Followers

Sunday, June 14, 2015

ஷியா சன்னி பிரிவு எவ்வாறு உருவானது? - 5

முஹ்ய்யித்தீனைக் கடவுளாக்கும் மவ்லிதுகள்

அபூஉஸாமா

மறைவான ஞானம் தங்கள் இமாம்களுக்கு உண்டு என்று ஷியாக்கள் நம்புகிறார்கள். அதே போன்று சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று கூறிக் கொண்டு மவ்லிது ஓதுபவர்களும், மறைவான ஞானம் முஹ்யித்தீனுக்கு உண்டு என்று நம்புகின்றனர். இதற்கு ஆதாரமாக இவர்கள் ஓதி வரும் மவ்லிதுக் கிதாபுகளில் இடம் பெறும் சில சம்பவங்களைக் கடந்த இதழில் பார்த்தோம்.

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானிக்கு மறைவான ஞானம் இருப்பதாகக் கூறும் இன்னொரு சம்பவத்தை அதே மவ்லிதுக் கிதாபிலிருந்து பார்ப்போம்.

அப்துல் ஹக் அறிவிப்பதாவது:

நாங்கள் ஷைகிடம் அமர்ந்திருந்தோம். அவர்கள் காலில் செருப்பணிந்து கொண்டு உளூச் செய்து இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள். பிறகு இரு தடவை பெரும் சப்தமிட்டு விட்டுத் தனது இரு செருப்புக்களை விட்டெறிந்தார்கள். அதன் பின் அப்படியே மவுனமாகி விட்டார்கள். என்ன என்று கேட்பதற்கு யாரும் துணியவில்லை. விடையையும் விளக்கத்தையும் தேடியவாறு நாங்கள் வீற்றிருக்கையில் அந்நிய மொழி பேசும் ஒரு வணிகக் கூட்டம் தங்களது நேர்ச்சையோடு வந்தது.

அவர்கள் கொண்டு வந்த நேர்ச்சைப் பொருட்களில் தங்கமும், ஆடைகளும் இருந்தன.

ஸ்கட்டாக மாறிய செருப்பு ஜோடிகள்

தங்கத்திற்கு ஊடே (முஹ்யித்தீன் இரண்டு முறை சப்தமிட்டு வீசியெறிந்த) செருப்புகளும் வீற்றிருந்தன. ஆச்சரியமடைந்த சிஷ்ய கோடிகள், "இந்த செருப்பு ஜோடிகள் எப்படிக் கிடைத்தன?'' என்று வினவுகின்றார்கள்.

"நாங்கள் வழியில் சென்று கொண்டிருக்கும் வேளையில் அரபியக் கொள்ளையர்கள் எங்களை இடைமறித்துத் தாக்கத் துவங்கினர். எங்களில் சிலரை அவர்கள் கொன்று விட்டனர். எங்களது பொருட்களைக் கொள்ளையடித்தனர். "நாம் ஷைக் முஹ்யித்தீனுக்கு நேர்ச்சை செய்தால் என்ன?' என்று நினைத்து நேர்ச்சை செய்தோம். அவர்களை இரு வார்த்தைகள் கூறி நினைவு கூர்ந்தோம். அவ்வாறு சொல்லி முடிப்பதற்குள், இரு பெரும் பேரிறைச்சலைச் செவியுற்றோம். அவ்வளவு தான்! கொள்ளைக் கூட்டத்தில் ஒருவன், "வாருங்கள்! நம்மீது இறங்கிய சோதனையைப் பாருங்கள்' என்று கூறினான். உடனே நாங்கள் அவர்களைப் பார்த்தோம். அவர்களில் இரு முன்னணி வீரர்கள் பிணமாகக் கிடந்தனர். அவர்களில் ஒவ்வொருவர் மீதும் இந்தச் செருப்புக்களில் ஒவ்வொன்று கிடந்தது'' என்று அந்த வணிகக் கூட்டத்தினர் விளக்கினர்.

(அப்போது தான் ஷைகு எறிந்த செருப்புக்கள் வெறும் செருப்புக்களாகச் செல்லவில்லை. பெரும் ஸ்கட் ஏவுகணையாகப் பறந்திருக்கின்றன என்று சிஷ்ய கோடிகளுக்குப் புரிந்தது.)

இது முஹ்யித்தீன் மவ்லிதுக் கிதாபில் உரை நடையிலும், கவிதை நடையிலும் இடம் பெற்றுள்ளது.

இப்போது இதிலுள்ள அபத்தங்களைப் பார்ப்போம்.

1. எங்கோ ஒரு வணிகக் கூட்டம் சிக்கலில் மாட்டிக் கொண்ட விஷயம், பாக்தாதில் உள்ள முஹ்யித்தீனுக்குத் தெரிகின்றது.

2. உடனே முஹ்யித்தீன் தனது செருப்புக்களைத் தூக்கி எறிகின்றார். அந்தச் செருப்புக்கள் இலக்கையும் அடைந்து விடுகின்றன.

ஒரு பொருளைத் தூக்கி எறியும் போது அதை இயக்குவதற்குரிய மின்சாரம், பேட்டரி, எரி பொருள் போன்ற விசை இல்லையெனில் புவி ஈர்ப்பு விசையின் காரணமாக அது பூமியில் விழுந்து விடும். இந்தச் செருப்பு எப்படிப் பறந்து சென்றது? என்றெல்லாம் இங்கு கேட்கக் கூடாது. அப்படி இந்த ஆலிம்கள் கேட்டிருந்தால் என்றைக்கோ மவ்லிதுக் கிதாபுகள் அடுப்பிற்குள் புகுந்திருக்கும், புகைந்திருக்கும்.

இந்தச் செருப்புக்கள் எப்படித் துல்லியமாக இலக்கை அடைகின்றன? எறியப்படும் செருப்பு இலக்கை அடைய வேண்டுமாயின் அதில் ரேடார் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இந்தச் செருப்பில் ரேடார் பொருத்தப்பட்டிருந்ததா?

3. எறியப்பட்ட செருப்புக்கள் எதிரிகளின் தலைவர்களை இனங் கண்டு தாக்கி, அவர்களைக் கொன்றும் விடுகின்றன. கால் செருப்புக்கு ஆளை அடையாளம் கண்டு கொல்லும் இந்த அபார சக்தியும் இருக்கின்றதா?

முஹ்யித்தீன் மவ்லிதில் இடம் பெற்றுள்ள இந்த அபத்தங்கள் எதைக் காட்டுகின்றன? முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியைக் கடவுளாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

மறைவான ஞானம் அவருக்கு இருக்கப் போய் தான் வணிகக் கூட்டம் எழுப்பும் அபயக் குரல் அவரது காதுக்கு எட்டுகின்றது. மறைவான ஞானம் மற்றும் எப்போது, எங்கிருந்து அழைத்தாலும் செவியுறும் தன்மை அல்லாஹ்வுக்கு உரிய தனி ஆற்றலாகும். இந்த ஆற்றலை முஹ்யித்தீனுக்கு இந்த மவ்லிதுகள் அப்படியே தூக்கிக் கொடுக்கின்றன.

முஹ்யித்தீன் உடனே செருப்பை அனுப்பி வணிகக் கூட்டத்தைப் பாதுகாக்கவும் செய்கின்றார். இவர் இரட்சகர் அல்லவா? (அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக) அதனால் முஹ்யித்தீன் தனது செருப்புக்களைப் பறக்க விட்டு அவர்களைப் பாதுகாக்கிறார். இது போன்ற பாதுகாத்தலும் அல்லாஹ்வின் தனிப் பெரும் ஆற்றலாகும். இந்த ஆற்றல்களை எல்லாம் முஹ்யித்தீனுக்குக் கொடுத்து அவரைக் கடவுளாக்கி அழகு பார்க்கின்றனர்; ஆராதிக்கின்றனர்.

இப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கைக்கு வருவோம்.

நபி (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தவர் சிலருடன் எழுபது பேர்களை பனூ ஆமிர் குலத்தாரிடம் அனுப்பினார்கள். அவர்கள் அங்கு சென்ற போது என் தாய்மாமன் (தம்முடன் வந்த தோழர்களிடம்), "நான் உங்களுக்கு முன்னால் போகிறேன். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரைக் குறித்து நான் எடுத்துரைக்கிறேன். இல்லையென்றால் நீங்கள் என் அருகிலேயே இருங்கள்'' என்று கூறி விட்டுச் சற்று முன்னால் சென்றார். அவர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தார்கள். அவரை எதுவும் செய்யவில்லை. நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவர் அவர்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்த போது தங்களில் ஒருவனைப் பார்த்து அவர்கள் சைகை செய்தார்கள். அவன் என் தாய்மாமனைக் குத்திக் கொன்று விட்டான். அவர், "அல்லாஹ் மிகப் பெரியவன். கஅபாவின் அதிபதியின் மீது சத்தியமாக! நான் வெற்றி பெற்று விட்டேன்'' என்று கூறினார். பிறகு அவரது எஞ்சிய தோழர்கள் மீது பாய்ந்து அவர்களையும் கொன்று விட்டார்கள். மலையின் மீதேறிக் கொண்ட கால் ஊனமுற்ற ஒரு மனிதரைத் தவிர! (ஹதீஸின் சுருக்கம்)

நூல்: புகாரி 2801, 3064

நபித்தோழர்களை, அதுவும் குர்ஆன் ஓதத் தெரிந்த நபித்தோழர்களை நபி (ஸல்) அவர்கள் தெரியாமல் தான் அனுப்பி வைக்கின்றனர். அவர்கள் கொல்லப் படுவார்கள் என்று தெரிந்திருந்தால் ஒரு போதும் அவர்களை அனுப்பி வைத்திருக்க மாட்டார்கள்.

இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இப்படி ஏராளமான எடுத்துக்காட்டுகளை நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

நஞ்சூட்டப்பட்ட ஆடு

யூதப் பெண்ணொருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து சிறிது உண்டார்கள். "அவளைக் கொன்று விடுவோமா?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று கூறி விட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.

நூல்: புகாரி 2617

இவ்வாறு சாப்பிட்ட நபி (ஸல்) அவர்கள் மரணப் படுக்கையில் கிடக்கும் போது அந்த விஷத்தின் பாதிப்பு அவர்களுக்குப் பெரிய வேதனையைக் கொடுத்தது. "நான் கைபரில் சாப்பிட்ட உணவின் பாதிப்பை இதுவரை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அது என்ற நரம்பை அறுத்துக் கொண்டிருக்கும் நேரமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் தமது மரணப் படுக்கையில் குறிப்பிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

நூல்: புகாரி 4428, அபூதாவூத் 3912

தனக்கு ஆபத்து விளைவித்த அந்த ஆட்டைச் சாப்பிடுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களால் அதை அறிய முடியவில்லை.

அது போல் காரிகளான தமது 70 தோழர்களின் படுகொலை பற்றியும், எதிரிகளின் சதி மோசடி பற்றியும் நபி (ஸல்) அவர்களால் அறிய முடியவில்லை. அவர்கள் அறிந்திருந்தால் முஹ்யித்தீனைப் போன்று செருப்பை எறிந்து காப்பாற்றாவிட்டாலும் குறைந்த பட்சம் இறைவனிடம் உருக்கமாகப் பிரார்த்தனையாவது செய்திருப்பார்கள். இது தான் உண்மை நிலை!

இதற்கு மாற்றமாக, முஹ்யித்தீன் வணிகக் கூட்டத்திற்கு ஏற்பட்ட ஆபத்தை அறிந்ததாகக் கூறி அவருக்கு மறைவான ஞானம் இருப்பதாக மவ்லிதுக் கிதாபு வாதிடுகின்றது. அது மட்டுமின்றி ஆபத்தில் சிக்கிக் கொண்ட தமது தோழர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் கூட காப்பாற்ற முடியாத போது, இந்த முஹ்யித்தீன் செருப்பைத் தூக்கி வீசி காப்பாற்றி விட்டதாகக் கதை விடுகின்றது.

அதாவது இதன் மூலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியைக் கடவுளாகச் சித்தரிக்கின்றது. இது ஷியாக்களின் வேலை! அந்த வேலையை இந்த மவ்லிதுகள் செய்துள்ளன. இந்த மவ்லிதைத் தான் மவ்லவிகள் வீடு வீடாகச் சென்று ஓதுகின்றனர். (ஆனால் தங்கள் வீடுகளில் இவற்றை ஒரு போதும் ஓத மாட்டார்கள்.)

முஹ்யித்தீனைக் கடவுளாக்கும் மவ்லிதுகளை ஓதும் இவர்கள் யாராக இருக்க முடியும்? கண்டிப்பாக ஷியாக்கள் தான். இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் தங்களை சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொள்வதும், தாங்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் நல்லறங்கள் என்று கருதுவதும் தான். இதை வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.

என்னை நினைப்பதை விட்டும் அவர்களின் கண்கள் திரைக்குள் இருந்தன. (உண்மையை) கேட்கவும் இயலாது இருந்தனர்.

என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள (என்னை) மறுப்போர் நினைக்கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம்.

"செயல்களில் நஷ்டம் அடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்பீராக!

இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.

அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம்.

அவர்கள் (என்னை) மறுத்த தற்கும், எனது வசனங்களையும் தூதர்களையும் கேலியாக ஆக்கியதற்கும் இந்த நரகமே உரிய தண்டனை.

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கச் சோலைகள் தங்குமிடங்களாக உள்ளன.

அதிலே நிரந்தரமாக இருப்பார்கள். அங்கிருந்து இடம் பெயர்வதை விரும்ப மாட்டார்கள்.

"எனது இறைவனின் கட்டளைகளுக்காக கடல், மையாக ஆனாலும் எனது இறைவனின் கட்டளைகள் (எழுதி) முடிவதற்கு முன் கடல் முடிந்து விடும். உதவிக்கு அது போன்றதை நாம் கொண்டு வந்தாலும் சரியே'' என்று கூறுவீராக!

"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 18:101-110

வளரும் இன்ஷா அல்லாஹ்......

9 comments:

Anonymous said...

எங்கள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டாயிருந்துதா? ஆம். சந்தேகமின்றி !. எங்கள் நபி நாதர் ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) மீது அருளப்பட்ட இந்த இல்முல் கய்ப், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அற்புதங்களில் மிக தலைசிறந்ததும் தனி சிறப்பு பெற்றதுமாகும். இந்தமுஃஜிஸாத் எனும் அற்புதம் மற்ற 124000 நபிமார்களுக்கு வழங்கப்பட்டமுஃஜிஸாத்துகளை விடவும் மிக வருசையானதாகும். இல்முல் கய்பிளிருந்து சிலதை இந்த எல்லா நபிமார்களுக்கும் வெவ்வேறான அளவில் ஒவ்வொருவருக்கும் வழங்கப் பட்டாலும் எங்கள் நாயகம் முஹம்மது முஸ்தபா ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )அவர்களுக்கு அந்த எல்லா நபிமார்களுக்கு அருளப்பட்டவைகளையும், இன்னும் ஒப்பிட முடியாத, அளவற்ற ஞானங்களையும் அல்லாஹ் ஸுப்ஹானஹூ வ தஆலா அருளினான். ஆனால் தவ்ஹீது வாதிகள் என்று தம்மை தானே அழைத்துக்கொள்ளும் வழிகெட்ட வஹ்ஹாபிகள் இதை மறுக்கிரார்கள். ஏனெனில், எங்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவாக எண்ணுதல் அவர்களின் பொழுது போக்காயிட்டுதே.!
ஞானம் என்றால் என்ன? அது இரு வகையாகும். முதலாவது .Zஸாத்தீ என அழைக்கப்படும் தானாகவே பெற்ற ஞானம். அது அல்லாஹ்வுக்கு மாத்திரமே சொந்தமாகும். இரண்டாவது அத்தாஈ என அழைக்கப்படும் இன்னொருவரால் வழங்கப்பட்ட ஞானம். அல்லாஹ்வை தவிர மற்றவர்கள் பெற்றிருக்கும் ஞானத்துக்கு பெயர் தான் இது. அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமான Zஸாத்தீ எனும் ஞானம் மற்ற எவருக்குமொ உண்டென்றொ அல்லது அல்லஹ்வுக்கும் அத்தாஈ எனும் இல்மு உண்டென்றோ யாராகிளும் ஒருவர் கூறினால் அவன் உடனே இறை மறுப்பவனாக ஆகிவிடுகிரான். இன்னும் அல்லாஹ் தஆலா தன் திரு மறையில் மறைவான ஞானத்தை பற்றி கூறும் போது, அது நம்மை நோக்கி கூறுவதல்லாமல் அவன் அவனை நோக்கி கூறுவதல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், அவன் எல்லாம் அறிந்தவன். அவனுக்கு மறைவான எதுவும் இல்லை.

Anonymous said...

குர்ஆனில் சிலதை ஒப்புக்கொண்டும் சிலதை மறுப்பது கொண்டும் மிகுதமானோர் வழி தவறி போகின்றனர். அதே போல், நபி நாதரின் இல்முல் கய்பை மறுப்போரும் கிழ்கானும் குர்ஆன் வசனத்தை ஒப்புக்கொண்டாலும்……
قل لا املك لنفسي نفعا ولا ضرّا الا ما شاء الله. ولو كنت اعلم الغيب لاكثرت من الخير وما مسني السوء . ان انا الا نذير وبشير لقوم يؤمنون.
நபியே நீர் கூறுவீராக அல்லாஹ் நாடியதை தவிர எனக்கே எவ்வித நன்மை(யை செய்வதற்க்)கும் தீமை(யை தடுத்துக் கொள்வதற்க்)கும் நான் சக்தி பெற மாட்டேன். மறைவானவற்றை நான் அறிந்தவனாக இருந்திருந்தால், நன்மைகளையே நான் அதிகமாக தேடிக்கொண்டிருப்பேன். தீமை என்னை தொட்டிருக்காது. நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும் விசுவாசம் கொண்ட சமூகத்தினருக்கு நன்மாராயங் கூருபவனேயன்றி வேறில்லை. 7/188
கீழ்கானும் இவ்விறை வசனத்தை மறுக்கிறார்கள்…
… عالم الغيب فلا يظهر على غيبه احدا. الا من ارتضى من رسول
(என் இறைவனாகிய) அவன் மறைவானவற்றை அறிகிரவன், எனவே தான் மறைத்திருப்பதை ஒருவருக்கும் அவன் வெளிப்படுத்த மாட்டான். தூதரில் தான் (தேர்வு செய்து) பொருந்திக்கொண்டவருக்கே தவிர(72/26)
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவான ஞானத்தை மறுக்குவொர் எழுப்பும் நச்சுக் கருத்துகள் எந்தளவுக்கு மனம் தடுமாறச்செய்யக் கூடியது என்று ஆலோசனை செய்தால், அதே முறையிலே அல்லாஹ்வைப் பற்றி உள்ள இறைவசனங்களையும் புரிய முயர்ச்சித்தால், அது எங்களை படுகுழியில் விழுத்தாட்ட காரணமாகுமென குறிப்பிட தக்கது. (நஊது பில்லாஹி மின்ஹா.- அல்லாஹ் நம்மை காத்தருள்வானாக). அவர்கள் தன் கருத்துகளுக்கு சார்ப்பாக முன் வைக்கும் குர்ஆன் வசனங்களும் , அவர்கள் எவ்வாறு வழி தவறி இருக்குரார்கள் என்பதையும் இவ்வாறு மேற்கொள் காட்டுகின்றோம்.. உதாரணமாக, அல்லாஹ் தன் திருமறையில் கூருகின்றான்.

Anonymous said...

( மேலும் , மூஸாவே உனது வலது கையில் இருப்பது என்ன? (என்றும் கேட்டான் அதற்க்கவர், இது என் கைத்தடி நான் அதன் மீது சாய்ந்துக் கொள்வேன். இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு (தழைகுழைகளை மரங்களிருந்து) பறிப்பேன். இன்னும் இதில் எனக்கு வேறு பல தேவைகளும் இருக்கின்றன. என்று கூறினான் அ(தற்க்கு அ)ல்லாஹ் , மூஸாவே நீர் அதை ( த் தரையில்) போடுவீராக. என்று கூறினான். அப்பொழுது அவர் அதனைப் போட்டார். அச்சமயமே அது நெளிந்து செல்லும் ஒரு பாம்பாக ஆயிற்று ) ( 20/18,19,20,21)
وإذ قال الله يعيسى ابن مريم أأنت قلت للناس إنخذواني وامي الهين من دون الله قال سبحانك ما يكون لي ان اقول ما ليس لي بحق أن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا اعلم ما في نفسك انك انت علام الغيوب
( அன்றியும், அல்லாஹ், ( மறுமை நாளில் ஈஸாவிடம்) மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹுவைதவிர என்னையும் எனது தாயையும் இரண்டு நணக்கத்திற்க்குரியவர்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களுக்கு நீர் கூறினீரா என்று கேட்பான். (அதற்கு) நீ பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் உரிமையில்லாததை நான்(ஒரு பொதும்) கூறுவதற்க்கு எனக்கு தகுதி இல்லை. அவ்வாரு நான் கூறி இருந்தால், நீ அதனை அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் உள்ளதை நீ நன்கறிவாய். உன் உள்ளத்தில் உள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக நீ தாந் மறைவானவற்றை மிக்க அறிந்தவன். (5/117)
அவர்கள் இந்த வசனங்களை மேற்கொள் காட்டி இவ்வாறு கேள்வி எழுப்புகின்ரார்கள். மூஸா (அலைஹிஸ்ஸலாம்) க்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் அவர்களின் கைத்தடி ஒர் பாம்பாக மாற்றப்படும் என அவர்கள் அறிந்திருக்க வில்லையே ! மேல் குறிப்பிடப்பட்ட இரண்டாம் வசனத்தை மேற்கொள் காட்டி . ஈஸா (அலைஹிஸ்ஸலாமு) க்கு மறைவான ஞானம் இருந்திருந்தால், என் உள்ளத்தில் உள்ளதை நீ நன்கறிவாய். உன் உள்ளத்தில் உள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக நீ தான் மறைவானவற்றை மிக்க அறிந்தவன். எனக் கூற அவசியமில்லையே !
இனி நாமும் அவர்கள் மோழிபெயர்த்துக் கூறும் முறையிலே கேல்விகளை எழுப்புவோம். மூஸாவின் கையில் ஏது இருக்கிரது என்று அல்லாஹ் கேட்பதின் மூலம் அல்லாஹ்வுக்கும் மறைவான ஞானம் இல்லை என ஒரு நாளில் நீங்கள் கூற மாட்டீர்கள் என்பதற்க்கு என்ன வாக்குறுதி? அது ஒரு கைத்தடி என்று அவன் அறியவில்லையா? அதில் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) சாய்ந்திருப்பதாகவும், தன் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பதாகவும் அவன் அறிய வில்லையா?
ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) சம்பந்தப்பட்ட மற்ற வசனத்தில், அல்லாஹ்வை விட்டு விட்டு, அவர்களையும் அவர்களின் தாயாரையும் கடவுள்களாக எடுத்துக்கொள்வீர் என மனிதர்களுக்கு கூறினீரா என அல்லாஹ் வினவுகின்றான். அல்லாஹ் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) விடம் அவ்வாறு வினவக் காரணம் அவ்வாறு ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) சொன்னார்களா இல்லையா என அவன் அறிந்திருக்க வில்லை என இன்னொரு நாளைக்கு நீங்கள் கூறமாட்டீர்களா?
இல்முல் கய்பை மறுக்குவோர் எழுப்பும் இவ்வாறான, கற்பனைக்கு பொருந்தாதளவு கேலியான, தொடர்ப்பற்ற, மனதை குழப்பும், தவறான வழிகாட்டும், நச்சுக் கருத்துகள் ஏராளம் உண்டு. உதாரணமாக, நபி நாயகம் அவர்களுக்கு ஒரு தொழுகையில் தொழுதப்பட்ட ரக்அத்துகள் எத்தனை என்று மறந்த சம்பவத்தை மேற்கொள் காட்டி, ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுக்கு இல்முல் கய்ப் இருந்திருந்தால் அப்படி மறந்திருக்கமாட்டார்களே ? என வினவுகின்ரார்கள். உம்முஹானீ (ரலியல்லாஹு அன்ஹா) நபிகளாரின் வீட்டுக்கு வந்த வேளையில் அவர்கள் ஒர் திரைக்குப் பின் இருந்ததாகவும், வந்தது யார் என அவர்கள் கேட்டதாகவும் நான் உம்மு ஹானீ என உம்மு ஹானி ( ரலியல்லாஹு அன்ஹா) கூறியதாகவும் புகாரியில் பதிவு செய்யப்படுள்ள ஹதீஸை மேற்கொள் காட்டி, அவ்வாறு நபிகளாருக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் வந்தது யார் என கேட்க அவசியமில்லையே ? என கேட்கிறார்கள். இன்னும் நஞ்சூட்டப்பட்ட வஜீபனத்தை அருந்தாமல் இருந்திருக்கலாமே எனவும் கேட்கிறார்கள்
ஆதலால், எங்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாள்க்கை ஒர் மாயவித்துக்காரனின் வாள்வு போல் அமைந்திருக்க அவர்கள் நாடுகிரார்களோ? அப்படியென்றால் அவர்களின் வாள்க்கை சரிதை எப்படி உம்மத் மார்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும். ? அன்று, தொழுகையில் மறதி ஏற்படாவிட்டால் அதைப்பொல் ஓர் சந்தர்ப்பத்தில் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டுமென செயல்முறையாக காட்டுவது எவ்வாறு? அவர்கள் அன்று நஞ்சூட்டப்பட்ட உணவை அருந்தாமலிருந்தால், அவர்களின் சரிதையில் அந்த அற்புதம் பதியப்பட மாட்டாதே? இஸ்லாம் ஒரு மார்க்கம். அதே போல், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாள்க்கை வழிமுறையுமே. அவர்கள் வாள்வில் அவ்வாறான சம்பவங்கள் ஏற்படாவிட்டால், எங்களுக்கு அவர்களின் வாழ்க்கை வழிமுறையில் எவ்வாறான விசேஷமும் கிடையாதே. வஹ்ஹாபிகளின் முயர்ச்சியே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எங்களைப் போன்ற சாதாரண மனிதனாக கருதுவதாகும்.

Anonymous said...

அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நிகரான கேள்விகள் நமக்கும் கேட்க்கலாமே! நாங்கள் செய்யும் நல்லமல் களையும் தீமைகளையும் ரக்கீப் அத்தீத் ( அலைஹிமஸ் ஸலாம்) அவர்களால் ஏன் பதிவு செய்யப்பட வேண்டும்? நாங்கள் எந்த நன்மைகள் எந்த தீமைகள் செய்தோமென அல்லாஹ் அறிய மாட்டானா? முன்கர் நக்கீர் ( அலைஹிமுஸ் ஸலாம்)அவர்களால் ஏன் நாம் கப்ரில் கேள்வி கேட்க்கப்பட வேண்டும். இந்த மறுமொழி தான் நாங்கள் கொடுப்போமென அவன் அறிய மாட்டானா? மறுமையில் நம்மை ஏன் விசாரணை செய்யப்பட வேண்டும்? இவ்வுலகத்தில் நாம் செய்த நன்மை தீமைகளும் எங்களுக்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு நாம் கொடுக்கும் பதில்களும் அவன் அறிய மாட்டானா? நம் நன்மை தீமைகளை மீதான் தராசியில் ஏன் நிறுக்கப் பட வேண்டும்? அல்லாஹ் அதன் பாரங்களை அறிய மாட்டானா? ஸிராத்துல் முஸ்தக்கீம்எனும் பாலத்தை நாம் ஏன் கடக்க வேண்டும்? யார் யார் நரகத்தில் விழுவார்கள் என்று எல்லாம் வல்லவனான நாயன் அறியமாட்டானா?‘குன்’ எனும் தனி சொல்லைக் கொண்டு எல்லாம் உண்டாக்க வல்லமை பெற்ற நாயன் ஒவ்வொரு வேலைகளுக்கும் மலக்குகளை சாட்டப்பட்டிருப்பதற்க்கு அவசியம் ஏது?
இவ்வாறான, மீண்டும் ஒரே இடத்தை வந்தடையும் வட்ட வடிவமான தர்க்கங்களால் ஒருவன் வழிகேடில் விழுகிரதைத் தவிர வேறொரு புண்ணியமும் ஏற்படுவதில்லை (நஊது பில்லாஹி மின்ஹா – அல்லாஹ் நம்மை காத்தருள்வானாக) எனவே, மேல் எடுத்துக் காட்டப் பட்ட 2 வது குர்ஆன் வசனமும் கீழ் கானும் வசனங்களும் எங்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுக்கு மறைவான ஞானம் இருந்தது என்பதற்க்கு ஆதாரமால்லவா ?
وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسله من يشاء
” மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பவனாகவுமில்லை ஏனினும் தன் தூதர்களில் தான் நாடியவர்களை ( இதனை அறிவிக்க ) தேர்ந்தெடுக்கிறான் ( 3/179)
وانزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما
” (மேலும் அல்லாஹ் இவ்வேதத்தையும் ஞானத்தையும் உம்மீது இறக்கி வைத்தான் இன்னும் நீ அறியாதிருந்தவற்றையும் உமக்கு கற்றுக் கொடுத்தான். மேலும் உன்மீது அல்லாஹ்வின் பேரருள் மகத்தானதாகவே இருக்கின்ரன. 4/ 113)
நம் நபி நாதர் ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மறைவான ஞானமாக எது எதுகளை பெற்றார்களொ, அதெல்லாம் அல்லாஹ்வால் கற்றுக்கொடுக்கப் பட்டதென்பதையும், அந்த ஞானத்தில் நின்றும் எந்த பகுதியானாலும் அறிவிக்கப்படாமல் இல்லை என்பதையும் மேல் கானும் திரு குர்ஆன் வசனங்கள் வலியுறுத்துகிறது. அவர்கள் அறியாவற்றை அவன் கற்றுக்கொடுத்தான் என அல்லாஹ்வே கூறும் பொது, நாயகத்துக்கு அவ்வாறான ஞானம் இல்லை என்று கூறும் வஞ்சகம் நிறைந்த கல் நெஞ்சுடையோரைப் பற்றி கவலை படுகிரதா இல்லா விட்டால் அவர்களை வெறுப்பதா என்பது நமக்குள்ள கேள்விக்குறியாகும். இன்னும் அல்லாஹ் அதை அவனின் பெரும் பேரருள்களில் நின்றும் உள்ளதாக அறிவிக்கின்ரான். அவனின் பேரருளைப் பற்றி அறிவிக்கும் இந்த இறை வசனங்களை யாரால் மறுக்க முடியும்?

Anonymous said...

அது அல்லாஹ்வுடைய பேரருளாகும். அவன் நாடியவர்களுக்கு அதனைக் கொடுக்கின்ரான். மேலும் அல்லாஹ் மகத்தான பேரருளுடையவன் (62/3)
இந்த இறை வசனங்களை சரியாக புரிய தேடினாள், இல்முல் கய்ப் என்பது அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு கீழே உள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அவனின் அந்த ஞானத்தை அவனின் அடியார்களில் ஒருவருக்கும் வழங்க மாட்டான் என்றோ அவனின் அந்த ஞான பொக்கிசத்தின் கதவுகள் ஒருவருக்கும் திறக்கப் பட மாட்டும் என்றோ கூறப்பட்டிருக்கிரதா? யாராலும் ஒருவன் அவனின் ஞானத்தை இன்னுமொருவருக்கு அவனுக்கு கொடுக்க முடியாதென கூரினால் அவர் அல்லாஹ்வுக்கு இயலாமை எனும் முஸ்தஹிலான ஸிபத்தெனும் வர்ணிப்பை சூட்டினதற்க்காக அவர் இறை மறுப்பவராக ஆகிவிடுகிரான்.இல்முல் கய்பை பற்றி தன் சொந்த கருத்துகள் கூறி வழி தவறி விடாமல் இருப்பதற்க்கு இவ்விசயத்தில் மிக முக்கியமான கவணம் செலுத்த வேண்டுமென்பதை வற்புறுத்துகின்ரோம்.
எனவே, யாராகிலும் ஒருவர், குர்ஆனில் சிலதை ஒப்புக்கொண்டு மற்றும் சிலதை மறுத்து, அல்லாஹ்வின் அருளை நிராகரிப்பார்களேயானால், அல்லது சந்தேகிப்பார்களேயானால் அவன் முஸ்லிம் என்ற பட்டியலிருந்து அகன்று விடுகிரான். ஏனெனில், அல்லாஹ்வின் கட்டளைகளை மனப்பூர்வமாகவும் நிபந்தனைகளுமின்றி முற்றாக அடிபனிவதே ஒரு முஸ்லிம் மீது கடமையாகும். அல்லாஹ் திருமறையில் கூறுகின்ரான்…
يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين
விசுவாசங்கொண்டோரே ! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள் ! அன்றியும் செய்த்தானின் அடிச்சுவறுகளை பின் பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான விரோதியாவான். ( 2/208 )
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுக்கு இல்முல் கய்பெனும் மறைமுகமான ஞானம் உண்டாயிருந்தது என்பதற்க்கு ஆதாரமாக அனேகமான ஹதீஸ்களும் பதியப்பட்டிருக்கிரது. இந்த தலைப்பின் கீழ் அதுகளை நாங்கள் ஒன்றொன்ராக எழுத நாடுகின்றோம். இன்ஷா அல்லாஹ்.

Dr.Anburaj said...

குரான் என்பது முகம்மதுவின் கைசரக்குதான்.பின்னா் பலபோ் கூடி உஸ்மான் மன்னா் காலத்தில் ஒரு முறை தொகுக்கப்பட்டு பின்னா் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. பின்னா் ஏராளமான திருத்தங்கள் செய்யப்பட்டு குரான் வெளியிடப்பட்டது.இன்றும் ஹதீஸ் களில் பொய்யானது உண்மையானது பொய்யும் உண்மையும் கலந்தது என்று முஸ்லிமுகளுக்கிடையே கடுமையான போா் நடைபெற்று வருகினற்து. என்னவோ இறைவிடமிருந்து டெலிபிாிண்டா் மூலம் மக்காவிற்கு முகம்மதுவின் வீட்டிற்கு செய்திகள் அச்சடித்து வந்தது போலவும் அதை அப்படியே பெண்டிங் செய்து புத்தகமாக வெளியிட்டுள்ளதைப் போவவும் கதைக்கின்றாா் அனாமதேயம். குரான் உருவான வரலாறு முஸ்லீம்களுக்கு உண்மையான முறையில் தொிவிக்கப்படவில்லை. பால்குடி உறவு முறை குரானில் இடம் பெற்று பின் நீக்கப்பட்டது என்பது அனாமதேயத்திற்கு தொியுமா ?

Dr.Anburaj said...

சில கிராமக் கோவில்களில் சாமியாடிகள் குறி சொல்பவா்கள் இருப்பா்ா்கள்.பெரும்பாலும் பாமரா்கள் இவர்களைக் பின்பற்றுவாா்கள். உண்மையிலேயெ சில விசயங்களை சாியாக சொல்வதுண்டு.பின் ஏராளமான ஏமாற்று வேலைகள் பொய்கள் பித்தலாட்டங்கள் நடைபெறும். மனிதா்களில் சில யோக சித்திகள் இயல்பாகவே வாய்யக்கும் போது எதிா்காலங்களை கணிக்கும் அறிவு ஏற்படும். வேதவியாசா் ஆந்திராவில் பிறந்த ஒருவரும் எதிா்காலம் குறித்து முன்அிறிவிப்புகளை செய்துள்ளாாகள். முகம்மதுவிற்கு இந்த ஆற்ற்ல் இருந்தது என்பதில் என்ன அதிசயம் ? அவரால் சிந்தப்பட்ட மனித இரத்தத் தலைகள் எத்தனை எத்தனை ?

Anonymous said...

appadiyae wahabiyath epdi uruvanadhu enbadhaiyum thelivu paduthavum

Anonymous said...

appadiyae wahabiyath epdi uruvanadhu enbadhaiyum thelivu paduthavum