முகலாயப் பேரரசர் ஷாஜஹான்.
ஷாஜஹானின் தந்தையார் ஜஹாங்கீர், அக்பருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர். ஜஹாங்கிருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர் சாஜஹான். ஷாஜஹானின் உடலில் ஓடிய ரத்தத்தில் முகலாய ரத்தத்தை விட இந்திய ரத்தமே அதிகமாக இருந்தது என்பர் வரலாற்றாசிரியர் லேன்பூல்.
குலாம் ரசூல், இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள், தஞ்சாவூர்.
1998, page 461.
“Like his father Shah-jahan was the offspring of a union with a Rajput princess, a daughter of the proud Raja of Marwar, and had more Indian than Mughal blood in his veins.”
Stanley Lane-poole, Aurangzib, New Delhi, Page 14.
************************************
ஹிந்து ராணியின் பேரன் ஒளரங்கஜேப்!
இத்தகைய ஷாஜஹானுக்கு மகனாகப் பிறந்த மஹா சக்ரவர்த்தியாகிய ஒளரங்கஜேப் ஒரு ஹிந்து ராணியின் பேரனாயிருந்தும் மதத் துவேஷிகள் அவரையும் சும்மா விடவில்லை. அபாண்டப் பழிகளை அவர் மீது அடுக்கிக் கொண்டே செல்கிறார்கள் என்பதனை அறிகிறபோது வேதனையான விசித்திரமாகத்தான் இருக்கிறது. அது மட்டுமா?
நவாப் பாயின் கணவர் ஒளரங்கஜேப்!
ஒளரங்கஜேப்புக்குப் பின் முகலாயப் பேரரசில் அரியணை ஏறிய பகதூர்ஷாவின் தாயார் நவாப் பாய் (Nawab Bai)காஷ்மீர் இந்து அரசரின் மகள். (She was the daughter of Raja Raju of the Rajuari State of Kashmir) இராஜ புதன வழியில் வந்த நவாப் பாயின் (ரஹ்மத்துன்னிஷா) கணவர் யார் தெரியுமா? மாமன்னர் ஒளரங்கஜேப்தான்.
பரூக்கி, இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள்,
page 545.
உதயபுரி மஹல் அல்லது பாய் உதயபுரி (Udai Puri Mahal) என்ற மனைவியும் ஒளரங்கஜேப்பிற்கு இருந்ததாகச் சொல்லப் படுகிறது. (Kam Baksh) காம்பக்ஸ்என்ற ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தவர் இவர்தான்.
டி.எப்.ஆர். மஆலிசாஹிப், முஸ்லிம் மன்னர்களின் இந்து ராணிகள், பத்ஹூல் இஸ்லாம்.
1957, November, Chennai.
ஐம்பது வயதைத் தாண்டிய நிலையில்.....
ஹிந்து இராஜபுத்திர ராணியார் ஷாபாய், ஜகத் கஸாயினி ஆகியோரின் வழியில் கி.பி.1618 ல் தோன்றியவர் ஒளரங்கஜேப். அவரது வாழ்வில் நவாப் பாய், உதயபுரி மஹல் என்ற இரு இந்துப் பெண்களை திருமணம் செய்து கொண்டவர் ஒளரங்கஜேப்.
ஹெச்.எல்.ஓ.காரட், சீதாராம் கோலீ, இந்து தேச சரித்திரம்,
1942, Page 170, Chennai.
இது போல் இந்துக்களோடு ரத்த உறவும், திருமண பந்தமும் உடைய ஒரு அரசர் இந்துக்களை கொடுமை படுத்தினார் என்று நம் வரலாற்றுப் பாட நூல்களில் தொடர்ந்து படித்து வருகிறோம். அதோடு இந்த மன்னர்கள் இந்த தேசத்தை எந்த அளவு நேசித்திருந்தால் திருமண உறவு முதற் கொண்டு நம் நாட்டிலேயே ஏற்படுத்திக்கொண்டு இங்கேயே இறக்கவும் விருப்பம் தெரிவித்திருப்பார்கள். இன்று இவர்களின் உறவுகள் இந்தியர்களை மணந்து இந்நாட்டு இரத்தம்ஆகி விட்ட பிறகு எப்படி இவர்களை நாம் அன்னிய தேசத்தவர் என்ற வார்த்தையை பிரயோகிக்க முடியும்?
பிற மதத்தவரின் பிரார்த்தனைக்கு அனுமதி!
'நமது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்த நாளில் பனாரஸிலும் அதன் சுற்றுப் புறங்களிலுமுள்ள இந்துக் குடிமக்கள் சிலரால் கொடுமைப் படுத்தப் படுவதாகவும் புராதனமான இந்துக் கோவில்களின் பொறுப்பிலுள்ள பிராமணர்கள் அங்கிருந்து வெளியேறும்படி அச்சுறுத்தப் பட்டு மிரட்டலுக்கு ஆளாகி அதனால் அந்த வகுப்பினர் மன வேதனைக்கு ஆளாகி இருப்பதாகவும் நமது மேன்மைக்குரிய புனித அரசவைக்குத் தகவல் வந்துள்ளது. எனவெ இந்த அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. பிராமணர்களையோ மற்ற இந்து குடிமக்களையோ சட்ட விரோதமாகத் தலையிட்டுத் தொல்லைக்குட்படுத்தக் கூடாது. அவர்கள் தங்கள் தொழிலைத் தொடர்ந்து செய்து வரவும் இறைவன் அளித்த இந்த வரமான இந்த சாம்ராஜ்யம் நிலைக்கும் வகையில் அவர்கள் சமாதானம் நிறைந்த மனதுடன் பிரார்த்தனைகள் நடத்தவும் முன்பு போலவே அனுமதிக்க வேண்டும். இந்த ஆணையை அவசரமானதாக மேற்கொண்டு இது வந்து சேர்ந்ததும் அதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும்.'
இவ்வாறு ஒளரங்கஜேப்பின் பனாரஸ்ஃபார்மன் என்ற சாசனத்தில் கூறப்பட்டுள்து.
பி.என்.பாண்டே, இஸ்லாமும் இந்திய கலாச்சாரமும், டாயல் மொழி பெயர்ப்பு,சென்னை.
1987, Page 61.
'சதி'யை நிறுத்தியவர் ஒளரங்கஜேப்!
ஆதரவற்ற துர்பாக்கியவதியான ஒரு பெண்ணை 'சதி' (உடன்கட்டை ஏறுதல்) உயிருடன் எரிக்க முயன்றனர். ஆடசித் தலைமை வகித்த ஒளரங்கஜேப் இதை அறிந்து அந்த கொடுமையை தடுத்து நிறுத்தினார். அதோடு எந்த ஓர் இந்துப் பெண்ணையும் உயிருடன் எரிக்க அதிகாரிகள் அனுமதி அளிக்கக் கூடாதென்றும் உத்தரவு பிறப்பித்தார்.
இதனை அறிந்த உயர் ஜாதி இந்துக்கள் தங்கள் மத விஷயத்தில் ஒளரங்கஜேப் தலையிடுவதாக புகார் கூறினர். 'உயிருள்ள ஒரு பெண்ணை எரிப்பது அவர்களுடைய மத நம்பிக்கை என்றால் அத்தகைய மோசமானச் செயலை செய்திட அனுமதி அளிக்காமலிருப்பதே தன்னுடைய நம்பிக்கை என்று ஒளரங்கஜேப் உறுதியாக நின்றார். உயர் பிரிவைச் சேர்ந்தவர்கள் பலரது எதிர்ப்பை மீறிதாம் இட்ட கட்டளையை நிறைவேற்றிடவும் பணித்தார். பலவந்தமாக உடன் கட்டை ஏற்றப்படும் பெண்களின் நகை, ஆபரணங்களைப் பெற்று அனுபவித்து வந்தவர்கள் பாதிப்பிற்குள்ளாயினர்.
விளைவு, மதத் தலைவர்கள் ரகசிய இடத்தில் ஒன்று கூடினர். ஒளரங்கஜேப் அரசைக் கவிழ்க்க சதி செய்தனர். அவரைக் குறித்து ஹிந்து மத விரோதி என பொய்களைப் புனைந்துரைத்தனர்.
ஜோசப் இடமருகு, பிராமண மதம், (மலையாளம்) தமிழில் த.அமலா, சென்னை 1995, Page 227
Premnath Bazaz, The Role Of Bhagavadgita in Indian History, New delhi 1975, Page 339
அரசியல் வேறு மதம் வேறு!
ஒளரங்கஜேப்பிடம் அவரது முஸ்லிம் நண்பர்கள் அவரது அரசாங்கத்திலுள்ள இரண்டு முஸ்லிம் அல்லாதவரை அவர்கள் சார்ந்திருந்த மதத்தின் காரணமாக பதவியில் வைத்துக்கொள்ளக் கூடாதென்று கூறியபோது அதனை ஏற்க மறுத்தவர் ஒளரங்கஜேப். 'அரசியலுக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை. அரசியல் விவகாரங்களில் மதம் என்பது கிடையாது. அவரவர்கள் அவரவரது மத்தைப் பின்பற்றட்டும்.' என்று சொன்னவர் ஒளரங்கஜேப்.
டி.என.ராமச்சந்திரன், நமது சரித்திர பாரம்பரியம், நாகப்பட்டினம்
1950, Page 80
இது போன்று தன் நாட்டு மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட ஒளரங்கஜேப் இந்துக்களைக் கொடுமை படுத்தினார் என்று எழுதுவது நேர்மையான வாதம் தானா என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.
எனது தேசத்து ஏழைகளுக்கு......
ஒரு சமயம் புனித மக்கா நகரத்தின் ஷெரீப் பொருள் உதவி வேண்டி தனது தூதரை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பியபோது அவரக்கு பொருளுதவி செய்ய மறுத்ததோடு 'எனது தேசமான இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அந்தப் பணத்தை வினியோகிக்க்க் கூடாதா? என்று கேட்டு விட்டு 'இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான்' என்றும் அந்தத் தூதரிடம் பதில் தந்தவர் ஒளரங்கஜேப்'
டி.என். ராமச்சந்திரன், நமது சரித்திர பாரம்பரியம், நாகப்பட்டினம்.
Page 80, 81.
நம்நாட்டை எந்த அளவு நேசித்திருந்தால் இத்தகைய வார்த்தை ஒளரங்கஜேப்பின் வாயிலிருந்து வந்திருக்கும்? இவரைப் பற்றிய மேலதிக விபரங்களை நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது பதிக்கிறேன் இறைவன் நாட்டம் இருப்பின்.
********************************************
சுப்ரமணிய பாரதி!
'முகமதியர்களுக்கு இது அன்னிய தேசமன்று. அவர்கள் இங்கே இன்றைக்கு நேற்றைக்கு வந்து குடியிருக்கும் ஜனங்களில்லை. இந்நாடு ஹிந்துக்களுக்கு எவ்வளவு சொந்தமோ அவ்வளவுக்கு முகமமதியர்களுக்கும் சொந்தம். இந்தியாவிலே முகமதியர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் எந்த உபாயத்திலேனும் பகை மூட்டிவிட வேண்டுமென்று அன்னியர்கள் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார்கள். நம்மவர்கள் மூடத்தனத்தால் மேற்படி பிரயத்தனம் கைக் கூடும்படி விட்டு விடுவோமேயானால் அதுவே நமக்கு நாசகாலமாக முடியும்.'
6-10-1906 - 'இந்தியா' இதழில் 'முகமதியப் பிரதிநிதிக் கூட்டம்' எனும் தலையங்கத்தில் தேசியக் கவி சுப்ரமணிய பாரதியார் தெரிவித்திருக்கும் கருத்து.
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

