Followers

Tuesday, September 01, 2015

பார்பனர்கள் எவ்வளவு படித்தாலும் சாதியை விடுவதில்லை!




60 வருட போராட்டத்துக்குப் பிறகு இப்போதுதான் தலித்கள் பிற்படுத்தப் பட்டோர், இஸ்லாமியர்கள் ஓரளவு அரசு உத்தியோகங்களில் நுழைந்து தங்களின் பொருளாதாரத்தை சற்று உயர்த்தியுள்ளார்கள். ஆண்டாண்டு காலமாக அரசு உத்தியோகத்திலேயே இருந்து ருசி கண்ட மேல் சாதியினருக்கு இது பொருக்குமா? எனவே எந்த வகையிலாவது இந்த இட ஒதுக்கீட்டை தூக்கி விட அயராது உழைக்கின்றனர். பிற்படுத்தப்பட்ட மக்களையே இதற்கு பகடைக் காய்களாக பயன்படுத்துகின்றனர். இந்துத்வாக்களின் திறமையே இதுதான். எந்த குற்றங்கள் நடந்தாலும் தங்கள் பெயர் வெளி வராமல் பார்த்துக் கொள்வர்.

இடஒதுக்கீட்டை முற்றிலுமாக நீக்கி விடலாம்! அது எப்போது? சாதி வாரியாக மத வாரியாக அந்தந்த மக்களின் பிரதிநிதித்துவத்துக்கு ஏற்ற அரசு உத்தியோகங்களை சம்பந்தப்பட்டவர்கள் என்று பெறுகிறார்களோ அன்று நீக்கி விடலாம். தங்களின் விகிதாச்சாரத்துக்கு அதிகமாக எந்த சாதி அரசு வேலைகளை ஆக்கிரமித்துள்ளதோ அவர்கள் தாங்களாகவே முன் வந்து தங்கள் வேலைகளை உதறி விட வேண்டும். எல்லா மக்களுக்கும் சம உரிமை கிடைத்து விட்டது என்பதை அரசும் உறுதி செய்ய வேண்டும். இந்த நிலை என்று வருமோ அன்று இந்த இட ஒதுக்கீட்டையே முற்றிலுமாக தூக்கி விடலாம்.

இட ஒதுக்கீடு இவ்வளவு நடைமுறையில் இருந்தும் இன்றும் அரசு உத்தியோகங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் யார் என்பதை குஷ்வந்த் சிங் அழகாக எடுத்துக் காட்டுகிறார்.மொத்த மக்கள் தொகையில் இரண்டு சதவீதமே இருக்கும் பார்பனர்களின் நிலை இதுதான். நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்!

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர்!

உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பிராமணர்கள் 166 பேர்!

வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பிராமணர்கள் 58 பேர்!

பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்!

மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பிராமணர்கள் 250 பேர்!

கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள்3300 பேர். அதில் பிராமணர்கள் 2376 பேர்!

பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில் பிராமணர்கள் 190 பேர்!

ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பிராமணர்கள் 89 பேர்!

-குஷ்வந்த் சிங் (சண்டே 23-29 டிசம்பர் இதழ் )

1 comment:

Dr.Anburaj said...

முஸலீம்களும் தாங்கள் சாா்ந்த முஸலீம் என்ற சாதியை விட்டுக் கொடுப்பதில்லை