Followers

Monday, June 22, 2015

மதினா அமீர் ஃபைஸல் சாமான்யர்களோடு நோன்பு திறப்பு!



புனித மதினாவின் அமீர் ஃபைஸல் பின் சல்மான் செக்யூரிடி நபர்களோடு ஒன்றாக அமர்ந்து நோன்பு திறந்த காட்சி. சவுதி ஆட்சியாளர்கள் அனைவரும் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பயணிப்பது மக்களோடு மக்களாக. மக்களாட்சியோ மன்னராட்சியோ எந்த வகை ஆட்சியாக இருந்தாலும் அதனால் மக்கள் பயன் பெற வேண்டும். நம் நாட்டில் நடப்பது மக்களாட்சியாக இருந்தாலும் அதனால் சாமான்யன் எந்த பலனையும் அடைய முடியவில்லை. அரசியல் வாதிகளின் வாரிசுகள்தான் கோடி கோடியாக சொத்து சேர்க்கின்றனர்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
22-06-2015

3 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

சமநீதி, சமத்துவம், சகோதரத்துவம்:

தலித் சூத்திரர் தீண்டத்தகாதவரென பிறந்து இட ஒதுக்கீட்டால் இஞ்சினியர், டாக்டர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற உயர் பதவிகளை அடைந்தவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே திருமணம் என்று வந்து விட்டால் உயர்ஜாதிப் பெண்களை மணப்பதையே விரும்புகின்றனர், திரு.அம்பேத்கர் உட்பட. எத்துனை பேர் ஓலைக்குடிசைக்கு சென்று சித்தாள் வேலை செய்து பிழைக்கும் மாமன் பெண் கருப்பாயி, மூக்காயிக்கு தாலி கட்டினர் என்பதை சிறிது ஆய்வு செய்தால் நல்லது.

பிரச்னை என்னவென்றால், திருமணம் செய்த தம்பதியருக்குள் மேல்ஜாதி கீழ்ஜாதி வேற்றுமைகள் உடனே தலைதூக்கி விடுகிறது. "உனது பெற்றோருக்கு தனியாக வீடு வாங்கி கொடுத்து விடு. இங்கே அவர்கள் வரக்கூடாது. நம்மோடு இருந்தால், நமது சமூக அந்தஸ்துக்கு ஒத்து வராது. நீ அவர்களை தனியாக சந்திப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. நமது குழந்தைகளை அழைத்துச் செல்லாதே" போன்ற நிபந்தனைகளை ஏற்று உயர்ஜாதிப் பெண்ணை திருமணம் செய்யும் நிலை. ஒரு அடிமை சாசனத்திலுருந்து விடுபட்டு மற்றொரு அடிமை சாசனம் எழுதித் தரவேண்டிய நிலை.

அப்படியும் பிரச்னை தீர்ந்ததா?. கல்யாணம் காட்சிகளில் மாமனார் வீட்டு ஹை சொசைட்டியினரின் மறைமுக தீண்டாமை. அதிலும் குழந்தைகளின் சாயல், தந்தை வழி மரபணு பக்கம் சென்று விட்டால் கேட்கவே வேண்டாம். கூடப் பிறந்த தங்கைகள், அய்யங்கார் வீட்டுக் கல்யாணத்தில் தன்னை ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லையே என்று வைதேகி ஆண்டியப்பன் பாத்ரூமில் குமுறிக் குமுறி அழும் நிலை.

"கிரீமி லேயரா?... உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியுமா?. எனது கணவரின் ஐ.ஏ.எஸ் அதிகாரம் இங்கே செல்லுபடியாகாது. தடுக்கி விழுந்தால் இந்த சபையில் ஹார்வேர்டும், ஸ்டான்ஃபோர்டும்தான். நான் ஒரு நவீன தலித்" என்று எண்ணிக் கொண்டார்.

*************************

அடுத்த வாரம் துபாய் இப்ராஹிம் பாய் பையனின் திருமணம். பெண் மரக்கடை ராவுத்தரின் பேத்தி. ராவுத்தர் பரம்பரை பணக்காரர். 25 வருடங்களுக்கு முன்பு இப்ராஹிம் பாய் எனும் முத்து, எருமை நாயக்கன் பட்டியில் ரோடு வேலை செய்து கொண்டிருந்தார்.

வைதேகி ஆண்டியப்பன் தம்பதியர் திருமண மண்டபத்தில் நுழைந்ததும் "அண்ணா வாங்க, அண்ணி வாங்க, வணக்கம், சலாமலைக்கும்" என்று இரு வீட்டாரும் தடபுடலான வரவேற்பு.

பிரியாணி சாப்பிட்டு வெத்திலை பாக்கு போட்டும் இப்ராஹிம் பாய் விடவே இல்லை. அவர் கட்டிய புது பள்ளிவாசலை அழைத்துச் சென்று காண்பித்தார். பள்ளியின் நுழைவு வாயிலின் அருகே கல்வெட்டில் "எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெயரால் இந்த பள்ளியை கட்டியவர் ஜனாப்.இப்ராஹிம் பாய். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே" என்று எழுதப் பட்டிருந்தது. ஏனோ தெரியவில்லை.. வைதேகி ஆண்டியப்பன் தம்பதியருக்கு யாரோ சம்மட்டியால் அடித்தது போன்ற உணர்வு. ஒருவரை ஒருவர் மௌனமாக பார்த்துக் கொண்டனர்.

இப்ராஹிம் பாயிடம் பிரியா விடை பெற்று வீட்டுக்கு திரும்பும் வழியில், பள்ளியிலிருந்து "அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்.." எனும் தொழுகை அழைப்பு. "ட்ரைவர்..ஒரு நிமஷம் காரை திருப்பு" என்றனர் வைதேகியும் ஆண்டியப்பனும் ஒரே குரலில்.

இப்ராஹிம் பாய் பள்ளி நோக்கி கார் திரும்பியது. ஆண்டியப்பனும் வைதேகியும் ஷஹாதா சொல்லி இஸ்லாத்தை தழுவினர். அப்துல்லாஹ் ஆமினா என்று தங்களை அறிவித்தனர். குழந்தைகளுக்கு முஹம்மத், பிலால் என்று பெயர் சூட்டினர். இஸ்லாமிய சகோதரர்கள் "மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்" என்று வாழ்த்து தெரிவித்தனர்.

15 நாள் அலுவல் காரணமாக வெளியூர் சென்று வீட்டில் நுழைந்த திரு.அப்துல்லாஹ் அவர்களுக்கு நம்ப முடியாத அதிர்ச்சி. 20 வருடங்களில் ஒரு முறை கூட வீட்டு வாசப்படி ஏறாத அப்துல்லாஹ்வின் தலித் பெற்றோர் "வாப்பா வா" என கண்ணீர் மல்க வரவேற்றனர்

"நீதியைக் காட்டி, நேர்மையை ஊட்டி
நெறிவழி அழைத்தார் நபி பெருமானார்
ஜாதியை பேசி, சடங்குகள் பேசி
சமூகத்தை கெடுத்தார் இருமுறை தாரார்
என்ன காலமோ என் சோதரா
ஏன் எடுத்தாய் இந்த கோலமோ”.

முஹம்மத் அலி ஜின்னா said...

எம்பெருமானார்(ஸல்) அவர்கள் நிறுவிய சமத்துவபுரம்:

கி.பி.630ல் பெருமானார்(ஸல்) அவர்களின் தலைமையில் மக்கா நகரம் கைப்பற்றப்பட்டது. எந்த நேரத்திலும் தங்களது உயிரும் உடைமைகளும் சூறையாடப்படும் என்று மக்காவாசிகள் அனைவரும் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது "பெண்கள், குழந்தைகள் மற்றும் அனைத்து பிரஜைகளின் உயிர், உடைமை, கண்ணியம் காக்கப்படும். கைது செய்யப்பட்ட போர் வீரர்கள் மிகுந்த மரியாதையுடன் விருந்தினர் போல் உபசரிக்கப்படுவர்" என்று எம்பெருமானார்(ஸல்) அவர்கள் அறிவித்தார்.

இதைக்கேட்ட மக்காவாசிகளுக்கு அளவிட முடியாத வியப்பு. போரில் தோல்வியுற்ற எதிரிக்கு மரியாதையா?. சரித்திரத்தில் கேள்விப்படாத ஒன்று. யார் இந்த மாமனிதர்?. இவர் காட்டும் வழியென்ன என்று பேராவலுடன் அலைஅலையாக கஃபாவின் முன் குவிந்தனர்.

கஃபாவின் முன்பு பெருமானாரும்(ஸல்) அவரது தோழர்களும் நிற்கின்றனர். பெருமானாருக்கு(ஸல்) அருகில் அவரது உற்ற தோழர் பிலால் எனும் கருப்பு அடிமை நிற்கிறார். ஆயிரக்கணக்கான மக்கள் பெருமானாரின்(ஸல்) பேச்சை கேட்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். அப்பொழுது பெருமானார்(ஸல்) அவர்கள் ஹஜ்ரத் பிலாலை நோக்கி "கஃபாவின் கூரை மீதேறி பாங்கு(தொழுகை அழைப்பு) கொடுங்கள்" என்று கட்டளையிடுகிறார். இதைக்கேட்ட ஹஜ்ரத் பிலால் திகைக்கிறார். "கஃபாவின் கூரை மீதேறி பாங்கு கொடுப்பதா?. மனித சரித்திரத்தில் யாருமே காபாவின் கூரை மீதேறி பாங்கு தந்ததில்லையே. அதுவும் நானா?. நான் ஒரு அடிமை, சூத்திரன், தீண்டத்தகாதவன், தலித். எனக்கு மேலே ஏற அருகதையுண்டா" என்று மலைக்கிறார்.

"இறைவனின் இல்லம் கஃபா. ஆயிரக்கணக்கான வருடங்களாக உங்களை உள்ளே நுழைய இவர்கள் அனுமதிக்கவில்லை. ஆகையால் மேலே ஏறி பாங்கு கொடுங்கள். அல்லாஹ்வின் முன்னால் அனைவரும் சமமென்று உலகுக்கு உணர்த்துங்கள்" என்று பெருமானார்(ஸல்) கட்டளையிட்டார். ஆம். இஸ்லாத்தின் முதல் தொழுகை அழைப்பாளராக ஹஜ்ரத் பிலால் எனும் தலித் அடிமை கஃபாவின் கூரை மீதேறி பாங்கு கொடுத்தார்.

அடிமை விலங்கு உடைக்கப்பட்டது. சமநீதி, சகோதரத்துவம், சமத்துவம் நிலை நாட்டப்பட்டது. உலகின் முதல் சமத்துவபுரம் நிறுவப்பட்டது.

சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது.

தலித் சகோதரனே !. அடிமை விலங்கை உடைத்து தலைமை ஏற்க இன்னமுமா தயக்கம் !!!

Dr.Anburaj said...

எம்பெருமானார்(ஸல்) அவர்கள் நிறுவிய சமத்துவபுரம்:முகம்மதுவின் மரணத்திற்கு பின் யாா் ஜனாதிபதி - மன்னா் என்ற கேள்வி எழுந்தது. முகம்மதுவின் இளம் மனவைி ஆயிசா வின் தந்தை அபுபக்கா் மற்றும் உமரும் சுழ்ச்சி செய்து முகம்மதுவின் சொந்த மகளை திருமணம் செய்த அலி யை துரத்துகின்றாா்கள். அபுபக்கருக்கு பின் உமா் மன்னராகின்றாா். பின் உஸ்மான் ஆகின்றாா்.கலிபா மன்னா்உஸ்மானை அபுபக்காின் மகன் அபுபக்கா் கொலை செய்கின்றான். பின் 4 வது கலிபா தோ்வில் ஆயிசாவிற்கும் அலிக்கும் அடிதடி. ஒட்டகப்போா் நடக்கின்றது.5000-10000 முஸ்லீம்கள் இறந்து போகின்றாா்கள். இதுதான் முகம்மது காட்டிய சகோதரத்துவமுமு் அதை பின்பற்றிய லட்சணமும். உமாின் தாக்குதலால் முகம்மதுவின் மகள் பாத்திமா இறந்தாா் என்று அஹலுபயத்துக்கள் கூறுகின்றாா்கள். அரேபிய சாித்தரம் ஒரு மனித இரத்தம் பொங்கும் ஒரு சாக்கடையாகும்.
இதற்கு போ் இசுலாமிய சகோதரத்துவம் ஆகம். காபீா் என்று பட்டம் கட்டி தலையெடுப்பது பெண்களை கற்பழிப்பது போன்றவை ” இசுலாமிய மரபில் ” தீன் ”. குரான் படித்தவா்களால் இந்துஸ்தானத்தில் குறைந்தது 5 கோடி இந்துக்ள் அநியாயமாக கொலை செய்யப்பட்டுள்ளாா்கள்.