Followers

Sunday, February 09, 2020

#மனிதநேய_சேவையில்_ரியாத்_தமுமுக

#சவுதிஅரேபியாவில்_தோட்டவேலை செய்யும்போது #தவறிவிழுந்த தமிழக சகோதரர் #எடச்சித்தூர்_சக்திவேல் அவர்களை தாயகத்திற்கு அனுப்பிவைத்த
#ரியாத்_தமுமுக...
ஏக இறைவனின் திருப்பெயரால்...
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகா எடச்சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் கிருஷ்ணமூர்ரத்தி என்பவர் சவுதி அரேபியா அல்ஜூஃப்-சக்காக்கா பகுதியில் தோட்டத்தில் பேரீச்சம்பழம் மர பராமரிப்பு வேலை செய்து கொண்டு இருக்கும் போது தவறுதலாக கீழே விழுந்து கை மற்றும் முதுகு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உறவினர் எடச்சித்தூர் மதியழகன் அவர்கள் தமுமுக ரியாத் மண்டல ஊடகப்பிரிவு துணை செயலாளர் ரிஸ்வான் அவர்களை தொடர்பு கொண்டு உதவிடுமாறு கோரிக்கை வைத்தார்.
தகவல் சமூக நலத்துறை செயலாளர் திருப்பூண்டி அப்துல்ஹமீது அவர்களிடம் தெரியப்படுத்தப்பட்டது.
தகவலைப் பெற்றுக்கொண்ட அப்துல்ஹமீது அவர்கள் விரைந்து செயல்பட்டு சவுதி அரேபியா விமானம் மூலமாக 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் ஜெத்தா வழியாக சக்திவேலை படுக்கை நிலையில் அனுப்பிவைக்கப்பட்டார்.
இன்று காலை 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.
செங்கல்பட்டு வடக்கு மருத்துவ அணி செயலாளர் அப்துல்ரஹ்மான் மற்றும் செங்கல்பட்டு வடக்கு மா.செயலாளர் நைனாமுகம்மது, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அமானுல்லா அனைவரும் விமானநிலைய அனைத்து உதவிகளையும் செய்து
தமுமுக-பூந்தமல்லி ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை பிரபல ஸ்டான்லி மருத்துவமனைக்கு படுக்கை நிலையில் எடுத்துச்சென்று கடைசிவரை இருந்து உதவினர்.
எந்த எதிர்ப்பார்ப்பும்இன்றி உதவிய தமுமுக வினரை சக்திவேல் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி கூறினர்
என்றென்றும் மனிதநேய பணியில் ::
தமிழ் தஃவா தமுமுக - மமக
சமூக நலத்துறை
மத்திய மண்டலம்
ரியாத் - சவுதி அரேபியா





1 comment:

Dr.Anburaj said...

வாழ்க.வாழக வாழகவே.வாழ்க.வாழக வாழகவே.வாழ்க.வாழக வாழகவே.வாழ்க.வாழக வாழகவே.வாழ்க.வாழக வாழகவே.வாழ்க.வாழக வாழகவே.வாழ்க.வாழக வாழகவே.வாழ்க.வாழக வாழகவே.வாழ்க.வாழக வாழகவே.வாழ்க.வாழக வாழகவே.