7 comments:

Dr.Anburaj said...

சுப்ரமணிய பாரதி!
'முகமதியர்களுக்கு இது அன்னிய தேசமன்று. அவர்கள் இங்கே இன்றைக்கு நேற்றைக்கு வந்து குடியிருக்கும் ஜனங்களில்லை. இந்நாடு ஹிந்துக்களுக்கு எவ்வளவு சொந்தமோ அவ்வளவுக்கு முகமமதியர்களுக்கும் சொந்தம். இந்தியாவிலே முகமதியர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் எந்த உபாயத்திலேனும் பகை மூட்டிவிட வேண்டுமென்று அன்னியர்கள் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார்கள். நம்மவர்கள் மூடத்தனத்தால் மேற்படி பிரயத்தனம் கைக் கூடும்படி விட்டு விடுவோமேயானால் அதுவே நமக்கு நாசகாலமாக முடியும்.'
6-10-1906 - 'இந்தியா' இதழில் 'முகமதியப் பிரதிநிதிக் கூட்டம்' எனும் தலையங்கத்தில் தேசியக் கவி சுப்ரமணிய பாரதியார் தெரிவித்திருக்கும் கருத்து.
------------------------------------------------------------
பாரதியாா் தவறாகச் சொல்லமாட்டாா். ஆகவே தங்களின் கருத்துக்கள் அனைத்தும் சரிதான்.ஒப்புக்கொள்ள வேண்டும்தான்.
பிரச்சனை தாங்கள் மனதால் கருத்தால் கொள்கையால் அரேபியனாக இருப்பது.அரேபிய நாகரீகத்தை முன்னிறுத்துவது .....இந்தியாவை அரபுமயமாக்கி அரேபிய நாகரீகம் முன்னிலைப்படுத்தும் போது இந்துக்கள் அடிமைத்தனத்திற்கு இரண்டாம் குடிமக்களாய் தள்ளப்படுவார்கள் என்பதுதான் இன்று பிரச்சனைமுகலாய மன்னா்கள் ஒன்றும் உத்தமர்கள் கிடையாது. அரேபிய வல்லாதிக்க கருத்துப்படி இந்துக்களை காபீா்கள் என்று வெறுத்து மனவெறிகொண்டு அரேபிய வல்லாதிக்கத்தை இங்கே ஸ்தாபிக்க அரும்பாடு பட்டாா்கள்.இந்துக்கள் தகுதியிருந்தும் அவமரியாதை செய்யப்பட்டாா்கள்.சிலைவழிபாடு செய்பவா்களை குரானும் முகம்மதும் கொலை செய்ய்ச் சொல்கின்றாா்கள். இறைவனுக்கு இணை வைப்பவனை அல்லா ஒரு போதும் மன்னிக்க மாட்டாா் என்ற கருத்துக்கள் இந்துக்களை வெறுக்க காரணமாக இருந்தது. ஆயிரம் நன்மைகள் முகலாய ஆட்சியில் எற்பட்டது என்று நீங்கள் உண்மையிலேகாட்டினாலும் சரி இந்துக்களுக்கு கோடி கோடி தீமைகள் ஏற்பட்டது. அதற்கு இந்துக்கள் தங்களை கணிபமான அளவிற்கு பழிபோட்டுக் கொள்ள வேண்டும். பெரிய அளவில் படை திரட்ட இந்துக்களால் இயலவில்லை.அதன் காரணமாகவே இந்துக்கள் தோல்வி அடைந்தாா்கள்.
அக்பரோ எவரோ இந்து பெண்களை கண்ணியமாக திருமணம் செய்வில்லை.ஒரு ராஜபுத்ர குடும்பம் ஒரு முகலாயருக்கு எப்படி தன்பெண்ணை மனம் உவந்து மணம் முடித்துக் கொடுப்பான் ?
படை பலத்தின் வன்மை காரணமாகவே இந்த திருமணம் செய்யப்பட்டது.இந்த பெண்கள் திருமணம் செய்து கொடுக்கவில்லையெனில் அந்தபுரத்தில் இருந்த பல ஆயிரம் பெண்களில்
ஒருத்தியாக அப்பெண் குமுஸ் பெண்ணாக வாழ்ந்து செத்து தொலைத்திருக்கத்தான் வேண்டும். வாளின் பலம் - முகலாயருக்கு மிக மிக அதிகம். இந்துக்களிடம் சமூக அரசியல் சிந்தனை மிகவும் குறைவு.அதிக எண்ணிக்கையில் இந்துக்களை ஒன்று திரட்ட ராஜபுத்திரா்களாலும் மராட்டியா்களாலும் இயலவில்லை. இந்து என்ற சிந்தனையில்லை.முஸ்லீம்கள் தங்களை பலமாக வைத்துக்கொண்டாா்கள். ஒரு அணியாக செயல்பட்டாா்கள்.அந்த தகுதி இன்றும் இந்துக்களுக்கு வரவேயில்லையே.
முகலாயா்களின் இந்து வெறுப்புதான் பாக்கிஸ்தான் கிழக்கு பாக்கிஸ்தான்பிரிவினை என்று இந்துஸ்தானத்து மண்ணை மனித இரத்தம் பாய்ந்து ஒடக் காரணமானது. பிரிவினையாவது பிரச்சனையை தீா்த்து வைத்ததா அதுவும் இல்லை.போர்கள் -3 நடைபெற்று விட்டது. இன்னும் பயங்கரவாத போர் முடியவில்லை. கோத்ரா முப்பை பயங்கரவாத தாக்குதல்கள் என்று மனதில் அமைதி யில்லையே.
கோரி முகம்மது ஒரு மாமனிதன் கஜனி யோக்கியன் என்று தாங்கள் நாகூசாமல் எவ்வளவு அலட்சியமாக பதிவுகள் செய்கின்றீா்கள்.பாக்கிஸ்தானின் ஏவுகணைக்கு பெயா் ”கோரி” இந்தியாவின் ஏவுகணைக்கு பெயா் ”பிரித்வி” .கோரியை பாராட்டி பதிவுகள் செய்த அளவிற்கு என்றாவது பிரித்விராஜ் சௌகானை பாராட்டி சத்ரபதி சிவாஜியை பாராட்டி ரானாக்களின் வீரா்தை பாராட்டி சீக்கியா்களின் போர்திரனை தியாகத்தை பாராட்டி இந்தியாவில் கலாச்சாரத்தின் சிறப்பை பாராட்டி சுஸ்ருதரின் சாதனையைப் பாராட்டி ......என்றாவது ஒரு பதிவை போட்டது உண்டா ? அரேபியனை புகழ்ந்து முஸ்லீம் என்ற சிறைக்குள்உங்கள் சிந்தனை அடைபட்டுக் கிடக்கின்றது.இசுலாத்தை சேராத அரேபியனை பாராட்ட தயங்காத தாங்கள் இந்தியா்களை அப்படி என்றும் நடத்தியது கிடையாது. இன்றும் அரேபிய அடிமைத் தனம் தான் பிரச்சனையாக உள்ளது.அதற்கு தீா்வு கிடையாது.
இருந்தால் முன்வையுங்கள் பார்க்கலாம்.

Dr.Anburaj said...

சுப்ரமணிய பாரதி!
'முகமதியர்களுக்கு இது அன்னிய தேசமன்று. அவர்கள் இங்கே இன்றைக்கு நேற்றைக்கு வந்து குடியிருக்கும் ஜனங்களில்லை. இந்நாடு ஹிந்துக்களுக்கு எவ்வளவு சொந்தமோ அவ்வளவுக்கு முகமமதியர்களுக்கும் சொந்தம். இந்தியாவிலே முகமதியர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் எந்த உபாயத்திலேனும் பகை மூட்டிவிட வேண்டுமென்று அன்னியர்கள் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார்கள். நம்மவர்கள் மூடத்தனத்தால் மேற்படி பிரயத்தனம் கைக் கூடும்படி விட்டு விடுவோமேயானால் அதுவே நமக்கு நாசகாலமாக முடியும்.'
6-10-1906 - 'இந்தியா' இதழில் 'முகமதியப் பிரதிநிதிக் கூட்டம்' எனும் தலையங்கத்தில் தேசியக் கவி சுப்ரமணிய பாரதியார் தெரிவித்திருக்கும் கருத்து.
------------------------------------------------------------
பாரதியாா் தவறாகச் சொல்லமாட்டாா். ஆகவே தங்களின் கருத்துக்கள் அனைத்தும் சரிதான்.ஒப்புக்கொள்ள வேண்டும்தான்.
பிரச்சனை தாங்கள் மனதால் கருத்தால் கொள்கையால் அரேபியனாக இருப்பது.அரேபிய நாகரீகத்தை முன்னிறுத்துவது .....இந்தியாவை அரபுமயமாக்கி அரேபிய நாகரீகம் முன்னிலைப்படுத்தும் போது இந்துக்கள் அடிமைத்தனத்திற்கு இரண்டாம் குடிமக்களாய் தள்ளப்படுவார்கள் என்பதுதான் இன்று பிரச்சனைமுகலாய மன்னா்கள் ஒன்றும் உத்தமர்கள் கிடையாது. அரேபிய வல்லாதிக்க கருத்துப்படி இந்துக்களை காபீா்கள் என்று வெறுத்து மனவெறிகொண்டு அரேபிய வல்லாதிக்கத்தை இங்கே ஸ்தாபிக்க அரும்பாடு பட்டாா்கள்.இந்துக்கள் தகுதியிருந்தும் அவமரியாதை செய்யப்பட்டாா்கள்.சிலைவழிபாடு செய்பவா்களை குரானும் முகம்மதும் கொலை செய்ய்ச் சொல்கின்றாா்கள். இறைவனுக்கு இணை வைப்பவனை அல்லா ஒரு போதும் மன்னிக்க மாட்டாா் என்ற கருத்துக்கள் இந்துக்களை வெறுக்க காரணமாக இருந்தது. ஆயிரம் நன்மைகள் முகலாய ஆட்சியில் எற்பட்டது என்று நீங்கள் உண்மையிலேகாட்டினாலும் சரி இந்துக்களுக்கு கோடி கோடி தீமைகள் ஏற்பட்டது. அதற்கு இந்துக்கள் தங்களை கணிபமான அளவிற்கு பழிபோட்டுக் கொள்ள வேண்டும். பெரிய அளவில் படை திரட்ட இந்துக்களால் இயலவில்லை.அதன் காரணமாகவே இந்துக்கள் தோல்வி அடைந்தாா்கள்.
அக்பரோ எவரோ இந்து பெண்களை கண்ணியமாக திருமணம் செய்வில்லை.ஒரு ராஜபுத்ர குடும்பம் ஒரு முகலாயருக்கு எப்படி தன்பெண்ணை மனம் உவந்து மணம் முடித்துக் கொடுப்பான் ?
படை பலத்தின் வன்மை காரணமாகவே இந்த திருமணம் செய்யப்பட்டது.இந்த பெண்கள் திருமணம் செய்து கொடுக்கவில்லையெனில் அந்தபுரத்தில் இருந்த பல ஆயிரம் பெண்களில்
ஒருத்தியாக அப்பெண் குமுஸ் பெண்ணாக வாழ்ந்து செத்து தொலைத்திருக்கத்தான் வேண்டும். வாளின் பலம் - முகலாயருக்கு மிக மிக அதிகம். இந்துக்களிடம் சமூக அரசியல் சிந்தனை மிகவும் குறைவு.அதிக எண்ணிக்கையில் இந்துக்களை ஒன்று திரட்ட ராஜபுத்திரா்களாலும் மராட்டியா்களாலும் இயலவில்லை. இந்து என்ற சிந்தனையில்லை.முஸ்லீம்கள் தங்களை பலமாக வைத்துக்கொண்டாா்கள். ஒரு அணியாக செயல்பட்டாா்கள்.அந்த தகுதி இன்றும் இந்துக்களுக்கு வரவேயில்லையே.
முகலாயா்களின் இந்து வெறுப்புதான் பாக்கிஸ்தான் கிழக்கு பாக்கிஸ்தான்பிரிவினை என்று இந்துஸ்தானத்து மண்ணை மனித இரத்தம் பாய்ந்து ஒடக் காரணமானது. பிரிவினையாவது பிரச்சனையை தீா்த்து வைத்ததா அதுவும் இல்லை.போர்கள் -3 நடைபெற்று விட்டது. இன்னும் பயங்கரவாத போர் முடியவில்லை. கோத்ரா முப்பை பயங்கரவாத தாக்குதல்கள் என்று மனதில் அமைதி யில்லையே.
கோரி முகம்மது ஒரு மாமனிதன் கஜனி யோக்கியன் என்று தாங்கள் நாகூசாமல் எவ்வளவு அலட்சியமாக பதிவுகள் செய்கின்றீா்கள்.பாக்கிஸ்தானின் ஏவுகணைக்கு பெயா் ”கோரி” இந்தியாவின் ஏவுகணைக்கு பெயா் ”பிரித்வி” .கோரியை பாராட்டி பதிவுகள் செய்த அளவிற்கு என்றாவது பிரித்விராஜ் சௌகானை பாராட்டி சத்ரபதி சிவாஜியை பாராட்டி ரானாக்களின் வீரா்தை பாராட்டி சீக்கியா்களின் போர்திரனை தியாகத்தை பாராட்டி இந்தியாவில் கலாச்சாரத்தின் சிறப்பை பாராட்டி சுஸ்ருதரின் சாதனையைப் பாராட்டி ......என்றாவது ஒரு பதிவை போட்டது உண்டா ? அரேபியனை புகழ்ந்து முஸ்லீம் என்ற சிறைக்குள்உங்கள் சிந்தனை அடைபட்டுக் கிடக்கின்றது.இசுலாத்தை சேராத அரேபியனை பாராட்ட தயங்காத தாங்கள் இந்தியா்களை அப்படி என்றும் நடத்தியது கிடையாது. இன்றும் அரேபிய அடிமைத் தனம் தான் பிரச்சனையாக உள்ளது.அதற்கு தீா்வு கிடையாது.
இருந்தால் முன்வையுங்கள் பார்க்கலாம்.

Dr.Anburaj said...


அரேபிய அடிமைத்தனம் இல்லாத ஒரு முஸ்லீம் -நாடே அடையாளம் கண்டுகொண்ட ஒரு முஸ்லீம் பாரதரத்னா திரு.ஏபிஜெ.அப்துல் கலாம் அவர்கள். இந்துக்கள் அவரை இன்றும் தங்களில் ஒருவராக தங்களின் தலைவராக மதிப்புமிக்க தலைவராக மதித்து வாழ்ந்து வருகின்றனா்.ஆனால் தங்கள் இணையத்தில் திரு.கலாம் அவர்களை எவ்வளவு கிண்டல் செய்திருபபீா்கள் ? முஸ்லீம் அல்ல காபீா் என்று முஸ்லீம்களின் பத்திரிகை இணையங்களில் எவ்வளவு கிண்டல் கேலி. இப்படியிருக்கும் போது ஒரு இந்து ஒரு முஸ்லீமை எப்படி நம்புவான். ஒரு அரேபியன் போல் காட்டறவி போல் வாழ்ந்து இருந்தால் அவரை வானத்திற்கும் புமிக்கம் புகழ்ந்து தள்ளியிருப்பீா்கள். ஆனால் அவரோ இந்தியாவில் பிறந்த ஒரு மகனாக மண்வாசனை மிக்க மாமனிதராக வாழ்ந்தாா். அது தங்களுக்குப் பிடிக்கவில்லை. அராபின் போல் வாழ்ந்து உடைஅணிந்து வழிபாடு செய்து உடுத்து சாப்பிட்டு திருமணம் செய்து அடக்கம் செய்யப்பட்டால்தான் இறைவனுக்கு பிடிக்கும் என்பத அரேபிய வல்லாதிக்க மதமான இசுலாத்தின் கொள்கை. இதை கலாம் எற்கவில்லை. திரு.கலாம் அவர்கள் அரேபிய அடிமையாக இருக்காத ஒரு இந்திய முஸ்லீம்.

ASHAK SJ said...

இந்த பாசிச கும்பல் என்ன செய்யும் என்றால்
பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்க நினைத்த அம்பேத்கார் என்ற சூத்திரனை எதிர்க்கும், ஆனால் சூத்திரங்கள் ஓட்டுக்காக அம்பேத்காரை அரவணைக்கும்
எல்லோரையும் சமமாக பாவிக்கவேண்டும் என்று சொன்னதால் காந்தியை கொள்ளும், இன்று காந்தியை அரவைக்கும்,
கோழை சாவரக்கரை வீர சாவர்க்கர் என்றும், கோழை சிவாஜியை வீர சிவாஜி என்று ஆர்ப்பரிக்கும். காந்தியை கொன்ற கோட்ஸேவுக்கு சிலைவைக்கும்,
அதே வரிசையில் அப்துல்கலாம், அப்துல்கலாம் முஸ்லிமா இல்லையா என்று நான் கருத்துசொல்லவிரும்பவில்லை அதற்க்கான தகுதி எனக்கில்லை, ஆனால் அப்துல்கலாம் கூடங்குளத்தை நல்லதுஎன்றார், மூன்று லட்சம் கோடியை தொழில்நுடபகோளாறால் தெரிந்தே வங்காள விரிகுடாவில் போட்டு வீணாக்கினார், அதே அளவு அல்லது அதற்க்கு மேலாக செலவுசெய்து இரண்டுவருட உழைப்பை கொண்டு மீண்டும் ஏவுகணை செய்யப்பட்டது, ஆக ஆறு லட்சம் கோடி இரண்டுவருட உழைப்பு என்று எல்லாத்தையும் அறியாமல் நஷடம் ஆக்கினார், ஆக அவரை தூக்கிப்பிடிக்கும் பாசிஸ்டுகள் தான் இன்று படேல் என்ற பாசிஸ்டுக்கு மூவாயிரம் கோடியில் சிலை வைக்கிறார்கள்

இந்த சாதாரண விஷயம் கூட அறியாத சூத்திரன் தான் கலாமை தூக்கிப்பிடிக்கிறான்.

Dr.Anburaj said...

நம்மவர்கள்(இந்துக்களின்) மூடத்தனத்தால் மேற்படி பிரயத்தனம் கைக் கூடும்படி விட்டு விடுவோமேயானால் அதுவே நமக்கு நாசகாலமாக முடியும்.'
என்ற பாரதியாரின் கருத்து முற்றிலும் பிழையானது.
பிரிவினை தந்திரங்கள் இந்துக்ளின் மூடத்தனத்தினால் மட்டும் வெற்றி பெறும் என்பது பிழையானது. அப்படியெனில் முஸ்லீம்கள் அனைவரம் பரிபுரண யோக்கியா்கள் இந்துக்கள் மட்டும்தான் பிழைசெய்யக் கூடியவா்கள் என்ற கருத்தை அவரது அறிக்கை முன்வைக்கின்றது.
முஸ்லீம்களின் நயவஞ்சகத்தை பாரதியாா் நன்கு அறிவாா்.

சிவாஜி தன் வீரா்களுக்கு சொன்னதை படித்து பார்த்தால் முகலாயா்களும் அவரது அடிமை முஸ்லீம்களும் எவ்வளவு ஆபத்தானவா்கள் என்று எடுத்துக் காட்டும்.

பாரதியாா்-நம்மவரின் மூடத்தனம் என்று இந்துக்களை மட்டும் குறைகளுக்கு சுட்டிக்காட்டுவது உண்மையல்ல.ஒரு பொதுக் கூட்டத்தில் சம்பிராயதமாக பேசியது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

Dr.Anburaj said...

திரு.அப்துல் கலாம் யை எந்த முஸ்லீமுக்கும் பிடிக்கவில்லை. அதில் அசக் சுவனப்பிரியன் என்ற விதிவிலக்கா. இந்தியா ஏவுகணை தொழில் நுட்பம் பெற வல்லரசு நாடுகள் பெரும் தடைவிதித்திருந்தன. உயா் தொழில்நுட்பங்கள் அவர்களிடம் இருந்தது.எ னவே பெரும் தொகை பேரம் நடந்தது.
எனவே நாமாக பல உயா் தொழில் நுட்பங்களை உருவாக்க வேண்டியிருந்தது. எனவே அதிக பொருட் செலவில் தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இதில் போய் திட்ட இயக்குனராக இருந்த திரு.கலாம் அவர்களை குறைகூறுவது அறியாமை.அதிகப்பிரசங்கித்தனம். இந்திய முஸ்லீம்கள் அனைவரும் அவரை முஸ்லீம் அல்ல என்று சொல்லி விடுங்கள். பாட்டையாவிற்கு எந்த நட்டமும் இல்லை.இந்துக்கள் அனைவரும் அவரைசெல்லமாக தாத்தா பாட்டனாா் பாடடையா என்று உறவு சொல்லி கூப்பிட்டு மகிழ்வோம். எங்களைத்தடுக்க உம்மால் இயலாது.
------------------------------------------------------------------------

ASHAK SJ said...

கலாமை பிடிக்கவேண்டிய அவசியம் இல்லை, அவர் ஒரு முஸ்லீம் பிரஜை , முன்னாள் ஜனாதிபதி, அவரே ஒப்புக்கொண்டுள்ளார் மூன்று லட்சம் கோடியை கடலில் போட்டுவிட்டேன் என்று, தவறான முடிவால் செய்தது என்று youtube ல் வீடியோ உண்டு, அன்புராஜ் பார்த்துவிட்டு சொல்லவும். உன்னைப்போல் நான் அவதூறு பரப்புவன் அல்ல