Followers

Thursday, April 30, 2015

நேபாள துயர் துடைப்பில் ஜமாத் ஏ இஸ்லாமி ஹிந்த்!







நமது இந்தியாவின் பக்கத்து நாடான நேபாளத்தில் வரலாறு காணாத பேரழிவு பூகம்பத்தால் ஏற்பட்டுள்ளது. பொது மக்களின் தயர் துடைப்பில் அரும் பணியாற்றி வரும் ஜமாத் ஏ இஸ்லாமி ஹிந்த் தனது பங்காக போர்வைகள், உணவுப் பொருட்கள், தண்ணீர், டென்ட் அமைத்துக் கொடுத்தல் போன்ற அத்தியாவசியப் பணிகளை ஏற்கெனவே செய்து வருகிறது. இழப்பு மிக அதிகம் என்பதால் மீட்பு பணிகள் மந்த கதியில் நடந்து வருகிறது. அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மழையையும் பொருட்படுத்தாது பெரும் சேவை செய்து வருகின்றன. ஜமாத் ஏ இஸ்லாமி ஹிந்த் பொது மக்களிடமிருந்து நன்கொடைகளை எதிர்பார்க்கிறது. வசதி படைத்தவர்கள் சிரமத்தில் ஆழ்ந்துள்ள நமது அண்டை நாட்டு சகோதரர்களின் தயர் துடைக்க தங்களால் இயன்ற உதவிகளை கீழே வரும் விலாசத்திற்கு அனுப்பி வைக்கவும். இறைவனுக்கு பயந்து முறையாக அதனை நாங்கள் விநியோகம் செய்வோம் என்று உறுதி கூறுகிறோம்.

Regards,
Nusrat Ali
Secretary General
Jamaat-e-Islami Hind

Cheque or Draft should be in favour of:
MARKAZ RELIEF FUND
JAMAAT-E-ISLAMI HIND
A/c No. 1447308475
Central Bank of India
Sukhdev Vihar, New Delhi-110025
Branch Code-02953
IFS Code- CBIN0282953

Cheque or Draft should be sent to the following address:
Secretary General
JAMAAT-E-ISLAMI HIND
D-321, Dawat Nagar, Abul Fazl Enclave,
Jamia Nagar, Okhla, New Delhi-110025
Cont. No. 09818996951 / 08826732590

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் 60 : 8

1 comment:

UNMAIKAL said...

தமிழக ஊடகங்கள் திருந்தவே திருந்தாதா ?


மீட்பு மற்றும் உயிர்காக்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவம்....!!

இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட நாடான நேபாளில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் முதலுதவியாக பாகிஸ்தான் ராணுவம் நேபாள் விரைந்து அங்கு நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்து அவர்களுக்காகவே தனி முகாம் அமைத்து மருத்துவ உதவி, உணவுகளை வழங்கி மனிதநேயத்தை பறைசாற்றினர்.

பாகிஸ்தானை பற்றிய ஒரு முகத்தை மட்டுமே பிரதிபலித்த ஊடகங்கள், பாகிஸ்தானின் உண்மை முகமான மனிதநேயத்தை எந்த ஊடகமும் வெளிப்படுத்தவில்லை.
மாறாக இழிவுப்படுத்தவே விரும்பினர்.

அதேபோல் அரபு நாடுகளில் ஒன்றான கத்தார் 10 மில்லியன் டாலர் மற்றும் மருந்து பொருட்கள், உணவுகளை வழங்கி அவர்களும் மனிதநேயத்தை உலகுக்கு பறைசாற்றினர்.

அதேபோல் சிங்கப்பூர் முஸ்லிம் நாடாக இல்லாமல் இருந்தாலும் சிங்கப்பூரிலுள்ள 68 பள்ளிவாசல்களிலும் நிவாரண நிதி வசூல் செய்து கொடுத்தனர்.
ஏழை நாடான நேபாள் இந்து நாடாக இருந்தாலும் உலகிலுள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளும் நேபாளின் துயரத்தில் பங்கெடுத்து மனிதநேயத்தை பறைசாற்றி வருகின்றனர்.

இது தான் இஸ்லாம்,

முஸ்லிம்களின் மனிதநேயத்தை இந்துத்துவா பாடம் படிக்க வேண்டும்.

இந்து வேறு - இந்துத்துவா வேறு...

மதவெறியை மாய்த்து மனிதநேயத்தை வளர்ப்போம்.

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....

தமிழக ஊடகங்கள் திருந்தவே திருந்தாதா ?

இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட நாடான நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் பாகிஸ்தான் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் நாடுகள் நேபாளுக்கு பில்லியன் கணக்கான கோடிகளையும் கொடுத்து மீட்பு பணியிலும் சிறப்பாக ஈடுபட்டு, அங்கே முகாம் அமைத்து உணவு மருத்துவ உதவிகள் வழங்கி சிறப்பாக சேவையாற்றி வருகின்றனர்.

அதைப்பற்றி ஒரு வரிக்கூட எழுத வக்கற்ற தமிழக ஊடகங்கள்....
பாகிஸ்தானிலிருந்து சென்ற உணவுப்பொருளில் மாட்டிறைச்சி இருந்ததாகவும், அதனால் நேபாள் இந்துக்கள் மாட்டிறைச்சியை உண்பதற்கு முகம் சுழித்து திருப்பி அனுப்பியதாக தினத்தந்தி, தினமலர், தினகரன் உள்ளிட்ட பெரும்பாலான தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு முஸ்லிம்கள் மீதான வெறுப்பை உருவாக்குவதற்கு முயன்றுள்ளன.

தமிழக ஊடகங்கள் சோற்றை திண்கிறார்களா இல்லை இந்துத்துவா காவிக்களின் மலத்தை திண்கிறார்களா என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு தமிழக ஊடகங்கள் இன்று இஸ்லாமிய வெறுப்பை உமிழ்ந்துள்ளது.

இந்தியாவிலுள்ள இந்துக்களில் 90 சதவீத மக்கள் எப்படி மாட்டிறைச்சியை சாப்பிடுவார்களோ அதேப்போன்று நேபாளிலுள்ள 95 சதவீத இந்துக்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்பவர்கள்.

அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரம் மாடுகளை வெட்டி திருவிழா நடத்துவார்கள்.

பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் நாடுகளிலிருந்து வந்த உணவுப்பொருளை நேபாள் மக்கள் இன்முகத்துடன் பெற்று உணவு உண்டது மட்டுமின்றி நெஞ்சுணர்வோடு நன்றியும் கூறியுள்ளனர்.

உண்மை நிலை இவ்வாறு இருக்க நடக்காத ஒரு நிகழ்வை நடந்ததாக பொய் செய்தி வெளியிட்டு முஸ்லிம்கள் மீதான வெறுப்பை உமிழ்ந்த தமிழக ஊடகங்கள் திருந்த வேண்டும். - முகநூல் முஸ்லிம் மீடியா

.