Followers

Saturday, July 29, 2017

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 21



எண்கள் சம்பந்தமாக மேலும் சில தகவல்களைப் பார்போம்.....

نُص --- நுஸ் --- அரை --- 1/2 --- half

ثُلث --- துல்த் ---- முக்கால் ---- 1/3 -- third

رُبع --- ருபா ---- கால் --- 1/4 --- quarter

خُمس --- ஹூம்ஸ் --- ஐந்தில் ஒன்று --- 1/5

سُدس --- ஸூதுஸ் --- ஆறில் ஒன்று --- 1/6

سُبع --- ஸூபா ---- ஏழில் ஒன்று --- 1/7

ثُمن --- துமன் --- எட்டில் ஒன்று --- 1/8

تُسع --- துஸா --- ஒன்பதில் ஒன்று --- 1/9

عُشر --- வுஸ்ர் --- பத்தில் ஒன்று --- 1/10

-------------------------------------

இடையிடையே சிறிது இலக்கணத்தையும் பார்த்துக் கொள்வோம்.

الفعل الماضي -- AL FALUL MAADHEE - அல் ஃபஃலுல் மாதி --- இறந்த காலம்

ஒரு செயல் நடந்து முடிந்து விட்டால் அதனை 'இறந்த காலம்' என்று சொல்கிறோம்.

அதே நேரம் தன்மை, முன்னிலை, படர்க்கையில் ஒரு செயல் இறந்த காலத்தில் நடந்தால் அது எவ்வாறு மாறுபடும் என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் பார்போம்.

سافرتُ ---- ஸாஃபர்து --- நான் பயணித்தேன்

'நான் பயணித்தேன்' என்ற வார்த்தையானது 'தன்மை' யில் வரும். செயலை செய்தவரே சொல்வதால் இது 'தன்மை' என்பது நமக்கு தெரியும்.

நமக்கு முன்னால் உள்ள ஒருவரை பார்த்து சொன்னால் அதனை 'முன்னிலை' என்கிறோம். இதே வார்த்தையை 'முன்னிலையில்' பயன்படுத்தும் போது அரபியில் அந்த வார்த்தை எவ்வாறு மாறுகிறது என்று பாருங்கள்.

سافرتَ --- ஸாஃபர்த --- நீ பயணம் செய்தாய் (ஆண்பால்)

வார்த்தையின் கடைசி எழுத்தான ت என்ற எழுத்தின் குறி மாறியுள்ளதை கவனியுங்கள். 'து' 'த' வாக மாறியுள்ளது....

-----------------

அதே வார்த்தையை ஒரு பெண்ணைப் பார்த்துக் கூறுகிறோம். அப்போது அந்த வார்த்தையில் ஏற்படும் மாற்றத்தை கவனியுங்கள்.

سافرتِ --- ஸாஃபர்தி --- நீ பயணம் செய்தாய் (பெண்பால்)

ت என்ற எழுத்தானது تِ யாக மாறியுள்ளதை கவனியுங்கள்.

---------------

பலபேர் பயணித்தால் கடைசி எழுத்து 'தும்' என்று மாறும்.

سافرتم --- ஸாஃபர்தும் --- நீங்கள் பயணம் செய்தீர்கள்.

--------------

தன்மையில் பல பேர் பயணித்தால் அங்கு வார்த்தையானது எவ்வாறு மாறும் என்பதை கவனியுங்கள்...

سافرنا --- ஸாஃபர்னா ---- நாங்கள் பயணித்தோம்.

-------------

முன்னிலை ஆண்பாலில் அதே வார்த்தையானது எவ்வாறு மாறுகிறது பாருங்கள்.

سافرَ --- ஸாஃப்ர --- அவன் பயணித்தான்

முன்னிலை பெண்பாலில் அதே வார்த்தையானது எவ்வாறு மாறுகிறது பாருங்கள்.

سافرت --- ஸாஃபர்த் ---- அவள் பயணித்தாள்

முன்னிலை பன்மையில் அதே வார்த்தையானது எவ்வாறு மாறுகிறது பாருங்கள்.

سافروا ---- ஸாஃப்ரூ --- அவர்கள் பயணித்தார்கள்.

இது வரை நாம் இறந்த காலத்தில் தனமை முன்னிலை படர்க்கை போன்ற இடங்களில் வார்த்தையானது எவ்வாறு மாறுபடுகிறது என்பதை பார்தோம்.

என்ன ..... ஒரே குழப்பமாக இருக்கிறதா? :-)

இறந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் என்ற இந்த மூன்று காலங்களையும் சற்று சிரமம் எடுத்து படித்துக் கொண்டால் அரபு மொழியை மிக இலகுவாக கையாளலாம். குர்ஆனும் மிக இலகுவாக நமக்கு மொழி பெயர்பு இல்லாமலேயே புரியும்.

ஒரு முறைக்கு இரு முறை எழுதி வாருங்கள். எந்த ஒரு பாடமும் புரிந்து கொண்டு படித்தால் வாழ்நாள் முழுக்க மறக்காமல் இருக்கும்.

இறைவன் நாடினால் அடுத்த பாடங்களில் மேலும் சில இலக்கணங்களை பார்போம்.

16 comments:

Dr.Anburaj said...

இதையும் தொிந்து கொள்ளலாமா

கானா நாட்டில் ஒரு இந்துக் கோயில்


கானா மேற்கு ஆப்பிரிக்காவிலிருக்கும் ஒரு சிறிய நாடு. அதன் தலைநகர் அக்ரா ஒரு அழகிய கடற்கரை நகரம். அந்த நகரின் வடக்குபகுதியில் சர்ச் கோபரங்களைப் போல கூரான உயர்ந்த வெள்ளைக் கோபுரம். அதன் உச்சியில் ஒளிரும் ஒம் சின்னம். அருகில் சிறு விளக்குகள். மாலை பூஜைக்கு முன்னதாகப் பிராத்தனைப் பாடல்கள்.

இந்தியர் வாழும் ஒரு வெளிநாட்டில் அவர்களுக்காக ஒரு இந்து கோவில் இருப்பதும் அதில் சிறப்பாக வழிபாடு நடைபெறுவதும் ஆச்சரியமான செய்தி இல்லை. ஆனால், இந்தக் கோவிலில் பிராத்தனை பாடல் பாடி வழிபாட்டுக்காகக் காத்திருப்பவர்களில் யாரும் இந்தியர் இல்லை. அவர்களுக்கு இந்திய மொழி எதுவும் தெரியாது. அதுமட்டுமில்லை அவர்களில் பலர் இந்தியாவையே பார்த்ததில்லை. பின் எப்படி இந்த கோவில்?

கானா நாட்டின் ஜனத்தொகை 2.3 கோடி. அதில் 60% கிருத்துவர், 15% முஸ்லீம்கள், 25% ஆப்பிரிக்கப் பழங்குடி மதத்தின் வம்சாவளியினர். எல்லா காலனிகளையும்போல ஆங்கில ஆதிக்கத்தின் துணையுடன் மதமாற்றத்தால் கிறுத்துவ மதம் பரவிய நாடு அது.

map-ghana-africa-impஅதில் ஒரு சாதாரண விவசாய குடும்பத்திலில் 1937ல் பிறந்த கெவிஸி ஈஸெல் (Guide Kwesi Essel)ன் தாய் கிறுத்துவர். உண்மையை அறிய கெவிஸி மேற்கொண்ட நீண்ட பயணத்தில் 1962ல் ரிஷிகேஷிலுள்ள சிவானந்த ஆஸ்ரமத்துடன் தொடர்புகொண்டார். இந்துவழி பிராத்தனைக்காக சங்கம் ஒன்றை ஆப்பிரிக்காவில் ஏற்படுத்தினார். இந்தியாவிற்கு 1970ல் வந்து ஆன்மீகத் தேடலில் அவர் அடைந்த இடம் ரிஷிகேஷ் சிவானந்தர் ஆஸ்ரமம்.

இரண்டாண்டு தீவிர பயிற்சிக்குப் பின்னர் இந்தியாவிலிருந்து தாய் நாடு செல்லும்போது இந்து மதத்தை ஏற்றுகொண்டவர். தன் நாட்டின் தலைநகரில் இந்து மதம் பற்றி சொற்பொழிவுகள் ஆற்றிவந்தார். துவக்கத்தில் படித்தவர்கள் மட்டுமே கலந்துகொண்ட கூட்டங்களுக்கு நாளடைவில் எல்லா தரப்பு மக்களும் வர துவங்கினர்.

1975ல் இந்தியாவிலிருந்த கானா வந்த ஸ்வாமி கிருஷ்ணாநந்த ஸரஸ்வதி இவருக்கு தீட்சை வழங்கி ஸ்வாமி கானானந்த ஸரஸ்வதி (Swami Ghananand Saraswati) எனப் பெயரிட்டு ஆப்பிரிக்க இந்து ஆஸ்ரமத்தை துவக்க உதவி செய்து, பணியை தொடரச் சொல்லிவிட்டு இந்தியா திரும்பிவிடுகிறார்...................2

Dr.Anburaj said...


ஆச்சரியமான விஷயம் கிருஷ்ணானந்த ஸரஸ்வதிக்கு இவரை முன்பின் தெரியாது. அவர் கானா வந்ததும் வேறு பணிக்காக. அன்று முதல் இந்த ஆஸ்ரமத்தின் தலைமைத் துறவியாகயிருந்து இந்து மதத்திற்கு தொண்டாற்றி வருகிறார் ஸ்வாமி கானானந்த ஸரஸ்வதி. கானாவில் இருப்பது 42, 500 இந்துக்கள். இதில் 15, 000 பேர் இவரைப்போல ஆப்பிரிக வம்சாவழி சார்ந்தவர்கள்.

இவருடைய இந்த ஆஸ்ரம உறுப்பினர்களாகச் சேர்ந்த பல மதத்தினரும் இந்துவாகி இருக்கிறார்கள். இந்து என்பது ஒரு வாழ்க்கை முறை. ஒருவார பயிற்சிக்குப் பின்னர் இந்துவாக வாழ விரும்புவர்களை ஏற்று தொடர்ந்து இந்துவாக வாழ அவர்களுக்கு உதவி செய்கிறோம்” என்கிறார் சுவாமி. இந்து விழாக்கள், பண்டிகைகள் பற்றிய விளக்கங்கள் பண்டிகைக்கு சில நாட்கள் முன்னதாவே கூட்டங்களில் விளக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றன. முக்கியமான விஷயம் கூட்டங்களும் பாடல்களும் உள்ளூர் மொழியில் தான்.

sw2தங்கள் குழந்தைகளுக்கு ராமர், கிருஷ்ணர் எனப் பெயர் சூட்டி மகிழும் இந்த “இந்து”க்களில் பலருக்கு கிருத்துவப் பெயர்தான். இறந்தபின் உடலை ஏரியூட்டுவது என்பதை எற்றுகொண்ட இந்துகளுக்கு இறுதிக் கடன்களை செய்கிறது இந்த ஆஸ்ரமம். நாட்டின் பிற நகரங்களில் 5 கிளைகளுடன் இயங்கும்
எங்கோ ஆப்பிரிக்காவில் வேறுமதத்தினராக பிறந்து இந்தியா வந்து இந்துமத பெருமையை உணர்ந்து அதை தன் தாய்நாட்டில் வேறூன்றச் செய்யும் இந்த ஸ்வாமி கானானந்த ஸரஸ்வதி இந்து மதத்தின் ஒரு பெருமையான அடையாளம்.

Dr.Anburaj said...

தேனீக்கள் பற்றி தெரிந்து கொளவோம்..!
தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்இருக்காது! ’ என்று சொல்லியிருக்கிறார்ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
------------------------------------------------------------------------------------
.உலகின் மிக சுவாரஸ்யமான,

நுணுக்கமான உயிரினம்.
🐝அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத்
தெரிந்துகொள்ளலாமா………….?முதலில்… ஆச்சரியம்.
🐝தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச்

சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.
🐝தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய்,

பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம்.
🐝தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது.
🐝யானை, ஆமைகளுக்கு

ஞாபகசக்தி அதிகம் என்போம்.

ஆனால்,

அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள்.
🐝இதுபோல இன்னும்

பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு உடம்பில் இருக்கின்றன.
ஆனால், அதிர்ச்சி

தரும் விஷயம்…
🐝அந்தத் தேனீக்கள் இப்போது

‘அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன.
🐝ஆம்… ‘உலகை உலுக்கும் செய்தி’ என்றால், நிச்சயம் இதுதான்.
🐝ஒட்டுமொத்த மக்கள்

தொகையாலும் பூமிக்கு விளையாத

நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும்.
🐝அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப் போர்வையைப் போத்துகிறது.
🐝தேனீக்களின் ‘லைஃப்ஸ்டைல்’ பற்றி தெரிந்துகொண்டால்தான், அது காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.
🐝தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப் பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப் பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை

பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.
🐝”உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு.

மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ.
🐝இதில் இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத் தேனீக்களைத் தான் மனிதர்கள் வளர்ப்பாங்க.
🐝 மத்த தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும்.
🐝ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித் தேனீக்கள் (பெண்கள்) இருக்கும்.
🐝இதில் ஆண் தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித் தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித் தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள்.
🐝ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும்தான் வேலை.

Dr.Anburaj said...

ஆண் தேனீக்கு,

ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை.
��மற்ற எல்லா வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு.
��உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச்

சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லாவேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும்.
��தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது. ��தேன் கூட்டை அறுங்கோண
வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம
முழுசாப் பயன்படுத்த முடியும்.��ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறியஅறுங்கோண செல் வடிவத்தில் கூடுகட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும். கூட்டின் கட்டுமானம்திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித் தேனீ அதில் முட்டையிடும்.��பூக்களின் மகரந்தம், மதுரம்… இரண்டும்தான் தேனீக்களின் உணவு. ��அப்போதைய பசிக்குஅப்போதே சாப்பிட்டுவிடும்.
��அப்புறம் ஏன் தேன் சேகரிக்கிறது? ��குளிர் காலங்கள், பூபூக்காத காலங்களில் உணவுத்
தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன் சேகரிக்கிறது. ��தேனீக்கள் தேன் சேகரித்துப்
பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்.
��தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள், பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில்
இருக்கும் ‘தேன் பை’யில்சேகரித்துக்கொள்ளும். ��அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல், தேனீயின்வயிற்றில் இருக்கும் நொதிகளுடன்சேர்ந்து திரவமாக மாறிவிடும்.
��கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்தத் திரவத்தை ஒப்படைக்கும். அதற்காக ஏப்பமிட்டுஏப்பமிட்டு தேன் பையில் இருந்து
திரவத்தை வெளியில் கொண்டுவந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும்.
��ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும்.
��கூட்டைப் பராமரிக்கும்தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச்சேர்க்கும்.
��பிறகு அந்தத் திரவத்தில்இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும்.��பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசிவைக்கும்.
��இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும்.
��தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனிக்களுக்கு எனக் கூட்டில் விட்டுத்தான் எடுப்பார்கள். ��அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம் !
��இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.
��இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான் அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப் பறக்கும். அதை எந்த ஆண் தேனீ துரத்திப்
பிடிக்கிறதோ, அதோடுதான் இணைசேரும் ராணி.��புணர்ச்சி முடிந்தவுடன் ஆண் இறந்துவிடும். ��அதன் பிறகு ராணித் தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான் வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!
��தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை
அட்டகாசமானது.
��உணவுத் தேவைஏற்படும்போது ‘ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக்கூட்டுக்குத் திரும்பும்.
��கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள்,
தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித் தெரிவிக்கும்.��இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட நடனம் மற்றும் வாலாட்டு நடனம்.வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.


��வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே

பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம்.
��வாலை வேகமாகஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால், தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.
��சூரியன், சோலையின் திசை, தங்கள் கூட்டின் இருப்பிடம்… இந்த மூன்றையும் சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும்.

�� இந்த நுட்பமான நடன ரகசியத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர்
கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு கொடுத்தார்கள்.

Dr.Anburaj said...

தேன் சேகரிக்கும் போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின்

மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும்போது, விதவிதமான

கூட்டணியுடன் பரவும்.
🐝இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்குக்

காரணம்.
🐝தேனீக்களை அதிகம்

காடுகளுக்குள் தான் பார்க்க முடியும்.
🐝காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே இயற்கையாகவே அடர்ந்த காடுகள் உருவாகிவிடும்!”
🐝”அழியும் உயிரினம் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன

ஆபத்து?”
🐝”அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன.

அதாவது,

தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42

சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
🐝இன்னும் இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை.
🐝ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை வரலாம்.
🐝தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம்,

Colony Collapse Disorder – சுருக்கமாக… CCD.

அதாவது கூட்டில் இருந்து உணவு

சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக் கொத்தாகக்

காணாமல் போய்விடும்.
🐝ராணி மட்டும் கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு

கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்துவிடும்.
🐝இல்லையெனில் வேறுகூடு தேடிப் போய்விடும்.
🐝பணித் தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு.
🐝அதில் முக்கியமானது… செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்.
🐝செயற்கை உரத்தில் உள்ள நியோ

நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து

அவற்றின் நினைவுத்தினை

மழுங்கடித்துவிடும்.
🐝இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் பறந்துபோய் அலைந்து திரிந்து இறந்துவிடும்.
🐝மரபணு மாற்றப்பட்ட உணவுப்

பயிர்களின் விதைகளை ‘டெர்மினேட்டர்

சீட்ஸ்’ என்பார்கள்.

🐝அதாவது, அந்தப் பயிர்கள்

‘விதை தானியத்தை’ உருவாக்காது.

மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும்.
🐝அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம்

செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும்.
🐝இப்படி விவசாயத்தில் ‘வணிக

லாபத்துக்காக’ மனிதன் செய்த பல

மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன.
🐝ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்து வருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு எனத்

தெரியவந்தது.
🐝அதனால், அங்கு செயற்கை

உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர்.
🐝வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்கை உண்டாக்க முயற்சிக்கிறார்கள்.
🐝பல லட்சம் தேனீக்களை அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு தேனீயைக்கூட உருவாக்க முடியாது.
🐝இதை நாம் எப்போது உணர்வோம்?” என்று

வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.
🐝’தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து

மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு

நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார்.

கொசுக்கள் பற்றி நிறைய பேசி எழுதிய தாங்களுக்கு தேனிக்கள் பற்றிய தகவலை பகி்ா்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. நன்றி

Dr.Anburaj said...

Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
அடிமைகளை வைத்துக் கொள்ளும் வழக்கம் இன்றும் சவுதி அரேபியா, சூடான், மொரிஷியானா போன்ற இஸ்லாமிய நாடுகளில் நிலவுகிறது. இதற்கு ஆதாரமாக ராய்ட்டர் செய்தி ஸ்தாபனம் “Slavery Still Exists in Mauritiana” என்ற தலைப்பில் வெளியிட்ட ஒரு ரிப்போர்ட்டிலிருந்து சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.

“……அவர்கள் சங்கிலிகளால் பிணைக்கப்படவில்லை; அல்லது அவர்களின் உரிமையாளர்களால் உடலின் எந்தபாகத்திலும் சூட்டுக்கோல் கொண்டு அடையாளமிடப்படவில்லை; இருப்பினும் அடிமைகள் மொரிஷியானாவில் இன்னும் இருக்கிறார்கள். சூரியன் சுட்டெரிக்கும் சஹாரா பாலைவனத்தில் ஒட்டகங்களையும், ஆடுகளையும் மேய்த்துக் கொண்டோ அல்லது மொரிஷியானாவின் நுவாக்ச்சோட்டில் (Nouakchott) விலையுயர்ந்த கார்பெட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட செல்வந்தர்களின் வீடுகளில் புதினா கலந்த தேயிலையை விருந்தினர்களுக்கு வழங்கிக் கொண்டோ இருக்கும் அந்த அடிமைகள் அவர்களின் உரிமையாளர்களுக்குப் பரம்பரை, பரம்பரையாக சேவகம் செய்து கொண்டிருக்கிறார்கள்….அது போன்ற அடிமைகள் பல்லாயிரக் கணக்கானவர்கள் மொரிஷியாவில் இருப்பதாக அங்கிருக்கும் அடிமைகள் ஒழிப்பு இயக்கத்தினர் கூறுகின்றார்கள்…..அடிமையாகப் பிறந்து பின்னர் அடிமை ஒழிப்பு இயக்கத்தின் உறுப்பினராக மாறிய பவுபாகார் மெஸ்சூத் என்பவர், ‘இந்த வழக்கமானது ஒருவன் ஆடு, மாடுகளை வைத்திருப்பது போன்றது..அடிமையான ஒரு பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகளும் அடிமைகளாகவே இருப்பார்கள்….’ என்கிறார்”.
Mauritanians ex-slaves walk in a suburb outside Mauritania's capital Nouakchott, November 21, 2006. They do not wear chains, nor are they branded with the mark of their masters, but slaves still exist. CREDIT: REUTERS

Mauritanians ex-slaves walk in a suburb outside Mauritania’s capital Nouakchott, November 21, 2006. They do not wear chains, nor are they branded with the mark of their masters, but slaves still exist.
CREDIT: REUTERS

இன்னொரு முக்கிய இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் இன்றளவும் அடிமைகளை வைத்துக் கொள்ளும் வழக்கம் தொடர்ந்து நடபெறுகிறது. இருப்பினும் கடுமையான இஸ்லாமிய கலாச்சார பின்னனி காரணமாக இது குறித்தான பெருமளவு தகவல்கள் வெளியே வராமல் மூடி மறைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் பங்களாதேஷ், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், ஸ்ரீலங்கா போன்ற ஏழை நாடுகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான பெண்கள் சவூதி ஷேக்குகளின் வீடுகளில் பணிப்பெண்களாக பணிபுரியச் செல்கிறார்கள். அவ்வாறு வேலைக்குச் செல்லும் அந்தப் பெண்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் ஏறக்குறைய அடிமை வாழ்க்கை வாழ்கிறார்கள்.

அவ்வாறான பணிப்பெண்களில் பெருமளவினர் அல்லா “அமைதி மார்க்கத்தினருக்கு”

குரானில் அளித்த அனுமதியின்படி, அவர்களின் முதலாளிகளுக்குப் பாலியல் அடிமைகளாக

நடந்து கொள்ளும்படி வற்புறுத்தப்படுகிறார்கள். தப்பிச் செல்ல வேறு வழியின்றி வீட்டில்

அடைபட்டிருக்கும் அந்தப் பெண்ணுக்கு அதன்படி நடப்பதினைத் தவிர்த்து வேறு வழியேதும்

இல்லை...............

Dr.Anburaj said...

சவுதி அரேபியாவிலிருந்து வந்து கொலராடோ பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி படித்துக்

கொண்டிருந்த ஹொமைடான் அல்-துருக்கி என்பவன் அவனது பிலிப்பைன் நாட்டு

வேலைக்காரியை கற்பழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டான். நீதிபதியின் முன்னால்

நிறுத்தப்பட்ட ஹொமைடான், தான் செய்தது இஸ்லாமிய சட்டப்படி தவறு அல்லவென்றும்,

அவ்வாறு நடக்ப்பது “ஒரு இஸ்லாமியனின் பரம்பரை வழக்கம்” என்றும் வாதிட்டான்.

அமெரிக்க நீதிபதி அவனுக்கு இருபது வருடம் சிறைத் தண்டனை விதித்து ஜெயிலுக்கு

அனுப்பி வைத்தார் என்பது வேறு விஷயம். ஒரு பி.ஹெச்.டி படித்த முஸ்லிமே

இப்படியென்றால் உலகமெங்கும் நிறைந்திருக்கும் கல்வி அறிவற்ற முஸ்லிம்களைப் பற்றிக்

கேட்கவே வேண்டாம்.

மனித உரிமைகளைக் கண்காணிக்கும் இயக்கத்தினர் அளிக்கும் ஒரு ரிப்போர்ட் சவூதி அரேபியாவில் பணிக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான பணிப்பெண்களின் நிலைமையை இப்படி விவரிக்கிறது,

Dr.Anburaj said...

எங்களிடம் பேசிய பல பணிப்பெண்கள் அவர்களின் ஆண் உரிமையாளர்களால் கற்பழிக்கப்பட்டதாலும், பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்ட்டதாலும் உண்டான அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத நிலைமையில் இருந்தார்கள். பெரும் துயரத்துடனும், கண்ணீருடனும் அந்தப் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை விவரித்தாரகள்….தாங்கள் பிறந்த நாடுகளில் எங்கும் வெளியில் சென்று வரும் சுதந்திரமுடைய அந்தப் பெண்கள் ரியாத்திலும், ஜெத்தாவிலும், தமாமிலும் பூட்டுக்கள் பூட்டி அடைக்கப்பட்ட வீடுகளில் அடிமைகளைப் போல வாழ வேண்டிய நிலைமை விவரித்துக் கண்ணீர் சிந்தினார்கள்…..அவர்களை சவூதி அரேபியாவிற்கு அழைத்துவந்த அவர்களின் ஒப்பந்த நிறுவனங்களால் ஆட்டு மந்தைகளைப் போல டார்மெட்டரிகளில் அடைக்கப்பட்டு, தனிமையில் உழன்று, வெளியுலகில் எவரிடமும் உதவி கேட்கமுடியாத நிலையில் இருக்கும் அவர்கள், பாலியல் ரீதியாக சவூதிகளால் கொடுமைப்படுத்தப்பட்டு வாழ்கிறார்கள்….”

இன்றும் இதுபோல பல ஆயிரக்கணாக்கான அடிமைப் பெண்கள் சவூதி அரேபியாவின் மாட மாளிகைகளில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு வருடமும் மலேஷியா, இந்தியா, ஸ்ரீலங்கா, எகிப்து, பங்களாதேஷ் போன்ற ஏழை நாடுகளுக்குப் பயணம் செய்யும் கிழடு தட்டிய, பணக்கார சவூதி ஷேக்குகள், அங்கிருக்கும் ஏழைப் பெண்களின் பெற்றோர்களிடம் சிறிதளவு பணம் கொடுத்து அந்த அப்பாவிப் பெண்களை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்த பின்னர் தங்கள் நாட்டிற்கு அழைத்துப் போவார்கள். வளமான வாழ்க்கையைக் கண்ணில் தேக்கிச் செல்லும் அந்தப் பெண் சவூதி அரேபிய வழக்கப்படி ஒரு அடிமையாக மட்டுமே நடத்தப்படுவாள்.

அடிமைகள் விஷயத்தில் சூடானின் (நுபியா) கதை இன்னும் சோகமானது. இஸ்லாமிய அடிமை வியாபாரம் சூடானில் மிகப் பழங்காலம் தொட்டே நடந்துவரும் ஒரு விஷயம். இஸ்லாமின் ஆரம்ப காலத்திலேயே ஆக்கிரமிப்பிற்கு ஆளான சூடான் 652-லிருந்து 1276-ஆம் வருடம் வரை ஒவ்வொரு வருடமும் 400 அடிமைகளை காலிஃபாக்களுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தது. பத்தாம் நூற்றாண்டு இஸ்லாமிய நூலான ஹுடுத் அல்-அலாம், சூடான் இஸ்லாமிய அடிமை வேட்டைக்காரர்களின் சொர்க்கமாகத் திகழ்ந்தது எனக் கூறுகிறது. அதுவே இன்றளவும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

Dr.Anburaj said...

Slave: My True Story என்னும் சுயசரிதைப் புத்தகத்தை எழுதிய மென்டே நாசர் (Mende Nazer) என்னும் பெண்மணி, 1992-ஆம் வருடம் சூடானின் நுபா மலைப்பகுதியில் அரேபிய அடிமை வேட்டைக்காரர்களால் பிடிக்கப்பட்டவர். அவ்வாறு பிடிக்கப்பட்ட அந்தப் பெண் முதலில் கார்ட்டும் (Khartoum) நகரில் வாழ்ந்த ஒரு பணக்கார அரேபியர்களுக்கு அடிமையாக விற்கப்பட்டார். பின்னர் லண்டனில் வாழ்ந்த ஒரு சூடானிய தூதரக அதிகாரிக்குப் பணிப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து 2002-ஆம் வருடம் தப்பிய மென்டே நாசர், பிரிட்டனில் அகதியாக அடைக்கலம் புகுந்தார்

அமைதி மார்க்கத்தினர் தங்களின் அடிமைகளை நடத்தும் போக்கினைக் குறித்து National Reviews பத்திரிகைத் தகவல் ஒன்று இப்படிச் சொல்கிறது,

“ஐந்து வருடங்களுக்கு முன்னர் சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் – இவர்களில் அப்போதைய சவுதி அரசரான ஃபகாத்தின் சகோதரியும் ஒருவர் – லண்டனில் தங்களிடம் வேலை செய்த ஒரு பிலிப்பைன் நாட்டுப் பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்தியதாகச் சர்ச்சையில் சிக்கினர். சவுதி அரச குடும்பத்தினர் தன்னை உடல் ரீதியாகக் கொடுமைப்படுத்தியதுடன், உணவேதும் அளிக்காமல் பட்டினி போட்டு ஒரு அறையில் தன்னை அடைத்து வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டினார் அந்தப் பணிப்பெண்”

அமெரிக்காவில் வசிக்கும் சவுதி அரேபியர்களின் வீடுகளில் பணிபுரியும் பெண்களின் நிலைமையை விளக்கும் அமெரிக்க அதிகாரபூர்வ தகவலொன்று,
Maid abused in Saudi Arabia

Maid abused in Saudi Arabia

“….சவுதி அரேபிய வீடுகளில் பணிபுரியும் பெண்கள் ஏழு விதமான சூழ் நிலையைச் சந்திக்கிறார்கள்: அவர்களின் பாஸ்போர்ட் சவுதிகளால் பிடுங்கி வைத்துக் கொள்ளப்படுகிறது; அவர்களின் வேலைக்கான ஒப்பந்தம் பணிப்பெண்ணின் சம்மதமில்லாமல் அவர்களின் உரிமையாளர்களால் இஷ்டம் போல மாற்றப்படுகிறது; ஓய்வு ஒழிச்சலற்ற பல மணி நேர வேலை; எந்த விதமான மருத்துவ உதவியும் பணிப்பெண்களுக்கு அளிக்க மறுக்கப்படுகிறது; கீழ்த்தரமான வசைகளும், உடல் ரீதியான துன்பங்களும் மற்றும் சிறையைப் போன்ற சுதந்திரமற்ற சூழ் நிலையும்….நாங்கள் பேசிய எல்லாப் பெண்களும் அமெரிக்காவிலேயே பணிபுரிந்தார்கள்…அவர்களில் சிலர் முதலில் சவுதி அரேபியாவில் பணிபுரிந்தவர்களாகவும் இருந்தார்கள்….இந்த இரண்டு நாடுகளில் பணி புரிந்த பெண்களின் நிலைமையிலும் எந்தவிதமான மாற்றங்கள் இல்லை…..” என்கிறது.

அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளிலேயே இவர்கள் இப்படியென்றால், இஸ்லாமிய நாடுகளில் எப்படி நடந்து கொள்வார்கள் என்று கற்பனை செய்யவே உடல் கூசுகிறது.

Dr.Anburaj said...

அடிமைகளை வைத்துக் கொள்வது முகமது நபியின் காலத்திலிருந்தே இஸ்லாமிய சட்டங்களினால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. மேற்கத்திய நாடுகளுக்கு வாழப்போன இஸ்லாமியர்கள் இன்றும் இதனையே தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இஸ்லாமிய காலிபேட் அமைக்கத் துடிக்கும் மேற்கத்திய ஜிகாதிகள் எண்ணிக்கையில் பெருகி வருவது கவலைக்குரிய ஒன்றே.
----------------------------------------------------------------

அடிமைத்தளத்தை இசுலாம் ஒழித்து விட்டது என்று அண்டப்புளுகு ஆகாயப்புளுகு டூமூட்டைகளை அவிழ்த்து விட்டு வாசகா்களுக்கு தைக்யா காட்ட வேண்டாம்.

Dr.Anburaj said...

இஸ்லாமியர்களால் கைப்பற்றப்பட்ட இந்து மற்றும் பிற காஃபிர் பெண் அடிமைகள் அவர்களின் வீடுகளில் வேலைக்காரிகளாக்கப் பட்டார்கள். அவர்களில் இளமையாகவும், அழகாகவும் இருக்கும் பெண் அவளது முஸ்லிம் உரிமையாளனுடன் உடலுறவு கொள்ளவது கட்டாயமானது. இப்படியாக அந்த அடிமைப் பெண்கள் வீட்டுவேலைக்கும், வேண்டும் போது உடலுறவு கொள்வதற்கும் பயன்பட்டது மட்டுமன்றி முஸ்லிம்களின் ஜனத்தொகையை உயர்த்தவும் உபயோகிக்கப்பட்டார்கள். அந்த காஃபிர் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகள் முஸ்லிம்களாக வளர்க்கப்பட்டார்கள்.

பாலியல் அடிமைத்தனம் என்பது இஸ்லாமில் மிகவும் சாதாரணமான ஒன்றல்ல. இவ்வாறு பாலியல் அடிமைகளைக் கைப்பற்றுவது குறித்து நம்பிக்கையாளர்களுக்கு அல்லா குரானில் மீண்டும், மீண்டும் வலியுறுத்திக் கொண்டே இருப்பதனைக் காணலாம். முகமது நபியே மூன்று அழகான அடிமைகளைத் தனது வைப்பாட்டிகளாக வைத்திருந்ததார். ஜுவாரியாவைச் சேர்ந்த பானு முஸ்டாலிக், பானு குரைஸா சாதியைச் சேர்ந்த ரய்ஹானா மற்றும் எகிப்திய கவர்னரால் அனுப்பி வைக்கப்பட்ட மரியா (முகமது அந்த கவர்னரை மிரட்டிக் கடிதம் எழுதியதால் அவரை சமாதானப்படுத்தும் வகையில்) என மூன்று அடிமைகளை வைப்பாட்டிகளாக வைத்திருந்ததாக முகமது நபியின் சீடரான புகாரி கூறுகிறார்.

அத்துடன் முகமது அவரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான அடிமைப் பெண்களை, வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ள என அவரது சீடர்களுக்குப் பகிர்ந்தளித்தார். அவரது மருமகனான அலிக்கும் (நான்காவது காலிஃபா), உத்மான் அஃபான் (மூன்றாவது காலிஃபா) மற்றும் அவரது மாமனாரான ஒமார்-பின்-கத்தாப்பிற்கும் (இரண்டாவது காலிஃபா) தலா ஒன்று அடிமைப் பெண்களைப் பகிர்ந்தளித்த சம்பவமும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பெண்களை அடிமைகளாகப் பிடிப்பது பற்றிக் கூறும் குரானின் 23:5-6 வாசங்கங்களை விளக்கும் சையத்-அப்துல்-அலா-மவ்தூதி, “குரான் இரண்டு வகையான பெண்கள் தங்களின் அந்தரங்க உறுப்புகளை மறைத்துக் கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கிறது. முதாலவது, மனைவிகள். இரண்டாவது, முஸ்லிமால் அடிமைகளாகப் பிடிக்கப்பட்ட பெண்கள். இப்படியாக குரானின் 23:5-6-ஆம் வசனம், ஒரு முஸ்லிம் தனது மனைவியரிடம் உடலுறவு கொள்ளும் அதே உரிமையை அவன் திருமணம் செய்து கொள்ளாத, அவனுக்குச் சொந்தமான அடிமைப் பெண்களுடன் உடலுறவு கொள்ளத் தெளிவாக அனுமதியளிக்கிறது. ஒரு முஸ்லிமிற்குத் திருமணம் நடக்கையில் அவனது மனைவிகளுடன் அந்த அடிமைப் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்களைக் குறித்துத் தனியாக எதுவும் சொல்லத் தேவையில்லை”.

islamic-womens-slave-marketஹெடாயா சட்டங்கள் நடைமுறையில் இருந்த இஸ்லாமிய நாடுகளில் இந்த அடிமைப் பெண்கள் “சேர்ந்து வாழ்வதற்கும், குழந்தைகள் பெறுவதற்கும்” மட்டுமே உபயோகப்படுத்தப் பட்டார்கள். ஒரு அடிமைப் பெண்ணை அடிமைச் சந்தையில் வாங்குவதற்கு அவளது அழகும், எவ்விதமான உடற்குறைபாடுகளும் இல்லாதவளாக இருப்பதுவே முக்கியமானது. இஸ்லாமிய ஹெடாயா (Hedayah) சட்டத்தின்படி வாய் துர்நாற்றமடிக்காத, அக்குள்களில் வாசமடிக்காத அடிமைப் பெண்களையே விலைக்கு வாங்க வேண்டும் என்று கூறுகிறது. ஆண் அடிமைகளுக்கு இந்தக் கட்டாயம் ஏதுமில்லை

Dr.Anburaj said...

