Followers

Monday, August 25, 2014

ஜேம்ஸ் ஃபாலி கொலையில் பல மர்மங்கள்!



'ஐசிஐஎஸ் அமைப்புக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... நம்புங்க மக்களே... நம்புங்க' -ஒபாமா

-------------------------------------------------------------

நான் முன்பே எழுதியது போல் ஐசிஐஎஸ் அமைப்பானது அமெரிக்க இஸ்ரேலிய கூட்டு தயாரிப்பு என்பதற்கு ஆதாரங்கள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கின்றன. சகோதரர் கலையரசனும் இதே கோணத்தில் எழுதியுள்ளார்.....

2012 நவம்பர் மாதம் ஜேம்ஸ் ஃபாலி கடத்தப் பட்டு காணாமல்போயுள்ளார். அப்போது, சிரிய அரச படைகளே அவரைக் கடத்திச் சென்றதாக, வட அமெரிக்க ஊடகங்கள் சில அறிவித்தன. அப்படிச் சொல்வதற்கு ஒரு காரணம் இருந்தது. ஜேம்ஸ் ஃபாலி, இதே ISIS பயங்கரவாத நண்பர்கள் கொடுத்த தகவல்களைத் தான், செய்திகளாக சேகரித்து அனுப்பிக் கொண்டிருந்தார்.

ஜேம்ஸ் ஃபாலி என்ற அமெரிக்க ஊடகவியலாளரின் கொலை, உண்மையிலேயே நடந்ததா என்பதே சந்தேகத்திற்குரியது. ஆனால், அதைக் கொண்டு உலக மக்கள் முழுவதையும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்துவதற்கு, ஊடகங்கள் அயராது பாடுபட்டன. என்ன இருந்தாலும், அமெரிக்க இரத்தம் விலை மதிப்பற்றது அல்லவா?

ஒரு ISIS ஜிகாதிப் போராளி, அமெரிக்க ஊடகவியலாளர் ஜேம்ஸ் ஃபாலி (James Foley) இன் தலையை வெட்டிக் கொன்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தக் காட்சிகளை படமாக்கிய ISIS, வழமை போல அந்த வீடியோவையும் யூடியூப்பில் போட்டதாக கூறப் படுகின்றது. ஆனால், அதைப் பார்த்தவர்கள் மிக மிகக் குறைவு. Google நிறுவனத்திற்கு சொந்தமான Youtube, அந்த வீடியோவை உடனே அழித்து விட்டது.

இன்னொரு விசித்திரமான சம்பவம் நடந்தது. Twitter நிறுவனம், அந்த வீடியோவை அல்லது தலை வெட்டும் காட்சிகளை பகிர்ந்து கொள்வோரின் டிவிட்டர் கணக்கு இடைநிறுத்தப் படும் என்று அறிவித்தது. ஏற்கனவே பகிர்ந்து கொண்டவர்கள் இரண்டு நாட்களுக்கு டிவிட்டர் பக்கம் வர விடாமல் தண்டிக்கப் பட்டார்கள்.

இந்தத் தகவலை டிவிட்டரே நேரடியாக ஊடகங்களுக்கு அறிவித்திருந்தது. ஏற்கனவே, ISIS சிரியாவில் பலரது தலைகளை துண்டித்து, அவற்றை பகிரங்கமாக இணையத்தில் வெளியிட்டது. அவை டிவிட்டரில் பல தடவைகள் பகிர்ந்து கொள்ளப் பட்ட போதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

ஜேம்ஸ் ஃபாலி கொலைக் காட்சிகளை காட்டும், அமெரிக்க அரசினால் தேர்ந்தெடுக்கப் பட்ட புகைப்படங்கள் மட்டும் அனுமதிக்கப் பட்டன. அதைத் தான் தற்போது எல்லா ஊடகங்களும், சமூக வலையமைப்புகளும் பயன்படுத்தி வருகின்றன. மேலும் ISIS ஏற்கனவே பல நூற்றுக் கணக்கானோரின் தலைகளை வெட்டிய பொழுது கவனிக்காத ஊடகங்கள், ஒரு அமெரிக்கரின் கொலைக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்தன.

அமெரிக்கா தானே வளர்த்து விட்ட இசிஸ் எனும் பூதத்துடன் போரிட்டு அடக்கப் போவதாக தம்பட்டம் அடித்துக் கொண்டு திரிகின்றது. இது வரை காலமும், அமெரிக்க விமானங்கள் போட்ட குண்டுகள் இசிஸ் அமைப்பை நிலைகுலைய வைக்கவில்லை. யாருமற்ற பாலைவனத்தில் குண்டு போட்டால் என்ன பிரயோசனம்? எந்த நாட்டின் ஆதரவும் இல்லாத இந்த தீவிரவாதிகளை ஒடுக்குவது அமெரிக்காவுக்கு பெரிய வேலையே அல்ல. ஆனாலும் அவர்கள் காரியம் முடியும் வரை செய்ய மாட்டார்கள். :-)

முன்பு தாலிபான்களை வளர விட்டு ரஷ்யாவுக்கு நெருக்கடியை கொடுத்தனர். பிறகு வேலை முடிந்தவுடன் தாலிபான்களை அழிக்கிறோம் என்று சொல்லி ஆப்கனை ஆக்கிரமித்தனர். அதே போல் சிரியாவுக்கும், ஈரானுக்கும், ரஷ்யாவுக்கும் நெருக்கடி கொடுக்க ஐசிஐஎஸ் என்ற அமைப்பை உருவாக்கி அதற்கு ஆதரவும் கொடுத்தனர். அவர்களின் வேலை முடிந்தவுடன் 'தீவிரவாதிகளை அழிக்கிறோம்' என்ற பெயரில் ஈராக்கிலும், சிரியாவிலும் தங்கள் கடையை பரப்பி ஆயுத வியாபாரத்தை ஜோராக நடத்த ஆரம்பிப்பர். இதன் கடைசி கட்டம் தான் ஐசிஐஎஸை ஒழிக்க போகிறோம் என்று அமெரிக்கா களம் இறங்கியிருக்கிறது.

நமது நாட்டிலும் நமது உளவுத்துறை 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற கற்பனை அமைப்பை உருவாக்கி அனைத்து தீவிரவாத செயல்களையும் ஊக்குவித்து பழியை அந்த அமைப்பின் மேலும் அப்பாவி இஸ்லாமியர்கள் மேலும் போட்டு வந்ததை நாமெல்லாம் அறிவோம். அரசு மட்டத்தில் இஸ்ரேலின் மொசாத் பல உதவிகளை நமது ராணுவத்துக்கு செய்து வருவதும் நாம் அறிவோம். அதே ஃபார்முலாதான் ஈராக்கிலும், சிரியாவிலும் செயல்படுத்தப்படுகிறது.

உசாமா பின் லாடனை வேலை முடிந்தவுடன் எவ்வாறு கொன்றார்களோ அதே போல் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பக்தாதிக்கும் அந்த நிலைமையே வரலாம். அமெரிக்க, யூத அரசியல் பகடைக் காயில் அடுத்த விட்டில் பூச்சி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பென்றால் மிகையாகாது.

ஐசிஐஎஸ்ஸை அமெரிக்கா வளர்த்து விட்டதால் இஸ்லாத்தின் பெயரையும் களங்கப்படுத்தி அமெரிக்காவில் இஸ்லாம் பரவுவதை இதன் மூலம் தடுக்க முடியும். ஈராக்கிலும், சிரியாவிலும் தனது ராணுவத்தை நிலை நிறுத்தி பல ஆண்டு காலம் அந்நாட்டு செல்வங்களை கொள்ளையடிக்கவும் முடியும்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

10 comments:

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியன்,

நீங்கள் தினமும் பதிவுகளை எழுதி, பிற இஸ்லாமிய தளங்களிலிருந்து காபி பேஸ்ட் செய்து எங்களை சிரிக்க வைக்கும் சேவையை செய்து வருகிறீர்கள். அந்த வரிசையில் இந்த பதிவும் ஒன்று. நீர் சரியான தமாஷ் பேர்வழிப்பா!

Anonymous said...

dear suvana,
it would be better if you stop this type of arguments. as such muslims name are tarnished across the world by the stupid isis. dont complicate it. there is no problem for people like you who live in a complete muslim village in tamilnadu. for people like us who live in chennai/bangalore/mumbai among non muslims, one small flame is enough like it happened in gujarat. dont create hatred for muslims among non muslims. as per my interaction with non muslim friends in chennai the situation has completely changed in last 10 years. now most of the people are looking at muslims with suspicion. it has been proved that isis are very stupid and crazy people. shifting the blame to US or on is ral is not correct. isis are not kids and they should know what is right and what is not.

suvanappiriyan said...

