Followers

Thursday, May 21, 2015

RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி – 11 +12



அன்வாருஷ்ஷேரி என்ற நிறுவனம் குறிப்பாக சொல்லப்போனால் ஒரு அநாதைகள் விடுதி. அங்குள்ள அநாதைப் பிள்ளைகள் என்னோடு கொண்டிருந்த மரியாதை இதெல்லாம் தாழ்ந்த இனத்தைச் சார்ந்த எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் ஒரு தலைவரிடம் கூட இப்படிப்பட்ட எளிமையான, அன்பான குணங்களை நான் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை.

யத்தீம்கானாவில்(அநாதைகள் விடுதியில்) நான் கொஞ்சம் நாள் பி.டி.பியின் ஒரு ஸ்ஷார்த்தியாக[வேலாயுதனாக] தங்கினேன்.

எல்லா வியாழக்கிழமையிலும் அந்த அநாதைகள்:

"இறைவா, எங்களுக்கு உணவளித்தவர்களுக்கு நீ உணவளிப்பாயாக! எங்களுக்கு உதவி செய்கிறவர்களுக்கு நீ உதவி செய்வாயாக!"

என்றெல்லாம் பிரார்த்தனை செய்வதை நான் பார்த்தேன். அப்போது தான் எனது மனதில் ஆர்.எஸ்.எஸ்ஸின் வாழ்க்கை தென்பட்டது.

இந்த பிள்ளைகளைப் பற்றியா நாங்கள் தீவிரவாதிகளென்றும், தீவிரவாதத்தை ஊட்டுகின்ற நிறுவனம் என்றும் இந்நிறுவனத்தில் தீவிரவாதத்தை பிஞ்சு உள்ளங்களில் ஊட்டுகிறார்கள் என்றும் பொய்யைப் புனைந்துரைத்தோம்?.

இந்த ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள் அபாண்டமான பொய்யைச் சொன்னார்கள் என்ற எண்ணம் எனது மனதில் தெரிந்தது.

மேலும் நாசர் மஹ்தனியையும் இவ்வாறுதான் தீவிரவாதி என்று முத்திரை குத்தினார்கள் என்ற உண்மையும் எனக்குத் தெரிந்தது.

அன்வாருஷ்ஷேரியின் வாழ்க்கை எனக்கு இஸ்லாத்தைத் தெரிந்து கொள்வதற்கு முதலில் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

ஒவ்வொரு நாளும் ஓர் புது அனுபவம் கிடைத்தது. என்னை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு சென்று கொண்டிருந்தது.

இதிலிருந்துதான் இஸ்லாத்தைப் பற்றி மேலும் தெரியவேண்டும் என்ற ஆர்வம் என்னுள் எழுந்தது.

பல இஸ்லாமிய அறிஞர்களையும் நான் நாசர் மஹ்தனி மூலம் அறிந்து கொண்டேன். இந்தப் பழக்கவழக்கம் தான் வேலாயுதன் என்ற எனக்கு இஸ்லாத்தைத் தெரிந்திட வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தது.

உயர்ந்த அந்த ஆலிம்கள் சாதாரண மக்களோடு காட்டுகின்ற அன்பு, பாசம் இவற்றைப் பார்த்து இஸ்லாம் அன்பினாலும் மக்களை அரவணைத்துச் செல்லக்கூடிய ஒரு நல்ல மார்க்கம் என்பதை நான் மேலும் புரிந்து கொண்டேன்.

முஹம்மது(ஸல்) அவர்களின் எதார்த்த அடியார்கள் இவர்கள்தான் என்பதை நான் உணர்ந்தேன்.

மேன்மையான நல்ல அன்பும் பாசமும் மிகுந்த அந்த முஹம்மது(ஸல்) அவர்களின் முன் மாதிரியைப் பின்பற்றும் அந்த நல்ல உள்ளத்தையா ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள், தீவிரவாதிகள் என்றும் இஸ்லாம் தீவிரவாதத்தின் மதம் என்றும் கூறினார்கள் என்று எனது மனதில் தோன்றி நான் மிகவும் வருத்தப்பட்டேன்.

அவ்வூரில் பிரார்த்தனை நடக்கும் போது நான் வெளியில் நின்று பார்த்தேன். பிறருக்காக பிரார்த்தனை செய்கின்ற அந்த அநாதை குழந்தைகளை பார்த்த பொழுது,

எந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் பிறருக்காக பிரார்த்தனை செய்வதை நான் பார்த்ததில்லை. அவர்களின் கீழ் இயங்குகின்ற எந்த அநாதை ஆலயத்திலும் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பதுமில்லை. இவர்களது மத்தியில் நல்ல கலாச்சாரம் இருந்தால் தானே நல்ல குணங்கள் இருக்கும்?

நான் பி.டி.பியின் ஓர் அங்கமானதால் அதன் கீழுள்ள நாசர் மஹ்தனியின் தொண்டர்கள் நியாயத்திற்காக எந்த ஒரு இன வேறுபாடுமில்லாமல் ஒன்றாய் நின்று போராடுவது எனது உள்ளத்தை மேலும் கவர்ந்தது.

இவ்வாறாக குன்னத்தூரில் தங்கிவிட்டு திரும்ப கிளம்பும் போதுதான் எனது மனது முழுவதும் அந்த அநாதை விடுதியின் நினைவுகளும் அங்குள்ள ஆலிம்களின் நல்ல பணிவான தோற்றமும் தான் இந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த எனக்கு இஸ்லாத்தைப் பற்றி நன்றாகப் புரிய ஒரு வாய்ப்பைத் தந்தது.

முஸ்லிகளைப் பற்றி அந்த சங்பரிவார கும்பல்கள் கூறுவது:

நமது இனத்தைச் சார்ந்த ஒரு இந்து பெண்ணையும் இந்த முஸ்லிம்கள் விட்டுவைப்பதில்லை. இவர்களுக்கு ஆசைவரும் போதெல்லாம் நமது இனப் பெண்களைத்தான் இவர்கள் வெறும் போகப்பொருளாக பயன்படுத்துவார்கள். என்றெல்லாம் மிக மோசமாக முஸ்லிகளைப் பற்றி பேசுவார்கள்.

ஆனால் இப்போதுதான் எனக்கு தெரிகிறது, முஸ்லிம்கள் இத்துனை கண்ணியத்தோடும் ஒழுக்கத்தோடும் வாழக்கூடியவர்கள் என்று.

அன்னியப் பெண்களைப் பார்ப்பது கூட ஹராம்(தடுக்கப்பட்டது) என்று இஸ்லாம் போதிக்கின்றது. எனது வீட்டில் முஸ்லிம்கள் வந்தால், எனது மனைவியைப் பற்றியும், குழந்தையைப்பற்றியும் விசாரிப்பது மட்டும் தான் அவர்கள் செய்திருக்கிறார்கள். எனது மனைவியின் முகத்தைக்கூட அவர்கள் ஏறெடுத்துப் பார்ப்பதே இல்லை.

நான் வீட்டில் இல்லாத நேரத்தில் எனது மனைவி உட்காரச் சொன்னால்கூட தலையை குனிந்தவண்ணமாக சலாம் கூறி விட்டு கண்ணியத்தோடு திரும்புவார்கள்.

இப்படி நல்லுள்ளம் கொண்ட அந்த சமுதாயத்தையா இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தவறாக சித்தரிக்கிறார்கள் என்று நான் பல நாளும் நினைத்து வருந்தியதுண்டு.

முஸ்லிம் பெண்களை பாதுகாப்பான முறையிலும் தங்களது பார்வையை தாழ்த்திக்கொண்டும் பணிவோடு நடக்கவும் வலியுறுத்தி பர்தா முறையை இஸ்லாம் பெண்களுக்கு கற்றுக்கொடுக்கின்றது.

பண்டைய ஆர்.எஸ்.எஸ்ஸின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்ட அவர்களோடு சேர்ந்து நின்று முஸ்லிம் பெண்மணிகளைப் பற்றியும் அவர்களது பர்தாவைப் பற்றியும் கிண்டல் செய்த காலம் தான் எனக்கு நினைவிற்கு வருகிறது.

ஆனால் இந்த சங்பரிவார்களோ தங்களது இந்து பெண்கள் ஆடை அணிவதையும் அதிலும் குறிப்பாக அவர்கள் மார்பை மறைப்பதையும் கண்டிக்கும் நிலை உடையவர்கள்.

தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த பெண்களை கண்டால் அவர்களை தேவைக்கேற்ப பயன்படுத்திவிட்டு விட்டுவிடுவதுதான் இந்த இந்து சமுதாயத்தவரின் பழக்கமாக இருந்து வந்தது.

ஆனால் இஸ்லாத்திலோ அது போன்று காணவே முடியாது. பெண்களை மிகவும் கண்ணியமாக நடத்துகிறார்கள்.

இப்படிப்பட்ட மோசமான கலாச்சாரத்தை உடைய இந்து ஆர்.எஸ்.எஸ். [தம்புராக்கள்] தேவர்கள்தான் கண்ணியத்திற்குரிய முஹம்மது நபியை குறை கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

கடைசியாக நாசர் மஹ்தனியின் ஒரு பேருரை ஒன்றை கேட்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பேருரையில் மஹ்தனி எடுத்துக்கொண்ட தலைப்புதான் பல இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் ஆட்பட்டு நின்ற கறுப்பு நிற முஸ்லிம் பிலால்(ரலி) பற்றியது.

இந்தப் பேருரை நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

இவ்வாறாக மஹ்தனி தியாக பிலாலின் வாழ்வை ஒவ்வொன்றாக எடுத்துச் சொன்னார். அரங்கம் நிசப்தமாக காதை கொடுத்து கேட்டுக்கொண்டிருந்தது.

புனிதமான அந்த இஸ்லாத்தை தழுவிய ஒரே காரணத்திற்காக பிலால்(ரலி) அவர்களை சுடு மணலில் கிடத்தி பாரமான பளுவை அவரின் நெஞ்சின் மீது வைத்து கொடுமைப்படுத்தினர் அந்த முஷ்ரிக்குகள்(இஸ்லாத்தை எதிர்த்தவர்கள்).

மேலும் பிலால்(ரலி) அவர்களின் உணர்வுகளைப் பற்றி மஹ்தனியின் உருக்கமான உரை என் உள்ளத்தை உருக்கிற்று. மஹ்தனியின் அந்த பிலாலைப் பற்றிய உரை எனது கண்ணில் இருந்து கண்ணீர் துளியை வரவழைத்தது.

மேடையில் இருந்து கொண்டே நான் தேம்பித் தேம்பி அழத்தொடங்கினேன்.

ரசூல் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அந்த நீக்ரோ இன அடிமையை கட்டி அணைத்தது மட்டுமல்லாமல், அபூபக்கர்(ரலி), உமர்(ரலி) இவர்கள் எல்லாம் இருந்த பொழுதும் பிலால்(ரலி) எங்கே? என்று அவர்கள் கேட்டு, "கஃபா ஆலயத்தை திறப்பதற்கு இங்கே நிற்பவரில் நீ தான் அதற்கு தகுதியானவன்" என்று சொல்லி அந்த கறுப்பு இன மாமனிதனை மகிழ்வித்தார்கள்.

கோடிக்கணக்கான முஸ்லிம்கள் நின்று தொழுகின்ற அந்த கஃபா ஆலயத்தை திறந்து, அல்லாஹு அக்பர் என்ற பாங்கைச் சொல்வதற்கு முதலில் பாக்கியமடைந்தவர் அந்த அடிமை பிலால்.

எப்படிப்பட்ட பாக்கியம்!. அது மட்டுமல்லாமல் கஃபாவின் மேல் ஏறுவதற்கு முடியாமல் தவிக்கின்ற அந்த அடிமை பிலால்(ரலி) அவர்களிடம் நாயகம் திருமேனி முஹம்மது(ஸல்) அவர்கள் தன் கரம் மிதித்து ஏறுவதற்கு சொன்னதும், அந்த வெண்ணிற மேனியின் கையில் கறுப்பு நிற பாதங்கள் மிதித்து ஏறுவதும், அடிமைத் தனத்தை முற்றிலுமாக அது அடித்து நொறுக்கிற்று.

இப்படி அந்த மஹ்தனியின் பிரசங்கத்தை கேட்டதும் எனது பூர்விகன் பிலாலை நான் ஒரு நிமிடம் மனதில் பதித்தேன்.

இவ்வாறாக நான் சிந்திக்க ஆரம்பித்தேன்.

ஆர்.எஸ்.எஸ்.காரர்களுடன் பழகியதால் எனக்கு என்ன கிடைத்தது?

கேவலம் தாழ்ந்த இன மக்களுக்குக்கூட தன்னுடைய மதத்தைப் பகிர்ந்து கொள்ள கொடுக்காத ஒரு வெறிபிடித்த இனம்.

அது மட்டுமல்லாமல் நாஸர் மஹ்தனி மலபாரிலே கோட்டக்கல் ஜும்ஆ மஸ்ஜிதில் ஒரு இரவு தொழுகை தொழுவதற்காக காரை விட்டு இறங்கினார். நானும் அவரோடு இருந்தேன். மஹ்தனி பள்ளியின் உள்ளே செல்லும் போது நான் வெளியில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன்.

முன் வரிசையில் நிற்கின்ற ஒரு கூலிப்பணிக்காரனது காலின் கீழ் மஹ்தனியின் தலை. அது மட்டுமல்லாமல் பல பணக்காரர்களும், ஏழை மக்களும் ஒரே அணியில் நின்று தோளோடு தோள் சேர்ந்து தொழுவது என்னை நன்றாக கவர்ந்தது.

ஆகா என்ன சமத்துவம் இது! என எனது மனம் மகிழ்ந்தது.

முன்பெல்லாம் கோவில்களுக்குச் செல்லும்போது தாழ்ந்த இனத்தைச் சார்ந்த என்னை கோவிலுக்குள் நுழைய விடமாட்டார்கள். வெளியே நின்று கும்பிட வேண்டியதுதான்.

அது மட்டுமல்லாமல் ஏதாவது நாட்டின் முக்கியமான நபர் கோவிலுக்கு வந்தால் பிற மக்கள் அன்று முழுவதும் சாமிக்கு லீவு போட வேண்டியதுதான்.

அப்போதுதான் எனக்கு ஞாபகம் வருகிறது. முன் ஒருநாள் நான் சபரிமலை ஐயப்பனை தரிசிப்பதற்காகச் சென்றேன். அப்போது அங்கு எதிர்பாராதவிதமாக ஒரு மலையாள சினிமா நடிகர் சாமி தரிசனதிற்காக வந்திருந்தார். அவர் வந்திறங்கியதுதான் தாமதம், ஐயப்பனை தரிசிப்பதற்கு வந்த அந்த இந்து இளைஞர் எல்லாம் ஐயப்பனை மறந்து விட்டு அந்த சினிமா நடிகரை தரிசிக்க முன் வந்தார்கள். அது மட்டுமல்லாமல் முதலில் சென்ற எங்களை நிறுத்திவிட்டு நடிகரை உள்ளே விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட வேறுபாடு இந்து கலாச்சாரத்தில்.

அது தவிர தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு முதலமைச்சர்( முதல்வர் ஜெ.ஜெயலலிதாவைக் குறிப்பிடுகிறார்.) சாமி தரிசிக்க குருவாயூர் சென்றார். சென்றிறங்கியதுதான் தாமதம் அங்கு நின்று கொண்டிருந்த பக்தர்களுக்கு அடி,உதை.

இப்படிப்பட்ட வேறுபாடு இந்து கலாச்சாரத்தில். இதே சமயம் நான் முஸ்லிம்களின் நிலைமையை சிந்தித்தேன்.

முஸ்லிம் மந்திரி தொழுவதற்காக பள்ளியில் ஏறும் பொழுதும் மற்ற முஸ்லிம்கள் எல்லாம் வெளியே நிற்க வேண்டும் என்று சொன்னால் என்னவாகும் நிலைமை? மந்திரியும் அதை எதிர்பார்ப்பதில்லை. மக்களும் அதை செய்வதில்லை.

இப்படிப்பட்ட சமத்துவ, சகோதரத்துவத்தை நான் அந்த பள்ளிவாயிலின் வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

அது மட்டுமல்லாமல் அங்கிருந்து நானும் மஹ்தனியும் மலப்புரம் மாவட்டம் திருவங்காடி என்ற இடத்தில் பானு காக்கா என்ற முஸ்லிம் நண்பனின் வீட்டிற்குச் சென்றோம்.

தாழ்த்தப்பட்ட என்னை மிகவும் கண்ணியமாகவும் பாசத்தோடும் அரவணைத்து நல்ல சாப்பாடும் தந்து அங்கேயே தங்க வைத்தார்கள்.

இப்படிப்பட்ட தன்மைகளை வலியுறுத்துகின்ற இஸ்லாம் மார்க்கத்தில் நானும் இணைந்து கொண்டால் என்ன? என்ற கேள்வி என்னை ஆட் கொண்டது.

நான் இதை ஒரு நாள் மனைவி சாந்தாவிடம் கூறினேன். அவள் இதற்கு சற்று தயக்கம் தெரிவித்தாள்.

உடனே நான் முஸ்லிம்களாலும், ஆர்.எஸ்.எஸ். காரர்களாலும் நமது வாழ்க்கையில் ஏற்பட்ட வித்தியாசங்களையும் இஸ்லாத்தின் தன்மைகளையும் எடுத்து விவரித்தேன்.

இருந்தாலும் அவளது மனம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

ஏனென்றால் முஸ்லிம்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா? நான் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரி அல்லவா? என்ற எண்ணங்கள் எல்லாம் அவளுக்குள் உதித்தது.

நான் விடவேயில்லை.

முஸ்லிம்கள் என்னிடம் காட்டின அந்த பணிவையும், பாசத்தையும், அவர்களது உபசரிப்பையும் பற்றி விவரமாக அவளிடம் சொன்னேன். கடைசியில் அவளது மனம் எனது ஆசைகளை ஏற்றுக் கொள்வதற்குத் தயாரானது. நான் மனைவியையும் அழைத்துக் கொண்டு நாசர் மஹ்தனியின் வீட்டிற்குச் சென்றேன்.

அவர் இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளையெல்லாம் எனக்கு சொல்லித் தந்து விட்டு புனிதமான எங்களது பூர்விகன் பிலால்(ரலி) உச்சரித்த அந்த கலிமாவை மொழிந்து தந்தார்கள். நாங்கள் சந்தோஷமாக மனதில் அந்த புனித கலிமாவை மொழிந்தோம்; ஏற்றோம் இஸ்லாத்தை.

“அஷ்ஹது அன்லா இலாஹ இல்லலாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. மேலும் முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார் என்று நான் சாட்சியம் கூறுகிறேன்) “
என்று சொல்லி விட்டு மஹ்தனி அந்த தியாகி பிலாலின் பெயரைத்தான் எனக்கும் சூட்டினார்கள்.

தாழ்ந்த இனத்தவனாக இருந்த நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக எனது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

"பிலால், நீ கலிமா சொன்ன இந்த நிமிடத்தில் இருந்து இன்று பிறந்த பாலகனைப் போலாவாய்" என்று மஹ்தனி சொல்லிக் கற்பித்தார். இதைக் கேட்ட பொது மனம் திரும்பவும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது.

எனது முந்தைய பாவங்களையெல்லாம் மன்னிக்கக்கூடிய இறைவனையா நான் ஏற்றுக்கொண்டேன் என்று எனது மனம் திருப்தியடைந்தது.

அன்று இரவு முழுவதும் நான் தூங்கவேயில்லை.

36 வருடம் வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து ஒரு புது வாழ்க்கையை துவங்குகின்ற அந்த ஆனந்தத்தில் எனது மனம் மூழ்கியது.

இப்படியாக நாங்கள் இருவரும் இஸ்லாத்தைத் தழுவினோம். மனைவிக்கு பாங்கோடு ரபீக் மெளலவி கலிமா சொல்லிக்கொடுத்து ஃபாத்திமா என்று பெயர்ச் சூட்டவும் செய்தார்.

இப்போது இருக்கின்ற இடத்தை விட்டு மாறி வேறு இடத்தில் வாடகை வீட்டில் தங்கினோம். முஸ்லிமான பிறகு எனக்கொரு இப்னு பிலால் என்ற மகனும் பிறந்தான்.

தாழ்த்தப்பட்ட தலித் இனத்தைச் சார்ந்த பழைய வேலாயுதனாக நான் மரணம் அடைந்தால் எனது மனைவியும் மக்களும் பிச்சை எடுக்கக் கூடியவர்களாக மாறியிருப்பார்கள்.

ஆனால் பிலாலான எனக்கு இப்போது அல்லாஹ்வின் கருணையால் தனது உயிரைக்கூட கொடுக்கக்கூடிய முஸ்லிம் சமுகம் இருக்கின்றது. அந்த இஸ்லாமிய சகோதர சமூகம் இருக்கும் காலம் வரை நான் அஞ்சத் தேவையில்லை.

இப்போது அல்லாஹ்வின் கருணையினால் நானும் எனது மனைவி மக்கள் அனைவரும் மிகவும் சந்தோஷமாக குர்ஆனுடைய நிழலின் கீழ் பாதுகாப்பாக சந்தோஷமாக வாழ்க்கையை நடத்துகின்றோம்.

கேரளத்தின் மாதவிக்குட்டி சுரையா இஸ்லாத்தை தழுவியபோதும் நாங்கள் குடும்பத்தோடு சென்று அவர்களைச் சந்தித்தோம்.

ஈமானின் பிரகாசம் அவர்களது முகத்தில் தெளிந்து நின்றது.

கேரளத்தில் குறுப்பு இனத்தைச் சார்ந்த உயர் குல மாதவிக்குட்டியை பறயனான இந்த வேலாயுதன் ஒரு போதும் சந்திக்க வாய்ப்பே இருந்திருக்காது.

ஆனால் இஸ்லாம் கோட்பாட்டின் கீழ் (பிலாலும், சுரையாவும்) நாங்கள் இருவரும் இணைந்ததால் எங்களுக்குள்ளே அக விவரங்கள் பேச வாய்ப்பு கிடைத்தது.

ஆதலால் எனது சமூகமான தாழ்த்தப்பட்ட தலித் இனத்திற்கு ஒரு வேண்டுகோள் வைக்கின்றேன்.

நீங்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.

நீங்கள் அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள இஸ்லாமே நன்மருந்து.

தைரியமாக அல்லாஹ்வின் இந்த அழகிய மார்க்கத்தில் பிரவேசியுங்கள். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் குர்ஆன் உங்களுக்கு மிகுந்த பாதுகாப்பை அளிக்கும் வாருங்கள்…..

அல்லாஹ்வின் மார்க்கத்தில் எனக்கும் என் மனைவி பிள்ளைகளுக்கும் நேர் வழியைத் தந்த வல்ல இறைவன் அல்லாஹ்விற்கே புகழனைத்தும் உரித்தாகுக.

எனது பாங்கின் ஒலி என்றும் தொடரும். அல்லாஹ் அக்பர்; அல்லாஹ் அக்பர்; அல்லாஹ் அக்பர்.

இஸ்லாத்தில் வணக்கங்கள்:

நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் இருக்கும் பொழுது முஸ்லிம்கள் தங்களுக்குள் கூறிக்கொள்ளும் சலாத்தைப் பற்றி ஒரு தப்பான வாதத்தை எனக்கு போதித்தார்கள்.

அதாவது இவர்கள் எங்கு சென்றாலும் தங்களுக்கு மத்தியில் அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறிக்கொள்வார்கள்.

தன் இனத்தைச் சார்ந்த யாரை சந்தித்தாலும் சரியே. இது எதற்கென்றால் பிற மதங்களை தனிமைப்படுத்துவதற்கும் முஸ்லிம்களை ஒன்றுபட வைப்பதற்கும் ஆகும் என்ற இந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் கூற்றினால் தப்பான எண்ணத்தில் இருந்துவந்தேன்.

இங்கு வந்த பிறகுதான் தெரிகிறது இந்த ஸலாத்தின் பொருள் எவ்வளவு மிகையானது என்று.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும் சமாதானவும் என்றென்றும் உங்கள் மீது உரித்தாகுக;). ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வது. அதைக் கேட்ட முஸ்லிமும் தனக்காக துஆ செய்த அந்த முஸ்லிமுக்கு "உன்மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உரித்தாகட்டும்"(வ அலைக்குமுஸ்ஸலாம்) என திருப்பிக்கூறும் மிக அருமையான முறையை எந்த மதம் இவ்வாறு நமக்குத் சொல்லித்தருகிறது?.

இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் வணக்கம்(நமஸ்தே) என்று கூறுவார்கள்.

என்ன பொருள் இதற்கு?.

"உன்னை நான் வணங்குகின்றேன்" என்றல்லவா இதன் பொருள்?.

என்ன கீழ்த்தரமான வார்த்தை இது? இறைவனால் படைக்கப்பட்ட மனிதனுக்காக வணக்கம் செலுத்துவது.

வணக்கத்திற்கு தகுதியானவன் இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்று இஸ்லாம் மிக அருமையாக நமக்கு போதிக்கிறது.

இதையும் நான் இஸ்லாத்தில் வந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

தனக்கு மத்தியில் சகோதரத்துவத்தை வெளிப்படுத்துகின்ற இந்த அருமையான வாசகத்தை குறித்து இந்த ஃபாசிஸ்டுகள் எனக்கு தப்பாக போதித்தார்கள்.

முஸ்லிம்கள் சம்பந்தமான எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதன் பொருளை முழுமையாக விளங்காமல் தப்பான நச்சுக் கருத்துக்களால் போதிப்பது இந்த ஃபாசிஸ்டுகளின் தந்திரமாக இருந்து வருகிறது.

இந்த ஃபாசிஸ்டுவாதிகளின் சமூகத்திலிருந்து என்னை மட்டும் தேர்ந்தெடுத்து புனித இஸ்லாத்தின் உண்மைகளை எனக்கு போதித்த வல்லான் அல்லாஹ்வுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகையாகாது.

இதைப்போல் சாப்பிடக்கூடிய விஷயமாக இருந்தாலும் சரியே; இஸ்லாம் மிக அருமையாக போதிக்கிறது.

சாப்பிடும்போதும் உட்காரும் நிலை, விரல்களைக் கொண்டு சாப்பிடுவது, சாப்பிட்ட பிறகு விரலை நன்றாக உறிஞ்சுவது, சாப்பாட்டிற்கு நாம் கொடுக்கும் மரியாதை இது.

ஆர்.எஸ்.எஸ்ஸில் இந்த மரியாதை நிலையெல்லாம் எனக்கு சொல்லிக்கொடுக்கவில்லை. அவர்களின் கோட்பாட்டில் இந்த தன்மையே இல்லை.

இதைப் போலத் தான் இறந்தாலும்; பறையன் இறந்தால் அவனை அடக்கம் பண்ணுவதும் ஒரு முறை. புலயன் இறந்தால் அவனை அடக்கம் செய்வது இன்னொரு முறை. இரண்டு வழி முறையும் அதனுடைய சடங்குகளும் மிக வித்தியாசமாகத்தான் இருக்கும்.

ஆனால் ஒரு முஸ்லிம் இறந்து விட்டாலோ அவனுக்காக அந்த ஊர் ஜமாஅத்தார்கள், ஊர்மக்கள், பக்கத்துவீட்டார்கள் இவர்களெல்லாம் நின்று அந்த மய்யித்தை(இறந்த உடலை) குளிப்பாட்டி விட்டு கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்வார்கள். இறப்பு விஷயத்திலும் இஸ்லாம் ஒன்றை போதிக்கிறது.

நான் இஸ்லாத்தை அடைவதற்கு முன்னால் ஒரு கம்யுனிஸ்ட்வாதியின் மகளின் இறப்பு சடங்கில் பங்கு கொண்டேன். அந்த வீட்டில் ஒரே அலறல் சத்தம் கேட்கிறது. தனது மகளின் பிரேதத்திற்கு முன் அமர்ந்து அலறி சத்தமிட்டு அழுகிறார் கம்யூனிஸ்ட்வாதியான அந்த முஸ்லிம் நபர்.

இதேபோல் அதன் பிறகு வேறொரு முஸ்லிம் மரண வீட்டிற்கு நான் சென்றேன். தெரிந்த ஒரு முஸ்லிம் நபரின் மகன் ஸ்கூட்டர் விபத்தில் இறந்து விட்டார். இறந்த மகனின் தந்தை அழாமல் வருத்தத்தோடு இருப்பதை நான் கவனித்தேன்.

இதை பார்த்த பிறகு எனக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது. இதை நான் ஒரு மார்க்க அறிஞரிடம் விசாரித்தேன்.

இறைவன் நாடினால் இன்னும் வரும்......

2 comments:

Dr.Anburaj said...


ஏற்கனவே நன்கு அறிந்ததுதான். உலகின் அறத்திற்கும் அன்பிற்கும் அமைதிக்கும் களமாக இசுலாமிய மதம் திகழ்கிறது.அது இருக்கும் இடத்தில அன்பு நோமை உண்மை அமைதி சமூக அமைதி ஒழுக்கம் ஒழுங்கு நிலைத்த ஆட்சி அஹிமசை கற்பு பிரம்மச்சாியம் பிறன்மைனை நோக்கா பேராண்மை போன்ற பண்புகள் பிரகாசமாக உள்ளன. ஆப்கானிஸ்தான் அமைதியின் உருவம். ஈரான் ஈரான் அதைியின் களம். சாந்தத்தின் சொரூபம் சிாியா. சண்டையிட்டு ஆண்களைக் கொன்று பெண்களை கைப்பற்றி மேற்படி பெண்களை வைப்பாட்டியாக வைத்துக் கொள் என்று சொல்லும் ஒரே நூல் குரான் என்பதை முன்னாள் ஆா் எஸ்எஸ காரா் இன்னும் படிக்கவில்லை போலிருக்கின்றது.பாவம் பாிதாபம் எனது ஆழ்ந்த அனுதாபத்தை பதிவு செய்கின்றேன். விரைவில் படிக்க சிவன் துணை புாிவாராக!மேற்படி வசனத்தை படித்து விட்டுதான் இசுலாம் ஒரு செல்லாக்காசு என முடிவு செய்து விட்.டேன்.

ASHAK SJ said...

மூடனே எங்கே உள்ளது ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை வைப்பாட்டியாக வைத்துகொள்ள சொல்லி , அது இருக்கட்டும் சிவன் என்று நீ சொல்லும் கடவுள் ரிஷியின் மனைவியை கற்பழித்துவிட்டு ரிஷியால் ஆணுறுப்பை இழந்த கதை தெரியுமா? அதுதான் சிவலிங்கம்