இதனை மேலும் விளக்கும் ஹெடாயா, ஒரு பெண் அடிமையானவளை இரண்டு முஸ்லிம்கள் பகிர்ந்து கொண்டாலும், அவள் அவர்களில் ஒருவனுக்கு மட்டுமே உரிமையானவள் எனவும், மற்றவன் அவளுடன் உடலுறவு கொள்ள வேண்டுமெனில் உரிமையாளனின் அனுமதியை பெற வேண்டும் என்று கூறுகிறது.

ஃபாத்வா-இ-ஆலம்கிர், ஒரு முஸ்லிம் அடிமைச் சந்தையில் விலைக்கு வாங்கிய பெண்ணுக்கு மிகப் பெரிய முலைகள் இருந்தாலோ அல்லது தளர்வான யோனியோ இருந்தால் அவன் அவளை மீண்டும் வாங்கியவனிடமே திருப்பித் தர உரிமை உண்டு என்று கூறுகிறது. அவன் அந்தப் பெண்ணுக்குக் கொடுத்த பணம் மீண்டும் அவனுக்கே திருப்பியளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. கன்னி கழியாகத (virgin) பெண்ணை வாங்கிய முஸ்லிம் ஒருவன், அந்தப் பெண் கன்னியல்ல என்று கண்டுபிடித்தால் அவனுக்குப் பணம் திருப்பியளிக்கப்பட வேண்டும் என்கிறது ஃபாத்வா-இ-ஆலம்கிர்.

இவ்விதமாகப் பெண்களை இழிவுபடுத்தித் தேர்ந்தெடுக்கும் முறையானது முகமது நபியிடமிருந்தே வந்தது என்பதினை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். போரில் கைப்பற்றப் படும் அழகான பெண்களைத் தனக்கென வைத்துக் கொள்ளும் வழக்கமுடையவர் முகமது நபி. கைபார் போரின் போது, அந்த நகரைச் சேர்ந்த கினானா என்பவனின் மனைவியான சஃபியாவின் அழகினைப் பற்றி கேள்விப்படும் முகமது நபி, அவளைத் தனக்கு மட்டுமே உரிமையாகத் தகுதியானவள் என்று நினைத்தார். எனவே, கைபார் போரில் சஃபியாவை பிடித்து வைத்துக் கொண்ட முகமதுவின் சீடனான இன்னொரு ஜிகாதியிடமிருந்து அவளைப் பிடுங்கிக் கொண்டார் முகமது.

இன்னொரு போரில் முகமது பிடித்த ஹவாஸின் பழங்குடிப் பெண்களைத் தனது சீடர்களுடன் பகிர்ந்து கொண்டார் முகமது. அந்த நேரத்தில் ஹவாஸின் பழங்குடியைச் சேர்ந்த தூதுவர்கள் முகமதை அனுகி அந்தப் பெண்களை விடுதலை செய்யும்படி கோரிக்கை விடுத்தார்கள். ஒவ்வொரு பெண்ணுக்க்கு ஆறு ஒட்டகங்கள் கொடுத்தால் அவர்களை விடுதலை செய்வதாகச் சொல்கிறார் முகமது.

ஆனால் முகமதுடன் வந்த இன்னொரு ஜிகாதியான உயானா-பின்-ஹஸ்ன் என்பவன் அவனால் பிடிக்கப்பட்ட ஒரு உயர் வர்க்கப் பெண்ணை விடுதலை செய்ய மறுத்தான். அவளை விடுதலை செய்ய வேண்டுமானால் இன்னும் அதிக விலை தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தான். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஜுபைர்-அபு-சுராத் என்பவன், உயானா-பின்-ஹஸ்னிடம் சென்று “அவளின் வாய் ஜில்லிட்டுக் கிடக்கிறது; மார்போ முலைகளின்றி தட்டையாக இருப்பதுமன்றி அவளால் கர்ப்பம் தரிக்கவே இயலாது….மேலும் அவளது பால் அத்தனை உசத்தியானது இல்லை” என்று சொல்கிறான். இதனைக் கேட்டு வெறுத்துப் போன உயானா, முகமதின் இன்னொரு கூட்டாளியான அல்-அக்ரா என்பவனிடம் சென்று இதனைக் குறித்துக் கேட்க, “அல்லாவின் மீது ஆணையாக, நீ அவள் கன்னியாக இருக்கையில் கைப்பற்றவில்லை; அதனையும் விட உடலழகு கூடிய மத்திய வயதுக்காரியாகவும் அவள் இல்லையே” என்று கூறுகிறான்.

Dr.Anburaj said...

பெண் அடிமைகளைத் தங்களின் இன்பத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதைக் குரானும், சுன்னாவும், ஷரியாவும் முழுமையாக அங்கீகரிக்கின்றன. எனவே இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் இஸ்லாமிய இமாம்களும், முல்லாக்களும், ஜிகாதிகளும் அதனைக் குறித்து எவ்விதமான நாணமுமின்றி வெளிப்படையாகக் கூறிக் கொண்டு திரிவதைக் காணலாம். அவர்களைப் பொருத்தவரை அவ்வாறு செய்வது அல்லாவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. “இறை தூத”ரான முகமது நபியே அதற்கு உதாரண புருஷர்.

islam-women-jihad-slaveryஜிகாத் செய்து காஃபிர்களைக் கொள்ளையடிப்பதால் கிடைக்கும் செல்வத்துடன் மட்டுமன்றி, அவர்களின் பெண்களும் தங்களுக்குக் கிடைப்பார்கள் என்னும் ஆசையே முகமதின் சீடர்களை அன்று முதல் இன்றுவரை ஜிகாதிகளாக்குகிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை. இஸ்லாமியச் சட்டத்தின்படி, ஒரு காஃபிரைக் கொன்ற முஸ்லிம் கொல்லப்பட்ட காஃபிரின் மனைவி, குழந்தைகள் மற்றும் அவனது சொத்துக்களுக்கு உரிமையாளனாகிறான்.

ஒரு நம்பிக்கையாளன் இத்தனை பாலியல் அடிமைப் பெண்களை மட்டுமே தனக்கென வைத்துக் கொள்ள வேண்டுமென எந்த அளவும் சொல்லவில்லை. அவன் எத்தனை அடிமைப் பெண்களை வேண்டுமானாலும் தனக்கு உரிமையாக்கிக் கொள்ளலாம். இந்தியாவை ஆண்ட முஸ்லிம் ஆட்சியாளர்கள் இதனை உதாரணமாகக் கொண்டு நடந்தவர்கள். அக்பரின் ஹராமில் (அந்தப்புரம்) ஏறக்குறைய 5000 அடிமைப் பெண்கள் இருந்தார்கள். ஜஹாங்கீரும், ஷாஜஹானும் தலா 5000 மற்றும் 6000 அடிமைப் பெண்களை தங்களின் சொந்த உபயோகத்திற்கென வைத்திருந்தார்கள்.

அவுரங்கசீப்பின் காலத்தில் இந்தியாவிற்கு வந்த இத்தாலியரான நிக்காலோ மனூச்சி (Niccolao Manucci) பெண் பித்துப் பிடித்தலையும் இந்திய இஸ்லாமியர்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார், “எல்லா முஸ்லிம்களும் பெரும் பெண் பித்தர்களாக இருந்தார்கள்; அவர்கள் அடைந்த ஒரே ஒரு இன்பம் அது மட்டுமே” என்கிறார்.

Dr.Anburaj said...

டச்சுக்காரரான ஃப்ரான்ஸிஸ்கோ பெல்சார்ட் (Francisco PelSaert) ஜஹாங்கீரின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிற்கு வந்தவர். முஸ்லிம் ஆட்சியாளர்கள் மற்றும் உயரதிகாரிகளின் ஹராம்கள் குறித்தும் அவர்களின் பெண் வேட்கையைத் தெளிவாகப் பதிவு செய்கிறார் ஃப்ரான்ஸிஸ்கோ,“….ஒவ்வொரு இரவும் அமீர் அவரது குறிப்பிட்ட மனைவி வசிக்கும் மஹாலை (இருப்பிடம்) செல்வார். அங்கிருக்கும் அந்த மனைவியும், அழகான ஆடைகள் அணிந்த அடிமைப் பெண்களும் அவரை அன்போடு வரவேற்பார்கள்…அது கோடைக்காலமாக இருந்தால் அமீரின் மார்பில் அரைத்த சந்தனத்தையும், பன்னீரையும் அடிமைப் பெண்கள் பூசுவார்கள்…மஹாலின் விசிறிகள் தொடர்ந்து வீசப்பட்டுக் கொண்டிருக்கும்….சில அடிமைப் பெண்கள் அமீரின் கை, கால்களை அமுக்கி விட, மற்ற சிலரோ இனிமையாகப் பாட ஆரம்பிப்பார்கள்….இசையும், நாட்டியமும் ஒலிக்கத் துவங்கும்…அமீரின் மனைவி அவனருகே அமர்ந்திருப்பாள்….அப்போது அங்கிருக்கும் ஏதாவதொரு அழகான அடிமைப் பெண்ணின் மீது அமீரின் கண்கள் பட்டால் அவளை அருகில் அழைத்துப் பின்னர் அத்தனை பேரின் முன்னிலையிலும் அவளுடன் உடலுறவு கொள்வார்….அருகில் அமர்ந்திருக்கும் அமீரின் மனைவி அது குறித்து எந்தவிதமான துயரமோ அல்லது சினமோ காட்டாமல் அமர்ந்திருப்பாள்…..அமீர் அவ்விடத்தை விட்டு அகன்ற பிறகு அந்த அடிமைப் பெண்ணை அமீரின் மனைவி சரியாக ‘கவனித்து’க் கொள்வாள்…”
இருப்பினும் அந்த அழகான அடிமைப் பெண்ணை அந்தப்புரத்திலிருந்த அமீரின் மனைவி எளிதில் வெளியேற்றி விடமாட்டாள். ஏனென்றால் அந்த அடிமைப் பெண்ணை விடுதலை செய்யும் உரிமை அவளின் உரிமையாளனான அமீரிடம் மட்டுமே இருக்கிறது
மொத்தத்தில் இஸ்லாமிய வாழ்க்கை முறையில் அல்லாவால் அங்கீகரிக்கப்பட்ட அடிமைகளும், வைப்பாட்டிகளும் மிகவும் மனிதத்தனமற்ற ஒரு விதமான விபச்சாரமே என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. முகமது நபியால் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கேவலமான நடைமுறை இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. 1921-ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து துரத்தியடிக்கப்படும் வரையிலும் ஒட்டமான் அரசர்கள் தங்கள் ஹராமை அடிமைப் பெண்களால் நிறைத்து வைத்திருந்தார்கள் என்பது வரலாறு.
1954-ஆம் வருடம் பாகிஸ்தானுடன் இணைத்துக் கொள்வதற்கு முன், அரேபியர்களால் முதன் முதலில் கைப்பற்றப்பட்ட சிந்துப் பகுதியிலிருந்த பஹவல்பூரை ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டிருந்த நவாப் அவரது ஹராமில் முன்னூற்றித் தொண்ணூறுக்கும் மேற்பட்ட பெண்களை வைத்திருந்தார். ஆண்மையை மிகவும் இளவயதிலேயே இழந்து விட்ட பஹவல்பூர் நவாப்பானவர் தனது ஹராமிலிருந்த பெண்களைச் சந்தோஷப்படுத்த வைத்திருந்த பொருட்களைப் பற்றியெல்லாம் இங்கு எழுதிவிட முடியாது

ஜாகிர் ஹீசைன் said...

; نُص --- நுஸ் --- அரை --- 1/2 --- half;
نص என்பதற்கு பாதி என்பது தவறு نصف -- நிஸ்ஃபு--என்றால் தான் --1/2 --- half; பாதி

suvanappiriyan said...

நீங்கள் சொல்வது இலக்கணப்படி சரி. பேச்சு வழக்கில் நுஸ் என்றே சொல்கிறோம்.