Followers

Tuesday, February 11, 2020

தேச துரோகிகளை தூக்கி எறியும் காலம் வெகு தொலைவில் இல்லை.

கடந்த இரண்டு மாதங்களாக ஷாஹின் பாக்கில் கொட்டும் பனியில் பெண்களும் சிறுவர்களும் போராடி வருகின்றனர். ஆனால் பாஜகாவோ மமதையோடு அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஷாஹின் பாக் என்ற இந்த இடமானது ஓக்ளா தொகுதியில் வருகிறது. இத்தொகுதியில் பாஜக தோல்வியடைந்து அங்கு ஆம் ஆத்மி அமோக வெற்றியடைந்துள்ளது.
இந்துக்களும் இப்போராட்டத்தை ஆதரிக்கின்றனர் என்பதையே இத் தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.
இந்துத்வா சிந்தனையில் மூழ்கிப் போயுள்ள அமித்ஷாவின் மண்டையில் இதெல்லாம் ஏறப்போவதில்லை. இருந்தாலும் சொல்லி வைப்போம். ஒட்டு மொத்த இந்தியாவும் பாஜக என்ற இந்த தேச துரோகிகளை தூக்கி எறியும் காலம் வெகு தொலைவில் இல்லை.


1 comment:

Dr.Anburaj said...

பாராளுமன்ற தோ்தல் அறிக்கையில் சாதிப்போம் என்று அறிவித்த திட்டங்களை பாரதிய ஜனதா அரசு நிறைவேற்றி வருகின்றது.

எதிா் கட்சிகளின் கூச்சல் கேட்டு அரண்டு போக திரு.மோடி அவர்கள் ஒன்றும் ஆட்டுக்குட்டி அல்ல.

அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் செய்ய துணிவின்றி நிலுவையில் வைத்தது.

1)370 ரத்து நீதிமன்றம் உத்தரவும் ஒரு காரணம்.

2)முத்தலாக் தடை சட்டத்திற்கு நீதிமன்றத்தில் வழக்கு போட்ட முஸ்லீம் பெண்கள் மற்றும உசச நீதி மன்ற உத்தரவுதான் காரணம்.

3)வெளிநாட்டில் இருந்து குடியேறும் மக்கள் ஒழுங்கு படுத்தும் சட்டமும் நீதி மன்ற உத்தரவு அடிப்படையிலும் யதார்த்த நிலைமைகளை அனுசரித்து பிறப்பிக்கப்பட்ட சட்டம்.

அடுத்த தோ்தலுக்கான அரசு நடத்தும் இழிந்த செயலை செய்கிறவன் காங்கிரஸ்காரன்.ராகுல் காங்கிரஸ்காரன். அந்த பின்புத்தி பாரதிய ஜனதாவுக்கு கிடையாது.
ஏராளமான நலத்திட்டங்களை அரசு முன்வைத்துள்ளது. தங்களைப் போன்ற நயவஞ்சகர்கள் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்று விடாமல் பார்த்துக் கொள்கின்றார்கள்.

பாக்கிஸ்தானில் இருந்து இநதியாவிற்குள் ஊடுறுவிய பாக்கிஸ்தான் முஸ்லீம்களுக்கு ஆதரவாக செயல்படும் திமுக காங்கிரஸ் கட்சி முட்டாள்கள் என்றாவது

1)சாராய கடைகளுக்கு எதிராக மது குடிக்கும் பழக்கத்த்ற்கு எதிராக முழங்கியதுண்டா
2)சினிமாவில் ஆபாசம் தலைவிரித்து ஆடுகின்றது. அதை பார்த்து சுயகட்டுப்பாட்டை இழந்து மக்கள் ஒழுங்கினமாக வாழ தலைப்பட்டு வருகின்றார்கள். சிறுமிகள் கூட செகஸ்தொந்தரவிற்கு ஆளாக்கப்பட்டு வருகின்றார்கள்.உணா்ச்சி வசப்ட்ட இளைஞர்கள் போசோ சட்டத்தில் மாட்டி கண்ணீர் வடிக்கின்றார்கள். குற்றங்களுக்கு தண்டனைஅளிப்பது இரண்டாம் பட்சம்.குற்றங்கள் நடக்காமல் தடுப்பதுதான் சாமா்த்தியம்.விவேகம்.
3) உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் பீடி சிகரெட் பாக்பாரக் ..........இவைகளைஎதிர்த்து இளைஞர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வார்களா.
4. அனைத்து வாலியர்கள் வாலிப பெண்களையம் பிரம்மச்சரிய விரதம் காக்க உறசாகப்படுத்துவார்களா

அடுத்த தோ்தலை குறிவைத்து ஆட்சி நடத்தமாட்டார்கள் பாரதிய ஜனதா கட்சியினா்.