Followers

Friday, January 08, 2016

எச்சில் இலையில் புரண்டால் நோய் தீர்ந்து விடுமா?



கர்நாடகாவில் பிராமணர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு கோவில் இது.

இந்த கோவிலின் சிறப்பம்சம்... பிராமணர்கள் சாப்பிட்டு வீசிய எச்சில் இலை மீது பிற ஜாதியினர் படுத்து உருண்டால் அவர்களுக்கு தோல் சம்பந்தமான நோய்கள் வராது என்று இந்த கோவிலை நிர்வகிக்கும் பிராமணர்கள் எழுதி வைத்துள்ள ஐதீகமாம். பிராமணர் அல்லாத பிற ஜாதியினர் வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்தோடு கூட்டம் கூட்டமாக வந்து எச்சில் இலை மீது படுத்து உருண்டு விட்டு செல்கிறார்கள்.

இதை தவறு என்று விளங்காமல் உலகில் எவ்வளவு பெரிய படிப்பை நீ படித்து இருந்தாலும் நீ ஒரு முட்டாளே. நாங்கள் இந்துக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்ள கூடிய எந்த இந்துத்வா அமைப்பும் இதை கண்டிக்காது. காரணம் இது பிராமணர் நலன் சார்ந்த விஷயம்.

இந்த கொடுமையை, கடவுள் மறுப்பு கொள்கையில் இருக்கும் பகுத்தறிவுவாதி மட்டும் தான் கண்டிக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆறறிவு கொண்ட ஒவ்வொரு மனிதனும் இதை கண்டிக்க வேண்டும்.

- அருண்குமார்

-------------------------------------------------

சுய மரியாதையுடைய இந்துக்கள் இது போன்ற பழக்கங்களால் வெறுப்புற்று இஸ்லாத்தை நோக்கி வருகின்றனர். இதனை பார்த்து வெறுப்புற்ற இந்துத்வாவினர் இஸ்லாமியரின் மீது வன்முறையை ஏவுகின்றனர்.

இந்துத்வாவாதியினரே! உங்கள் மதத்தில் உள்ள குறைகளை களைந்து விட்டாலே மத மாற்றங்களை தடுத்து விடலாம். ஆனால் அதனை செய்ய மாட்டீர்கள். ஏனெனில் காலாகாலத்துக்கும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களை அடிமைகளாக வைத்திருக்க வேண்டுமென்பதே பார்பனியத்தின் நோக்கம். இந்த நோக்கம் தொடர்ந்து கொண்டிருக்கும் காலமெல்லாம் மதமாற்றங்களை உங்களால் தடுக்க முடியாது.

2 comments:

C.Sugumar said...

The government must ban this heinous practice at once by suitable legislations

Dr.Anburaj said...

சுய மரியாதையுடைய இந்துக்கள் இது போன்ற பழக்கங்களால் வெறுப்புற்று இஸ்லாத்தை நோக்கி வருகின்றனர். இதனை பார்த்து வெறுப்புற்ற இந்துத்வாவினர் இஸ்லாமியரின் மீது வன்முறையை ஏவுகின்றனர்.

பைத்தியக்காரத்தனமாக உளறல்.அண்டப்புளுகு. தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி என்றஊாில் பஞ்சாயத்து தலைவராக சாகுல் ஹமீது என்பவா் பணியாற்றினாா். காங்கிரஸ் கட்சிபிரமகா்.இவா் மாணவப் பருவத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டாா். கன்வென்சன் கூட்டத்தில் பிரதம விருந்தினா் இவா்தான். பிற முஸ்லீம்கள் செய்த கலவரம் உடன்குடி அறியும்.சாகுல்ஹமீதுவை கிறிஸ்தவ மதத்திலிருந்து தள்ளினால்தான் உடன்குடி நிம்மதி அடையும் என்பது போல் எக கலாட்டா. இவர்களது தொல்லை தாங்க முடியாமல் சாகுல்ஹமீதை கிறிஸ்தவ மதத்திலிருந்து விரட்டி விட்டாா்கள்.
இந்தியன் ஒருவன் அரேபியனாகத் போய் தொலைவது அசிங்கமானது. ஆபத்தானது. பதான் கோட் ராணுவதளத்தில் தாக்குதல் நடத்தக்கூடிய ஒருவனாக அவன் மாறலாம்.

இந்துக்களை காபீா்கள் என்று இழிவு படுத்தும் நபர்களின் எண்ணிக்கை கூடுவது நல்லது அல்ல.