Followers

Monday, September 28, 2015

சாய் ராம் பொறியியல் கல்லூரியின் சுற்றறிக்கை!



'ஈக்கள், கொசுக்கள், குரங்குகள் மற்றும் நாய்கள் கல்லூரி வளாகத்தில் தற்போது அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் மாணவ மாணவிகள் கொண்டு வரும் புலால் உணவுகளேயாகும் என்று அறியப் படுகிறது. எனவே வரும் 21-09-2015 முதல் அனைத்து மாணவ மாணவிகளும் மாமிச உணவுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாணவ மாணவிகள் சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்'

-சாய் ராம் இன்ஜினியரிங் கல்லூரி

தயிர் சாதம், புளி சாதம், போன்ற மற்றும் எண்ணெய் நெய்க்களால் பொறிக்கப்பட்ட பதார்த்தங்களைக் கொட்டுவதால் கொசு, ஈ பெருகாதா? குரங்கு மாமிசப் பட்சிணி அல்லவே? நாய் சைவம் அசைவம் இரண்டையும் சாப்பிடுமே...

இவர்களின் அக்கறை தூய்மையாக்குவதில் இல்லை. 'நான் என்ன சாப்பிடுகிறேனோ அதனையே நீயும் சாப்பிட வேண்டும்' என்ற அதிகார மமதை தவிர வேறொன்றுமில்லை.

இவர்கள் இனிமேலும் திருந்துவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

2 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

சாய்ராம் பார்ப்பனருக்கு குரங்கு அனுமார் கடவுள், நாய் பைரவன் கடவுள் அல்லவா?. அவர்களுடைய கடவுளை கல்லூரிக்குள் வரவழைத்த மாணவ மாணவியருக்கு அவார்டு தந்து கௌரவிக்காமல் எச்சரிப்பது நியாயமா?.

Dr.Anburaj said...

சைவ உணவு சுத்தமாக வைத்திருக்க சுலபமானது.எனவே சாய்ராம் கல்லூாி நிா்வாகம் செய்தது சாிதான். சைவஉணவை உண்டு உடலை நல்ல முறையில் வை த்திருக்க அறிவுரை அளித்திருப்பது நல்லதுதானே!

ஏன் இந்த அரேபிய அடிமைத்தனம்.,,??????