Followers

Tuesday, June 16, 2015

லெப்பை ராவுத்தர் எல்லாம் இஸ்லாமிய சாதியில் சேராதா?



// லெப்பை, தக்கினி முஸ்லிம், மரைக்காயர், ராவுத்தர், மாப்பிள்ளை, பட்டாணி, (பத்ஹான்கான்) காக்கா, சேட், சையது, ஷேக், பீர், தாவூத், அன்சாரி, நவாப் உள்ளிட்ட முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியலைச் சேர்ந்தவர்கள். //

//இதற்கு என்ன பதில் Nazeer Ahamed// - Ram nivas

நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த சாதி பெயர்கள் அனைத்தும் அரபு நாடுகளில் பார்க்க முடியாது. இந்து மதத்தின் வர்ணாசிரமத்தை சட்டமாகக் கொண்ட இந்தியாவில்தான் பார்க்க முடியும். முன்பு இந்தியாவோடு சேர்ந்து இருந்ததால் பாகிஸ்தான், பங்களாதேஷிலும் கூட இந்தக் கூத்துக்களை பார்க்க முடியும்.

இஸ்லாமிய வேத நுலான குர்ஆனிலோ அல்லது அதற்கு விளக்கவுரையாக அமைந்த நபி மொழிகளிலோ இவற்றை பார்க்க முடியாது. இந்திய அரசியல் சட்டம் வேலை வாய்ப்புகளில் சிலரை அவர்களாகவே பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்துக் கொண்டனர். இந்திய அரசியல் சட்டம் உலக முஸ்லிம்களை கட்டுப்படுத்தாது. இஸ்லாம் என்பது உலகம் தழுவிய மார்க்கம் என்பதை நீங்கள் எப்பொதுதான் உணரப் போகிறீர்களோ தெரியவில்லை.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் - பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன். - (அல்குர்ஆன் 49:13)

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். அவரிலிருந்து அவரது துணையை படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். -- (அல்குர்ஆன் 4:1)

மேற்கண்ட இறை வசனங்கள் சாதீயத்தின் ஆணி வேரையே அறுத்தெறிந்து விட்டது.

அதே நேரம் இந்து மதம் என்ன சொல்கிறது என்பதையும் பார்போம்.

“த்ருஷ்ட்வா தேவஹா பலாயதே...”என்று போகிற பாஞ்சாத்ர ஆகம ஸ்லோகம் என்ன உத்தரவிடுகிறது என்றால்...பல ஆச்சார அனுஷ்டானங்களின் அடிப்படையில் பகவானை விக்ரகங்களில் இருத்தி வைத்திருக்கிறோம்.


இந்தப் புனிதமான கோயில்களுக்குள் சூத்ரனோ, பஞ்சமனோ ஒரு அடியெடுத்து வைத்தால்கூட அனுஷ்டானங்கள் கறைபட்டு விடும். அதனால்... அந்த விக்ரகங்களில் இருந்து பகவான் ‘பட்’டென ஓடிப் போய்விடுவார்.

அதனால்... சூத்ரனோ, பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் எடுத்து வைத்தால்... விக்ரகம் வெறுங்கல்லாகி விடும். பகவான் அதில் க்ஷணம் கூட தங்கமாட்டார். எனவே, அவர்களை கோயிலுக்குள் விடாதே... என்கிறது ஆஹமம்.

-thathachariyar.blogspot.sg/2010/11/27.html

எனவே இந்து மதத்தையும் இஸ்லாத்தையும் போட்டு ஒன்றாக குழப்பிக் கொள்ள வேண்டாம் ராம் நிவாஸ்

7 comments:

Anonymous said...

Then why muslims are not allow others to makka mosque

தருமபுரி இளவரசன் said...

முஸ்லிமல்லாதவர் ஏன் மெக்காவில் நுழையமுடியாது?:

மேல்ஜாதி கீழ்ஜாதி, உன் கடவுள் என் கடவுள், உயர்ந்தவன் தழ்ந்தவன், கருப்பன் வெள்ளயன் போன்ற பேதமைகளை உதறித்தள்ளி மனிதர்கள் அனைவரும் சமம், நம் அனைவரையும் படைத்தவன் ஓரிறைவன் அல்லாஹ், முஹம்மத்(ஸல்) அல்லாஹ்வின் தூதர் எனும் கொள்கையை ஏற்றுக்கொண்டவர் மட்டுமே மெக்காவில் நுழைய முடியும். ஹஜ் செய்யமுடியும்.
-----------------

இஸ்லாத்தில் ஜாதி கிடையாது. ஷியா, சுன்னி, லெப்பை, தக்னி, மரைக்காயர், ராவுத்தர் என 20க்கும் குறைவான சில பிரிவுகள் உள்ளன. ஆனால், யாரும் பிறப்பால் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ கிடையாது. தேவைப்பட்டால், ஷியா சுன்னியாகலாம், லெப்பை தக்னியாகலாம், ராவுத்தர் மரைக்காயர் ஆகலாம். யார் வேண்டுமானாலும் யாருடனும் திருமணம் செய்யலாம். யாரும் அருவாளை தூக்கிக்கொண்டு விரட்டப்போவதில்லை. தண்டவாளத்தில் ரெண்டுதுண்டாக்கி வீசியெறியப் போவதில்லை. அல்லாஹ்வின் முன்னால் அனைவரும் சமம் என்கிறது திருக்குரான்.

ஆனால் உங்கள் ஹிந்து மதத்தில், இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 3600 ஜாதிகள் உள்ளன. வர்ணதர்ம அடிப்படையில், ஒரு ஹிந்து ஜாதியோடு பிறக்கிறான் ஜாதியோடு சாகிறான். எந்த இரண்டு ஜாதியும் சமம் கிடையாது. ஒன்றுக்கு கீழ் ஒன்று எனும் அடுக்குமுறை. கள்ளர் கவுண்டராக முடியாது, செட்டியார் முதலியாராக முடியாது, பள்ளன் பறையனாக முடியாது, பறையன் பார்ப்பானாக முடியாது. ஜாதி சாக்கடையை விட்டு தாழ்த்தப்பட்டவன் வெளியேறவே முடியாது.

ஜாதியை விட்டு வெளியேற ஒரே வழி இஸ்லாம்தான். நீங்கள் இன்றைக்கு இஸ்லாத்தை தழுவினால், உங்களை சகோதரா என்றுதான் நாங்கள் வரவேற்போம். என்ன ஜாதியென்று எங்களுக்கு தெரியாது. பறையன் முதல் பார்ப்பான் வரை திருக்குரானை எடுக்கலாம். ஒன்றாக சேர்ந்து, ஒரே கோப்பையில் நோன்பு கஞ்சி குடிக்கலாம். இமாமாக முன்னின்று தொழுகை நடத்தலாம். அப்துல் கலாம் கூட அவர் பின்னால் நின்றுதான் தொழவேண்டும்.

சவூதி அரேபியாவில், பெரும்பாலான பள்ளிகளில் இமாமாக வேலை செய்வோர் இந்தியர்தான். சவூதி அரச குடும்பத்தினர் கூட அவர் பின்னால் தொழுதுவிட்டு, விலையுயர்ந்த ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் செல்வது சர்வசாதாரணம். பல சவூதி அரண்மனைப் பள்ளிவாசல்களில் தொழவைப்போர் இந்தியர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் வணங்கும் அதே சிலையை பள்ளன் பறையன் வணங்கமுடியுமா?. உங்கள் வேதத்தை அவன் தொடமுடியுமா?. கோயில் கட்டி பூஜை செய்யமுடியுமா?. உண்டியல் வைத்து காசு பண்ண முடியுமா?. வினாயகரும் சுடலை மாடனும் சமமா?, வெங்கடாசலபதியும் முனியாண்டியும் சமமா?, கண்ணனும் கருப்புசாமியும் சமமா?.

தாழ்த்தப்பட்டவன் உங்கள் கோயிலுக்குள் நுழைந்தால் கொலையே நடக்கும். இந்த நாட்டின் பிரதமர் மோடி கூட காசி விஸ்வநாதர் கோயிலுக்குள் நுழைய முடியாது. ஏனென்றால் அவர் பார்ப்பானை விட தாழ்ந்தவர். உங்கள் சிலைகளுக்குள்ளேயே பொய்யும் புரட்டும் ஜாதி வேற்றுமைகளும் தாண்டவமாடும் போது, சிலையை ஒரு கருவியாக வைத்து உருவமற்ற இறைவனை உங்களால் எந்த ஜென்மத்தில் உணரமுடியும்?.

உங்களுடைய பொய்யான கடவுள்களுக்குள் சமத்துவம் இல்லாதபோது, ஹிந்துக்களுக்குள் சமநீதி, சமத்துவம், சகோதரத்துவம் எந்த ஜென்மத்தில் வரும்?.

சிலைகளை உடை. திருக்குரானை எடு. உருவமற்ற ஓரிறைவனை வணங்கு.

பெரியார் said...

கோவிந்தன் என்றால் என்ன அர்த்தம்?:
(கங்கை கரை தோட்டத்திலே கன்னிப்பெண்கள் கூட்டத்திலே கண்ணன் மெய்மறந்து கிடக்கிறான்).

பார்ப்பான்: கோவிந்தா கோவிந்தா !!:
கண்ணன்: யார் கோவிந்தன்?
பார்ப்பான்: கண்ணா, நீதான் !!.
கண்ணன்: கோவிந்தன் என்றால் என்ன அர்த்தம்?
பார்ப்பான்: கோ என்றால் கோமாதா எனும் புனிதப்பசு. விந்தன் என்றால் விந்து தருபவன். புனிதப்பசுவுக்கு விந்து தருபவன் என அர்த்தம். கோவரதன் என்றால் புனிதப்பசுக்களின் இனத்தை பெருக்குபவன் என அர்த்தம்.
கண்ணன்: புனிதப்பசு யார்?
பார்ப்பான்: பிராமண பொம்மனாட்டிகள்.
கண்ணன்: கண்ணனின் ஜாதியென்ன?
பார்ப்பான்: வைசியன்.
கண்ணன்: உன் ஜாதியென்ன?
பார்ப்பான்: ப்ராஹ்மணன்.
கண்ணன்: ஒரு வைசியன் ப்ராஹ்மண புனிதப்பசுக்களின் "கோ-விந்தன்" என உனக்கு யார் சொன்னது?
பார்ப்பான்: நேக்கு தெரியாது. எங்காத்துலே அம்மா சொன்னா...
கண்ணன்: ஒஹோ...அப்படியா..சரி..சரி.. இருந்தாலும் இருக்கும்.

பெரியார் said...

ஓ பிராமணா, நீ ராம்ஜாதாவா ஹராம்ஜாதாவா?:

ராமர்: நீ யார்?
பிராமின்: நான் ராம்ஜாதா.
ராமர்: ராம் ஜாதானா என்ன அர்த்தம்?.
பிராமின்: ராமனின் பிள்ளைகள், ராமனின் வாரிசுகள்.
ராமர்: நீ ராமனின் வாரிசென உனக்கு யார் சொன்னது?
பிராமின்: ஆத்துலே, எங்க அம்மா சொன்னா..
ராமர்: டேய்ய்ய்ய்.... ஹராம் ஜாதாக்களா !!. நான் உத்தம புருஷன்டா... என்னையே நாறடிச்சுட்டீங்களேடா.....

பெரியார் said...

தீராத விளையாட்டுப்பிள்ளை:

கிருஷ்ணர்: நீ யார்?
பிராமின்: நான் கோபாலன்.
கிருஷ்ணர்: கோபாலன்னா என்ன அர்த்தம்?.
பிராமின்: கோமாதவின் மகன். அதாவது கீதையை தந்த கிருஷ்ணனை குறிக்கும்.
கிருஷ்ணர்: கிருஷ்ணனின் தொழிலென்ன?
பிராமின்: மாடு மேய்ப்பது, பால் விற்பது.
கிருஷ்ணர்: உன் தொழிலென்ன?
பிராமின்: வேதங்கள் கற்பது.
கிருஷ்ணர்: கிருஷ்ணனின் ஜாதியென்ன?
பிராமின்: வைசியன்.
கிருஷ்ணர்: உன் ஜாதியென்ன?
பிராமின்: பிராமணன்.
கிருஷ்ணர்: அப்புறமெப்படி நீ கோபாலனாக முடியும்?. வைசியனுக்கு பிறந்தவன் எப்படி பார்ப்பனனாக முடியும்?
பிராமின்: நேக்கு தெரியாது. அப்படித்தான் எங்காத்துலே அம்மா சொன்னா..
கிருஷ்ணர்: ஒஹோ அப்படியா.. இருந்தாலும் இருக்கும்..

அல்லாவின் வானவர் படைத்தளபதி said...

ஒரே மனிதன்கிட்டயிருந்து படைக்கப்பட்ட மனித குலத்தில்... முமீன், முஸ்லிம், முஸ்ரிக், முனாபிக், மஜூஸி, ஸாபியீன், காபிர்னுலாம் பேதம் வருதே... அதும் இதுவெல்லாம் குர்ஆன்லயே வருதே...

இந்த பேதங்களை உருவாக்கினது யார்??

vrkumar18 said...

Well said...really they are fraud fellows, in saudi there is somany caste is there.