Followers

Friday, January 29, 2016

மனித உடலை விட்டு விரை ஏன் தனித்துள்ளது?



ஆகவே மனிதன், தான் எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்து பார்க்க வேண்டாமா? குதித்து வெளியாகும் ஒரு துளி நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது ஆணின் முதுகந் தண்டிற்கும் கடைசி விலா எலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.
அல்-குர்ஆன்: 86:5-7


அற்ப விந்துத் துளியிலிருந்து உன்னை படைத்துள்ளேன். ஆனால் படைத்த என்னை விடுத்து படைப்பினங்களை வணங்கி பாவத்தில் வீழ்கிறாயே மனிதா? என்று மக்களைப் பார்த்து கேட்கிறான் இறைவன். அந்த விந்தைப் பற்றியும் அது உற்பத்தியாகும் வழி முறைகள் பற்றியும் சிறிது இந்த பதிவில் பார்போம்.

விந்து வெளியேறும் போது அதே பாதையில் உள்ள சிறுநீர் வந்து விடாமல் ஒரு தடுப்பை இறைவன் ஏற்படுத்தியுள்ளதை என்றாவது நாம் சிந்தித்திருக்கிறோமா? சிறுநீர் வெளியாகும் வழியும், விந்து வெளியாகும் வழியும் ஒன்றாக இருந்தாலும் அந்த இரண்டும் கலந்து விடாமல் இருக்க அவன் ஏற்படுத்தியுள்ள தடைகள்தான் எத்தகையது?

'குதித்து வெளியாகும் விந்து' என்று வித்தியாசப்படுத்தப்பட்டுள்ளதை கவனியுங்கள். குதித்து வேகமாக சென்றால்தான் பெண்ணின் கர்ப்பப்பையை உயிர்ப்புடன் உள்ள விந்தணுக்குள் சென்றடைய முடியும். தாமதமானால் பெண் உடலின் சூட்டினால் விந்தணுக்கள் இறந்து விட அதிக வாய்ப்புண்டு.

மேலும் ஓரு மனித உடலின் சராசரி வெட்ப நிலை 37 டிகிரியாகும். ஆணுறுப்பிற்கு கீழே இருக்கும் இனவிருத்தி உயிரணுக்களை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் விதையின் வெப்ப நிலை, உடலின் வெட்ப நிலையை விட சுமார் 3 அல்லது 4 டிகிரி குறைவாகவே இருக்கும். காரணம் விந்தில் இருக்கும் பல கோடி உயிரணுக்கள் 34 டிகிரி வெட்ப நிலையில் தான் உயிர் வாழ முடியும். வெப்ப நிலை அந்த அளவைவிட சற்று அதிகரிக்கும் போது அந்த உயிரணுக்களால் உயிர் வாழ முடியாமல் செத்துவிடும்.

விந்து சிறுநீரைப் போல சாதாரணமாக வெளிப்படுமேயானால் ஆணுறுப்பில் உள்ள கூடுதல் வெப்ப நிலையாலும், சிறுநீரின் வேதிய பொருட்களாலும் அந்த விந்தில் உள்ள உயிரணுக்கள் வரும் வழியிலேயே செத்துபோய்விடும். அதனை கருத்தில் கொண்டுதான் பல கோடி உயிரணுக்களை சுமந்து வரும் விந்தை குதித்து விரைவாக வீரியத்துடன் தனித்து வெளியேறும் தன்மையில் படைத்துள்ளான் இறைவன்.

'விரை' உடலைவிட்டும் பிரிந்திருப்பது ஏன்?

விந்துவினை உற்பத்தி செய்யும் 'விரை' உடலின் உட்பகுதியில் இருப்பதுதான் அதனால் உற்பத்தி செய்யப்படும் உயிரணுக்களுக்கு தகுந்த பாதுகாப்பானது என்றிருந்தும் அது இருந்த அந்த பழைய இடத்தைவிட்டு நகர்ந்து ஏன் உடலைவிட்டும் பிரிந்து தனியாக நிற்கிறது? என்பதையும் இந்த வசனத்தின் மூலம் சிந்திக்கத் தூண்டுகிறான் இறைவன். ஏனெனில் இந்த வசனத்தின் ஆரம்பமே 'மனிதன் தான் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்று சிந்தித்துப் பார்க்கட்டும்' என்றுதான் உள்ளது.? எனவே ஏன் இந்த இடம் மாற்றம் நிகழ்ந்தது? என்பதையும் நாம் சிந்திக்க தூண்டப்படுகிறோம்.

