Followers

Thursday, May 14, 2015

அகோரிகள் என்றால் யார்? - சென்னி மலை

அகோரிகள் என்றால் யார்? - சென்னி மலை

//இஸ்லாமிய குடியிருப்பு சுத்தமாக இருக்குனு உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா???!
வந்தவாசி கோட்டை எப்படி இருக்குன்னு தெரியுமா???? //

இஸ்லாமிய குடியிருப்புகளுக்கு அரசு உதவி முறையாக சென்று சேராததும் ஒரு காரணம்.

மற்றபடி இந்தியாவை பொருத்த வரை இந்து , முஸ்லிம், கிருத்தவர்கள் என்று எல்லா குடியிருப்புகளும் அசுத்தமாகத்தான் உள்ளன. ஆனால் கங்கையின் அசுத்தம் என்பது புனிதம் என்ற பெயரில் நாமாக வரவழைத்துக் கொள்வது. அதற்கு மாற்று ஏற்பாடு இருக்கும் போது அதனை செயல்படுத்துவதில் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்? இதற்காக மக்களின் வரிப் பணம் 20000 கோடி செலவழிப்பதால் எந்த பலனும் இல்லை என்று ஆய்வாளர்கள் சொன்ன பின்பும் ஏன் இந்த முயற்சி? முதலில் கங்கை அசுத்தமாவதற்கு காரணங்களை கண்டு பிடித்து அதனை நிறுத்தி விட்டல்லவா தூய்மைப் பணியை தொடங்க வேண்டும்?

//அகோரிகள் அப்படினா யார்????
எந்த அகேரியேட ஆசிரமத்து வீடியோவாவது உங்களிடம் இருக்கா????//

https://www.youtube.com/watch?v=g9YepUqlR44

https://www.youtube.com/watch?v=wl4O2dg3txQ

https://www.youtube.com/watch?v=T2RhDq7-_Ec

https://www.youtube.com/watch?v=Qf3NLel3Tl4

https://www.youtube.com/watch?v=IqSelBNHRqU

சன் டிவியில் வந்த 'காசியின் மறுமுகம்' என்ற இந்த ஐந்து தொடரையும் தமிழில் பார்த்து விட்டு இந்த அகோரிகளைப் பற்றி ஒரு முடிவுக்கு வாருங்கள். இவர்களின் பின்னால் இந்து இளைஞர்கள் சென்றால் அவர்களின் வாழ்வு 'நான் கடவுள்' படத்தில் உள்ள ஆர்யாவின் வாழ்வு போல்தான் மாறிப் போகும். இந்து மறுமலர்ச்சி என்று இதைத்தான் சொல்கிறீர்களா?

//செத்த பிணத்தை தின்பதாக சொல்லும் நீங்க உயிரோட மனுசனை அறுத்து தின்னும் காட்டுமிராட்டிகளை பற்றி ஏன் பதிவு போடவில்லை, //

ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம், அல்சபாப் போன்ற தீவிரவாத குழுக்கள் செய்யும் எந்த செயலும் இஸ்லாம் கூறும் செயல் அல்ல. அவர்களைப் பற்றி கடுமையாக விமரிசித்து பல பதிவுகள் முன்பு எழுதியுள்ளேன்.அப்பாவிகளை பெண்களை சிறுவர்களை மத குருமார்களை போர்களில் கூட கொல்லக் கூடாது என்று குர்ஆன் கட்டளையிட அதற்கு மாற்றமாக நடக்கும் இந்த தீவிரவாதிகள் இஸ்லாமியர்களா? மனிதனை வெட்டி அவனது கறியை சாப்பிட்டு அதனை வீடியோவாக்கி வெளியிடும் இவர்கள் இஸ்லாமியர்களா? கண்டிப்பாக இல்லை. உலக அளவில் இஸ்லாமிய வளர்ச்சியை தடுக்க அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய அரசுகளால் உருவாக்கப்பட்ட கூலிப் படைகள் இவர்கள்.

வெளி நாடுகளுக்கு ஏன் போகிறீர்கள்? உங்களோடு அண்ணன் தம்பிகளாக பழகி வரும் தமிழக இஸ்லாமியரிகளிடம் இது பொன்ற தீவிரவாத எண்ணம் கொஞ்சமாவது இருக்கிறதா? ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம் யார் என்பது விளங்கும்.

//கங்கை மூலமாக லச்சம் கோடிகணக்கில் சம்பாதிக்கும் அரசு ஏன் சில ஆயிரம் கோடிகள் அதை சுத்தம் செய்ய உபயோகிக்க கூடாது???? //

தாராளமாக செய்யட்டும். 'நோய் முதல் நாடி' என்ற சொல்லுக்கேற்ப கங்கை அசுத்தமாவதற்கான காரணத்தை முதலில் சரி செய்து விட்டு பிறகு தூய்மைப் பணியை துவங்கட்டும் என்பதுதான் எனது வாதம்.

No comments: