Followers

Sunday, November 25, 2018

'புவி ஈர்ப்பு விசை' பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது?

'புவி ஈர்ப்பு விசை' பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது?
'இறைவன் வானத்தை உயர்த்தினான்: தராசை நிலை நாட்டினான்: தராசில் நீங்கள் நீதி தவறக் கூடாது என்பதற்காக! நியாயமாக எடையை நிலைநாட்டுங்கள்: எடையைக் குறைத்து விடாதீர்கள்'
-குர்ஆன் 55:7-9
'அவன் வானத்தை உயர்த்தினான்' என்ற வாசகம் 'பெரு வெடிப்பு' கொள்கையை மெய்ப்பிக்கிறது. விஞ்ஞானிகள் என்ன கூறுகிறார்கள்? வானம் பூமி நட்சத்திரங்கள் அனைத்தும் ஒன்றாக இருந்து மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டு வானம் மேலே உயர்த்தப்பட்டது என்று கூறுகின்றனர். அதையேதான் குர்ஆனும் கூறுகிறது. இது பற்றி நான் முன்பே ஒரு பதிவு இட்டுள்ளதால் அதற்கு அடுத்து வரும் 'தராசை நிலை நாட்டினான்' என்ற வசனத்தின் விளக்கத்தை சற்று விரிவாகப் பார்ப்போம்.
உதாரணத்திற்கு 600 கிராம் உள்ள இரும்பு துண்டை நாம் வாழும் பூமியில் தராசில் வைத்து நிறுத்தோம் என்றால் 600 கிராமைக் காட்டும். இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை. அதே சமயம் அதே தராசில் அதே 600 கிராம் இரும்புத் துண்டை நீங்கள் நிலவில் வைத்து நிறுத்தீர்கள் என்றால் அதன் எடை வெறும் நூறு கிராமைத்தான் காட்டும். இதற்கு காரணம் நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையை விட ஆறு மடங்கு குறைவாகும்.
இதிலிருந்து நாம் விளங்குவது பூமியில் ஒரு பொருளை எடை போடும் போது அப் பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசையையே நாம் எடையாக காண்கிறோம் என்பது தெளிவாகிறது.
அந்த கால அரபிகளுக்கு புவி ஈர்ப்பு விசையைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவேதான் 'வானம் உயர்த்தப்பட்டு தராசு நிறுவப்பட்டது' என்று எளிமையான மொழி நடையில் மிகப் பெரும் அறிவியலை குர்ஆன் மனிதர்களுக்குப் போதிக்கிறது. இந்த வாக்கியத்தை இன்றைய அறிவியல் யுகத்தில் படிக்க வேண்டுமாயின் 'வானத்தை உயர்த்தினான்: புவி ஈர்ப்பு விசையால் நிலை நாட்டினான்' என்று படித்தால் இன்னும் அறிவியலோடு நெருங்கி வருவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.


1 comment:

Dr.Anburaj said...

ஐயோஐயோஐயோஐயோஐயோஐயோஐயோஐயோஐயோ
சுவனப்பிரியன் அறிவியலை தயவு செய்து அசிங்கப்படுத்தாதீர்கள். இருப்பை தங்கம் என்றால் சொன்னவனுக்கு அறிவில்லை என்பது ஒரு பக்கம்.இருப்பை கேலி செய்வதாகும். இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்வது குரானை கேவலப்படுத்துவதாகும்.
-------------------------------
இறைவன் வானத்தை உயர்த்தினான்: தராசை நிலை நாட்டினான்: தராசில் நீங்கள் நீதி தவறக் கூடாது என்பதற்காக! நியாயமாக எடையை நிலைநாட்டுங்கள்: எடையைக் குறைத்து விடாதீர்கள்'
-குர்ஆன் 55:7-9 '
பெரு வெடிப்பு கொள்கைக்கும் இந்த வசனத்திற்கும் சம்பந்தமில்லை. புமியில் மலைகள்தானம் புமி காற்றில் பறக்காமல் தடுக்கின்றது என்று கருத்து குரானில் உள்ளது.இது அபததம்.
வியாபாரத்தில் கள்ள தராசு வேலைகள் காட்ட வேண்டும்.சரியாக அளந்து நிறுத்து கொடுங்கள் என்று நோ்மையான குணம் பற்றி மட்டும்தான் இந்த குரான் வசனம் கூறுகின்றது.
ஈர்ப்பு விசை க்கும் இந்த வசனத்திற்கும் என்ன சம்பந்தம். நீங்கள் இவ்வளவு முட்டாளா ? இதையெல்லாம் நம்பும் அளவிற்கு முஸலீம்கள் என்ற அடி முட்டாள்களைக்கொண்ட ஒரு சமூகமா ? இயற்பியல் முஸ்லீம்கள் யாரும் படிக்கவில்லையா ? அப்படி படித்த ஒரு முஸ்லீம் இந்த கருத்தை ஆதரித்து பதிவு செய்வானா ?