
ஒரு ஆளுக்கு பத்தாயிரம் ரூபாய் என சராசரியாக வைத்து கொண்டாலும் காகா கம்பனியில் இருந்து இந்தியாவுக்கு ஒரு லட்சம் பேர் சம்பாதிக்கும் பணத்தால் அமீரகத்தில் இருந்து வரும் அன்னிய செலாவணி என்பது மட்டும் 100 கோடி ரூபாய்.
வருடத்துக்கு 1200 கோடி ரூபாய். மிகப்பெரிய பணம் காகா அப்துல் ரஹ்மான் அவர்களால் இந்தியா பயன் பெறுகின்றது. சுமார் ஒரு லட்சம் தமிழர்கள் வீட்டு அடுப்பு எரிகின்றது. அவர்கள் வாழ்வு சிறக்கின்றது. அவர்கள் மகள் திருமணம் நடக்குது. அவர்கள் மகன் படிப்பும், மகள் படிப்பு, அவர்கள் சொந்த வீடு என எல்லா கனவும் நனவாகின்றது. கிட்ட தட்ட ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய எல்லா பொறுப்பும் காகா ஏற்கின்றார். அதே போல பல இளைஞர்கள் அங்கே வேலை வாய்ப்புக்கு போவதால் மற்றவர்களுக்கு இங்கே "போட்டி" குறைகின்றது. ஆக எப்படி பார்த்தாலும் காகா அவர்களுக்கு இந்த மறைவுக்கு பின்னராவது பத்மவிபூஷன் தர வேண்டும். பாபா ராம்தேவ் என்ன செஞ்சு கிழிச்சான்? அவனுக்கே பத்ம விருதுக்கு அரசு சிந்திக்கும் போது அப்துல்ரஹ்மான் காகாவுக்கு கண்டிப்பாக பத்ம விருது கொடுத்தே ஆக வேண்டும்.
ஏனெனில் அங்கே ETA கம்பனியில் இருப்பது கீழக்கரை இஸ்லாமியர்கள் மட்டும் அல்ல, அங்கே பார்ப்பனர்கள் உள்ளிட்ட இந்துக்கள், கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் என எல்லா தமிழர்களும் தான் இருக்கின்றனர். சம நிலையில் இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் அங்கே மதம் என்பது இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை..
எனவே அவருக்கு தான் பத்ம விருதுகளில் முதன்மையான விருதை கொடுக்க வேண்டும். இங்கே ராம்தேவ் போன்றவர்களின் மத காழ்ப்புணர்வுகளுக்கு அரசு இடம் கொடுக்காமல் அப்துல்ரஹ்மான் காகாவுக்கு கொடுத்தால் தான் இந்தியாவில் மதசார்பின்மை என்பது
உண்மையாகும்!
- அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்
மயிலாடுதுறை
No comments:
Post a Comment