//நீங்கள் தினமும் பதிவுகளை எழுதி, பிற இஸ்லாமிய தளங்களிலிருந்து காபி பேஸ்ட் செய்து எங்களை சிரிக்க வைக்கும் சேவையை செய்து வருகிறீர்கள். அந்த வரிசையில் இந்த பதிவும் ஒன்று. நீர் சரியான தமாஷ் பேர்வழிப்பா! //

இந்த செய்திகள் இஸ்லாமிய தளங்களிலிருந்து எடுத்தவை அல்ல. கூகுளில் செர்ச் செய்தால் அனைத்தும் கிறித்தவர்களின் ஆய்வுகளாக வந்து விழுகின்றனது. முயற்சித்துப் பார்க்கவும். :-)

suvanappiriyan said...

// isis are not kids and they should know what is right and what is not. //

ஆம்.... அமெரிக்க யூத கைக் கூலிகளுக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாத குழந்தைகள் அல்ல என்பது உண்மையே! அவர்களுக்கான பணமுடிப்புகள் அவர்கள் கணக்குக்கு மாதா மாதம் சென்று கொண்டிருக்கும் போது எதை செய்தால் என்ன?

Anonymous said...

என்னவோ முஸ்லிம்கள் இப்பொழுதுதான் ஒபாமா பேச்சைக் கேட்டு இப்படி செய்கிறார்கள் என்பதுபோல் சொல்கிறீர்கள். முகமது முதற்கொண்டு 1400 வருடமாக தலை வெட்டுவது, கட்டாய மத மாற்றம், காபிர் பெண்களை கற்பழிப்பது, அடிமை சந்தையில் விற்பது என்று ஜோராக செய்து வருகிறார்களே ? விட்டால் முகமதுவே ஒபாமா சொல்லித்தான் இதையெல்லாம் செய்தார் என்பீர்கள் போலும். இஸிஸ் ஒபாமாவின் கண்டு பிடிப்பு என்றே வைத்துக் கொள்வோம். இஸிஸ் செய்வது ஏதாவது இஸ்லாமுக்கு எதிராக இருக்கின்றதா ? அப்புறம் எதற்காக இது யூத அமெரிக்க சதி என்கிறீர்கள் ? இஸ்லாம் சொன்னதற்கு மாற்றமாக சொன்னால் மறு பரிசீலினை செய்யலாம். இஸிஸ் சொல்வது செய்வது எல்லாமே குரான், அதீஸ் அடிப்படையில்தானே ? பிறகு ஏன் இஸிஸ் இஸ்லாம் அடிப்படையில் செயல்படவில்லை என்று சொல்கிறீர்கள் ?
மறைக்க முயற்சித்தது வெளிவந்துவிட்டது என்பதாலா ? இன்னும் எவ்வளவு காலத்துக்கு தற்காக்க முடியும். இணையம் வந்த வேகத்திலேயே இஸ்லாமுடைய உண்மையான முகம் தெரிய ஆரம்பித்து விட்டதே.

suvanappiriyan said...

//1400 வருடமாக தலை வெட்டுவது, கட்டாய மத மாற்றம், காபிர் பெண்களை கற்பழிப்பது, அடிமை சந்தையில் விற்பது என்று ஜோராக செய்து வருகிறார்களே ? //

ஹி..ஹி...

உங்கள் அறியாமையைக் கண்டு வியக்கேன்!

இதெல்லாம் யூதர்கள் கட்டவிழ்த்து விட்ட பொய்கள். இன்று இந்தியாவில் பார்பனர்கள் இஸ்லாத்தின் மேல் பழி போட்டு குண்டு வைப்பது போல். இதை எல்லாம் புறம் தள்ளி இன்று அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என்று தனது பரந்த கரத்தை இஸ்லாம் விரித்து பல ஆண்டுகளாகிறது.

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியன்,

//உங்கள் அறியாமையைக் கண்டு வியக்கேன்!//

உங்களுடைய நயவஞ்சக பொய்களை கண்டு வியக்கிறோம்.

//இதெல்லாம் யூதர்கள் கட்டவிழ்த்து விட்ட பொய்கள். இன்று இந்தியாவில் பார்பனர்கள் இஸ்லாத்தின் மேல் பழி போட்டு குண்டு வைப்பது போல்.//

இது வழக்கமாக முஸ்லிம்கள் செய்யும் தக்கியா(பொய் பிரசாரம்).

