Followers

Tuesday, November 20, 2018

நாங்கள் ஒன்றும் அரபுதேச இறக்குமதி அல்ல..!!


உங்களை நாங்க தீவிரவாதிகள் என்றும் வாடகைக்கு வீடு தரமாட்டோம் என்றும் துலுக்கனுங்க பாகிஸ்தான் போங்கடா என்றும் பல முறை திட்டியும் இருக்கிறோம். !
எவ்வளவோ திட்டியும் மிரட்டியும் எங்களுக்கு உதவி செய்ய உங்களால் எப்படி முடியுது என்று இஸ்லாமிய நண்பர்களிடம் கேட்டேன்.
அதற்கு அந்த பாய் பையன் சொன்ன பதில்..!!!
"இஸ்லாம் எங்களுக்கு வாழ்வியலாக வந்தது..
நாங்கள் ஒன்றும் அரபுதேச இறக்குமதி அல்ல..!!
பார்ப்பணர்கள் போன்று கைபர் கணவாய் வழியாக இந்தியா உள்ளே வந்தவர்கள் அல்ல..!!!
இந்த தமிழக மக்கள் எங்களுடைய சித்தப்பா பெரியப்பா மாமன் மச்சான் சகோதர சகோதரி உறவு முறை....
நாங்கள் எங்கள் முன்னோர்கள் தலீத்தாக வன்னியராக செட்டியார் முதலியார் தேவர் நாடார் வைனவ பிள்ளைமார் இன்னும் பல பல ஜாதியிலே இருந்து ஜாதியை பிடிக்காமல் இந்த இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம்..!!
நாங்க யாரையும் மாற்றானாக பார்ப்பது கிடையாது அனைவரும் எங்கள் சொந்தங்களே....
எங்க சொந்தங்களுக்கு ஒரு கஷ்டம்ன்னா நாங்க தான் போகனும் நாங்கள் தான் உதவனும் அய்யரே...." என்று சொன்னான்..!!!!


5 comments:

Dr.Anburaj said...

நாங்கள் ஒன்றும் அரபுதேச இறக்குமதி அல்ல..!!-
உண்மைதான்.அரேபியாவில் இருந்து வந்தவா்கள் அல்ல என்றாலும் எண்ணத்தாலும் செயலாலும் அரேபிய கலாச்சாரத்தை பின்பற்றி அரேபியன் போல் வாழ்பவா்கள் முஸ்லீம்கள்.
-------------------------------------------------------
பார்ப்பணர்கள் போன்று கைபர் கணவாய் வழியாக இந்தியா உள்ளே வந்தவர்கள் அல்ல..!!!
உளுத்துப்போன வாதம். பார்பணர்கள் உடபட எந்த சாதி மக்களும் கைபா் கணவாய் வழியாக இந்தியா உள்ளேவரவில்லை. பார்பன துவேசம் பேசுவது எளிது.எனவே சுவனப்பிரியனும் பேசுகின்றாா். ஆரிய மாயை உடைந்து விட்டது. ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள் என்ற கருத்து பொய் என்று பல அறிஞா்கள் கருத்து தெரிவித்து விட்டாா்கள்.
------------------------------------------------------------
இந்த தமிழக மக்கள் எங்களுடைய சித்தப்பா பெரியப்பா மாமன் மச்சான் சகோதர சகோதரி உறவு முறை....
பொய் சொல்ல வேண்டாம் நண்பர்களே. தமிழா்கள் அனைவரும் முஷரிக்குகள்.காபீா்கள். அசக் கூட முஷரிக்குகள் என்று பதிவு செய்தாரே.

Dr.Anburaj said...

கோணல் புத்தி மண்டுகள் இதைப்படித்து திருந்தட்டும்

குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்
“எங்கள் நாட்டில், ஊரைத்துறந்து ஓடுவது ஆற்றுவெள்ளம் மட்டுமே. ஒடுங்கிக் கிடப்பது யோகிகளின் உள்ளம் மட்டுமே. வாடி இளைத்திருக்கக் காண்பது பெண்களின் மின்னல் இடை மட்டுமே. வருந்தியிருப்பது என்றால் தொடர்ந்து முத்துக்களை ஈனும் சங்கு மட்டுமே. நிலத்தில் போடுவது நெல்விதைகளை மட்டுமே. புலம்புவது பெண்களின் கிண்கிணிச் சிலம்புகள் மட்டுமே. இங்கு தேடுவது நல்லறத்தையும் புகழையும் மட்டுமே. இப்படிப்பட்டது எங்கள் நாடு”.

திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய திருக்குற்றாலக் குறவஞ்சி என்னும் நூலில் உள்ள ஒரு பாடல் இது.

ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக் காண்பது மின்னார் மருங்குல்
வருந்தக் காண்பது சூலுளை சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து
தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி
திருக்குற்றாலர் தென் ஆரியநாடே.

தமிழ்நாட்டில் தென்காசிக்கு அருகில் உள்ள தனது நாட்டை, ‘தென் ஆரியநாடு’ என்று இந்தப் புலவர் குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும். மேன்மையான நாடு என்ற பொருளில், அதுகாறும் தமிழர்கள் ஆரிய என்ற சொல்லை அர்த்தப்படுத்திக் கொண்ட வகையிலேயே தான் இவரும் பயன்படுத்தியிருக்கிறார். இவர் வாழ்ந்த 18ம் நூற்றாண்டில், ஆரிய திராவிட இனவாதம் என்ற விஷம் தமிழ்நாட்டில் பரவியிருக்கவில்லை, தோன்றியிருக்கவே இல்லை.குற்றால குறவஞ்சியில்பார்பன துசேவம் கிடையாது.கால்டுவெல் என்ற சதிகாரன் வைத்த வினை.அனைவரையும் முட்டாள் ஆக்கி விட்டது.

ASHAK SJ said...

முஷ்ரிக் என்பதில் என்ன தவறு? முஷ்ரிக் என்ற வார்த்தைக்கு இணைவைப்பாளர் என்று அர்த்தம், நான்கு வேதங்களின் படி இறைவனுக்கு உருவம் இல்லை, சிலைவணக்கம் கூடாது, இறைவன் ஒருவனே, ஆக வேதங்களின் படியும் நீங்கள் முஷ்ரிக்குகள் தான், உண்மையான இறைவேதங்களை நீங்கள் பின்பற்றுவதில்லை

ASHAK SJ said...

திராவிடம் என்ற வார்த்தை தமிழ்த்தாய் வாழ்த்திலும், தேசிய கீதத்திலும் உள்ளதே, அதுவும் கால்டுவெல் என்ற சதியா?

ASHAK SJ said...

எனது வரலாற்று பாடங்களில் படித்துள்ளேன், ஆரியர்கள் கைபர் போலன் கணவாய் வழியே மத்தியதரைக்கடலில் இருந்து வந்தார்கள் என்று, ஆனால் இன்றோ அதை அவர்களே ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் அன்போடு சூத்திரன் என்று அழைக்கப்படக்கூடியவர்கள் ஏற்றுக்கொள்ள தயார் இல்லை, இத்தனைக்கும் முலைவரி விதித்தார்கள், தொட்டால் தீட்டு என்றார்கள், மேலாடை அணியக்கூடாது என்றார்கள்