Followers

Tuesday, November 20, 2018

விழிப்புணர்வு ஏற்படுத்திய #விதை_பந்து_வீசும்_பணி

விழிப்புணர்வு ஏற்படுத்திய #விதை_பந்து_வீசும்_பணி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம், தவ்ஹீத் ஜமாத் இராஜபாளையம் கிளை சார்பில் இன்று காலை 10 மணிக்கு இராஜுக்கள் கல்லூரியில் ஆரம்பித்து, மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் வரை 10,000 விதைப்பந்துகள் வீசும் அரும்பணி நடைபெற்றது.
காடுகள் வெகுவாக அழிந்து அல்லது அழிக்கப்பட்டு வரும் இவ்வேளையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இப்பணி மிகவும் தேவையான ஒன்று.
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..
----------------------------
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது கனிகளை) ஒரு பறவையோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால், அதன் காரணத்தால் ஒரு தர்மம் (செய்ததற்கான பிரதிபலன்) அவருக்குக் கிடைக்காமல் போகாது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் நூல்:முஸ்லிம் 3164





No comments: