
'ஃபர்சானா'வுக்கு இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து வைத்த ரெட்டி தம்பதிகள் !
ஆந்திராவை சேர்ந்த மாதவ ரெட்டி- லக்ஷ்மி ரெட்டி தம்பதிகள், தங்கள் ஒரே வளர்ப்பு மகளான 'ஃபர்சானா'வுக்கு இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து வைத்தனர்.
பர்சானா சிறு குழந்தையாக இருந்தபோது, அவரது பெற்றோர் இருவரும் இறந்துவிட்ட நிலையில், பார்சானாவை தத்தெடுத்து வளர்த்து வந்தனர் ரெட்டி தம்பதிகள்.
குழந்தை பாக்கியம் இல்லாத ரெட்டி தம்பதிகள், பர்சானா'வை தங்கள் குழந்தையாகவே செல்லமாக வளர்த்து வந்தாலும், அக்குழந்தைக்கு 'குர்ஆன்' உள்ளிட்ட இஸ்லாமிய அடிப்படைக் கல்வியை கொடுப்பதிலும் எந்தக் குறையும் வைக்கவில்லை.
இறுதியாக, பர்சானாவுக்கு இஸ்லாமிய முறைப்படியே திருமணமும் செய்து வைத்துள்ளனர், இந்த ரெட்டி தம்பதிகள்.
குறிப்பு :
ஒரு முஸ்லிம் தம்பதியும், ஹிந்து வளர்ப்பு மகளுக்கு அவரது மதவழக்கப்படி மணம் முடித்து வைத்த ஒரு சம்பவமும் சமீபத்தில் நடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
— with Rajesh Muthupandi.
தொழுவதற்கு தனி அறையும், குர்ஆன் ஓத ஏற்பாடுகளும் செய்து கொடுத்துள்ளனர் இந்த ரெட்டி தம்பதியினர். இறைவன் இவர்களின் நல்ல அமல்களை பொருந்திக் கொண்டு வருங்காலங்களிலும் நெரிய வழியில் பயணிக்க அருள் புரிவானாக!
சாதி பாகுபாடு கொண்ட ஒருவரையொரவர் வெட்டிக் கொண்ட சாவும் தலித், வன்னிய, நாடார், தேவர் இன மக்கள் இந்த தம்பதியிடமிருந்து பாடம் படித்துக் கொள்வார்களாக!
No comments:
Post a Comment