ஒரு மனித உடலின் சராசரி வெப்ப நிலை 37 டிகிரியாகும். பொதுவாக உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டுதான் உடலின் வெப்ப நிலை சீராக இருந்து வருகிறது. இனவிருத்திக்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சுமார் 33 டிகிரி வெப்ப நிலையில்தான் உயிர் வாழ முடியும். அந்த அளவை விட கூடும் போது அதனால் உயிர் வாழ முடியாமல் செத்துவிடும். 37 டிகிரி வெட்பநிலையில் உள்ள உடலின் உட்பகுதியில் 'விரை' இருந்தால் அந்த விரையிலும் 37 டிகிரி வெட்ப நிலைதான் இருக்கும். அதில் உயிரணுக்களால் நிச்சயமாக உயிர் வாழ முடியாது. இந்த உயிரணுக்கள் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக உடலின் வெப்பநிலையை குறைக்க முனைந்தால் உடலில் வேறுபல பாதிப்புகள் ஏற்படும். எனவே அந்த விரையை உடலிலிருந்து தனியாக பிரித்து, அதனுடைய வெப்பநிலையை சரி செய்வதுதான் முறையாகும் என்று கருதிய அல்லாஹ் அதனை உடலைவிட்டும் தனியாக பிரிந்து இருக்கும் அமைப்பில் படைத்து, அதன் வெப்ப நிலை சராசரியாக 33-34 டிகிரி இருக்கும் நிலையில் ஆக்கியுள்ளான். இந்த இடம் மாற்றம் கருவளர்ச்சியின் சிறிது காலத்திற்கு பிறகு ஆரம்பித்து குழந்தை பிறப்பதற்குள் பூர்த்தி அடைந்துவிடுகிறது. ஒரு குழந்தைக்குகருவில் இருக்கும் போதே விரையின் இடம் மாற்றம் ஏற்படவில்லையெனில் அவருக்கு ஆண்மை இருக்காது, விரைக் கேன்ஸர் (புற்று நோய்) ஏற்படுவற்கும் அதிக வாய்ப்புகளும் உள்ளன. மேலும் விரை மாற்றம் நடைபெறாத குழந்தைகள் இறந்தே பிறப்பது, அல்லது பிறந்த ஒரு சில மாதங்களிலேயே இறந்துவிடுவதுதான் அதிகம் அதிகம் என்பது இங்கே கவனிக்கத்தக்கதாகும்.

இந்த இடத்தில் இறைவன் செய்துள்ள இன்னொரு அற்புதத்தையும் நம்மால் நினைத்துப் பார்க்கமால் இருக்க முடியவில்லை. விரையில் உள்ள இரத்தக்குழாய்களும், விந்து உற்பத்தியாகும் இடமும் அடுத்தடுத்த நெருக்கமாக இருந்தாலும் விந்து, இரத்தத்தில் கலந்து விடமுடியாதபடி மிகப் பெரிய தடுப்பை இறைவன் ஏற்படுத்தி, விந்துக்கென உள்ள அதனுடைய பிரத்யேக குழாயை சென்றடையும் விதத்தில் பாதுகாப்பாக ஆக்கி இருப்பது பிரமிக்கத்தக்க ஒன்றாகும். காரணம் தடுப்பு மட்டும் இல்லையெனில், விந்து இரத்தத்துடன் கலந்து மிகப் பெரும் ஆபத்துகளை சந்தித்து, அழிவிற்குள்ளாகி விடும். அதாவது விந்து இரத்தத்துடன் கலந்து விடும்போது, பாக்டீரியாக்கள் (நோய்கிருமிகள்) தன்னுள் புகுந்துவிட்டதாக கருதி இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் எதிர்ப்பு சக்தியை தோற்றுவித்து, விந்துவில் உள்ள எல்லா உயிரணுக்களையும் ஒன்றுவிடாமல் அழித்துவிடும். அது மட்டுமல்லாது இந்த எதிர்ப்பு சக்தி இரத்தத்தில் நிரந்தரமாகவே தங்கி, உயிரணுக்கள் உற்பத்தியாகும் போதெல்லாம் அதனை அழித்துக் கொண்டே இருக்கும். அப்போது அந்த மனிதனுக்கு குழந்தை பெறும் வாய்ப்பு அறவே இல்லாமல் போய்விடும்.


தான் படைக்க விரும்பிய மனிதப் பிரதிநிதிகள் இந்த உலகில் வந்து சேர்வதற்கு இறைவன் ஏற்படுத்தியுள்ள பாதுகாப்புகள்தான் எத்தனை? எத்தனை?


இது வேதமாகும். நன்கறிந்த, ஞானமுடையவனிடமிருந்து இதன் வசனங்கள் ஞானம் நிரப்பப்பட்டு, பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது.

அல்குர்ஆன் 11:1

அவர்கள் சிந்திப்பதற்காக இந்தக் குர்ஆனில் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளோம். அது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்துகிறது.

அல்குர்ஆன் 17:41

உங்களிடம் ஒரு வேதத்தை அருளினோம். அதில் உங்களுக்கு அறிவுரை இருக்கிறது. நீங்கள் விளங்க வேண்டாமா?

அல்குர்ஆன் 21:10

மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கிறது. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.

அல்குர்ஆன் 29:49

உமக்கு இவ்வேதத்தை நாம் அருளி, அது அவர்களுக்குக் கூறப்படுவது அவர்களுக்குப் போதவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் அருளும், அறிவுரையும் உள்ளது.

அல்குர்ஆன் 29:51

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?

அல்குர்ஆன் 47:24

9 comments:

Dr.Anburaj said...

விரை குறித்து தற்கால கண்டு பிடிப்புகளும் குரானின் வசனத்திற்கும் அணு அளவும் தொடா்பில்லை.தாங்கள் தொிவித்துள்ள தகவல்கள் யாவும் நவீன அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவைகள்தான். குரானில் இருந்து அல்ல. மேலும் விரை
குரானில் சொல்வதுபோல்

அது ஆணின் முதுகந் தண்டிற்கும் கடைசி விலா எலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.
அல்-குர்ஆன்: 86:5-7

இல்லை.மேற்படி வசனம் தப்பு.தப்பு.தப்பு.

குதித்து வெளியாகும் ஒரு துளி நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான் என்ற ஒரு கருத்து மிகவும் சாதாரண்மானது. உடல்உறவில் ஈடுப்டட அனைவருக்கும் இது தொிந்திருக்கக் கூடும். இப்படி ஒரு கருத்து குரானில் உள்ளது மிகச் சாதாரணமானது.நவீன உயிாியல் புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்ட கருத்துக்களை குரானில் உள்ளதாக கூறுவது மிக மட்டான ஏமாற்று வேலை.

முஸ்லீம்களையும் மற்றவா்களையும் ஏமாற்ற வேண்டாம்.

Dr.Anburaj said...


இறையில்லா இசுலாம் என்ற வலைதளத்தில் உளள்து. ஆண்மையிருந்தால் திராணியிருந்தால் இதற்கு மறுப்பு எழுதுங்கள். விவாதியுங்கள்.
ஒரு முறை என் நன்பன் ஒருவனிடம் குரான் சம்மந்தமாக பேசிக்கொண்டு இருக்கும் போது அவன் சொன்னான் குரானில் இல்லாத அறிவியலே இல்லை. குரானில் இருந்து தான் இதுவரை கண்டுபிடித்த அனைத்து அறிவியலும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.அது ஒரு அறிவியல் புத்தகம் என தனக்குதானே பூரித்துக்கொண்டான்.
நான் அவனிடம் கேட்டேன்
ஏன் மச்சி அப்ப குரானை முழுமையாக நன்கு விளக்கம் புறிந்துப் படித்த ஒரு ஹாலிம்மாலையும் ஹாபிசாவாலையும் கூட ஒரு சின்ன அறிவியலை கண்டு பிடிக்கமுடிவில்லை,
ஆனால்
இந்த பாழாய் போன யூதர்களால் மட்டும் இவ்வளவு அறிவியலை கண்டுப்பிடிக்க முடிக்கின்றது என்று.அதற்கு அவன் அளித்த பதில் என்ன தெரியுமா? சு..சு..சு......ம்ம்ம், நீ காஃபீர் மச்சி அதான் உனக்கு தெரியல என்று.

இப்படி தான் இன்னும் குரானில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமுக அறிவியல் என எல்லாம் இருக்கின்றது என்று மூஃமீன்கள் சொன்னால் 'ஆம்' என்று நீங்கள் பதில் அளித்தால் நீங்கள் மூஃமீன். 'எப்படி' என்று மறுகேள்வி எழுப்பினால் என்னை போல் நீங்களும் காஃபீராகிவிடுவீர்கள். ஆகவே 'ஆம்' என்று சொல்லிக்கொண்டு தொடர்ந்து படியுங்கள் நாம் குரான் சொல்லும் ஒரு அறிவியலை பற்றி இங்கு விவாதிக்க போகின்றோம்.. இன்னும், மலைகளைப் போல் கடலில் செல்பவையும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். குரான் 42:32
அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகிறான். அதனால் அவை (கடலின்) மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும், நிச்சயமாக இதில், பொறுமையாளர், நன்றி செலுத்துவோர் யாவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன. குரான் 42:33

மேற்கண்ட வசனத்தை படிக்கும் போதே தெரிகின்றதா நம் முகமது நபி எவ்வளவு பெரிய விஞ்ஞானியாக இருந்து இருக்கின்றார் என்று. பாருங்கள் 1400 வருடத்திற்கு முன்பே சொல்லிவிட்டார் காற்றை அவன் (அல்லாஹ்) நிறுத்திவிட்டான் என்றால் கப்பல் ஒரு துளிக்கூட அசையாமல் அதே இடத்தில் கிடக்குமாம். என்னே முகமதுவுடைய ஞானம்! விஞ்ஞானம் ! காற்று இல்லை என்றால் கப்பல் நகராத?
இந்த நவின காலத்தில் 150கிலோ மீட்டர் வேகத்தில் எதிர் காற்றை கிழித்துக்கொண்டு செல்லும் அளவுக்கு போர்க்கப்பல்களும், ரேசர் கப்பல்களும் (RACER BOAT) கண்டுபிடிக்கப்பட்டூவிட்டன. இன்னும் சொல்லப்போனால் காற்றே இல்லாதா ஆகாயத்திலும் கடலுக்குள் செல்லும் ஸ்பேஸ் சிப் (SPACE SHIP ) மற்றும் சப்-மறைன்களையே( SUB-MARIN) கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனாலும் இன்னும் நம் மூஃமீன்கள் காற்று இல்லனா கப்பல் போகாது என நம் காதில் பூசுற்றிக்கொண்டு இருக்கின்றார்கள்.

முகமது வாழ்ந்த காலத்தில் இருந்த பாய்மர கப்பல்களுக்கு வேண்டுமேயானால் மேலே சொல்லப்பட்ட வசனம் செட்டாகலாம். ஆனால் நம் காலத்துக்கு செட்டாகாது. மூஃமீன்களே ! கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள் (சாரி இந்த வசனத்தில் நீங்கள் சிந்திக்க கூடாது பொறுமையாக நன்றி செலுத்த வேண்டும்)

சோ! பி,ஜெவிடம் சொல்லி அவரின் 11வது குரான் தமிழாக்கத்தில் இந்த வசனத்தை திருத்த சொல்லுங்கள். அல்லது இட்டுகட்டுன வசனம் என்று சொல்லி முழுமையாக எடுத்துவிட சொல்லுங்கள். இல்லை என்றால் காஃபீர்கள் முகமதுவின் அறிவியலை ஊர் முழுக்க சொல்லி அவரின் கைலியை அவிழ்த்துவிட்டு சந்திசிரிக்க வைத்துவிடுவார்கள்.. கெட்ட காஃபீர்கள்.

Unknown said...

அருமையான பதிவு.

Unknown said...

அருமையான பதிவு.

Dr.Anburaj said...

நன்றி காதா் மஸ்தான் அவர்களே!

மீண்டும் படிப்போம்
ஏன் மச்சி அப்ப குரானை முழுமையாக நன்கு விளக்கம் புறிந்துப் படித்த ஒரு

ஹாலிம்மாலையும் ஹாபிசாவாலையும் கூட ஒரு சின்ன அறிவியலை கண்டு

பிடிக்கமுடிவில்லை,
ஆனால்

இந்த பாழாய் போன யூதர்களால் மட்டும் இவ்வளவு அறிவியலை கண்டுப்பிடிக்க

முடிக்கின்றது என்று.

( யுதா்கள் 100 க்கு மேல் நோபல் பாிசு பெற்றுள்ளாா்கள் )

அதற்கு அவன் அளித்த பதில் என்ன தெரியுமா? சு..சு..சு......ம்ம்ம்,

நீ காஃபீர் மச்சி அதான் உனக்கு தெரியல என்று.

காதில் பு சுற்றும் கலையில் சுவனப்பிாியனை மிஞ்ச இந்த உலகில் யாரும் இல்லை.சவுதி சுனாமி தங்களின் வீட்டு பணப்பெட்டிக்கும் வருகின்றதா ?

Dr.Anburaj said...

ஐயா காதா் மஸ்தான் அவர்களே!

சுவனப்பிாியன் எழுதியது அருமையானப் பதிவா ? நான் எழுதியது அருமையான பதிவா ? முஸ்லீம்களாகிய உங்களை தெளிவாகப் புாிந்து கொள்ள வேண்டும். கருத்து தொிவிக்க வேண்டுகின்றேன்.

A.Mohamed Sajeeb said...

great

Unknown said...

குர்ஆனை நீங்கள் முழுவதுமாக படித்திருந்தால் இந்த சந்தேகம் வந்திருக்காது. நுனிப் புல் மேய்ந்தால் இது போன்ற சந்தேகங்கள் வருவது இயல்பே.

இறைவன் குர்ஆனிலே மற்றொரு இடத்தில் கூறுவதைப் பாருங்கள்.

"இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்" (அல் குர்ஆன் 16:8)

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் நபி அவர்களின் காலத்தில் இருந்த குதிரைகள், கோவேறு கழுதைககள் மற்றும் கழுதைகளை வாகனங்களாக படைத்திருப்பதாக் கூறியதோடு இன்னும் நீங்கள் அறியாத வாகனங்களைப் படைத்திருப்பதாக கூறுகிறான். இதிலிருந்து நாம் விளங்குவது என்னவென்றால் இன்று நாம் பயன் படுத்திக் கொண்டிருக்கும் கார், விமானம் போன்ற வாகனங்களை மட்டுமல்லாமல் இன்னும் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படக் கூடிய பிற வாகனங்களைப் பற்றியும் முன்னறிவிப்பு செய்துள்ளான் என்பதாகும்.

அன்றைய மக்கள் பாய் மரக் கப்பலில் தான் கடலில் பயணம் செய்தனர். மோட்டார் படகுகளையோ நவீன கப்பல்களையோ அவர்கள் அறிந்திருக்க வில்லை. அவர்களின் அன்றைய வாகனம் எதுவோ அதனை வைத்துதான் அறிவுரை கூற முடியும். மற்ற சில வசனங்களில் 'நீங்கள் அறியாத வாகனங்களையும் நாம் படைப்போம்' என்று கூறுவதிலிருந்து குர்ஆன் கூறுவது அன்றைய பாய்மரக் கப்பல்களையே! குர்ஆனின் ஒரு பகுதியை மட்டும் வாசித்து விட்டு மற்ற பகுதியை விடுபவன் இஸ்லாமியனாக இருக்க மாட்டான்.

எனவே நாங்கள் தெளிவோடுதான் இருக்கிறோம். எங்களைப் பற்றி கவலைபடுவதை விடுத்து 'கோவில் நுழைவு போராட்டம்” எப்போது நடத்தப் போகிறீர்கள்? உங்கள் வாரிசுகளாவது நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கோவிலுக்குள் பிரவேசிக்கட்டும். அதற்கு ஆவண செய்ய முயலுங்கள்..
Posted by சுவனப் பிரியன் at 3:10 AM

Dr.Anburaj said...


இதற்கு தாங்கள் பதில் அளிக்க மறந்து விட்டீர்கள் . அளிக்க வேண்டுகின்றேன்

இந்த பாழாய் போன யூதர்களால் மட்டும் இவ்வளவு அறிவியலை கண்டுப்பிடிக்க

முடிக்கின்றது என்று.

( யுதா்கள் 100 க்கு மேல் நோபல் பாிசு பெற்றுள்ளாா்கள் )

அதற்கு அவன் அளித்த பதில் என்ன தெரியுமா? சு..சு..சு......ம்ம்ம்,

நீ காஃபீர் மச்சி அதான் உனக்கு தெரியல என்று.