Followers

Monday, July 13, 2015

விம்பிள்டன் டென்னிஸ் கோப்பையை வென்றார் சானியா!



விம்பிள்டன் டென்னிஸ் கோப்பையை வென்றார் சானியா!

விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் வென்றதன் மூலம், மகளிர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை சானியா மிர்சா படைத்துள்ளார்.

வாழும் நபர்களில் நமது இந்திய நாட்டுக்கு உலக அளவில் பெயர் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நபர்களில் சானியா மிர்ஸாவும் தற்போது சேர்ந்து கொண்டுள்ளார். ராக்கெட் தொழில் நுட்பத்தில் கொடி கட்டி பறந்த அப்துல் கலாம் ஒரு பக்கம்: ஆஸ்கார் விருது வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான் ஒரு பக்கம். உலக மக்களை இன்றும் கவர்ந்து இழுத்துக் கொண்டிருக்கும் தாஜ்மஹால், செங்கோட்டை ஒரு பக்கம். பாலிவுட் நட்சத்திரங்களாக வலம் வரும் ஷாருக் கான், சல்மான் கான், அமீர்கான் இது ஒரு பக்கம்..

மேலும் இன்னும் சில ஆண்டுகளில் இந்தோனேஷியாவை பின்னுக்கு தள்ளி விட்டு உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இஸ்லாமியர்கள் வாழும் நாடாக இந்தியா மாறி விடும் என்று கருத்துக் கணிப்புகளும் சொல்கின்றன. இது மட்டுமல்லமால் பிஸ்மில்லா கான், ஜாகிர் ஹூசைன் என்று வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம்!

இந்துத்வாவாதிகளின் ஆட்சியில் இப்படி இந்தியாவின் அடையாளங்களாக இஸ்லாமியர்கள் மாறி வருவது தற்காலங்களில் அதிகமாயுள்ளது. மோடியும், அமீத்ஷாவும் என்றைக்கு இவர்களை எல்லாம் பாகிஸ்தானுக்கு அனுப்பி விட்டு ராம ராஜ்யம் அமைக்கப் போகிறார்களோ! அந்த ராமனுக்கே வெளிச்சம்! :-)

No comments: