Followers

Monday, May 04, 2015

நேபாளில் அசிங்கப்பட்ட இந்திய பத்திரிக்கைத் துறை!



கரை படிந்த நமது ஊடகத் துறை நேபாளிலும் சென்று தனது சுய புத்தியைக் காட்டியுள்ளது. இதனால் வெகுண்டெழுந்த நேபாள மக்கள் இந்திய பத்திரிக்கையாளர்களை நேபாளத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கின்றனர். வெளி நாடுகளில் உதவிகள் வந்தாலும் அதிலும் தங்களின் இந்துத்வா மோகத்தை விட்டுக் கொடுக்காமல் 'மாட்டுக் கறி' என்று பிரச்னையை திசை திருப்பி விட்டுள்ளனர். இதனால் உதவிகள் வருவதும் சில நாடுகளால் நிறுத்தப்பட்டது. இந்தியா செய்து வரும் சிறிய உதவிகளும் இந்திய மீடியாக்களால் பூதாகரமாக காட்டப்படுகின்றன. மோடியின் ஆர்டராக இருக்கலாம் :-) பல தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்ட அந்த மக்கள் இந்திய மீடியாக்களின் இது போன்ற செயல்களால் கோபமடைந்து இந்திய பத்திரிக்கையாளர்களை வெளியேற நிர்பந்திக்கின்றனர்.

ட்விட்டரில் #gohomeindianmedia என்ற வாசகமானது மிக பிரபலமாகி உள்ளது. இங்கு சென்று நமது பத்திரிக்கைத் துறையை உலக மக்கள் வறுத்தெடுப்பதை காணலாம். :-)

வெளி நாட்டுக்கு சென்று ஒட்டு மொத்தமாக அசிங்கப்பட்ட மீடியா நமது மீடியாவாகத்தான் இருக்கும். :-)

No comments: