Followers

Sunday, July 30, 2017

ஆர்எஸ்எஸ் உறுப்பினரை கொல்ல முயற்சித்த ஆர்எஸ்எஸ்!

ஆர்எஸ்எஸ் உறுப்பினரை கொல்ல முயற்சித்த ஆர்எஸ்எஸ்!

திருவனந்தபுரம் கர்குளம் பஞ்சாயத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு(25). பல ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் உறுப்பினராக உள்ளார். தேச பக்தி என்ற போர்வையில் பல நாசகார செயல்களை செய்ய ஆர்எஸ்எஸ் இவரை பயன்படுத்திக் கொண்டது. ரமலான் மாதத்தில் மாடுகளை ஏற்றி வந்த வாகனத்தை மறித்து பிரச்னை செய்தார். கிறித்தவர்களின் சர்ச்சுக்கு சென்று அங்கும் பல பிரச்னைகளை ஏற்படுத்தினார். ஒரு முறை ஆர்எஸ்எஸ் கொடிகளை இவர்களே எரித்து விட்டு அதனை சிபிஐம் செய்ததாக பொய் கூறி கலவரம் செய்தனர். இது விஷ்ணுவுக்கு பிடிக்கவில்லை. ஆர்எஸ்எஸின் பல செயல்கள் தேச விரோதங்களாகவே இருந்தது. இது பற்றி பல முறை தலைவர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளார். 

எதிர்த்து கேள்வி கேட்டால் ஆர்எஸ்எஸூக்கு பிடிக்காதல்லவா! எனவே அவரை தனி அறையில் அடைத்து சாப்பாடு கொடுக்காமல் கொடுமைபடுத்தியுள்ளனர். இவரை தூங்கவும் விடவில்லை. தங்கள் வேலைகளை முடிக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். பலமாக அடித்துள்ளனர். பல முயற்சிகளுக்குப் பிறகு இவர்களின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ளார் விஷ்ணு. ஆர்எஸ்எஸ் ஆட்களால் தான் எந்த நேரமும் கொல்லப்படலாம் என்ற பீதியுடனேயே உள்ளார் விஷ்ணு.


கொலைகார கூட்டமான இந்த ஆர்எஸ்எஸ் என்று நம் நாட்டிலிருந்து விரட்டப்படுகிறதோ அன்று தான் இந்திய மக்கள் ஒற்றுமையாக இருப்பர். இந்தியாவும் முன்னேறும்.




No comments: