Followers

Friday, February 07, 2020

இந்த வீடியோ மோடிஜிக்கானது....

இந்த வீடியோ மோடிஜிக்கானது....
'மோடிஜி! நாட்டு மக்களிடம் என்ன சொன்னீர்கள்? 'பேட்டி படாவ்... பேடி பசாவ்' அதாவது 'பெண்களை படிக்க வையுங்கள்... பெண்களை காப்பாற்றுங்கள்'... ஆனால்... இன்று அந்த பெண்களை குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தெருக்களில் நின்று போராட வைத்துள்ளீர்கள். என்னை படைத்த இறைவன் மீது ஆணையாக கூறுகிறேன்.... நபிகள் நாயகம் எங்களுக்கு இறைவனிடமிருந்து வாங்கித் தந்த வழி முறையில் எங்கேனும் கை வைத்தால் மோடிஜி... மீண்டும் இறைவன் மீது ஆணையிட்டு கூறுகிறேன்..... மற்றொரு கர்பலா இதே பாரதத்தில்... இதே ஹிந்துஸ்தானத்தில் உருவாவதை காண்பீர்கள்.
இஸ்லாத்தை அழிக்க வந்த எத்தனையோ கோழைகள் தோல்வியடைந்து மண்ணோடு மண்ணாகி மக்கிப் போயினர். இன்று வரை இஸ்லாத்தை அழிக்க அவர்களால் முடியவில்லை. இந்து, முஸ்லிம், கிருத்தவர், சீக்கியர் எல்லோரும் இதுவரை ஒற்றுமையாக இருந்தோம்: இனியும் ஒற்றுமையாகவே இருப்போம்.
'ஆங்... யோகி ஆதித்யநாத்... சமஸ்கிரதம் மோடிக்கு தெரியாததால் நான் சொல்லும் மந்திரத்தின் பொருளை மோடிக்கு சொல்லிக் கொடு...
'ரக்குரிரீதி சதா செல் ஆயி பிரான் ஜாய் பர் பஜன் நய் ஜாய்'
ஜெய் ஹிந்த்.... ஜெய் பாரத்'
------------------------------------
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வரை உள்ள முஸ்லிம்களின் எண்ண ஓட்டத்தை இந்த பெண்மணி அழகாக பதிந்துள்ளார். மோடியின் பாசிசம் இப்படியே தொடர்ந்தால் பாலஸ்தீன், இஸ்ரேல், ஈராக் போன்ற நிலைதான் இந்தியாவுக்கும் ஏற்படும். அத்தகைய நிலையிலிருந்து எனது நாட்டை இறைவன் காப்பானாக!
இந்த பெண்ணிடம் உள்ள உறுதியையும் எதற்கும் அஞ்சாத நெஞ்சுரத்தையும் பாருங்கள். 10 பேர் சேர்ந்து ஒரு அப்பாவியை அடித்து கோழைத்தனத்தை வெளிப்படுத்தும் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் இந்த பெண் போன்று கோடிக்கணக்கான பெண்மணிகளுக்கு பதில் சொல்லட்டும். பெண்களுக்கே இந்த வீரம் என்றால் ஆண்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை. இந்த நாட்டில் மற்றொரு பிளவு ஏற்பட வேண்டாம், ரத்த களறி வேண்டாம் என்றுதான் முஸ்லிம்கள் பொறுமை காக்கின்றனர். அந்த பொறுமையை இயலாமை என்று நினைத்து காய் நகர்த்த வேண்டாம் என்று மட்டும் மோடிக்களுக்கு சொல்லிக் கொள்கிறோம்.
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்


1 comment:

Dr.Anburaj said...

முஹம்மதின் வரலாற்றை முழுமையாக படிததவன். வலக்கரம் கைபற்றிய முஸ்லீம் அல்லாத பெண்கள் என்ன ஆனார்கள் என்று அறிவேன்.
நபிகள் நாயகம் எங்களுக்கு இறைவனிடமிருந்து வாங்கித் தந்த வழி முறையில் எங்கேனும் கை வைத்தால் மோடிஜி... மீண்டும் இறைவன் மீது ஆணையிட்டு கூறுகிறேன்..... மற்றொரு கர்பலா இதே பாரதத்தில்... இதே ஹிந்துஸ்தானத்தில் உருவாவதை காண்பீர்கள்.

மோடிஜிக்கு அப்படி ஒரு திட்டம் கிடையாது. கர்பாலா வில் முஹம்மதுவின் பேரன்கள் மற்றும் குடும்பத்தார்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதுபோல் யாா் யாரை கொல்வார்கள் என்று இந்த பெண்மணியும் சுவனப்பிரியனும் மிரட்டுகின்றார்கள்.

சந்திக்க தயாராக உள்ளோம்.