//இதை எல்லாம் புறம் தள்ளி இன்று அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என்று தனது பரந்த கரத்தை இஸ்லாம் விரித்து பல ஆண்டுகளாகிறது.//

வட ஆப்பிரிக்காவிலிருந்தும் மத்திய கிழக்கிலிருந்தும் முஸ்லிம்கள் பெருவாரியாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் குடியேறிவருகின்றனர். குடியேறிய அவர்கள் பன்றிகளை போல டஜன் கணக்கில் குழந்தைகளை பெற்று இஸ்லாத்தை அங்கே வளர்க்க முயல்கின்றனர். முஸ்லிம்களுக்கு இது எல்லாம் பெருமையா? அந்த நாடுகளில் முஸ்லிம்கள் செமத்தையாக உதை வாங்க போகின்றனர்.

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியன்,

//இந்த செய்திகள் இஸ்லாமிய தளங்களிலிருந்து எடுத்தவை அல்ல. கூகுளில் செர்ச் செய்தால் அனைத்தும் கிறித்தவர்களின் ஆய்வுகளாக வந்து விழுகின்றனது. முயற்சித்துப் பார்க்கவும். :-)//

இந்த பதிவு இஸ்லாமிய தளங்களிலிருந்து காபி பேஸ்ட் செய்தீர்கள் என்று நான் சொல்லவில்லை. நீங்கள் சுயமாக சிந்தித்தும்(!?) மற்ற இஸ்லாமிய தளங்களிலிருந்து காபி பேஸ்ட் செய்தும் பற்பல பொய்களை சொல்லி எங்களுக்கு அனுதினமும் சிரிப்பு காட்டி வருகிறீர்கள் என்றுதான் சொன்னேன்.

Anonymous said...

கீழே கொடுக்கப்பட்ட வசனங்கள் எல்லாமே குரானில் இருந்து தரப்பட்டது. இதையும் யூதன் மாத்திபுட்டான் என்பீர்கள் போலும்.

அதீஸ்கள் பற்றி சொல்லவே வேணாம். அதன் நாற்றத்தை தாங்கமுடியாமல்தான் பல முஸ்லிம்கள் குரான் மட்டுமே உண்மை என்று கதற ஆரம்பித்து விட்டார்கள்.

நீங்கதான் ரொம்ப அறின்ஜவராச்சே பதில் சொல்லுங்க பாப்போம். போரில் பிடிபடும் காபிர் பெண்களோடு உறவு கொள்ள குரான் அதீஸ் அனுமதிக்கிறதா இல்லையா ?

கொஞ்சம் கொஞ்சமாக இந்த அதீஸ் பொய் அந்த அதீஸ் பொய் என்று சொல்லிக்கொண்டு கடைசியில் நீங்களும் குரானிஸ்ட் ஆகி விடுவீர்கள் போலும். குரானிஸ்ட் ஆனாலும் கஸ்டம்தான். ஏனென்றால் குரானிலும் எகப்பட்ட கொலைவெறி, கற்பழிப்பு ( வலது கைக் கொண்டவர்கள் ) வசனங்கள் உள்ளது. யூதன் குரானில் கைவைத்துவிட்டான் என்று சொல்லிப்பாருங்கள். ஒருவேளை அது உதவலாம்.

When you meet the unbelievers, strike off their heads; then when you have made wide slaughter among them, carefully tie up the remaining captives 47:4.

The punishment of those who wage war against Allah and His Messenger, and strive with might and main for mischief through the land is: execution, or crucifixion, or the cutting off of hands and feet from opposite sides, or exile from the land: that is their disgrace in this world, and a heavy punishment is theirs in the Hereafter 5:33

O PROPHET! Behold, We have made lawful to thee thy wives unto whom thou hast paid their dowers, as well as those whom thy right hand has come to possess from among the captives of war whom God has bestowed upon thee. 33:50

And [also prohibited to you are all] married women except those your right hands possess. [This is] the decree of Allah upon you. And lawful to you are [all others] beyond these, [provided] that you seek them [in marriage] with [gifts from] your property, desiring chastity, not unlawful sexual intercourse. So for whatever you enjoy [of marriage] from them, give them their due compensation as an obligation. And there is no blame upon you for what you mutually agree to beyond the obligation. Indeed, Allah is ever Knowing and Wise. 4:24

Anonymous said...

ஆனந்த் சாகர்,
உமக்கு சுவனப்பிரியன் சொல்லும் அல்லது அவர் பதிவிடும் விஷயத்தில் உடன்பாடு அல்லது நம்பிக்கை இல்லை என்றால் அப்பறம் எதற்க்காக அனுதினமும் வந்து கருத்து பதிவிடுகிறேன் என்ற பெயரில் ஏன் திட்டி செல்கிறீர். ஏதேனும் வேண்டுதலோ ?